Tuesday, April 03, 2018

குறைந்த பட்ச சம்பளம் 40,000 ரூபாயை தொடும் அளவிற்கு தலைமை கொடுத்து கொண்டு வருகிறது,

நேற்று ஒரு முன்னாள்  பிஜே குருப்பை சேர்ந்த நிர்வாகியும் இந்நாள் அல்தாபி அனுதாபியாகிய  ஒருவரிடம் பேசி கொண்டு இருந்தேன் அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களாக இருந்தது. 

நான் கேட்டேன் அந்த 28 நிமிட ஆடியோவில் பேசியது பி ஜே தாணு நீங்க ஒத்து கொல்றீங்கலான்னு, அதுக்கு அவர் சொன்ன விளக்கம் நான் மட்டும் அல்ல தலைமையில் இருக்கும் ஒவ்வொரு நிர்வாகிக்கும் தெரியும் அது பி ஜே வின் குரல் தான் என்றும் இன்று ஜமாத் ஒரு ராணுவ கட்டுகோப்புடன் நிலையாக இருக்கிறது அதை இந்த ஆடியோஉண்மை  என்று கூறி குழைத்து கொள்ள நிர்வாகிள் யாரும் விரும்பவில்லை மேலும் ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஐ டி செக்டாரில் பெரும் சம்பளம் போன்று குறைந்த பட்ச சம்பளம் 40,000 ரூபாயை தொடும் அளவிற்கு தலைமை கொடுத்து கொண்டு வருகிறது, இங்கே இருக்கும் நிர்வாகிகள் இதை கெடுத்து கொண்டு வெளியே சென்றால் எதோ ஒரு பள்ளிவாசலில் இமாம் வேலை பார்த்தல் 10,000 ருபாய் கிடைப்பதே பெரும்பாடாகி விடும் அதை கெடுத்து கொள்ள  எந்த நிர்வாகியும் தயாராக இல்லை என்று கூறினார். 

பிஜெவினால் இவர்களுக்கு லாபம், இவர்களால் பிஜே விற்கும் லாபம் என்ற அடுத்த விசயத்தையும் கூறினார். வருடா வருடம் நோன்பு பெருநாட்களில் ஜக்காத், பித்ரு பணம் என்று பல கோடி ருபாய் வருகிறது ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் விநியோகம் என்று வருடத்திற்கு 3 கோடியில் இருந்து  5 கோடி வரை சாமான்கள் வாங்க படுகிறது அந்த மளிகை சாமான்கள் மூன் மார்க்கெட் வழியாக தான் வாங்க படுகிறது உங்களுக்கே நன்றாக தெரியும் மளிகை பொருட்களின் லாபம் 20% to 25% லாபம் வைத்து தான் வணிகர் களிடம் இருந்து விற்பனை செய்ய படுகிறது ஆகையால் மூன் மார்கெட் நோன்பு பெருநாளின் பொழுது சுமார் ஒரு கோடி ருபாய் வரை மொத்தமாக லாபம் பார்த்து விடுகிறார்கள். இப்ப சொல்லுங்கள் எந்த நிர்வாகியவது அந்த ஆடியோ உண்மை என்று கூறுவார்களா என்று நான் கேட்ட கேள்வியை  என்னிடமே கேட்டார். 

ஒரு நிமிடம் அப்படியே தலையே சுத்திடுச்சு எனக்கு


No comments: