Saturday, April 18, 2020

*கொரானாவுக்கு பிறகு முஸ்லிம்களின் நிலை*

[18/04, 4:53 am] +91 7397 270 734: இந்த செய்தியில் இருக்கும் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டது இல்லை. திரு. ஜெயரஞ்சன், திரு. ஆனந்த் வெங்கடேஷ், திரு. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார அறிஞர்களின் பேட்டிகள் அவர்கள் பொது வெளியில் அளித்த சில புள்ளி விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டுள்ளது. பெரும்பாலும் முஸ்லிம்கள் இது போன்ற செய்திகளை பார்வேர்டு செய்ய மாட்டார்கள். பொய் செய்திகளையும், பரபரப்பான வதந்திகளையுமே பரப்புவார்கள் என்று பொது வெளியில் அறியப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு முறையாவது நமக்கு தெரிந்ததை சொல்லிவிடுவது கடமை.

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல அரசாங்கங்கள், தங்களது ஊழியர்களுக்கு  சம்பளம் போடக்கூட பணம் இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வானிலை வேண்டுமானால் தவறாகப் போகலாம்.  ஆனால் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதன்படி நடக்கப் போகும் சங்கதிகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

🚗 துபாய், அபுதாபி உள்ளிட்ட UAE ல் பணியாற்றும் 17,50,000 இந்தியர்களில் ஏறத்தாழ 30% முதல் 40% பேர் வேலை இழப்பது உறுதி. அதாவது கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர். இதில் 60% முஸ்லிம்கள் ஆக 3,60,000 இந்திய முஸ்லிம்கள் யுஏஈ ல் மட்டுமே வேலை இழப்பார்கள்.

🚔 சவூதியில் பணியாற்றும் 15,40,000 பேரில் வேலை இழப்பவர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேர். இதில் முஸ்லிம்கள் 3,00,000 பேர்.

🚌 இவ்வாறு குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைனில் வேலை இழக்கப்போகும் முஸ்லிம்கள் 3,00,000 பேர்.

💰 எனது கணவர் அல்லது மகன்,  ஐரோப்பா அல்லது அமெரிக்காவில், ஐடி வேலையில்  இருக்கிறார்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வேலை இழக்கப் போவதும் அல்லது அதிரடியாக சம்பளக் குறைப்புக்கு ஆளாகப் போவதும் இவர்கள்தான். அதிக பாவம் இவர்கள்தான்.

அதனால் மேற்கண்ட இவர்கள் இந்த இன்னலை சந்திக்க தயாராக வேண்டும். 

💪 வேலை இழந்து வருபவர்களில் தமிழக முஸ்லிம்கள் மட்டும் குறைந்த பட்சம் கிட்டத்தட்ட 3,00,000 பேர் வருவார்கள். இது 5,00,000 பேர் வரை ஆவதற்கும் வாயய்ப்புகள் உள்ளது.

சரி, இவர்கள் இனி என்ன செய்யலாம்?
கஷ்டம்தான்!!! முதலில் பின்பற்ற வேண்டியது சிக்கனம்தான். 

1. வருடத்திற்கு லட்சங்கள் பீஸ் வாங்கும் பள்ளிகளை தவிர்த்து விட்டு நார்மலான பள்ளிகளில் அல்லது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கலாம். காரணம் பெரும்பாலான முஸ்லிம் பசங்கள் தந்தையரின் நேரடி கண்கானிப்பு இல்லாத நிலையில் தாய்மார்களிடம் தங்கள் விரும்பியதை வாங்கிக் கேட்டு, படிப்பில் கவனம் இல்லாமல் பல லட்சங்கள் செலவழித்து கடைசியில் B.Com அல்லது BBA மட்டுமே படிக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பம் இல்லாமல் கடமைக்கு BE படிக்கிறார்கள். ஆக செலவு செய்வது வேஸ்ட். இதே படிப்பை ஒரு பைசா செலவில்லாமலே பல லட்சம் பேர் படிக்கிறார்கள். 

2. அம்மாவுக்கு சுகர், மூட்டுவலிக்கு மருத்துவம் பார்க்க சுற்றுலாவுக்கு போவது போல கார் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு  போய், நம்ம டாக்டர் சொல்லிட்டார் என்று எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளி வீசி தேவை இல்லாத டெஸ்டுகள் எல்லாம் எடுத்து, பை நிறைய மருந்துகளும், பைல் நிறைய டெஸ்ட் ரிப்போர்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜவுளிக்கடைக்குள் புகுந்து, தேவையோ இல்லையோ ஒரு புது டிசைன் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. பேக்கரிக்குள் புகுந்து கண்டதையும் வாங்குவதையும், சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கண்டதை எல்லாம் வாரி கூடையில் போடுவதை நிறுத்த வேண்டும்.

4. நாள் வாடகைக்கு கார் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

5. கார் வைத்திருப்பவர்கள் டிரைவரை வேலைக்கு அமர்த்தி சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் 

6. எக்காரணம் கொண்டும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பக் கூடாது. இது ஆக முட்டாள்தனமான முடிவு. காரணம் பத்து பவுன் நகையை மாற்றினால் அது, இது என்று பிடித்து கையில் ஏழரை பவுன்தான் கொடுப்பார்கள். கடைக்காரன் பணக்காரனாகவும் நீங்கள் நஷ்டவாளிகளாகவும் ஆகிவிடுவீர்கள். 

7. பசங்க பைக் கேட்கிறார்கள் என்று எந்தக் காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்கு மாத தவணையும், பெட்ரோலும் நீங்கள்தான் போட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

8. அதிக செலவு பிடிக்கும் விருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

9. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், குதிரை, யானை, பேண்ட் வாத்தியம், வெடி இல்லாமல் சிம்பிளாக நடத்துங்கள்.

10. வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை பாருங்கள்.

11. கார் எடுத்துக் கொண்டு சுற்றுலா போகலாம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஒன்லி பஸ், டிரைன் சுற்றுலாதான் 

12. வெளிநாடுகளில் சம்பாதித்து விட்டு வேலை இழந்து ஊர் திரும்பும் சிலரிடம் நல்ல சேமிப்பு இருக்கலாம். அதை அறிந்து சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் முள்ளு செடியும், கள்ளி செடியும் வளர்ந்த வனாந்திரத்தை காட்டி இப்போது இதை வாங்கிப் போடுங்கள், இன்னும் இரண்டு வருடத்தில் டபுள் விலைக்கு போகும் என்று ரீல் விடுவார்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். ஐந்து வருடம் ஆனாலும் போட்ட காசில் பாதி கூடக் கிடைக்காது 

13. உடம்பு சரியில்லாவிட்டால் முதலில் ஒரு ஜெனரல் டாக்டரிடம் காட்டுங்கள். அவரிடம் உங்களுக்கு நோய்களை பற்றி அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதிக விபரமாக பேசுபவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் அனுப்பப்பட்டு அனைத்து டெஸ்டுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள். அப்புறம் பணம் போய் விட்டதே என்று வருத்தப்படுவீர்கள் 

14. மச்சான் ஒரு நல்ல பிஸினஸ் இருக்கிறது போடுங்க காசை அள்ளலாம் என்று சில மச்சினன்மார்கள் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செல்போன் கடை மீது காதல் இருக்கும். ஆனால் அந்த காதல் இப்போதைய நிலையில் உங்களை பஞ்சர் ஆக்கிவிடும்

15. மச்சான் அஞ்சு ரூபாய் சப்பாத்தி, அதுக்குள்ள பத்து ரூபாய் சிக்கன், அஞ்சு ரூபாய் காய்கறியும், ஒரு ரூபாய்க்கு சாஸ் ம் ஊற்றி நூறு ரூபாய் க்கு விற்கலாம், ஒரு ஷாவர்மா விற்றால் 80 ரூபாய் லாபம், ஒரு நாளைக்கு 100 விற்கலாம், ஒரு பர்கர் விற்றால் 50 ரூபாய் லாபம். தினமும் நூறு பர்கர் விற்கலாம் என்று சிலர் தூண்டுவார்கள். அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வது உங்களுக்கு லாபம். இல்லாவிட்டால் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத உங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடை போட்டு பத்து நாள் பந்தாவாக பிஸினஸ் செய்து விட்டு, பிறகு வியாபாரம் டல்லடித்ததும் புரோட்டாக் கடை, பிரியாணி கடை என்று அவதாரம் எடுப்பதும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இனி வரும் ஐந்தாண்டுகள் பணப்புழக்கம் குறைவதால் ஆடம்பர ஹோட்டலுக்கு வருவது நின்று அத்தியாவசியமான, விலை குறைவான  உணவுகளையே மக்கள் வாங்குவார்கள். 

16. பிக்ஸட் டெபாசிட்டுகளை ஒரே பேங்கில் வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்

17. முடிந்தவரை ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். காசு கொஞ்சம் கூடுதலாக செலவானாலும் நமக்கு பிறகு நமது குடும்பத்தினர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கவலை நீங்கி விடும். 

18. பிள்ளைகளை Neet, Jee போன்ற பரீட்சைகள் எழுதவும் Professional கோர்ஸ் படிக்கவும் தயார் படுத்துங்கள்

19. அரசாங்கத்தின் கடைசி நிலையில் இருக்கும் ஊழியருக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, பணிக்கொடை போன்ற எதுவுமே உங்களுக்கு இல்லை அதனால் பிள்ளைகளை போட்டித் தேர்வுகளுக்கு பழக்கி அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரமாக்க முயற்சி செய்யுங்கள்.

20. அவசரம் வேண்டாம் மூன்று மாதம் சுற்றிலும் உள்ளதை கவனித்து பாருங்கள். எதில் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் உள்ளது என்று புரியும். அதன்படி செயலாற்றுங்கள்.

21. இனி அதிக நாட்கள் நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் பல இயக்கத்தவர்களும் உங்களை இழுப்பார்கள். நாங்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கதை அளப்பார்கள். பிடி கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெரிய அளவுக்கு அவர்களுக்கு பணம் அன்பளிப்பு செய்யாதீர்கள். நூறு இரு நூறுகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

22. எந்தக் காரணம் கொண்டும் பிற சமுதாயத்தினரோடு சச்சரவுகள் செய்வதோ, விவாதங்கள் செய்வதோ கண்டிப்பாக கூடாது. அனைவருடனும் நல்ல இணக்கத்தோடு வாழுங்கள்

முஸ்லிம் பெண்களே இனி ஒரு குடும்பம் உருப்படுவதும், வீணாகப் போவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. பண வரவு இல்லாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். கணவரை குத்திக் காட்டுவீர்கள். கணவர் பிரிந்திருந்த நேரங்களில் நீங்களாகவே எல்லா முடிவும் எடுத்திருப்பீர்கள். இனி அது முடியாது அதனால் ஒரு இயலாமை ஏற்படும்.
இதெல்லாம் உங்களுக்கு மன அழுத்தம் தரும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த அழுத்தமும் வராது.

கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும்.
இறைவன் நம்மோடு இருக்கிறான்

அபூஜாஸிம்
MSc(Psychology) 
Tamil Muslim youtube channel

Thursday, April 16, 2020

*" Dr.லதா "* *Dr.சிவராம கிருஷ்ணனின் மகள் Dr.சேது ராமனின் மனைவி

கீழக்கரை சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பு என்ற அவதூறு செய்திக்கு ராமநாதபுரம் லதா மருத்துவமனையின் நிர்வாகம் விளக்கம் !"

*" Dr.லதா "*
*Dr.சிவராம கிருஷ்ணனின் மகள் Dr.சேது ராமனின் மனைவி

👇👇👇👇👇👇















*தப்லீக் ஜமாஅத்தை அச்சுறுத்தும் மத்திய அரசு*


 *தப்லீக் ஜமாஅத்தை அச்சுறுத்தும் மத்திய அரசு*

 மத்திய பாசிஸ அரசின் தூண்டுதலின் பெயரில் தென்மண்டல ஐஜி அமுல்ராஜ் அவர்கள் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன் அவர்களின் மேற்பார்வையில் இதையடுத்து எஸ்பி அஸ்வின் அவர்கள் தலைமையில் 08.04.2020 அன்று காலை 08 மணிக்கு மயிலாடுதுறை போலீசார் DSP அண்ணாதுரை அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு அவர்கள் மூலம் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நீடூரில் மதரஸா பள்ளிவாசளுக்கு வந்தனர்.


 07.04.2020 அன்று காலை 10 மணிக்கு கிராம நிர்வாகி பொய் புகாரின் பெயரில் இஸ்லாமிய ஆன்மீக சேவை செய்வதற்காக நீடூர் வந்த 10 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் (Passport Act, Foreigners Act U/S 188, 209, 14B, 14C OF 1946) பொய் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.


தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில்  தற்போது  நீடூரில் மதரஸா பள்ளிவாசலில் தங்கி உள்ளார்கள்.

பிப்ரவரி 20 ஆம் தேதி அன்று, 10 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத்தினர் இந்தியாவுக்கு வந்தனர்,

மார்ச் 13 ஆம் தேதி, தப்லிக் ஜமாத் இஸ்திமாவிற்கு கலந்து கொள்ளவில்லை,

மார்ச் 22 ஆம் தேதி, ஊறடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால் எதற்கும் சம்மதம் இல்லாத வெளிநாட்டினருக்கு கொரோனா வைரஸ் உள்ளதாக வதந்தியை கிளப்பி விட்டு அவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.

கலெக்டர், சப்  கலெக்டர், டி.ஆர்.ஓ, காவல்துறையினர்கள் மற்றும் மருத்துவர்கள் எல்லாம் அவர்களை    பரிசோதித்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் ஒன்றும்  இல்லை என்று உறுதி செய்து கொண்டு,  அவர்களை நீடூர் மதரஸா பள்ளிவாசல் கேட்டைத் தாண்டி வெளியில் எங்கும் செல்லக்கூடாது, அவர்களை யாரும் சந்திக்க கூடாது என்று நாகப்பட்டினம் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இருந்த போதிலும் தற்போது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் (Passport Act, Foreigners Act U/S 188, 209, 14B,14C OF 1946) வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்யப்போவதாக காலையில் விசாரணைக்கு அழைத்தனர்.

பிறகு ஊர் ஜமாத்தார்கள், தப்லீக் ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் அனுமதி கொடுக்காததால் அவருடைய பாஸ்போர்ட்டுகளை இன்று 08.04.2020, காலை 11:00 மணி அளவில் வாங்கி சென்று, முடக்கி உள்ளனர். பாஸ்போர்ட்டுகளை இந்திய உள்துறை செயலகத்துக்கு அனுப்பி விசாரணை செய்ய உள்ளனர்.

மீண்டும் எஸ்பி அஸ்வின் அவர்கள் தலைமையில் 08.04.2020 அன்று இரவு 11 மணிக்கு மயிலாடுதுறை போலீசார் DSP அண்ணாதுரை அவர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு அவர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் நீடூர் மதரஸா பள்ளிவாசலில் முற்றுகை இட்டுள்ளனர். 

ஒரு சில போராளிகள் பேச்சுவார்த்தை போராட்டத்தின் அழுத்தத்தின் காரணமாக பள்ளிவாசல் உள்ளே நுழைய முடியாமல் திணறி வந்தனர். 

09.04.2020 அன்று இரவு 01:00 மணிக்கு சில நயவஞ்சக தலைவர் வற்புறுத்தலின் பெயரில் 5 செல்போன்களை வலுக்கட்டாயமாக வாங்கி சென்றனர். தற்போது பத்து வெளிநாட்டை சேர்ந்த நபர்களை விசாரணைக்கு அழைப்பதாக தெரியவருகிறது. காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து அவர்களை கைது செய்ய போவதாக சூழல் நிலவி உள்ளது. 

தற்போது காலை 11 மணி அளவில் 10 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தர்களை  கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கி கொடுத்து, நோயாளிகள் பிரிவில் Isolation ward-ல் வைத்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு அவரவர்  Embassy - யில் ஒப்படைத்து ஐந்து வருடம் இந்தியாவுக்குள் நுழைய தடை விதித்து திருப்பி அனுப்ப உள்ளனர். 

பொய் வழக்கு பதிவு செய்து, பாஸ்போர்ட்டுகளை கைப்பற்றி அவருடைய செல்போன்களை மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்து, கைது செய்து  தமிழக காவல்துறையின் மூலம் தொந்தரவு கொடுக்க வைக்கும் மத்திய பாசிச அரசை முஸ்லிம் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் மத்திய அரசு சொல்லக்கூடிய மதரீதியாக பரப்பப்படும் கொரோனா ஜிஹாத் என்ற வதந்திகளை அப்படியே யாரும் நம்பவேண்டாம், விரைவில் உண்மை வெளிவரும் இன்ஷாஅல்லாஹ். தப்லீக் ஜமாஅத் மாநாட்டுக்கு சென்ற யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று பஞ்சாப் மீடியாக்கள் உண்மையை எடுத்துரைத்துள்ளார்கள். பஞ்சாப் மக்களும், இந்திய மக்களும் இதை நம்பவில்லை.

தில்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 1200 பேர் கலந்து கொண்டார்கள் என்றும் அவர்களில் 1103 பேர் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொண்டார்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் ஏப்ரல் 01 ஆம் தேதி ஊடகங்கள் முன் சொன்னார்கள்.

அதன் பின்  டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் முறையே
 ஏப்ரல் 1 - 110 பேருக்கும்
 ஏப்ரல் 2 - 74 பேருக்கும்
 ஏப்ரல் 3 - 101 பேருக்கும்
 ஏப்ரல் 4 - 73 பேருக்கும்
 ஏப்ரல் 5 - 85 பேருக்கும்
 ஏப்ரல் 6 - 48 பேருக்கும்
 ஏப்ரல் 7 - 67 பேருக்கும்
ஆக மொத்தம் இதுவரை டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த 558 பேருக்கு கொரனோ உறுதி செய்யப்பட்டிருப்பதாக  ஊடகங்களுக்கு பீலா இராஜேஷ் பேட்டி கொடுத்தார். 

இதுவரை எந்த சிக்கலும் இல்லை. 

அடுத்து என்ன சொன்னார்?

தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.

அதிகமாக அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய யுத்தம் இந்தியா முழுவதும் நடக்கிறது. CCA, NRC, NPR போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதற்கு இப்போது Corona Virus- கொரோனா வைரஸ் போர்வையில் தமிழக காவல்துறையினர் மூலம் தன் வேலையை காட்டுமிராண்டித்தனமாக மத்திய பாஷிச அரசு செயல்படுத்துகிறது. ஆகையால் மத்திய பாஷிச அரசை கடுமையாக கண்டிக்கிறோம், இதை கண்டும் காணாமலும் சீர்கெட்ட நிர்வாகம் செய்யும் தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். 
                                                                *இப்படிக்கு*
   *முஸ்லிம் ஜமாத்*
*JAMATUL MUSLIMEEN*

*உங்கள் கண்டனத்தை பதிவு செய்ய* 
முதல்அமைச்சர் - 9443146857
விஜய பாஸ்கர் MP - 9750966601, 9443388155
மயிலாடுதுறை MLA ராதாகிருஷ்ணன் 9443606873
நாகப்பட்டினம் கலெக்டர் 9942184000
மயிலாடுதுறை துணை கலெக்டர் 9445000462
RDO அலுவலர் 9445000462
MHO அலுவலர் 9842461869
தென்மண்டல ஐஜி அமுல்ராஜ் - 9443311220
தஞ்சாவூர் டிஐஜி லோகநாதன் - 9884447581
நாகப்பட்டினம் எஸ்பி அஸ்வின் - 9445008800
 மயிலாடுதுறை DSP அண்ணாதுரை - 04364222010
காவல் ஆய்வாளர் சிங்காரவேலு - 9443855155
காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் - 9790116211
IS சந்துரு – 9498164762
*தேதி:08.04.2020, புதன்கிழமை, நேரம்:08:00AM, மணி முதல் 12:00PM வரை தேதி:09.08.2020, வியாழக்கிழமை,நேரம்:11:00PM மணி முதல் 01:30PM வரை, தேதி:09.08.2020, வியாழக்கிழமை,நேரம்:09:00AM மணி முதல் 11:30AM வரை. இடம்: மதரஸா மஸ்ஜித், நீடூர்-நெய்வாசல், மயிலாடுதுறை*

Wednesday, April 15, 2020

மோடி அடிமை எடப்பாடி அரசு, காவித்துறை சொல்வதையெல்லாம் நாம் கேட்க வேண்டாம்

மத்திய ஃபாசிச பா.ஜ.க அரசு மோடி அடிமை எடப்பாடி அரசு, காவித்துறை சொல்வதையெல்லாம் நாம் கேட்க வேண்டாம் குறைந்தபட்சம் நம் உயிரிலும் மேலான உத்தம திருநபி முகம்மது (ஸல்) அவர்கள் சொல்வதையாவது கேட்போமே? ஊரடங்கு உத்தரவை மதிப்போம், முக கவசம் அணிவோம், தனிமையில் இருப்போம், பயணம் செய்வதை தவிர்ப்போம்.


*" CORONA VIRUS " தொற்றாமல் இருக்க 1441 வருடங்களுக்கு முன்பே அழகிய வழிகாட்டலை உலகிற்கு கற்றுத்தந்த இறைதூதர் முஹம்மத் நபி ( ஸல்) அவர்கள் !*

👍💐👍💐👍💐👍💐👍💐

*1) தனிமைப்படுத்தல் :*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
 நபிகளாரின் ஒரு அறிவுரையாகும்.

    "சிங்கத்திடமிருந்து  வெருண்டோடுவது  போன்று  தொற்று  நோயாளிகளிடமிருந்தும்  விலகி  ஓடிவிடுங்கள்."
*புகாரி - பாகம் 7, நூல் 71,  எண் 608*

*2) சமூக விலகல் :*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நபிகளாரின் அறிவுரையாகும்.
  
     "தொற்று நோயால்  பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமானவர்களிடமிருந்து  விலக்கி  வைக்கப்பட வேண்டும்.
*புகாரி 6771,  முஸ்லிம் 2221*

*3) பயணத்தடை :*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நபிகளாரின் அறிவுரையாகும்.

    தொற்று நோய்  பரவியிருக்கும் பகுதிக்குள் செல்லாதீர்கள். அவ்வாறே தொற்று நோய்  பரவியுள்ள பகுதியிலிருந்து  வெளியேறாதீர்கள்.
*புகாரி 5739,  முஸ்லிம் 2219*

*4) பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள் :*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
உங்களிடம் அறிகுறிகள் தென்பட்டால் .

நபி (ஸல்) கூறியுள்ளார்கள்..." பிறருக்கு  தீங்கு  விளைவிக்காதீர்கள்".
*இப்னு மாஜா 2340*

*5) வீட்டில் இருத்தல் :*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
 நபிகளாரின் அறிவுரையாகும்.

தங்களையும் பிறரையும் பாதுகாப்பதற்காக வீட்டிலேயே தங்கி இருந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பவர்களாவர்.
*முஸ்னத் அஹமத்,  ஸஹீஹ்*

*6) வீடே பள்ளிவாசல் :*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
 தேவையான. காலகட்டங்களில்.

நபி (ஸல்) கூறினார்கள்..."முழு  உலகும்  தொழும் இடமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது, கல்லறைகளையும்  கழிவறைகளையும்  தவிர."
*திர்மிதி; அஸ்ஸலாஹ்..291*

*7) நிவாரணம் உண்டு*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
 பொறுமை அவசியம்.
 
 நப(ஸல்) கூறியுள்ளார்கள் - "நிவாரணத்தை ஏற்படுத்தாமல் அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அனுப்புவதில்லை."
*புகாரி பாகம் 7, நூல் 71, எண் 582.*

*8) சிகிச்சை  செய்வோம்.அல்லாஹ் குணமளிப்பான்* 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நபி(ஸல்) கூறினார்கள்: ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் இருக்கின்றது. ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது எனில் அது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே நீங்குகின்றது.
*முஸ்லிம் # 2204*

*9) முகக் கவசம்* 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
 நபிகளாரின் அறிவுரையாகும்.

"நபியவர்கள் தும்மும் போது தம் கைகளைக் கொண்டோ அல்லது தனது ஆடையைக் கொண்டோ முகத்தை மூடிக் கொள்வார்கள்"
*அபுதாவூத்,  திர்மிதி (பாகம் 43,  எண் 269),*

*10) வீட்டிற்குள் நுழைந்ததும் கைகளைக் கழுவுங்கள்*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நபி(ஸல்) கூறினார்கள் : தூய்மை ஈமானில் பாதியாகும். 
*முஸ்லிம் 223.*

*11) வீட்டில் தனித்திருத்தல் :*
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
நபிகளாரின் அறிவுரையாகும்

தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தன் வீட்டிலேயே பொறுமையுடனும் கூலியை எதிர்பார்த்தும்,  அல்லாஹ் தனக்கு விதித்துள்ளதைத் தவிர வேறு எந்த ஒன்றும் தன்னை அணுகாது என்றும் காத்திருந்தால், ஒரு  உயிர்தியாகியின்(ஷஹீத்) கூலியை அவர் அடைந்து கொள்வார்.
 *முஸ்னத் அஹமத்,  ஸஹீஹ், புகாரி 2829,  முஸ்லிம் 1914.*

முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக டாக்டர் அம்பேத்கர்.......



1946ம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் பம்பாயில் இருந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி கைவிடாது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் உறுப்பினர் தேர்விற்கான பட்டியலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயர் (அன்றைக்கு இருந்த சனாதன சக்திகளின் சூழ்ச்சியால்)  காங்கிரஸ் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை என்ற செய்தி காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இருந்து தான் தெரியவந்தது. 

இந்த செய்தி அறிந்த முஸ்லிம் லீக் தலைவர்கள் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் அறிவும் ஆற்றலும் நாட்டுக்கு பயன்பட வேண்டும் என்ற நன்னோக்கில் வங்காளத்திற்கு அழைத்து முஸ்லிம் லீக்கிற்கான ஒதுக்கீட்டில் முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக அறிவித்து, வெற்றிப்பெறச் செய்து அண்ணல் அம்பேத்கர் அவர்களை அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆக்கினர் என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு. 

ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை   மக்களுக்காக போராடிய அண்ணலை கொண்டாடும் நாம் நெஞ்சத்தில் பதிந்து வைக்க வேண்டிய மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க  நிகழ்வு ஆகும் அது. 

-ஏப்ரல் 14, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம்.

Sunday, April 12, 2020

மேலப்பாளையம் மக்களே.சமுதாய துரோகிகளை ஊருக்குள் விடாதீர்கள். 2 in 1

ரமலான் மாதத்தில் அரசு வழங்கும் பச்சரிசியை வாங்கமாட்டோம்

தென்காசி மாவட்டம்
 VK புதூர் வட்டம்
பாவநாசபுரம் அவுலியா முகைதீன் குத்பா பள்ளிவாசல்  நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்களின் தீர்மானம்

1. இந்த வருடம் ரமலான் நோன்பு காலத்தில் நோன்பு கஞ்சிக்காக அரசால் வழங்கவிருக்கும் பச்சரிசியை வாங்கமாட்டோம். 

2. 13 மாநிலங்களில் CAA  NRC  NPR ஆகிய மக்களை பிளவுபடுத்தும் சட்டங்களை அமுல்படுத்தமாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய பெருமக்கள் இந்த கொடுஞ்சட்டங்டளுக்கு எதிர்ப்பைக்காட்டும் விதத்தில் ஊர்வலங்கள், பேரணிகள், கண்டனக்கூட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள், இஸ்லாமிய அறநெறி மற்றும் காந்திய வழிகளில் அறப்போராட்டங்கள் இறுதியாக சட்டசபை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகைப்போர் போன்ற எண்ணற்ற போராட்டங்களை கடந்த 60 நாட்களாக நடத்தியும் தமிழக அரசு இஸ்லாமியர்களின்  "சட்டசபையில் தீர்மானம்" என்ற ஒற்றைவரி கோரிக்கையை செவிசாய்க்காமல் ஏற்க மறுத்துவிட்டு உலமாக்கள் பென்சன் உயர்வு, ஹஜ் பயணிகளுக்கு தங்குமிடம் போன்ற சில்லறை விஷயங்களை மாண்புமிகு முதல்வர் அறிவிக்கிறார்கள்.

யாருக்கும் பாதிப்பு இருக்காது என்று சொல்லும் அரசு அதனை தீர்மானமாக நிறைவேற்றி எங்களை அமைதிப்பபடுத்தலாமே...

10000 கிலோமீட்டர் தூரத்தில் சீனாவிலிருந்து வரும் நம் பிரஜைகளை கொரோனாவால் பாதிக்கப்படக்கூடாது என்று தனிமைப்படுத்தி சிகிட்சையளித்து வீட்டுக்கு அனுப்பும் முன்னெச்சரிக்கைகளை எடுக்கும் தமிழக அரசு இஸ்லாமியர்களுக்காக இந்த ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றி பாதுகாப்பு அளிக்கலாமே.

7000 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் உணவை படைத்துவிட்ட வல்லோன் அல்லாஹ், ஒவ்வொரு அரிசியிலும் எங்கள் பெயரை எழுதிவைத்துள்ள அல்லாஹ் அவனே நேரிடையாக நற்கூலியை வழங்கும் ரமலான் மாதத்திலா உங்களிடம் பச்சரிசியை வாங்க கையேந்த வைப்பான்????

இன்ஷா அல்லாஹ் எங்கள் உலமாக்களை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்

எங்கள் நோன்புக்கஞ்சியை நாங்களே எங்கள் சொந்த செலவில் நல்ல தரமான பச்சரிசியை வாங்கி காய்ச்சி கொள்கிறோம்.

இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் இந்த தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இறைவனுக்கு மட்டுமே அஞ்சுவோம்
அவனிடம் மட்டுமே கோரிக்கை வைப்போம்.
படைத்தவன் பாதுகாப்பான்.

கௌரவதலைவர் : ஷேக் அப்துல் காதர்
9003522477

தலைவர் : ஷேக் முகைதீன்
9894320952

செயலர் : கோதர் ஹுசைன்
9790805685

பொருளாளர் : முகைதீன் பிச்சை
9865877012

-------------------------------------------------------------------------------------------------------------------
[11/04, 9:13 pm] : டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவியது என்று சங்கிகள் பொய்யை பரப்பி வந்தார்கள்.முதன் முதலில் நமது மேலப்பாளையத்தில் 20 பேருக்கு கொரோனா என்று ஐகிரவுண்ட் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

இன்று அவர்களுக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை செய்த போது அனைவருக்கும் கொரோனா இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது.இதை கேள்விப்பட்ட மேலப்பாளையம் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் சமயத்தில் 

ஒரு சில சமுதாய துரோகிகள் அவர்களுக்கு அரசு அதிகாரிகள் மூலம் காரியம் ஆவதற்காக நமது ஊர் மேலப்பாளையத்தை காஷ்மீர் போன்று மாற்ற துடித்துக்கிறார்கள்.

அதில் குறிப்பாக டவுணைச் சேர்ந்த மில்லத் இஸ்மாயில் என்பவன்.இவன் அறக்கட்டளை ஒன்று நடத்தி அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்து வருகிறான். ஏற்கனவே இவன் ஒரு கொலை செய்துவிட்டு 10 ஆண்டுகள் ஜெயிலில் இருந்து பொது மண்ணிப்பில் விடுதலை செய்யப்பட்டவன்.

ஜெயிலிலிருந்து வெளியே வந்த பிறகு குடியும், கும்மாளமுமாக   சுற்றி வருகிறான்.அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கராக செயல்பட்டு வருவதால் அவர்கள் மூலம் ரோடு போடும் காண்டிராக்ட் எடுத்து தரமில்லாத ரோடுகளை போட்டு லட்சணக்கணக்கில் சம்பாதித்து  வருபவன். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதித்து கொள்பவன். 

இப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் தனது காரியங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக நமது ஊர் மேலப்பாளையம் மக்களை பலி கொடுக்க தயாராகிவிட்டான்.

அதாவது நமது ஊரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை என்று தற்போது செய்திகள் வரும் வேலையில் நம்ம ஊர் மக்கள் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டும் தான் வெளியே வர வேண்டும் மற்ற நாள்களில் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போடுகிறான் 

இந்த குடிகாரன் .நம் ஊர் மக்களுக்கு உத்தரவு போட இந்த குடிகாரனுக்கு என்ன உரிமை உள்ளது. இவனுக்கு  அரசன் ரியாஸ் போன்றவர்கள் பணம் உதவி செய்கிறார்கள் அரசன் ரியாசிடம் கட்டிட வேலை செய்யும் யாசர் அராபத் என்பவனும் தனக்கு மாநகராட்சியில் கட்டிட பிளான் உள்ளிட்ட விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக இவ்வாறு செய்கிறார்கள். 

மேலப்பாளையத்தில் இன்று 3 கலர்களில்  கார்டு விநியோகம் செய்கிறார்கள்.இவர்கள் யார் நம்மை வெளியே வரக்கூடாது என்று சொல்ல.
அரசு அதிகாரிகள் கூட சொல்லாத விசயத்தை இவர்கள் நம்மிடம் ஏன் சொல்கிறார்கள் தெரியுமா அவர்களுக்கு அந்த அதிகாரிகள் மூலம் கான்டிராக்ட் வர வேண்டும் என்பதற்காக தான். 

நம்ம மேலப்பாளையம் மக்களுக்கு துரோகம் செய்யும் இவர்களை ஊருக்குள் விட வேண்டாம்.காஷ்மீரை போல நம்ம ஊரையும் மாற்ற துடிக்கும் இந்த சமுதாய துரோகிகளை விரட்டியடிப்போம்.


[11/04, 9:13 pm]  அண்ணன் இப்படி ஒரு செய்தி பரவுகிறது


Saturday, April 11, 2020

மேலப்பாளையம் ஊரை ஹயாத்தும் LKS தான் தூக்கி நிறுத்துறாங்க

அப்போம் DMK காங்கிரஸ் CPM CPI    அமமுகா     SDPI TMMK TNTJ இது போல் எத்தனையோ நல் உள்ளங்கள் எல்லாம் கழப்பனி ஆற்றி வருகின்றனர் மேலப்பாளையம் ஊரை ஹயாத்தும் LKS
தான் தூக்கி நிறுத்துறாங்க 


சந்தோஷம்  LKS மீரான் இவர் மேலு வீட்டு மாப்பிள்ளை  ஹயாத் டீகடையில் 
வேளை பார்த்தவர் பல லட்ஜத்துக்கு அதிபதி சாராய காண்டாக்டர் மூலம் இந்த இருவரும் தான் இப்போது நம் ஊர்
மேலப்பாளையத்தை 
தூக்கி நிறுத்துவது போல் சில முட்டால்கள் அப்டேட் 
செய்து வருகிறார்கள்
இந்த இருவராலும்
ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது
சந்தை மெயின் ரோட்டில் உள்ளபேரி கேட் ஹயாத் மூலம் அகட்ட படும் என்று
சில ஹயாத்தின் கைத்தடிகல்
பேஷ் புக்கில்அப்டெட் போட்டிருந்தார்கள்
ஆனால் ஹ
யாத்தால் ஒரு கம்பியை கூட பிடுங்க முடியவில்லை
அந்த பேரி கேட் இந்தியா முழுவதும் மக்கள் பணி செய்யும்
 இயக்கத்தின் முக்கிய
பிரமுகர்கள் சிட்டி போலீஸ் கமிஷ்னரிடம்
நேரில் சென்று கோரிக்கை வைத்து 
அந்த பேரிகேட் அகற்ற பட்டது இதையும் ஹயாத்தான் செய்தார் என்று அப்டேட் செய்வார்கள் சில
கைக்கூலிகள்
CAA NPR NRC போராட்டம் நடை பெற்ற போது பல இடையூறு
செய்த ஹயாத்து தான்
இப்பம் ஊரை தூக்கி நிறுத்துறாம்
பீலாவுடன் சேர்ந்து
பீலாவுடும் LKS.
ஹயாத் இந்த ஊரை காக்க வந்த உத்தமர்கள்
ஊரை காட்டிக் கொடுக்கும் இந்த இருவரின் சுய நலம்
விரைவில் வெளி வரும்

Sunday, February 09, 2020

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்



தொகுப்பாசிரியர் - ஆளூர் அமீர் அல்தாஃப், கோயம்புத்தூர்


4 தொகுதிகள் 
2800 பக்கங்கள் 
1600 தலைப்புகள் 
13,000 வண்ணப்படங்கள் 

நான்கு பாகங்கள், 2800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 779 தலைப்புகள், 13,000 வண்ணப்படங்கள் 
என மாபெரும் திருக்குர்ஆன் அறிவுக்களஞ்சியத்தை அமீர் அல்தாஃப் படைத்துள்ளார். 

தமிழ், ஆங்கிந்லம் ஆகிய இரண்டு மொழிகளில் 276 நூல்கள், 21 இதழ்கள் துணையுடன் இந்த சாதனை 
படைக்கப்பட்டிருக்கிறது. 

அறிவியல், புவியியல், வானவியல், மானுடவியல், சமூகவியல், மருத்துவம், நீர் மேலாண்மை, 
சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக திருக்குர்ஆன் பேசுகின்ற வியக்க வைக்கும் தகவல்களை 
அமீர் அல்தாஃப் மிகவும் அற்புதமாக தொகுத்தளித்திருக்கிறார். 

ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனங்களை கவரும் வண்ணப்படங்களுடன் விளக்கியிருப்பது 
கூடுதல் சிறப்பு. 

இறைத்தூதர் வரலாறு, முந்தைய சமூகத்தார் வரலாறு, நபிகள் நாயம் (ஸல்) அவர்களது 
அதிசயிக்கத்தக்க வரலாறு, பெருமானாரின் முக்கியமான கடிதங்கள், நபிமொழி களஞ்சியம், 
முன்னறிவிப்புகள், இஸ்லாமிய பண்பாடு, சட்டம், போர்க்டள், இறுதி நாளின் அடையாளம் 
முதலிய முக்கியமான அத்தியாயங்கள் இந்த கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன. 

அரிய புகைப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் மூலம் தனது கருத்துக்களை 
எளிமையாக எடுத்துரைத்துள்ளார். பல்வேறு சமய நூல்கள், வேதங்கள், புராணங்களிலிருந்தும்
பொருத்தமான மேற்கோள்கள் மூலம் தனது கருத்துக்களை நிறுவுகிறார் அமீர் அல்தாஃப். 

இப் பெருநூல், அதன் பெயருக்கேற்ப அத்தாட்சிகள் குவிந்திருக்கும் திருக்குர்ஆன்
கலைக்களஞ்சியம் ஆகும் என பேராசிரியர் அ. முஹம்மது கான் பாஸில் பாகவி புகழாரம் 
சூட்டுகிறார். 

காலத்தால் அழியாத கருவூலம் திருக்குர்ஆன், காலமெல்லாம் நின்று வழிகாட்டும் 
கலைக்களஞ்சியமே இந்நூல் என மௌலானா எம். முஹம்மது மன்சூர் காஷிஃபி காஸிமி 
தெரிவித்துள்ளார். 

குர்ஆன் கூறும் ஞானம் அளவிடற்கரியது. அது படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறிவுக் கருவூலம் 
ஆகும். அது மனிதனின் சிந்தனையைத் தட்டி எழுப்பி இதயங்களை வேகங்கொள்ள வைக்கிறது. 
இந்த பிரபஞ்சம் முழுக்க நிரம்பி வழியும் இறை அத்தாட்சிகளை எடுத்துக் கூறி மனிதகுலத்தை 
நேர்வழிபடுத்தும் மாபெரும் உந்து சக்தியாகவும் திகழ்கிறது என மௌலவி எஸ்.என். ஜாபர் சாதிக் 
பாஸில் பாகவி கூறுகிறார். 


இந்நுல் காலத்தால் அழியாத ஒரு சேவை. மறுமை நாள் வரை நின்று விளங்கும் பேரற்புதமான
பணி என தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி 
கூறியுள்ளார். 

மேலும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு நீதியரசர் எப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லாஹ், 
உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு நீதியரசர் கே.என். பாஷா உள்ளிட்டோரும் 
இந்த பணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இத்தகைய சிறப்பு மிக்க அறிவுக் கருவூலத்தை படைத்துள்ள அமீர் அல்தாஃப் அவர்கள் 
நிதித்துறையில் ஓய்வு பெற்ற  மத்திய அரசு அதிகாரி ஆவார். அவரின் இந்த பணியை 
ஊக்கப்படுத்த ஒவ்வொருவரும் இதனை வாங்கி ஆதரிக்க வேண்டும். 

இத்தகைய அறிவுக் கருவூலத்தை ஒவ்வொருவரும் வாங்கி படித்து பயனடைய வேண்டும். 

மேலும் தங்களது ஊரில் உள்ள பள்ளிவாசல், பள்ளிக்கூடம், அரபிக் கல்லூரி, நூலகம் 
ஆகியவற்றுக்கு அன்பளிப்பு செய்யக்கூடிய அரிய நூல் ஆகும். 

விலை : ரூ. 3,000
கூரியர் செலவு : ரூ. 500

மொத்தம் : ரூ. 3,500


நூல்களைப் பெற : 

புதிய சமுதாயம் பதிப்பகம், கோவை - 90870 46667 / 98 949 11771


துபாயில் பதிவு செய்ய : +971 50 51 96 433


Bank Details 

NEW UMMATH CHARITABLE TRUST 
BANK OF BARODA 
SUNDHARAPURAM BRANCH
ACCOUNT NO : 472 10 200000 516
NEFT IFSC CODE : BARB0SUNCOI


குறிப்பு : 

கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் வந்த 
அல்ஹாஜ் ஆளூர் அமீர் அல்தாஃப் அவர்களுக்கு 
அபுதாபி அய்மான் சங்கம், 
அல் அய்ன் இந்திய சமூக நல மையம்,
துபாய் ஜுமா அல் மஜித் கலாச்சார மையம் 
உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் 
சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 




MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com
00971 50 51 96 433

அறிவியல் தொடர்பான விஷயங்களில் 'இப்படியெல்லாமா ஃபத்வாக்கள் இருந்தன?'... என்று, நீங்கள் என்றைக்கேனும் ஆச்சர்யப்பட்டதுண்டா..?

[05/02 07:10] Mohamed Rafeek: 

1
300 வருஷங்களுக்கு முன்னால்... கடிகாரங்கள் பரவலாக புழக்கத்துக்கு வந்தபோது, அவற்றில் துல்லியமாகவும் இலகுவாகவும் நேரம்பார்த்து பாங்கு சொல்லி தொழுகை நடத்துவது ஹராமெனக்கூறி... 'வானத்தில் சூரியனை பார்த்து பொருட்களின் நிழலின் நீளத்தை அளந்து பார்த்துதான் பாங்கு சொல்லணும், அதுதான் சுன்னா' என்று கூறி உலகளவில் உலமாக்களால் கடிகாரத்துக்கு தடை விதித்து ஃபத்வா இருந்தது.(இன்று கடிகாரங்கள் இல்லாத பள்ளிவாசல்கள் இல்லை)

2.
150 வருஷங்களுக்கு முன்னர், நேரத்தை கணக்கிட்டு தொழுகை பாங்கு அட்டவணையை... கடிகார நேரமாக எண்களில் வருஷத்துக்கு அச்சடித்துப்போட்டு அந்த கடிகார நேர அட்டவணைப்படி பாங்கு சொல்லி தொழுகை நடத்துவது ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (இன்று வேலூர் பாக்கியத்துல் ஸாலிஹாத்தின் தொழுகை கால அட்டவணைதான் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொங்கியவண்ணம் அது பாங்கு சொல்ல பின்பற்றப்படுகிறது)

3.
60 வருஷங்களுக்கு முன்னர் பள்ளிவாசலில் மைக் ஸ்பீக்கர் செட் பயன்படுத்துவது ஹராமெனக்கூறி உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (அப்போது பாப் இசை பாடகர்கள் அல்லது சினிமா பின்னணி பாடகர்கள் பாடலை மைக் பிடித்து பாடி அதை கேட்க பயன்படும் வஸ்து ரேடியோ ஸ்பீக்கர் என்பதால் அவற்றின் மீது உலமாக்களுக்கு ஒருவித வெறுப்பு இருந்தது. இன்று இமாம் மைக் ஸ்பீக்கர் செட்டில்தான் தொழ வைக்கிறார் )

4.
40 வருஷங்களுக்கு முன்னால் ஃபோட்டோ ஐடி கார்டுடன் பள்ளி வாசலுக்குள் தொழச்செல்ல முடியாது. காரணம் அவற்றில் உருவப்படம் இருப்பதால் ஐடிகார்டுகள் ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. இன்று இமாம் ஃபோட்டோ ஐடி கார்டோடு தொழ வைக்கிறார்.

5.
30 வருஷங்களுக்கு முன்னால் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குள் நிக்காஹ் நிகழ்ச்சிகளை படம்பிடிக்க நுழைய முடியாது. காரணம், டிவி விசிஆர் வீடியோ கேசட் எல்லாம் ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (இன்று இமாமின் ஜும்மா சொற்பொழிவு வீடியோ எடுக்கப்படுகிறது. டிவியில் ஒளிபரப்பப்படுகிறது)

6.
நான் சவூதிக்கு வந்த புதிதில்... 2004ல் கேமரா மொபைல் ஃபோன்களுக்கு விற்க வாங்க சவுதிக்குள் கொண்டுவர தடை இருந்தது.(கேமராவுக்கு தடை இல்லை) 2005ல் அந்த தடை நீக்கப்பட்டது. என்றாலும், கேமரா மொபைல் போன்களை பார்த்து முத்தவாக்கள் 'ஷைத்தான்' என்பர். அப்போது வெளிவந்த ஒரு நோக்கியா கேமரா மொபைல் (Nokia 6680) ஃபோனின் அரபிப்பெயர் : 'ஷைத்தான் அல் கபீர்'. கபீர் என்றால் பெரிது. இன்று கேமரா வாய்த்த ஸ்மார்ட் ஃபோன் இல்லாத இமாம்களே இல்லை எனலாம்)

7.
தற்போது, 'வானியல் அறிவியல் படி கண்ணால் காணக்கூடிய' அளவிலான நம் பிறையை நம் நாட்டில் மேகம் மறைத்து காணமுடியாத நிலையில், நமக்கு கிழக்குப்புறம் உள்ள பல நாடுகள் அவற்றை ஆல்ரெடி மேகம் மறைக்காமல் பார்த்து விட்டதாக லைவ் வீடியோ & ஃபோட்டோ அப்டேட்ஸ் அறிவித்த செய்திகளை மதியம் - மாலை முதலே நாம் நமது கைபேசியில் பார்த்திருந்தாலும்... நமக்குப்பின்னே மேலை நாட்டினர் அதே பிறையை மேகம் மறைக்காமல் பார்த்துவிட்டதாக இஷா தாண்டியும் நம் கைபேசிக்கு பிரேக்கிங் நியூஸ் வந்தாலும்... நடுவே உள்ள நம் நாடு மட்டும் 'நாங்கள் பிறை காணவில்லை' என்று தூங்கப்போவதும் அல்லது பெருநாள் கொண்டாட போகாமல் 30ம் நோன்பு வைக்க ஸஹர் செய்யப்போவதும்... இன்னும் நடந்துகொண்டேதான் உள்ளன. 'கண்ணால் காணக்கூடிய பிறை' இந்த மாதத்தில் இந்தந்த நாடுகளில் இருந்து துவங்குகிறது... என்ற ஸ்மார்ட் போனில் 'ஹிலால் சைட்டிங் ஆப்ஸ்' பார்த்து சந்தேகம் இல்லாத புரிதல் ஏற்பட்டு, அதன்படி முதன்முதலில் மேகம் மறைக்காமல் பார்த்த பிறையை அந்த நாட்டிலிருந்து மற்ற மேற்குப்புற நாடுகள் அனைத்தும் பிறை அறிவிப்பாக ஏற்று, என்றைக்கு பிறை தமது பிறைகளை இப்படி அறிவிக்கப்போகிறோமோ... தெரியவில்லை.

அதுவரை தொடர்ந்து மூன்று மாதங்களையும் மேகம் மறைத்துவிட்டது என்று கூறி முப்பதாக்கிக்கொண்டு மார்க்கத்தில் தவறானதை தவறான நாட்களில் செய்துகொண்டு அறியாமையில்தான் வீழ்ந்து கிடப்போம் போல. மேகம் மறைக்காத கிரகணங்களை கண்டு 14ம் இரவையும் 28/29 ம் பகலையும் நமது பிறை நாட்காட்டியில் சரி செய்துகொள்ள மாட்டோமா..?                    -முஹம்மத் ஆஷிக்
[05/02 07:17] Mohamed Rafeek: பிரையை மட்டும் பார்த்த பிறகுதான் பின்பற்றுவோம் என்று அடம்பிடித்துக்கொண்டு இருப்பவர்களெல்லாம் கிரகணம் ஏற்படும் ஒரு நாளைக்கு முன்பே கிரகணத் தொழுகைக்காக அழைப்பு கொடுத்தது எந்த அடிப்படை என்று நாம் தான் சிந்தித்து உண்மையை விளங்கி செயல்பட வேண்டும்

Friday, August 09, 2019

நீதியின் பக்கம் நிற்போம்! அநீதியாளர்களை அடையாளம் காண்போம்!!

[09/08, 9:40 am] யூசுப் 
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
திறந்த மனதுடன் ஒரு மடல் 
தயவு செய்து படிக்கவும்..

நீதியின் பக்கம் நிற்போம்!
அநீதியாளர்களை அடையாளம் காண்போம்!!

அன்புடையீர்! 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…!!

சென்ற ஜூலை 27 அன்று காரைக்கால் தவ்ஹீத் பேரவை நடத்திய பொதுக் கூட்டத்தில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பீ.ஜெ. அவர்கள், ததஜ நிர்வாகிகள் தனக்கு இழைத்த அநீதி - துரோகங்களை வெளிச்சப்படுத்தினார். மேலும், தன்னை வெளியேற்றிய பிறகு ததஜ தலைமை பொருளாதார ரீதியாக செய்த மோசடிகளையும், வஹீ மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையிலிருந்து எவ்வாறெல்லாம் தடம் புரண்டு வருகிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு பேசினார்.
முத்தாய்ப்பாக - 
"ததஜ தலைமை என் மீது சுமத்தியுள்ள பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதைத் தக்க ஆதாரங்களுடன் என் முன்னால் மக்கள் மத்தியில் அவர்கள் பொது விசாரணை மூலம் நிரூபிக்கட்டும்.

அதேபோல ததஜ தலைமை மீது நான் வைக்கும் பொருளாதாரக் குற்றச்சாட்டு, மார்க்கத்தில் தடம் புரண்டது குறித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தக்க ஆதாரங்களுடன் அவர்கள் முன்னால் மக்கள் மத்தியில் நான் நிரூபிக்கிறேன்.
இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் தனித்தனியே சமூக ஊடகங்களிலும், உள்ளரங்குகளிலும், மேடைகளிலும் குற்றச்சாட்டுகளை கூறி மக்களைக் குழப்புவதை விட, இரு தரப்பும் ஒரே மேடையில் ஒரு பொது விவாதத்தை சந்திப்போம். எனக்கு எதிராக உங்களிடமுள்ள அனைத்து ஆதாரங்களையும் அள்ளிப் போட்டு, ஒரே விவாதத்தில் என்னை மேலும் கேவலப்படுத்தி, மக்களிடமிருந்து என்னை அன்னியப்படுத்திவிடுங்கள்." என்று பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
சகோதரர் பீ.ஜெ. அவர்களின் காரைக்கால் அறைகூவலைத் தொடர்ந்து, அதே இடத்தில் ததஜவினர் வரும் ஆக.9 அன்று ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதை நாங்கள் வரவேற்கிறோம். முக்கியமாக பீ.ஜெ. மீது கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழகம் முழுவதும் பல்வேறு மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் ஆதாரமற்ற அவதூறுகளை பரப்புவதில் முன்னிலை வகிக்கும் ததஜ மாநில பொதுச்செயலாளர் ஈ.முஹம்மது, மாநிலச் செயலாளர் அப்துல் கரீம் மற்றும் கோவை .ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்கள். அதை மேலும் நாங்கள் வரவேற்கிறோம்.
வழக்கம் போல எல்லா மேடைகளிலும் பீ.ஜெ. மீதான அவதூறு புராணம் பாடுவதைப் போல ஆக.9 காரைக்கால் மேடையிலும் பாடாமல், பீஜே அவர்களின் விவாத அறைகூவலை ஏற்குமாறு அல்லாஹ்வுக்காக கேட்டுக் கொள்கிறோம்.
காரைக்கால் ததஜ நிர்வாகிகளும் தங்கள் தலைமையின் நேர்மையைப் பறைசாற்றும் வகையில், அல்லாஹ்வை மட்டும் அஞ்சியவர்களாக, தங்கள் தலைமைக்கு எடுத்துச்சொல்லி பீ.ஜெ.யின் விவாத அறைகூவலையும் பொது விசாரணையையும் ஏற்கச் செய்ய வேண்டும்.
விவாத அறைகூவலை ஏற்றுக் கொண்டால், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு காரைக்கால் தவ்ஹீத் பேரவை பொறுப்பேற்றுக்கொள்ளும்.
எங்களுக்கு உண்மை – சத்தியம் தான் தேவை. உறுதிமிக்க கொள்கைத் தலைமை தான் தேவை. நீதியின் பக்கம் சார்ந்திருக்கவே விரும்புகிறோம். உங்களிடம் சத்தியமும், நீதியும் இருக்குமானால் அதை நிரூபித்துக் காட்டுங்கள். பீ.ஜே.வை தூக்கி எறிந்துவிட்டு உங்கள் பக்கம் நிற்கிறோம். காரைக்கால் தவ்ஹீத் பேரவையைக் கலைத்துவிட்டு, ததஜவின் அடிமட்ட தொண்டர்களாக எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம். பீ.ஜெ.க்கு எதிராகக் கடுமையாக களமாடுகிறோம்.
ததஜ மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும், நடுநிலையாளர்களும் எங்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு வலு சேர்த்து நீதிக்கு சாட்சிகளாக நின்று மறுமை வெற்றிக்கு வழிகோல வேண்டுமென சகோதரத்துவ உணர்வுடன் வேண்டுகிறோம்.
அநீதியாளர்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி - நீதியின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகவே இந்தப் பிரசுரத்தை வெளியிட்டுள்ளோம். விவாதத்தையே வித்தாகக் கொண்டு வளர்ச்சியின் உச்சம் தொட்ட ததஜ தலைமை, இந்த விவாத அறைகூவலை ஏற்றுக் கொண்டால், ஓரளவு அவர்களிடம் ஆதாரங்களும்,உண்மையும், நேர்மையும் இருக்கும் என்று நாம் கருதலாம். அவர்கள் ஏற்கவில்லையெனில் யார் பொய்யர்கள்? யாரிடத்தில் பித்தலாட்டம் உள்ளது? என்பதை நடுநிலையான மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
இவண்
காரைக்கால் தவ்ஹீத் பேரவை (KTP)
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
----------------------------------------------------------------------------------------------------------------


09/08, 10:12 am] அப்துல்: #பிஜெ_வின்_பொது_விசாரணை_அழைப்பு_ஏற்றுக்_கொள்ளப்பட்டது

பாலியல் குற்றவாளி சகோதரர் பிஜெ ஒரு விபச்சாரகனா? இல்லையா என்பதை நிருபிக்க்க பொது விசாரணை வேண்டும் என்று பல இடங்களில் பேசி வந்ததை தொடர்ந்து தற்போது பொது விசாரணை அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

*பொது விசாரணை நடுவர்களாக 23 கூட்டமைப்பின் தலைவர்கள் இருப்பார்கள்*

தரப்பு 1: சகோ. பி.ஜெயினுல் ஆபிதீன் 
               சகோ.அப்பல்லோ ஹனிபா

தரப்பு 2: 

            சகோ.முஹம்மது காமில், சகோ.கோவை பாசித், (ஆடியோ வெளியீட்டுக் குழு) 

சகோ.ஜாஹிர் உசேன் (மாஸ்கான் சாவடி) 
சகோ. ராஜா முஹம்மது (மாஸ்கான் சாவடி)

தேதி மாதம் இன்ஷா அல்லாஹ் ஹஜ் பெருநாளைக்குப் பிறகு சகோ.பிஜே தரப்பு அறிவிக்க வேண்டும்.

விசாரணை விபரம்:

பிஜே ஒரு விபச்சாரகன் என்றும் அவர் பல பெண்களுடன் விபச்சாரம் செய்துள்ளார் என்றும் 28 நிமிடம், அப்பல்லோ ஆடியோ மற்றூம் 10 நிமிட ஆபாச ஆடியோகளை பேசியவர் பிஜெ தான் என்னும் இன்னும் வெளி வராத பல ஆதாரங்கள் ஏற்கனவே 23 கூட்டமைப்பில் சமர்பிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் ஆடியோ வெளியீட்டுக்குழு சமர்பித்து பிஜெ விபச்சாரகன் என்று நிறுபிக்கும்

சகோ.பிஜெ தன்னிடம் உள்ள ஆதாரங்களை பொது விசாரணைக் குழுவில் சமர்பித்து தன்னை உத்தமன் என்று நிருபிக்க  வேண்டும்.

பொது விசாரணைக்கான தேதியையும் இடத்தையும் சகோ.பிஜே தரப்பு வெளியிடுவதை ஆடியோ வெளியிட்டு குழு ஏற்றுக் கொள்ளும்.

பொது விசாரணை ஏற்பு, இடம் மற்றும் தேதியை தன்னுடைய ஞாயிற்றுகிழமை பேஸ்புக் லைவில் சகோ.பிஜெ தெரிவித்தாலே போதுமானது.

- இப்படிக்கு,

28 நிமிடம், அப்பல்லோ ஆடியோ மற்றும் 10 நிமிட ஆபாச ஆடியோ வெளியீட்டு குழுவினர்