Sunday, December 30, 2012

பி.ஜே.தொழாததற்கு த.மு.மு.க.வே காரணம்! அதிரையில் அஸ்ரப்தீன் பிர்தவ்சி விளக்கம்!

அதிராம்பட்டினத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தக்லித் ஜமாத்தின் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் ஷாஜஹான் எனும் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் எழுந்து ' உங்களின் தலைவர் பி.ஜே.பல வருடங்களாக பஜர் தொழுவதில்லை என்றும் உங்களின் பொருளாளர் அன்வர் பாஷா புகைப் பிடிப்பவராகவும் இருக்கும் நிலையில்,  ததஜ வில் இருக்கிறார்களே என   கேட்க அண்ணனை அப்படியே தக்லித்  செய்யும் மிமிக்ரி நடிகர் அஸ்ரப்தீன் பிர்தவ்சி அசடு வழிந்து பதில் என்ற பெயரில் உளறிக் கொட்டினர்.

த.மு.மு.க.வில் இருக்கும் போது அவரது பாதுகாப்பு கருதி அவர் தொழ வர வேண்டாம் எனும் முடிவு எடுக்கப்பட்டது. அவர் தொழாததர்க்கு அவர்கள்தான் காரணம் ! பி.ஜே.தொழவில்லை என்றால் அவர் நரகம் செல்வார்! அது குறித்து யாரும் கவலைப் பட வேண்டியதில்லை!  என்றும் அன்வர் பாஷா சிகரெட் பிடிப்பதை யாரும் பார்க்கவில்லை  சால்ஜாப்பு கூறினார்.

·                     நமக்கு எழும்   கேள்விகள் யாதெனில் 
·                  மார்க்க கடமையான தொழுகையை மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக விடலாமா?

·                     தமுமுக வில் இருந்து வெளியில் வந்து பரிசுத்த இயக்கம் கண்ட பிறகாவது தொழுது   இருக்கலாமே  ? 
·                     பாதுகாப்பு காரணம் எனில், இப்போது துப்பாக்கி ஏந்திய காவலர்கள்  வழங்கிய இந்த ஒரு வருடத்திலாவது தொழ வந்திருக்கலாமே?
·                     அல் உம்மாவிடியல், போன்ற முஸ்லிம் இயக்கங்களால் உயிருக்கு ஆபத்து' எனக் கூறும் நீங்கள் மற்ற நான்கு வக்துக்களும் வரலாமே
·                     மற்ற விசயங்களுக்காக அலுவலகத்திற்கு வரும் போதும், தேர்தல் நேரத்தில் அரசியல்வதிகளுக்காக தெருத் தெருவாக பிரசாரம் செய்யும் போதும் இல்லாத பாதுகாப்பு பயம் அல்லாஹ்வை தொழ பள்ளிக்கு வரும் போது மட்டும் வருவதேன்?
·                     அவர் தொழா விட்டால் அவர் நரகத்திற்கு செல்வார் ! மற்றவர்கள் கேட்க தேவையில்லை என்றால் வட்டி வாங்குபவன் ,வரதட்சனை வாங்குபவன், மவ்ளுது ஓதுபவன், பாதிஹா ஓதுபவன் யாரையும் நீங்கள் திட்ட  வேண்டியதில்லையே?
·                         நீங்கள்   உங்களை  மறந்து விட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகின்றீர்களா? எனும் குரான் வசனத்தின் படி முதலில் பி.ஜே.வுக்கு தொழுகையை ஏவி அன்வர் பாஷா சிகரெட்டை விட்டும் தடுக்க த.தஜ.நிர்வாகிகள் முன் வர வேண்டாமா?
·                     தொழுகையை நிலை நாட்டி ஜகாத் கொடுப்பவர் தான் பள்ளிவாசலை நிர்வகிக்க வேண்டும்! என அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான் அதனால் தொளுகையில்லாத சுன்னத் ஜமாஅத் பள்ளி நிர்வாகிகள் தகுதியற்றவர்கள் எனக் கூறிய ததஜ, இப்போது தொழுகையை நிலை நாட்டாத ஒருவரை 600 பள்ளிவாசல்களின் [ தமிழகம முழுதும் ததஜ விற்கு அறுநூறு பள்ளியாம்!  இதுவே பொய்] நிர்வாகியாக, பரிசுத்த இயக்கத்தின் தலைவராக வைத்திருப்பது சரியா?
·                     பள்ளிவாசல்களுக்கு தலைவராக இல்லை ! என்றாலும் ' அசர் போகும் , மக்ரிப் போகும் மிலாத் ஊர்வலமும் போகும் ஒருத்தனும் தொழ மாட்டன்! இவர்கள் எல்லாம் இஸ்லாமிய இயக்கத் தலைவர்களாம்! என மீலாத் கமிட்டி தலைவர்களை விமர்சித்த பி.ஜே, தொழுகையை நிலை நாட்டுவதில்லையே?  இவர் ஒரு இஸ்லாமிய இயக்கத் தலைவரா
·                     பொருளாளர் அன்வர் பாஷா சிகரட் பிடிப்பது ஊர் அறிந்த விஷயம்! பி.ஜே.முன்னாலேயே   புகை பிடிக்கக் கூடியவர் ! இல்லை என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா?
·                     பி.ஜே. தொழுகையை நிலை நாட்டுவதில்லை என்று அபு அப்துல்லாஹ் தொடங்கி அவரோடு நெருக்கமாக இருந்த அன்றைய, இன்றைய மாநில நிர்வாகிகள் வரைக்கும் அனைவருக்கும் தெரியும்!  இல்லை  என இன்றைய மாநில நிர்வாகிகள் அல்லாஹ்வின் மீது ஆணையிடத் தயாரா
இந்த விசயத்தில் இன்றைய மாநில நிர்வாகிகள் கூட பி.ஜே.விற்கு 
வக்காளத் வாங்க மாட்டார்கள் ஏன் எனில் அவர்களுக்கே தெரியும்! 'அது அவருக்கும் அல்லாஹ்விற்கும் உள்ளது" என்று   தான் கூற முடியுமே தவிர வேறு ஒன்றும் சொல்ல முடிவதில்லை!  எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் உள்ளது என இறுமாப்போடு பேசிய அண்ணனிடம் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் இருக்காது!
    - இப்னு  ஹுசைன்!