Sunday, February 09, 2020

அத்தாட்சிகள் - திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம்



தொகுப்பாசிரியர் - ஆளூர் அமீர் அல்தாஃப், கோயம்புத்தூர்


4 தொகுதிகள் 
2800 பக்கங்கள் 
1600 தலைப்புகள் 
13,000 வண்ணப்படங்கள் 

நான்கு பாகங்கள், 2800 பக்கங்கள், 110 அத்தியாயங்கள், 779 தலைப்புகள், 13,000 வண்ணப்படங்கள் 
என மாபெரும் திருக்குர்ஆன் அறிவுக்களஞ்சியத்தை அமீர் அல்தாஃப் படைத்துள்ளார். 

தமிழ், ஆங்கிந்லம் ஆகிய இரண்டு மொழிகளில் 276 நூல்கள், 21 இதழ்கள் துணையுடன் இந்த சாதனை 
படைக்கப்பட்டிருக்கிறது. 

அறிவியல், புவியியல், வானவியல், மானுடவியல், சமூகவியல், மருத்துவம், நீர் மேலாண்மை, 
சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் தொடர்பாக திருக்குர்ஆன் பேசுகின்ற வியக்க வைக்கும் தகவல்களை 
அமீர் அல்தாஃப் மிகவும் அற்புதமாக தொகுத்தளித்திருக்கிறார். 

ஒவ்வொரு அத்தியாயத்தையும் மனங்களை கவரும் வண்ணப்படங்களுடன் விளக்கியிருப்பது 
கூடுதல் சிறப்பு. 

இறைத்தூதர் வரலாறு, முந்தைய சமூகத்தார் வரலாறு, நபிகள் நாயம் (ஸல்) அவர்களது 
அதிசயிக்கத்தக்க வரலாறு, பெருமானாரின் முக்கியமான கடிதங்கள், நபிமொழி களஞ்சியம், 
முன்னறிவிப்புகள், இஸ்லாமிய பண்பாடு, சட்டம், போர்க்டள், இறுதி நாளின் அடையாளம் 
முதலிய முக்கியமான அத்தியாயங்கள் இந்த கலைக்களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ளன. 

அரிய புகைப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் மூலம் தனது கருத்துக்களை 
எளிமையாக எடுத்துரைத்துள்ளார். பல்வேறு சமய நூல்கள், வேதங்கள், புராணங்களிலிருந்தும்
பொருத்தமான மேற்கோள்கள் மூலம் தனது கருத்துக்களை நிறுவுகிறார் அமீர் அல்தாஃப். 

இப் பெருநூல், அதன் பெயருக்கேற்ப அத்தாட்சிகள் குவிந்திருக்கும் திருக்குர்ஆன்
கலைக்களஞ்சியம் ஆகும் என பேராசிரியர் அ. முஹம்மது கான் பாஸில் பாகவி புகழாரம் 
சூட்டுகிறார். 

காலத்தால் அழியாத கருவூலம் திருக்குர்ஆன், காலமெல்லாம் நின்று வழிகாட்டும் 
கலைக்களஞ்சியமே இந்நூல் என மௌலானா எம். முஹம்மது மன்சூர் காஷிஃபி காஸிமி 
தெரிவித்துள்ளார். 

குர்ஆன் கூறும் ஞானம் அளவிடற்கரியது. அது படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறிவுக் கருவூலம் 
ஆகும். அது மனிதனின் சிந்தனையைத் தட்டி எழுப்பி இதயங்களை வேகங்கொள்ள வைக்கிறது. 
இந்த பிரபஞ்சம் முழுக்க நிரம்பி வழியும் இறை அத்தாட்சிகளை எடுத்துக் கூறி மனிதகுலத்தை 
நேர்வழிபடுத்தும் மாபெரும் உந்து சக்தியாகவும் திகழ்கிறது என மௌலவி எஸ்.என். ஜாபர் சாதிக் 
பாஸில் பாகவி கூறுகிறார். 


இந்நுல் காலத்தால் அழியாத ஒரு சேவை. மறுமை நாள் வரை நின்று விளங்கும் பேரற்புதமான
பணி என தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் பி.ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி 
கூறியுள்ளார். 

மேலும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு நீதியரசர் எப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லாஹ், 
உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேதகு நீதியரசர் கே.என். பாஷா உள்ளிட்டோரும் 
இந்த பணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். 

இத்தகைய சிறப்பு மிக்க அறிவுக் கருவூலத்தை படைத்துள்ள அமீர் அல்தாஃப் அவர்கள் 
நிதித்துறையில் ஓய்வு பெற்ற  மத்திய அரசு அதிகாரி ஆவார். அவரின் இந்த பணியை 
ஊக்கப்படுத்த ஒவ்வொருவரும் இதனை வாங்கி ஆதரிக்க வேண்டும். 

இத்தகைய அறிவுக் கருவூலத்தை ஒவ்வொருவரும் வாங்கி படித்து பயனடைய வேண்டும். 

மேலும் தங்களது ஊரில் உள்ள பள்ளிவாசல், பள்ளிக்கூடம், அரபிக் கல்லூரி, நூலகம் 
ஆகியவற்றுக்கு அன்பளிப்பு செய்யக்கூடிய அரிய நூல் ஆகும். 

விலை : ரூ. 3,000
கூரியர் செலவு : ரூ. 500

மொத்தம் : ரூ. 3,500


நூல்களைப் பெற : 

புதிய சமுதாயம் பதிப்பகம், கோவை - 90870 46667 / 98 949 11771


துபாயில் பதிவு செய்ய : +971 50 51 96 433


Bank Details 

NEW UMMATH CHARITABLE TRUST 
BANK OF BARODA 
SUNDHARAPURAM BRANCH
ACCOUNT NO : 472 10 200000 516
NEFT IFSC CODE : BARB0SUNCOI


குறிப்பு : 

கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் வந்த 
அல்ஹாஜ் ஆளூர் அமீர் அல்தாஃப் அவர்களுக்கு 
அபுதாபி அய்மான் சங்கம், 
அல் அய்ன் இந்திய சமூக நல மையம்,
துபாய் ஜுமா அல் மஜித் கலாச்சார மையம் 
உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் 
சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 




MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433

--
முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com
muduvaihidayath@gmail.com
00971 50 51 96 433

அறிவியல் தொடர்பான விஷயங்களில் 'இப்படியெல்லாமா ஃபத்வாக்கள் இருந்தன?'... என்று, நீங்கள் என்றைக்கேனும் ஆச்சர்யப்பட்டதுண்டா..?

[05/02 07:10] Mohamed Rafeek: 

1
300 வருஷங்களுக்கு முன்னால்... கடிகாரங்கள் பரவலாக புழக்கத்துக்கு வந்தபோது, அவற்றில் துல்லியமாகவும் இலகுவாகவும் நேரம்பார்த்து பாங்கு சொல்லி தொழுகை நடத்துவது ஹராமெனக்கூறி... 'வானத்தில் சூரியனை பார்த்து பொருட்களின் நிழலின் நீளத்தை அளந்து பார்த்துதான் பாங்கு சொல்லணும், அதுதான் சுன்னா' என்று கூறி உலகளவில் உலமாக்களால் கடிகாரத்துக்கு தடை விதித்து ஃபத்வா இருந்தது.(இன்று கடிகாரங்கள் இல்லாத பள்ளிவாசல்கள் இல்லை)

2.
150 வருஷங்களுக்கு முன்னர், நேரத்தை கணக்கிட்டு தொழுகை பாங்கு அட்டவணையை... கடிகார நேரமாக எண்களில் வருஷத்துக்கு அச்சடித்துப்போட்டு அந்த கடிகார நேர அட்டவணைப்படி பாங்கு சொல்லி தொழுகை நடத்துவது ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (இன்று வேலூர் பாக்கியத்துல் ஸாலிஹாத்தின் தொழுகை கால அட்டவணைதான் அனைத்து பள்ளிவாசல்களிலும் தொங்கியவண்ணம் அது பாங்கு சொல்ல பின்பற்றப்படுகிறது)

3.
60 வருஷங்களுக்கு முன்னர் பள்ளிவாசலில் மைக் ஸ்பீக்கர் செட் பயன்படுத்துவது ஹராமெனக்கூறி உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (அப்போது பாப் இசை பாடகர்கள் அல்லது சினிமா பின்னணி பாடகர்கள் பாடலை மைக் பிடித்து பாடி அதை கேட்க பயன்படும் வஸ்து ரேடியோ ஸ்பீக்கர் என்பதால் அவற்றின் மீது உலமாக்களுக்கு ஒருவித வெறுப்பு இருந்தது. இன்று இமாம் மைக் ஸ்பீக்கர் செட்டில்தான் தொழ வைக்கிறார் )

4.
40 வருஷங்களுக்கு முன்னால் ஃபோட்டோ ஐடி கார்டுடன் பள்ளி வாசலுக்குள் தொழச்செல்ல முடியாது. காரணம் அவற்றில் உருவப்படம் இருப்பதால் ஐடிகார்டுகள் ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. இன்று இமாம் ஃபோட்டோ ஐடி கார்டோடு தொழ வைக்கிறார்.

5.
30 வருஷங்களுக்கு முன்னால் வீடியோ கேமரா எடுத்துக்கொண்டு பள்ளிவாசலுக்குள் நிக்காஹ் நிகழ்ச்சிகளை படம்பிடிக்க நுழைய முடியாது. காரணம், டிவி விசிஆர் வீடியோ கேசட் எல்லாம் ஹராமெனக்கூறி இந்திய அளவில் உலமாக்களால் தடை விதித்து ஃபத்வா இருந்தது. (இன்று இமாமின் ஜும்மா சொற்பொழிவு வீடியோ எடுக்கப்படுகிறது. டிவியில் ஒளிபரப்பப்படுகிறது)

6.
நான் சவூதிக்கு வந்த புதிதில்... 2004ல் கேமரா மொபைல் ஃபோன்களுக்கு விற்க வாங்க சவுதிக்குள் கொண்டுவர தடை இருந்தது.(கேமராவுக்கு தடை இல்லை) 2005ல் அந்த தடை நீக்கப்பட்டது. என்றாலும், கேமரா மொபைல் போன்களை பார்த்து முத்தவாக்கள் 'ஷைத்தான்' என்பர். அப்போது வெளிவந்த ஒரு நோக்கியா கேமரா மொபைல் (Nokia 6680) ஃபோனின் அரபிப்பெயர் : 'ஷைத்தான் அல் கபீர்'. கபீர் என்றால் பெரிது. இன்று கேமரா வாய்த்த ஸ்மார்ட் ஃபோன் இல்லாத இமாம்களே இல்லை எனலாம்)

7.
தற்போது, 'வானியல் அறிவியல் படி கண்ணால் காணக்கூடிய' அளவிலான நம் பிறையை நம் நாட்டில் மேகம் மறைத்து காணமுடியாத நிலையில், நமக்கு கிழக்குப்புறம் உள்ள பல நாடுகள் அவற்றை ஆல்ரெடி மேகம் மறைக்காமல் பார்த்து விட்டதாக லைவ் வீடியோ & ஃபோட்டோ அப்டேட்ஸ் அறிவித்த செய்திகளை மதியம் - மாலை முதலே நாம் நமது கைபேசியில் பார்த்திருந்தாலும்... நமக்குப்பின்னே மேலை நாட்டினர் அதே பிறையை மேகம் மறைக்காமல் பார்த்துவிட்டதாக இஷா தாண்டியும் நம் கைபேசிக்கு பிரேக்கிங் நியூஸ் வந்தாலும்... நடுவே உள்ள நம் நாடு மட்டும் 'நாங்கள் பிறை காணவில்லை' என்று தூங்கப்போவதும் அல்லது பெருநாள் கொண்டாட போகாமல் 30ம் நோன்பு வைக்க ஸஹர் செய்யப்போவதும்... இன்னும் நடந்துகொண்டேதான் உள்ளன. 'கண்ணால் காணக்கூடிய பிறை' இந்த மாதத்தில் இந்தந்த நாடுகளில் இருந்து துவங்குகிறது... என்ற ஸ்மார்ட் போனில் 'ஹிலால் சைட்டிங் ஆப்ஸ்' பார்த்து சந்தேகம் இல்லாத புரிதல் ஏற்பட்டு, அதன்படி முதன்முதலில் மேகம் மறைக்காமல் பார்த்த பிறையை அந்த நாட்டிலிருந்து மற்ற மேற்குப்புற நாடுகள் அனைத்தும் பிறை அறிவிப்பாக ஏற்று, என்றைக்கு பிறை தமது பிறைகளை இப்படி அறிவிக்கப்போகிறோமோ... தெரியவில்லை.

அதுவரை தொடர்ந்து மூன்று மாதங்களையும் மேகம் மறைத்துவிட்டது என்று கூறி முப்பதாக்கிக்கொண்டு மார்க்கத்தில் தவறானதை தவறான நாட்களில் செய்துகொண்டு அறியாமையில்தான் வீழ்ந்து கிடப்போம் போல. மேகம் மறைக்காத கிரகணங்களை கண்டு 14ம் இரவையும் 28/29 ம் பகலையும் நமது பிறை நாட்காட்டியில் சரி செய்துகொள்ள மாட்டோமா..?                    -முஹம்மத் ஆஷிக்
[05/02 07:17] Mohamed Rafeek: பிரையை மட்டும் பார்த்த பிறகுதான் பின்பற்றுவோம் என்று அடம்பிடித்துக்கொண்டு இருப்பவர்களெல்லாம் கிரகணம் ஏற்படும் ஒரு நாளைக்கு முன்பே கிரகணத் தொழுகைக்காக அழைப்பு கொடுத்தது எந்த அடிப்படை என்று நாம் தான் சிந்தித்து உண்மையை விளங்கி செயல்பட வேண்டும்