Wednesday, February 20, 2019

மனிதன் என்ற அடிப்படையில் மறதியாக *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* பதிந்துள்ள தவறான சில தகவல்கள்


அரசியல் ரீதியாக பாமகவை விமர்சிக்கும் தகுதி முஸ்லிம்களாகிய நமக்கு உண்டா? என்ற தலைப்பில் *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* அவர்கள் எழுதியது வாட;ஸப்பில் நமக்கு வந்தது. *கீழை. ஜஹாங்கீர் அரூஸி* நல்ல எழுத்தாளர்தான்.


1989 ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்லீக் அப்துல் சமது பிரிவோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார் ராமதாஸ் என்பது தவறான தகவல் ஆகும்.  

1989 சட்டமன்ற தேர்தலில் அதிமுக(ஜா) அதிமுக(ஜெ) என பிரிந்து நின்றதால் கலைஞரும் உச்சத்தில் நின்று காங்ரஸ் மு.லீக் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுத்து கூட்டணியை தொடரவில்லை.

ஆகவே 1989 சட்டமன்ற தேர்தலில் காங்ரஸ் கட்சியுடன்தான் மு.லீக் கூட்டணி அமைத்து ஏணி சின்னத்தில் போட்டி போட்டியிட்டது.
அப்துல் லத்தீப் சாஹிபை கையில் எடுத்து முஸ்லிம்லீக்கை இரண்டாக உடைத்து மு.லீக்(ல)வுக்கு 5 இடங்கள் என அறிவித்து ஒரு இடத்தை லத்தீப்பை கொண்டே திருப்ப கொடுக்க வைத்தார்.

5 கொடுத்து ஒன்றை திரும்ப கொடுக்கச் சொல்வது. அல்லது திரும்ப கொடுக்க நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் தொகுதி பார்த்து கொடுப்பது. 3 கொடுத்து ஒன்றை திரும்ப கொடுக்க வைத்தது இதையெல்லாம் கலைஞர் அன்றே செய்து விட்டார்.

அதற்கு நாசமாகப் போன நம்மவர்களும் துணை நின்றார்கள். எந்த துரை முருகனைக் கொண்டு பிறருக்கு கேடு விளைவித்தார்களோ அந்த துரை முருகனைக் கொண்டே அவர்களுக்கு அல்லாஹ் கேடு விளைவித்தான் .அல்லாஹ் இருப்பானா?

1989ல் பாளையங்கோட்டை கொடுக்கப்படவில்லை. 1977ல் நாஞ்சில் மனோகரன், 1980ல் கருப்பசாமிபாண்டியன் என அதிமுக கோட்டையாக இருந்த பாளையங்கோட்டையை உடைத்தது மு.லீக். 

எந்த மாதிரி நேரத்தில் உடைத்தது 1984ல் தாய் (இந்திரா) இல்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு வாய் இல்லா பிள்ளை (எம்.ஜி.ஆர்)க்கு ஒரு ஓட்டு என்று தோல்வியைப் பற்றி கருணாநிதி கூறிய அந்த அனுதாப அலை தேர்தலில் ஷம்சுல் ஆலம் பாளையங்கோட்டையில் மு.லீக் சார்பில் வெற்றி பெற்றார். அதுவும் தென்னக நெப்போலியன், மாவீரன் என்றழைக்கப்பட்ட கருப்பசாமி பாண்டினை எதிர்த்து.

அந்த மு.லீக் தொகுதியை 1989ல் உடன் இருந்த லத்தீப் மூலம் மொன்னி மைதீன் பிச்சைக்காக கேட்டும் கொடுக்க மறுத்து விட்டார். ராணிப் பேட்டையைக் கொடுத்தார். கடலாடி, அரவாக்குறிச்சி, புவனகிரி, வாணியம்பாடி, ராணிப் பேட்டை என 5 தொகுதிகளை அறிவித்து ராணிப் பேட்டையை திரும்பக் கொடுக்க வைத்தார் கலைஞர். 

திமுகவில் சீட் கிடைக்காத வாலாஜா அசேன் உசேன் என அறியப்பட்டவர் சுயேச்சையாக நின்று திமுகவை தோற்கடித்து பிறகு மீண்டும் திமுகவில் சேர்ந்தார் 1989ல்.

1991ல்தான் சட்டமன்றத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் நடந்த தேர்தலில் பாமகவுடன் மு.லீக் கூட்டணி வைத்தது.

1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு 1993ல் பிப்ரவரியில் இணைந்த மு.லீக்கில் 1993 இறுதியிலேயே மீண்டும் பிளவு பேச்சு வந்தது. 


1993 டிசம்பர் 6ல் அப்துல்ஸமது, அப்துல் லத்தீப், காதர் மைதீன் என எல்லாரும் துபையில் இருந்தார்கள். கீழக்கரை உசேன் காகா வீட்டில் தங்கி டிசம்பர் 2  யுஏஇ நேஷனல் டேய் ஊர்வலத்தை பார்த்தார்கள்.

டிசம்பர் 6ல் தாயகத்திலிருந்து எதிர்ப்பை பதிவு செய்யாமல் இங்கு என்ன வேலை என விமர்சிக்கப்பட்டார்கள். அப்பொழுதே பாபரி மஸ்ஜித் விஷயத்தில் துரோகம் செய்த காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக வேண்டும் என்று அன்றைய அகில இந்திய மு.லீக் தலைவர் இப்றாஹீம் சுலைமான் சேட் கூற மு.லீக் இந்திய அளவில் 2ஆக பிரிந்தது.

பாமக போன்ற அமைப்புகளில் முஸ்லிம்கள் இருப்பார்கள். முலீக் போன்ற அமைப்புகளில் வன்னியர்கள் இருக்க மாட்டார்கள். முஸ்லிம்கள் உருவாக்கிய அமைப்பினர் என்னதான் இது பொதுவானது என்றாலும் பதவி கொடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பிற சமுதாயத்தவர் இருப்பர். பொது மக்கள் தொண்டர்களாக இருக்க மாட்டார்கள்.

முஸ்லிம் அல்லாதவர்கள் உருவாக்கிய அமைப்பில் முஸ்லிம் பொது மக்கள் இருப்பார்கள். பதவி இல்லாவிட்டாலும் அடிமட்ட அடிமாட்டு தொண்டர்களாகவும் முஸ்லிம்கள் இருப்பார்கள்.








Monday, February 18, 2019

மன்னிப்புக் கேட்ட செய்யத் இப்ராஹீமுக்கு உம்மு இப்ராஹீம் என்ற பாதிக்கப்பட்ட பெண் எழுதியது

RSS காரர்கள் கூட எழுதத் தயங்கிய, நாக்கூசும் நாலாந்தர வார்த்தையால் பல சகோதரர்களின் குடும்ப பெண்களை இழிவு படுத்தினீர்கள், பல நல்ல சகோதரர்கள் கண்டித்தும் நீங்கள் கேட்கவில்லை.


நீங்கள் 
ஏசி அறையில் கேமராவுக்கு முன் உட்கார்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எங்கள் காயங்கள் மறைந்து விடும் என்று நினைத்து விட்டீ ர்களோ? 

PJ யும் செய்யது இபுறாஹிமும் சேர்ந்து இயக்கிய அஹமது கபீர் என்ற கள்ள ID யினால் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரியின் கடிதம் :

சகோதரர்களே! சில நாட்களுக்கு முன் Tntj தலமையினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட செய்யத் இப்ராஹீம் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அஹ்மத் கபீர் கள்ள ஐடிய இயக்கியது pj தான் என்றும் அதற்காக ஆலோசனை வழங்கியவர்களில் தானும் ஒருவன் என்றும் அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்பதாக சொல்லியிருந்தார்.

https://fazlulilahi.blogspot.com/2019/02/blog-post_18.html
அஹ்மத்கபீர் கள்ள ஐடியால் பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருத்தி என்பதால் இது சம்பந்தமாக சில கருத்துக்கள சொல்வதற்காகவே இந்த பதிவு. 

உங்களுடைய இயக்கத்தை எதிர்க்கின்ற ஒரே 
காரணத்திற்காக,
RSS காரர்கள் கூட எழுதத் தயங்கிய, நாக்கூசும் நாலாந்தர வார்த்தையால் பல சகோதரர்களின் குடும்ப பெண்களை இழிவு படுத்தினீர்கள், பல நல்ல சகோதரர்கள் கண்டித்தும் நீங்கள் கேட்கவில்லை. 


வல்ல அல்லாஹ்விடம் அழுது முறையிட்டு 
நாங்கள் கேட்ட துவாவினால் அல்லாஹ் உங்களுடைய பொய் முகத்தையும், நீங்கள் எப்படிப்பட்ட கேவலமானவர்கள் என்பதையும்  வெளிப்படுத்தினான். 

அதுமட்டுமல்ல , யாருக்காக  அந்த ஐடியை உருவாக்கி சமுதாய  பெண்கள் பலரின் மானதில் விளையாடினீர்களோ அவர் வாயாலயே    உங்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினான். 

மேலும்,   
அஹ்மத் கபீர் கள்ள ஐடியை இயக்கியது நீங்களும் PJவும் தான் என்று பல தடவை பல சகோதரர்கள் சொன்ன போதிலும் , உங்கள் நண்பர் அல்தாபி பகிரங்கமாக சொன்ன போதெல்லாம் அதை மறுத்து மவ்னம் காத்த நீங்கள் உங்களுக்குள் பிரச்னை வந்து pj உங்கள் மீது சேற்றை வாரி பூசிய பின் இப்போது மன்னிப்பு கேட்டு கபட நாடகமாடுகீறிர்கள்.

இது தெருவில் போரவர்களை கூப்பிட்டு செருப்பால் அடித்து விட்டு மன்னிப்பு கேட்பது போல் இருக்கு

நீங்கள் 
ஏசி அறையில் கேமராவுக்கு முன் உட்கார்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டால் எங்கள் காயங்கள் மறைந்து விடும் என்று நினைத்து விட்டீ ர்களோ? 

நிச்சயமாக, அஹ்மத் கபீர் கள்ள ஐடியில் எழுதிய, ஆலோசனை சொன்ன, மூளையாக செயல்பட்ட, அதற்க்கு லைக் கொடுத்த, ஷேர் செய்த, அந்த ஐடியை இயக்கியது யார் என்று தெரிந்தும் கண்டு கொள்ளாமல் கண்டிக்காத அனைத்து Tntj நிர்வாகிகள் அனைவருக்கும் எதிராக மறுமையில் என்னைப் போன்ற சகோதரிகள் வந்து  நிற்போம். 

இப்படிக்கு

உம்மு இப்ராஹீம்.
18-02-19

நன்றி 

Iqbal Hasan

https://www.facebook.com/100004971520469/posts/1286444988197873/

Friday, February 15, 2019

"எதையும் செய்ய துணியும் M.S.சையது இப்ராஹிமை நம்பலாமா?

👹 "எதையும் செய்ய துணியும் M.S.சையது இப்ராஹிமை நம்பலாமா? " 👹

☠ ரியாத் மைதீன் என்ற பெயரில் கள்ள ஐடி மூலமாக அல்தாபி பற்றி அவதூறு பரப்பி ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்ட சையது இப்ராஹிம் தற்போது வெளியிட்ட வீடியோவில் அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.❓

⁉ பிஜே வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விளக்கம் தரும் கடிதத்தில் ததஜ மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் சம்மந்தப்பட்ட அல்தாபி பற்றி எதுவும் அவர் குறிப்பிடவில்லை. 

🤷‍♂ கடும் நெருக்கடியில் உள்ள சையது இப்ராஹிம் வேறு வழியின்றி அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டார் என்று நாம் சொல்ல வரவில்லை. உள்ளங்களை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

❓ இப்போது நம் கேள்வி என்னவென்றால்....

⁉ அல்தாபியிடம் மன்னிப்பு கேட்டவுடன் இதனால் அவர் நல்லவராகி விட மாட்டார். அவர் மீது நான் குற்றச்சாட்டுகள் அப்படியே தான் உள்ளது என்றார்.

⁉ அப்படியென்றால் என்ன அர்த்தம்? 
☠ டூவீலரில் அல்தாஃபியை ஒரு பெண்ணுடன் பார்த்ததாக பொய்ச் சத்தியம் செய்தார், சையது இப்ராஹிம். ஆனால் அல்தாபி ஆட்டோவில் முன் பக்கம் டிரைவர் அருகில் அமர்ந்து தன் உறவுக்கார பெண்ணை பயணமேற்றி விட வந்ததை தெளிவுபடுத்தினார். டூவீலர் அல்ல, ஆட்டோ என்றதும் ஆட்டோ என்றால் இன்னும் வசதி என்றும் அப்போதைய மாநிலத் தலைவர் மூலமாக சொல்ல வைத்தார்.

❗ அல்தாபி மீது குற்றச்சாட்டுகள் அப்படியே உள்ளது என்றால் இன்னும் கூட பத்தினிப் பெண்கள் மீது அவதூறு சுமத்தியது நிலுவையில் தான் உள்ளது என்கிறார்.

✅ ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் 4 சாட்சிகள் கொண்டு வராதவர்களை 80 கசையடி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அவர்களே குற்றம் புரிபவர்கள். - அல்குர்ஆன் 24:4

🚫 அல்லாஹ்வின் இந்த வார்த்தையின் அடிப்படையில் சையது இப்ராஹிமின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள கூடாது. அல்தாபி, பிஜே மட்டுமல்ல யாருக்கு எதிராக சையது இப்ராஹிம் சாட்சி கூறினாலும் அதை தவ்ஹீத்வாதிகள் ஏற்றுக்கொள்ள கூடாது. இது நம் கருத்து அல்ல, இஸ்லாத்தின் கருத்து.

🚫 சையது இப்ராஹிம் அல்தாபியிடம் உளப்பூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தால் மீண்டும் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறியிருக்க கூடாது.

⁉ அல்தாபி நல்லவர், கெட்டவர் என்று சர்டிபிகேட் தர சையது இப்ராஹிமுக்கு வஹி வருகிறதா?

✅ எந்தத் தவறுக்கு என்ன பரிகாரம் என அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவாக கூறி விட்டனர். ஒருவர் திருடினால் அவருக்கு மனோ இச்சைப்படி தலையை சீவி மரண தண்டனை வழங்க முடியாது.  திருடியவருக்கு கைகளை மட்டும் தான் வெட்ட முடியும்.

‼ பலருக்கும் ஆத்திரம் வருகிறது தான். அல்தாபி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பலருடன் கள்ளக் கூட்டணி அமைத்து ஒட்டுமொத்த பேரியக்கத்தை சீரழித்த சையது இப்ராஹிமுக்கு மாறு கை, மாறு கால் வாங்கி கழுமரத்தில் தொங்க விட வேண்டும் என்று. ஆனால் மார்க்கத்திற்கு கட்டுப்பட்டு பொருந்திப் போகிறார்களே..

✅ அந்த வகையில் அல்தாபி ஒரு அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தாலும் பெரும்பாவம் செய்யவில்லை என அல்லாஹ்வை சாட்சியாக்கி முபாஹலாவில் நிரூபித்து விட்டார். சம்மந்தப்பட்ட அந்தப்பெண்ணும் பெரும்பாவம் எதுவும் நடக்கவில்லையென தன் குற்றச்சாட்டை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

✅ இந்த நிலையில் அல்தாஃபிக்கு இஸ்லாம் கூறும் பரிகாரம்:
✅ பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை. - திருக்குர்ஆன்  11:114

✅ இந்த வசனம் மதீனாவின் புறநகரில் விபச்சாரத்தை தவிர அனைத்தும் செய்து விட்டு வந்த அப்துல்லா (பின்) மஸ்ஊத் என்ற மதீனாவாசி நபியவர்களிடம் பரிகாரம் கேட்ட போது அல்லாஹ் அருளிய வசனம். அந்த மதீனாவாசிக்கு மட்டுமல்ல, சமுதாய மக்கள் அனைவருக்கும் தான் இது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பார்க்க : முஸ்லிம்

🚫 ஆனால் பத்தினிப் பெண்கள் மீது அவதூறு பரப்பிய, இன்றும் அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிற சையது இப்ராஹிமுக்கு இஸ்லாம் வழங்கும் தண்டனை என்ன? 80 கசையடிகள் + சாட்சியத்தை எப்போதுமே ஏற்றுக்கொள்ள கூடாது.

⁉ பொதுமக்கள் மத்தியில் 80 கசையடி தண்டனை பெற வேண்டிய, மதிப்பில்லாத இவரையா ததஜ மாநில தலைமை மீண்டும் அரவணைக்க போகிறது?

👹💀 நான் வளர்த்த ஜமாத் என்று அதிர்ச்சி காமெடி செய்கிறார் சையது இப்ராஹிம். மாநில பொதுச் செயலாளராக இவர் இருந்த போது ஐ.நா.சபையின் பொதுச் செயலாளராக எண்ணிக் கொண்டு விசாரிக்காமல் ஜமாத்தை விட்டு நீக்கம் செய்து கையெழுத்திட்ட பட்டியலின் நீளம் தெரியுமா? தினம் ஒரு தகராறு செய்து உட்பட இவரால் வெருண்டு ஒடியவர்கள் என புள்ளி விவரத்தை நம்மால் தர முடியும். ஒரே ஒரு நபராவது இவர் பயான் கேட்டு கொள்கைக்கு வந்ததாக இவரால் காட்ட முடியுமா? 👹💀

☠ உலக ஆதாயத்திற்காக எந்த நிலைக்கும் (யாருனுடன் வேண்டுமானாலும் கள்ள கூட்டு வைக்குமளவுக்கு) செல்ல துணிபவர் சையது இப்ராஹிம். ததஜ நடவடிக்கைக்குப் பின் பிஜேவிடம் அடைக்கலமானார். அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீண்டும் ததஜவை நாடுகிறார்.❗

‼ பிறரின் மான, மரியாதையோடு விளையாடுவதென்றால் எந்த அளவுக்கு மனம் வலிக்கும் என்பதை உணர செய்வதற்காக கூட அல்லாஹ் சையது இப்ராஹிமுக்கு இந்த நிலையை வழங்கியிருக்கலாம். 

☠ ஆனால் இன்றும் தவறை உணராமல் ஆணவமாக உள்ள சையது இப்ராஹிமுக்கு ததஜவின் நேரடியான அல்லது மறைமுகமான ஆதரவு கிடைத்தால் அவரும் பக்குவப்பட மாட்டார். மேலும் பலரின் மான, மரியாதையை சாதாரணமாக நாறடிக்கும் சுபாவத்திலிருந்து விடுபடவும் மாட்டார். ☠

💀💀 தே.... புகழ் விவாதத்திலிருந்து இன்று வரை நார், நார், டார், டார் என பக்குவமின்றி பேசி திரிகிறார். இவருக்கு ததஜ வலுவான பின்னணியில் இருப்பதால் தான் இப்படி குதிக்கிறார். 💀💀

‼ அல்தாபி, செங்கிஸ்கான், ததஜ மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள், கொள்கை சொந்தங்கள் என அனைவரிடமும் சையது இப்ராஹிம் கேட்ட உதட்டளவிலான மன்னிப்பு பிஜேவிடம் சென்று மண்டியிட்டதற்கு ஒப்பானது. பதவியும் உதவியும் பெற பல்லிழித்து பாசாங்கு செய்வதாக கருதவே அதிகம் வாய்ப்புள்ளது. ‼

‼🤷🏻‍♂‼ உழைக்காமல் உடம்பை வளைக்காமல் ததஜ மூலமாக ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை (Luxury Life) வாழ்ந்தவரால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இயலவில்லை. இனி இவரால் கடலை மிட்டாய், முறுக்கெல்லாம் விற்க முடியாது. ததஜவின் தற்போதைய பரிதாப நிலையை பயன்படுத்தி தம்மை பெரிய ஜாம்பவானாக காட்டி தலைமையில் தஞ்சம் புக பார்க்கிறார். ‼🤷🏻‍♂‼

✅ "ஒரு மூமீன் இரண்டு முறை குட்டுப்பட மாட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ✅

‼❗ எனவே சையது இப்ராஹிமை சில வருடங்களாவது தனித்து விட்டு இயக்க அநாதையாக்குவதே அவரின் இம்மை, மறுமைக்கும் நம் சமூகத்திற்கும் பலனுள்ளதாக அமையும். ❗‼

❗🧠 அதை விடுத்து, தொலைநோக்கு சிந்தனை இல்லாமல், பக்குவமோ அனுபவமோ இல்லாமல் பிஜேவின் தொடர் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க சையது இப்ராஹிமை களத்தில் இறக்க ததஜ தலைமை நினைத்தால் கொள்ளிக்கட்டை எடுத்து தலையை சொறிவதற்கு சமம். எதிர்காலத்தில் படுபயங்கரமான விளைவுகளை ததஜ சந்திக்க நேரிடும். இது ஆருடம் அல்ல, அனுபவம்.

🔯 அமெரிக்கா, இஸ்ரேலை உருவாக்கியது போல் ததஜ சையது இப்ராஹிமை உருவாக்க விரும்பினால் - பாம்புக்கு பால் வார்த்தால் சையது இப்ராஹிம் தலைமைக்கு செய்த மேலும் பல விபரீதங்களை ஆதாரத்துடன் உரித்துக் காட்டுவோம். 🔯

💪🏻 உதாரணம்: கடந்த ஜனவரி 27 விழுப்புரம் ததஜ மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ததஜவுக்கு எதிராக சையது இப்ராஹிம் செய்தது என்ன என்பது உட்பட அனைத்தையும் சாட்சிகளுடன் அம்பலப்படுத்துவோம்.

😱 ததஜ தலைமை தனது நிலைப்பாட்டை அறிவிக்குமா? அல்லது வழக்கம் போல் மயான அமைதியை தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம். 😱

💥❗குறிப்பு: ததஜ தலைமையின் மயான அமைதியும் தலைமைக்கு எதிராகவே திரும்பும். பகிரங்க அறிவிப்பு செய்யாவிட்டால் ததஜவும் சையது இப்ராஹிமும் கள்ள கூட்டணி அமைத்து விட்டதாகவே பலரும் கருதுவர். ஏனெனில் ததஜ ஹிக்மத் செய்வதில் கைதேர்ந்தது என்பது தான் அனைவரின் மதிப்பீடாகும். ❗💥

Saturday, February 02, 2019

மௌலவி காஜா முகையத்தீன் பாகவியின்நழுவல் பேச்சு! - மஹ்ழரி உலமாக்கள் சங்கமம்

மௌலவி காஜா முகையத்தீன் பாகவி‌ சாதாரணமான ஒருவர் அல்ல!  தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் .! ஆவார்.
சாதாரணமான.ஒருவரைப்போல் அவர் பேசக்கூடாது.அவரின்‌ பேச்சும்,தீர்ப்பும்;அங்கீகாரமும் மார்க்கத்தின் தீர்ப்பாகவே பார்க்கப்படும்.

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள்.அதனால் ஷரீஅத்தின் காவலர்களாக இருக்கின்றனர்.

ஷரீஅத்தின் காவர்கள் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் , முன்மாதிரியிலும் வீரர்களாக இருக்க வேண்டும்.
சாதாரணபாமரன்உலமாக்களை.வெளிப்படையாகவேபார்த்து அவர்களைப் பின்பற்றுகின்றான்.

அதனால்.உலமாக்களின்செயற்பாடுகள்களங்கமில்லாமலும், வெளிப்படைத்தன்மையானசத்தியத்தைபறைசாற்றுவதாகவும் அமைதல் வேண்டும். 

ஈமான், இஸ்லாம்; இஹ்ஸான் உள்ளிட்ட மூன்றும் சேர்ந்ததுதான்.மார்க்கம்.என்று.வாய்ப்பேச்சாக.அன்றி எதார்த்தமாகப்பேசவேண்டும். 

உலமாக்கள் மேடைகளில் மட்டும் வாய்ச்சொல் வீரர்களாக மாத்திரம் இராமல் நடத்தையிலும் 
துணிவானசெயல் வீரர்களாகவும் இருக்க வேண்டும்.

சாதாரணமான ஓர் ஆலிமின்  ஒழுக்கமும் கடமையும் இதுவானால்
உலமா சபையின் பொறுப்பு வாய்ந்த தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் பேசும் உலகத்திற்கும்  பொறுப்பு வாய்ந்தவராக வலம் வருகிறார்.

அதனால், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

எடுப்பார்  கைப்பிள்ளையாக செயல் படக்கூடாது.



தற்காலத்தில் மார்க்கம் முதலீடில்லாத , பெரும் முயற்ச்சியும் செய்யாமல் அதிக இலாபம் தரும் வருவாய்த்துறையாக மாறிவிட்டது.

இதனால் உலமாக்கள் தங்களை சினிமாவின் பாணியில் உள்ளவர்களை போன்று தங்களை மாற்றி விட்டனர்.

சினிமாத்துறையில் உள்ள நடிகர்கள் எழுதிக் கொடுக்கின்ற கதையைப் பாடமாக்கி,  கொடுக்கின்ற பாத்திரத்திற்கேற்றவாறு திறமையாக நடித்து பணம் சம்பாதிக்கின்றனர்.

தற்கால உலமாக்களில் அநேகர் இவ்வாறே கொடுக்கின்ற தலைப்பில் பேசி ஏற்பாட்டாளர்களையும், சபையோர்கள் மற்றும் ரசிகர்களையும்திருப்திப்படுத்தி  தனது நிலையைத் தக்க வைத்து பணம் சம்பாதிக்கின்றனர்.

மார்க்கம் மேடைப் பேச்சோடு இப்போது முடங்கி விட்டது.

மேடை.யும் பணமும் இல்லையாயின் மார்க்கம் பிரச்சாரம் மௌனித்து விடும் என்ற நிலையில்தான் இப்போது  தஃவாக்களம் பரிதாபமாக மாறியுள்ளது.


 மேடைப் பிரச்சாரத்தில் களைகட்டி நிற்கும் பலர் பணத்திற்காக எவ்வாறெல்லாம் தரம் தாழ்ந்து போய்விட்டனர் என்பதற்கு அண்மைக்காலத்தில் இலங்கையில் அரங்கேறிய சில அனுபவங்களை உதாரணமாகக் கொள்ள முடியும்.

1- சில ஆண்டுகளுக்கு முன்காத்தான்குடியில் மௌலவி அப்துர்ற ஊப் மிஸ்பாஹி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில்  காஜா முகையத்தீன். பாகவியும் இன்னும் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

மௌலவி அப்துர் ற ஊபை பாராட்டியும்  ஸூபிஸ உலமா சபையை புதிதாக உருவாக்கி அதற்கு மௌலவி அப்துர் ற ஊபைத்தலைவராகவும் ஆக்கினார்.

இதே காஜா‌முகையத்தீன் பாகவி சில வாரங்களுக்கு முன் கல்முனையில் நடந்த. ற ஊப் மௌலவிக்கெதிரான கூட்டத்தில் கலந்து ஏற்பாட்டாளர்களுக்கேற்றார் போல்  பேசியுள்ளார்.

மௌலவி அப்துர் ரஹ்மான் ஊப் அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிக்கின்றார்.காபிர்களும் அல்லாஹ்வை நம்பியமுஃமின்கள்தான்என்கின்றார்.

படைப்புக்கள் எல்லாம் அல்லாஹ்தான் என்கின்றார்.இதுபோன்ற ஷரீஅத்திற்கு விரோதமான பலகருத்துக்களை. பல்லாண்டுகளாக பேசி வருகிறார். 

இவையனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டே அவர் மாநாட்டில் கலந்து உரைநிகழ்த்தியவர்தான் இப்போது அவருக்கான எதிர் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இவ்வாறு.

எல்லாமும் நல்லதுதான். இந்து மதமும்அல்லாஹ்வழங்கிய மதம்தான். புத்தரும், கிறிஷ்ணனுன்,ராமனும் நபிமார்கள் என்றும்,

தான் இறைவனின் அவதாரம் அச்சு என்றும் பிரபஞ்சத்தைத்தான் அல்லாஹ் என்கின்றோம் என்றும் இன்னும் இதுவல்லாத பல டசின் குப்றியத்துக்களைக் கூறிவரும் கலீல் அவுன் மௌலாவை ஆதரித்து அவர் வீட்டில் நடக்கும் கூட்டத்திலும் பேசி அவர்களின் பாராட்டைப் பெற்றார்.

இவ்வாறே தேவ் பந்தி குருமார்களை வழிகேடர்கள் என்றும்,காபிர்கள் என்றும் உரத்துக் கூறுகின்றவர்களின் கூட்டங்களில் உரை நிகழ்த்திக் கொண்டே

 தேவ்பந்திகளின் கூட்டங்களிலும் கூச்சமில்லாமல் வலம் வருகின்றார்.

இவரைப் போன்று ஷேக் அப்துல்லா ஜமாலி ,ஸைபுத்தீன்றஷாதி,சதீதுத்தீன் பாகவி; அபுத்தாஹிர் பாகவி உள்ளிட்டோரும் வலம் வருகின்றனர்.

எதிரும் புதிருமான இருகூட்டத்தாருக்கும் ஏக காலத்தில் சமனாக முகம் காட்டி இருதரப்பாரின் பாராட்டையும் பெறும் திறமை பழுத்த அரசியல் வாதியால் கூட சாதிக்க முடியாது.

சினிமாவில் உள்ள திறமையான நடிகர்களுக்கு இணையாக  செயல்படும் திறமை யாருக்கு வரும் ?

இவர்கள் தானா நபிமார்களின் வாரிசுகள்?

இவர்களால் இஸ்லாம் சிறப்போங்குமா? சீரழியுமா?

அறிவுள்ள முஃமீன்களே! சிந்தியுங்கள்!

தப்லீக் ஜமாஅத்தில் கலந்து கொள்வது ஹலால் ஹராம் சார்ந்தது அல்ல! என்று த.மா. ஜ. உலமா சபைத்தலைவரின் கூற்றுஉண்மைதான்.

நாங்களும் அதைத்தான் கூறுகிறோம். 

தப்லீக் ஜமாஅத்தினரை
பிரச்சினைக்காக ஹலால் ஹராம் பிரச்சனைக்காக யாரும் எதிர்க்கவில்லை வில்லை

ஹலால் ஹராம் பிரச்சனையால் ஒருவர் ஈமானை இழக்க மாட்டார்.

ஆனால் தப்லீக் ஜமாஅத்தினர் ஈமானை இழந்துள்ளனர்.

அப்படியாயின்,

மௌலவி காஜா பாகவியின் கருத்துப்படி

ஹலால் ,ஹறாம் பிரச்சினை இருந்தால் அங்கே கலந்து கொள்ளக் கூடாது .

குப்று,ஷிர்க்கு, நயவஞ்சகம் இருக்கும் இடத்தில் கலந்து கொள்ளலாம்.

ஹலால்,ஹறாம் வெளிப்படையானது.

ஈமான்,குப்று, நயவஞ்சகம்
அந்தரங்கமானது.

அதனால்தான் சமுகத்தில் திறமையாக இவர்களால் நடிக்க முடிகின்றது.

இந்த நடிகர்களின் திறமையால் படித்தவர்களும் பாமரர்களும்  ஈமானை இழந்துதவிக்கின்றனர்.

இப்படியான நடிகர்கள் திலங்களை இனம்கண்டு சமுகம் விளிப்படைந்தால் மட்டுமே இஸ்லாமும் முஸ்லிம்களும்  கௌரவத்தோடும் மானத்தோடும் வாழ முடியும்.

நன்றி  காசிம் மஹ்ழரி +91 9843660115

*திருச்சி இஜ்திமா களத்தில்ஹுத் ஹுத் பறவை ...*

திருச்சி இனாம் குளத்தூர்... இஜ்திமா பந்தலை பறந்த வண்ணம் சுற்றிப் பார்த்த ஹுத் ஹுத் பறவைக்கு ஆச்சரியம் ... மூன்று லட்சம் என்றார்கள் முப்பது லட்சம் என்றார்கள் தலைகளை பார்த்தால் கோடிகளை தாண்டும் போல் தெரிகிறதே... மாஷா அல்லாஹ்.... பிரம்மிப் போடு கூட்டத்தினுள் புகுந்து சென்ற ஹுத் ஹுத் பறவைக்கு ஆச்சரியங்கள் பல காத்திருந்தது...
https://fazlulilahi.blogspot.com/2019/02/blog-post.html

கூட்டத்தில்யாரும் படுத்துக்கொண்டு இருக்கவில்லை... பேசிக்கொண்டிருக்கவில்லை ... செல்போனை நோண்டிக் கொண்டு இருக்கவில்லை.... அரைத்தூக்கத்தில் தலையாட்டி பயான் கேட்டுக் கொண்டிருக்கவில்லை.... வந்திருந்த அனைவரும் பொறுப்புடன் உட்கார்ந்து பயான் கேட்டுக்கொண்டு இருந்ததைப் பார்த்த ஹுத் ஹுத் விற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை..
மாஷா அல்லாஹ் ...மாஷா அல்லாஹ்.... இது ஹிதாயத்திற்கான கூட்டம் தான்.. நாம் தான் இவர்களை தவறாக புரிந்து கொண்டோம்...
ஹுத் ஹுத் வும் ஒரு ஓரத்தில் அமர்ந்து ஸஅத் சாஹிபின் பயான் கேட்க ஆரம்பித்தது ...
" என் பெயருக்கு பின்னால் *மௌலானா* என்று அழைப்பதை விட்டுவிடுங்கள். நான் எந்த மவ்லவி பட்டமும் மதரசாவில் ஒதி வாங்கியதில்லை.. இங்கு நான் என் பலத்தை காட்டி தப்லீக்கின் அடுத்த கட்ட தலைவராக ஆகுவதற்காக இந்த கூட்டத்தை கூட்டவில்லை... தேவ்பந்த்தின் ,பாகியாத்தின் ஃபத்வாக்கள் எனக்கு எதிராக இருப்பதால் இந்த இஜ்திமாவோடு என் தலைமை பதவியை ராஜினாமா செய்கிறேன்... நீங்களே நம் தப்லீக்கின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் " ... என்று ஸஅத் மௌலானாவின் உரை பந்தல் முழுக்க உரக்க கேட்டுக் கொண்டிருந்தது.... ஆஹா இவ்வளவு நல்ல மனிதரை நாம் குறையாய் பேசிவிட்டோம்...
வருத்தத்துடன் ஹுத் ஹுத் பந்தலை கொஞ்சம் அப்படியே சுற்றி வந்தது...
*அமீர் சாப்புகள் எல்லாம் மொட்டையடித்து மீசையை வழித்து அலங்கோலமாய் இல்லாமல் முடி வளர்த்து மீசையை அழகாய் ஒதுக்கிவிட்டு நபியின் உண்மையான சுன்னத்தான கோலத்தில் வலம் வந்து கொண்டிருந்தது ஹுத் ஹுத் வின் கண்களே பட்டுவிடும் போலிருந்தது...*
ஒரு ஓரத்தில் கைலியை முட்டி வரை உயர்த்தி கட்டியிருந்த ஒரு சாத்தியிடம் ஒரு அமிர்சாப் உபதேசம் செய்து கொண்டிருந்தார்..." தம்பி நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் கரண்டை காலுக்கு கீழேதான் வேட்டி கட்ட கூடாது என்று தடுத்து இருக்கிறார்கள் அதற்காக நீங்கள் முட்டிவரை வேட்டியை உயர்த்தி கட்டி இருப்பது பார்ப்பதற்கே நல்லா இல்லை.. கைலியை இறக்கி கட்டுப்பா"... என்று கூறிக் கொண்டிருந்தார்...
ஆஹா ! ஆஹா ! எவ்வளவு மாற்றம் ... ஹுத் ஹுத் விற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை...
பள்ளி அமீர் சாப் களுக்கும், நிர்வாகிகளுக்கும் பக்கத்து அரங்கத்தில் காலை பத்து மணிக்கு *குஸுசி* பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது விரைந்து செல்லுங்கள்"... என்று ஒரு அறிவிப்பு மைக்கில் ஒலித்தது...
பறந்து சென்ற ஹுத் ஹுத் முதல் ஆளாய் பயான் கேட்க வசதியாய் அரங்கத்தின் ஒரு கம்பியில் அமர்ந்து கொண்டது..
பலதடவை ஜில்லா போய் பழக்கப்பட்ட ஓர் மௌலாவின் உரை ஆரம்பமானது... பள்ளி ஆலிம்களின் கண்ணியம் காப்பது பற்றி அவர் பேசிய உரை கேட்டு ஹுத் ஹுத்விற்கு புல்லரித்தது....
"நீங்கள் என்னதான் ஜில்லா போயிருந்தாலும் நீங்கள் மௌலவி ஆக முடியாது . சிறுவயதிலேயே ஊரைப் பிரிந்து உறவைப் பிரிந்து பல வருடங்கள் ஆசிரியருக்கு முன் மண்டியிட்டு மார்க்கக் கல்வி கற்ற ஆலிமின் முன் நாம் ஒருபோதும் சமமாக மாட்டோம் .. எனவே உங்கள் பள்ளியில் உங்களின் கால்களுக்கு கீழே ஆலிமை அமர வைத்து நீங்கள் சேரிலே ஓர் ஆலிமை போல் அமர்ந்து ஒரு போதும் பயான் செய்யாதீர்கள்"...
"குர்ஆன்தான் நமக்கான வேதம் . எனவே தஃலீம் கிதாப்பு தான் என் முதல் வேதம் .. அதைத்தான் அதிகாலையில் பள்ளி இமாம் படிக்க வேண்டும் என்று சட்டம் போட்டு அதை வாசிக்காத.... குர்ஆன் தர்ஜுமா வாசிக்கிற இமாமை எதிரியாய் நினைத்து பள்ளியிலிருந்து அகற்ற நினைப்பது மாபெரும் பாவமாகும்" என்பதை உணருங்கள் ..."
ஹுத் ஹுத் மெய் மறந்து உரை கேட்டுக் கொண்டிருந்தது ...
" திக்ருகளின் சிறப்புகளை நாம் படிப்பது முக்கியம் அல்ல .. மாறாக பள்ளி இமாம் நடத்தும் திக்ருகளின் சபைகளிலும் அமர்வதற்கு முயற்சி செய்யுங்கள்... *ஷப் ஷாரி* இரவுகளில் மட்டும் பள்ளிகளில் தங்குவது பெரிய விஷயமல்ல .. மாறாக புனித மிஃராஜ் , பரா அத் இரவு போன்ற இரவிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்...
அமீர் சாப் உரை தொடர கேட்டுக் கொண்டிருந்த ஹுத் ஹுத் விற்கு புல்லரித்தது ..
*மாஷா அல்லாஹ்... இந்த இஜ்திமா பெரிய மாற்றத்தை நோக்கி செல்கிறதே.... சரிதான் உலகமே நொடிக்கு நொடி மாறும்போது இவர்கள் மாறுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லையே*
அமீரின் உரை மேலும் தொடர்ந்தது ...
"நீங்கள் சாத்திகளை கூட்டிக்கொண்டு ஜமாத் போனால் வசதியான பள்ளிவாசல்களை தேடி போகாதீர்கள் ... எத்தனையோ கிராமங்களில் சிறிய பள்ளிகள் இருக்கின்றன... அதில் பள்ளியின் தொடர்பு இல்லாத எத்தனையோ மக்கள் அங்கு இருக்கிறார்கள் ... எனவே அங்கு செல்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் மேலும் பள்ளிவாசலில் தங்கும்போது அதன் ஒழுக்கங்களை பேணுங்கள்... உள் பள்ளியில் உறங்குவதற்கு இதிகாஃப் உள்ளவர்களுக்கே அனுமதி ... அதுபோல அங்கு நீங்கள் உபயோகிக்கும் மின்சாரம் தண்ணீருக்கு நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் .. எனவே மூன்று நாள் முடித்துவிட்டு ஒரு பள்ளியில் இருந்து கிளம்பும்போது கண்டிப்பாக மின்சாரத்தை உபயோகப்படுத்தியதற்கு அந்த பள்ளிக்கு கண்டிப்பாக சிறு தொகை கொடுத்து விட்டு வாருங்கள் ... *நாம் கறி மீன் சாப்பிடுவதில் எப்படி கணக்கு பார்ப்பதில்லையோ அதுபோல் அல்லாஹ்வின் பள்ளிக்கு கொடுத்துவிட்டு செல்வதில் கணக்கு பார்க்காதீர்கள்"*..
ஹுத் ஹுத் விற்க்கு மயக்கம் வராத குறைதான் ... இறக்கைகளை தட்டி பேசிய அமீரையும் , அரங்கத்தையும் மனதார பாராட்டிவிட்டு அடுத்த அரங்கம் நோக்கி பறந்தது ...
வழியில்... *அரசியல் இயக்க தலைவர்கள் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு இருக்க "நாங்கள் எல்லாம் ஹிதாயத்தை நாடியே வந்திருக்கிறோம் .. அரசியல் நோக்கத்தோடு வரவில்லை"*... என ஹுத் ஹுத் விடம் சத்தியம் செய்ய சந்தோஷத்துடன் பறந்தது ஹுத் ஹுத் ...
மூத்த உஸ்தாத் மார்கள் எல்லாம் இஜ்திமா வந்ததை கேள்விப்பட்டு அங்கிருந்தஉலமாக்களின் அரங்கத்தில் நுழைந்தது ஹுத் ஹுத் ...
என்னதான் மூத்த ஆலிமானாலும்,பேராசிரியர் ஆனாலும் , ஏன்.. மதரஸா நாஜிரே ஆனாலும் ஜில்லா போயிருந்தால் மட்டுமே மேடையில் அமரவும் ,பேசவும் அனுமதி .. இங்கு எப்படியோ தெரியவில்லையே ...? என்கிற பதைபதைப் போடு உள்ளே நுழைந்த ஹுத் ஹுத் விற்கு ஆச்சரியம் காத்திருந்தது ...
ஜில்லா போன இமாம்கள் முன்னாள் தலைவர்கள் கீழே அமர்ந்து இருக்க ஜில்லா போகாத முதர்ரிசு களுக்கும் மதரஸா நாஜீர்களுக்கும் , பேராசிரியர்களுக்கும் கண்ணியம் கொடுத்து அவர்கள் மேடையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த கண்கொள்ளா காட்சி ஹுத் ஹுத் வின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது....
கண்ணீரை தன் இறக்கைகளால் துடைத்துக் கொண்டே வெளியே வந்த ஹுத் ஹுத் விற்கு இந்த மாற்றங்களை பார்த்து தன் நிலை திரும்பவே சில நிமிடம் ஆனது ...
மூன்றாம் நாள் லுஹர் தொழுகை முடிந்து பெரிய பந்தல் நிரம்பி வழிந்தது .. மாநாட்டில் தீர்மானம் ஸ அத் மௌலானாவால் வாசிக்கப்பட்டு கொண்டிருந்தது...
" நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால் யாரும் இப்போது 40 நாள் ஜமாஅத் செல்ல வேண்டாம் என்றும் ஒற்றுமையாய் ஓட்டு போட்டு எதிரிகளை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றும் இந்த இஜ்திமாவின் மூலம் தீர்மானம் நிறைவேற்ற படுகிறது...
மேலும் விரைவில் பாபரி மசூதியை கட்டவேண்டும் எனவும் , அதுபோல் ஆங்காங்கே முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றும் இந்த இஜ்திமா கேட்டுக்கொள்கிறது.. *குறிப்பாக இங்கு வந்திருக்கும் அமீர் சாப்புகளால் இந்த இஜ்திமா விற்கு கோடிக்கணக்கில் செலவழித்தது போல் விரைவில் ஒரு கோடி ரூபாய் திரட்டி கடந்த புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை நாகை மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நிவாரணமாக விரைவில் வழங்கப்படும்..* என்று இந்த இஜ்திமாவில் தீர்மானம் இயற்றப் படுகிறது....
இறுதியில் ஸ அத் மௌலானாவால் நீண்ட துஆ ஒத ... அதன் பின் அனைவரும் எழுந்து நின்று நபி (ஸல்) அவர்களின் மீது யா நபி பைத் ஒத இஜ்திமா மாநாடு இனிதே நிறைவு பெற்றது ...
ஹுத் ஹுத் விற்கு ஒன்றும் புரியவில்லை .. மாஷா அலலாஹ் .. இவர்களிடம் எவ்வளவு பெரிய மாற்றங்கள் ... விரைவில் பார்த்த கேட்ட விஷயங்களை எல்லாம் ஊர் சென்று இவர்களை பற்றி ஒரு தொடராக எழுதி மக்கள் மனதில் இந்த தப்லீக்கிகளை பற்றி இருக்கிற கெட்ட எண்ணங்களை போக்க வேண்டும் ...
சந்தோஷத்துடன் ஹுத் ஹுத் பறக்க ஆரம்பித்தது ...
*அல்லாஹு அக்பர் ... அல்லா......ஹு அக்பர் ...* அதிகாலை பாங்கோசை காதில் அறைய திடுக்குற்று எழுந்தது ஹுத் ஹுத் ... அப்படியானால் இது வரை கண்டதெல்லாம் கனவா...? பனிக்காற்று தன் இறகுகளின் மேலே மோத நிஜம் உரைக்க.... அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றது ஹுத் ஹுத் ...
*கண்களில் தூக்கமும் , கண்ட கனவும் களைய.. விரக்தியில் பள்ளியை நோக்கி விரைந்து சென்றது ஹுத் ஹுத் ..*
"இந்த இஜ்திமா வின் பரக்கத்தால் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொழுகையாளிகள் நிரம்பி வழிவார்கள் .. என்று யாரோ ஒரு புண்ணியவான் தளத்தில் எழுதியது ஞாபகம் வர பள்ளியை பார்த்ததில் வழக்கமான ஒன்றரை சப்பே நின்றிருந்தது .. அந்த அதிகாலை தொழுகையில் இஜ்திமா விற்கு எல்லோரையும் அழைத்து போன அமீர் சாப்பை காணவில்லை ...
காரணம் கேட்டதில் அனைவரையும் அழைத்துச் சென்றதில் அலுப்பாம் .. அடுத்த வக்துக்கு கண்டிப்பாய் வருவதாய் சொல்லி இருக்கிறாராம் ...
ம் .... எத்தனை ஆயிரம் ஹஜ்ரத் ஜீ வந்தாலும் இவர்களை திருத்தவே முடியாது ..
ஹுத் ஹுத் வரிசையில் நின்று தொழ ஆரம்பித்தது ...
*وَقَالُوْا قُلُوْبُنَا فِىْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ وَفِىْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْۢ بَيْنِنَا وَبَيْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ‏ *
*மேலும் அவர்கள்: “நீர் எதன் பக்கம் எங்களைஅழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள்மூடப்பட்டுள்ளன .. எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது; எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது; (நாங்கள் திருந்த மாட்டோம் )ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.*
இமாம் ஒதிய குர்ஆனின் ஆயத் அர்த்தமாய் ஹுத் ஹுத் வின் காதுகளில் வந்து விழுந்தது ..
_____________________________
*ஹுத் ஹுத் பறவையின் சிறகுகள் இன்னும் விரியும் இன்ஷா அல்லாஹ்...*
_____________________________

https://m.facebook.com/story.php?story_fbid=1096245843869781&id=100004531261903