Wednesday, August 30, 2006

த.த.ஜ.வினரின் தற்கொலை முயற்சி.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. லுஹா, பி.ஜெ, மசூதுயூசுபி போன்ற பூசாரிகள் மஸ்ஜிதுர்றஹ்மான் பணத்தில் மஞ்சள் குளிப்பு நடத்தி வருகிறார்கள். கடையநல்லூர் பள்ளியை வக்பு போர்டுக்கு கீழ் கொண்டு வந்தார்கள். அதே மாதிரி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானுக்கும் வக்பு அதிகாரிகள் வந்து விட்டார்கள். மக்களே பள்ளியை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்து விட்டார்கள் ஓடி வாருங்கள் என்று மைக்கில் சத்தம் போட்டு இருக்கிறார்கள். துப்பரவாக இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லா பெண்களும் வாருங்கள் என அழைத்து 60க்கும் மேற்பட்ட பெண்களை பள்ளிக்குள் வைத்துள்ளார்கள். அவர்களில் பெரும்hலானவர்கள் தொழ முடியாதவர்கள். அதாவது சுத்தமில்லாதவர்கள்.

எல்லாரையும் கூலி பேசி கூட்டி வந்துள்ளார்கள். த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்ற லுஹா நேற்று காடை பஷPர் வீட்டில் கூட்டம் போட்டு ரவுடிகளை பேரம் பேசி உள்ளார். ஒரு ஆளுக்கு 2000ரூபாய் என 15 பேரை ஏற்பாடு செய்துள்ளார். இந்த 15 பேரும் இரவு முழுவதும் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்ட புதிய முஅத்தினும் இமாமும் இன்று அஸரில் பள்ளிக்குள் சென்றார்கள். லுஹாவால் கூலிக்கு பிடித்து வரப்பட்ட சுனாமி திருடர்களான த.த.ஜ.வினரில் 14 பேர் பள்ளியின் 3வது தளமான மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள். சிலர் கீழே படுத்துக் கொண்டு செத்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.

பி.ஜெ.க்கு தேவைப்பட்டால் தற்கொலையை ஹராம் என்பார். தேவைப்பட்டால் முஸ்தபா ரஷhதி போன்றவர்கள் உடலில் குண்டை கட்டி சிந்தாதிரி பேட்டைக்கு அனுப்பி ஹலால் என்பார். அந்த பி.ஜே. இப்பொழுது தற்கொலை ஹலால் என கூறி விட்டார். எனவே த.த.ஜ. வினர் தற்கொலை முயற்சி செய்ததால் வக்பு சூப்ரண்டெண்ட் கடையநல்லூர் உஸ்மான் மைதீன் திரும்பி விட்டார். தவ்ஹீது வியாபாரிகளான லுஹாவோ, பி.ஜெ.யோ, மசூதுயூசுபியோ தற்கொலை செய்ய மாட்டார்கள் பிறரைத்தான் தூண்டி விட்டுத்தான் பிழைப்பு நடத்துவார்கள்.

Monday, August 28, 2006

காலில் விழவும் தயாராக ஆகி விட்டார்கள்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்

கடையநல்லூர் ஜாக் பள்ளியை வக்பு பள்ளி என தீர்ப்பாயம் மூலம் தீர்ப்பு பெற்றது த.த.ஜ. அதன் எதிரொலி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர். கோர்ட் தீர்ப்பு வரும்வரை பள்ளி வக்பு வாரிய பொறுப்பில்இருக்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள். த.த.ஜ.வினரும் லுஹாவும் அதிகாரிகளின் கைகளை பிடித்து கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் பார்க்காத இடத்தில் நின்று காலில் விழவும் தயாராக ஆகி விட்டார்கள். எப்படியாவது பேரம் பேசி முடித்து விடுங்கள் என கிரிமினல் அண்ணன் உத்தரவு போட்டுள்ளார். போலீஸ் படை புடை சூழ மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர். மற்ற செய்திகள் விரைவில்

Tuesday, August 08, 2006

தமிழ்நாடு தவ்ஹீது மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது யார்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா என்ற தலைப்பில் முந்தைய நமது வெளியீடு இருந்தது. அதை பலர் பாராட்டி இருக்கிறார்கள். இது போன்ற ஆக்கங்களை தொடர்ந்து தாருங்கள் என்று எழுதி இருக்கிறார்கள். சிலர் விமர்சித்து இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே தங்கள் கருத்தையும் பெயரையும் சைட்டிலோ மெயில்களிலோ போட்டு விடாதீர்கள் என்பதை மறவாமல் எழுதி இருக்கிறார்கள். பலர் போன் மூலம் வரவேற்று இருந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று ஒருவர் அறிவுரை கூறி இருந்தார். சிலர் விமர்சனம் செய்திருந்தார்கள். முதலில் விமர்சனங்களைப் பார்ப்போம்.
யாரும் தேசிய கீதத்தை விமர்சித்து இருக்க மாட்டார்கள்.
விமர்சனம் செய்தவர்கள் சுட்டிக் காட்டியவற்றில் இரண்டு விஷயங்கள் நாம் மிகைப்படுத்தி எழுதியுள்ளதாக கூறியுள்ளார்கள். அதில் ஒன்று கேரள சுதர்ஷன சமஸ்கிருதப் பள்ளியில் 'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று கூறி இருக்க முடியாது. யாரும் தேசிய கீதத்தை விமர்சித்து இருக்க மாட்டார்கள். யாரும் தேசிய கீதம் பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று கூறி இருக்க மாட்டார்கள். தாங்கள் உருவாக்கிய 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலையும் பாடுவோம்'' என்று கூறி இருப்பார்கள். அது கிருஸ்ணவாரியார் எழுதிய பிரார்த்தனை அடிப்படையிலான பக்தி பாடலாக இருக்கும். அதையொட்டிதான் பிரச்சனை வந்திருக்கும் என்று எழுதியுள்ளார்கள்.
'ஜன கண மண' பாடுவதை நிறுத்தியும் விட்டார்.
இது விமர்சனம் எழுதியவர்களின் யூகம்தான். உண்மை நிலை அது அல்ல. பெரும்பாலான பள்ளி கூடங்களில் அன்று முதல் இன்று வரை தாங்கள் உருவாக்கிய அல்லது அவர்கள் மதம் சார்ந்த பிரார்த்தனை அடிப்படையிலான பக்தி பாடல்கள் பாடத்தான் செய்கிறார்கள். அதனால் எங்கும் பிரச்சனை வரவில்லை, வராது. ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார் 1985 ஜுலை 26 ஆம் தேதி முதல் எமது பள்ளி கூடத்தில் ஷஜன கண மண பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று மட்டும் சொல்லவில்லை. ஷஜன கண மண பாடுவதை நிறுத்தியும் விட்டார்.
கேரள அரசு எச்சரிக்கை செய்தது.
'ஜன கண மண' பற்றி விமர்சித்தும் இருந்தார். என்ன விமர்சனம் என்பதை முந்தைய வெளியீட்டில் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறோம். அந்த நேரத்தில் 'ஜன கண மண' பற்றி செய்யப்பட்ட விமர்சனத்தை இதில் விரிவாகவே தருவோம். 'ஜன கண மண' பாடுவதை வாரியார் நிறுத்தியதும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடுவதாக கேரள அரசு எச்சரிக்கை செய்தது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகுதான் அரசின் உத்தரவுக்கு கிருஸ்ணவாரியார் பணிந்தார். 'ஜன கண மண' வுடன் அவரது 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலை பாடச் செய்தார்.
இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
நாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நாளில் தேசிய கீதத்தைப் பற்றி கடும் சர்ச்சை ஏற்பட்டிருப்பது மிக மிக வருந்தத் தக்கது. ஏந்த நாடும் ஏற்றுக் கொண்ட தேசிய கீதத்திற்கு இப்படி ஒரு சர்ச்சை ஏற்படவில்லை. அதுவும் 40 ஆண்டுகளாக நடை முறையில் உள்ள தேசிய கீதத்தைப் பற்றி இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததாக வரலாறு இல்லை. என அப்பொழுது பத்திரிக்கைகள் கூட கருத்துக்கள் எழுதியுள்ளன. எனவே இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
எழுத்து வித்தியாசம் இருக்கலாம்.
கிறிஸ்துவ மதத்தில் 'ஜெஹோவா' என்பது கேள்விப்படாத பெயராக உள்ளது. எனவே இது உண்மையாக இருக்காது என்று எழுதியுள்ளனர். 'ஜெஹோவா' என்பது எழுத்து அல்லது வார்த்தை பிசகலாகக் கூட இருக்கலாம். நடந்த சம்பவம் உண்மை. 1985இல் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள் 'ஜெஹோவாவின்' சாட்சிகள் என்ற பிரிவைச் சார்ந்த என்றும் ஜஹோலா பிரிவைச் சார்ந்த என்றும் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஓரிரு எழுத்து வித்தியாசத்தில் இந்த செய்திகளை வெளியிட்டன. எனவே எழுத்து வித்தியாசம் இருக்கலாம்.
சரியான வார்த்தையை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள்.
முஸ்லிம்களின் பெரிய அமைப்பு த.மு.மு.க.தான் என்று எல்லா பத்திரிக்கைகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அந்த பெரிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பெயரை ஆரம்பத்தில் வித விதமாக எழுதினார்கள். இப்பொழுது சரியாக எழுதினாலும் பெயரைச் சொல்லும்போது உச்சரிப்பில் இன்றும் பேதம் உள்ளது. எனவே 'ஜெஹோவாவின்' சாட்சிகள் என்ற பிரிவின் சரியான உச்சரிப்பை சரியான வார்த்தையை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள். நாம் ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார், ஜெஹோவா பற்றி எழுதியது அதையொட்டி கருத்தைச் சொல்லத்தான். அவற்றைப் பற்றிய விபரங்களைத் தர அல்ல. விமர்சனங்கள் வந்துள்ளதால் விபரங்களை தர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
'ஜன கண மண'வை நாங்கள் பாட மாட்டோம்.
பள்ளிகூடங்களில் தேசிய கீதம் போடும்போது எல்லாரும் எழுந்து நின்று பாட வேண்டும் என்பது கேரள அரசின் சட்டம். ஷஜெஹோவாவின் மாணவர்கள் மூன்று பேர் திருச்சூருக்கு அருகில் உள்ள பள்ளி கூடத்தில் தேசிய கீதம் போடும்போது மரியாதைக்காக எழுந்து நின்றார்கள். ஆனால் சேர்ந்து பாடவில்லை. அதைப் பற்றி கேட்டதற்கு, 'ஜன கண மண' எங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்ட கருத்தைக் கொண்ட கீதம். அதனால் 'ஜன கண மண' வை நாங்கள் பாட மாட்டோம். தேசிய கீதம் என்ற முறையில் 'ஜன கண மண' மற்றவர்கள் பாடும்போது அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் எழுந்து நிற்போம் என்று கூறி விட்டார்கள்.
பாடத்தான் வேண்டும் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு.
தேசிய கீதம் பாட மறுத்ததற்காக மூன்று மாணவர்கள் மீதும் பள்ளி விதிகளுக்கு முரணாக நடந்ததாக குற்றஞ்சாட்டி பள்ளியிலிருந்து நீக்கி விட்டார்கள். மாணவர்கள் சார்பில் நீதி வேண்டி கேரள ஹைகோர்ட்டில் வழக்காடப்பட்டது. கேரள அரசின் உத்தரவுப்படி தேசிய கீதமான 'ஜன கண மண' வை பாடத்தான் வேண்டும் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. பிறகு இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சின்னப்ப ரெட்டி, நீதிபதி தத் ஆகிய இருவரையும் கொண்ட மன்றத்தில் விசாரணை நடந்தது. அந்த உச்ச நீதி மன்றம் கீழ் உள்ளவாறு தீர்ப்பளித்தது.
'தேசிய கீதம் பாட வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
கேரள மாநில உயர் நீதி மன்றம் தவறான வழியில் சென்று தடம் புரண்டு தீர்ப்பு அளித்து விட்டது. கேரள உயர் நீதி மன்றம் தேசிய கீதத்தின் ஒவ்வொரு சொல்லையும் ஆழ ஆராய்ந்து எந்த மதத்தாரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடிய எதுவும் தேசிய கீதத்தில் இல்லை என்று சொல்லி தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பிரச்சனை அது அல்ல. ஜஹோலா பிரிவைச் சார்ந்த அந்த மாணவர்கள் தங்கள் கடவுளை நோக்கி செய்யப்படும் பிரார்த்தனைகள் தவிர வேறு எந்த சடங்கிலும் தாங்கள் கலந்து கொள்வது தங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்டது என்று உண்மையாகவே நம்புகிறார்கள். எனவே, அவர்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
பாடத்தான் வேண்டும் என்று சொல்ல எவ்வித சட்ட ஆதாரமும் இல்லை.
கேரள அரசின் உத்தரவு இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவுக்கு முரண்பட்டது. சிலருடைய மத நம்பிக்கைகள் மற்றவர்களுக்கு ஆச்சரிமாகப்பட்டாலும் அவர்கள் அந்த நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் நம்பிக் கொண்டிருந்தால் அவர்களை இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு பாதுகாக்கும். பள்ளிகூடங்களில் தேசிய கீதம் போடும்போது எல்லாரும் எழுந்து நின்று பாடத்தான் வேண்டும் என்ற கேரள மாநில அரசின் கல்வித்துறை அதிகாரிகளின் சுற்றறிக்கைக்கு எவ்வித சட்ட ஆதாரமும் இல்லை.
அந்த மூன்று மாணவர்களையும் அதே பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த மூன்று மாணவர்களையும் அவர்கள் படித்த அதே பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும். அவர்கள் எந்த இடர்பாடும் இன்றி படிக்க வகை செய்ய வேண்டும். நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையை போதிக்கின்றது. நமது தத்துவமும் அதை போதிக்கின்றது. நம் அரசியல் அமைப்பு அதை நடைமுறைப் படுத்துகிறது. நாம் அதை களங்கப்படுத்தி விடக் கூடாது என்று கூறி கேரள உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதி மன்றம். தீர்ப்பு வந்த உடனேயே கிருஷ;ணவாரியார் தமது பள்ளியில் 'ஜன கண மண' பாடுவதை மீண்டும் நிறுத்தி விட்டார். அவர் தாமே எழுதிய சமஸ்கிருத பாடலைப் பாடச் செய்தார். அதற்குப் பிறகு பெரும்பாலான பள்ளி கூடங்களில் தேசிய கீதம் பாடுவதையே நிறுத்தினார்கள்.
இந்திய தேசிய கீதத்தின் ஆரம்பமே சரி இல்லை.
'ஜன கண மண' பற்றி அப்பொழுது செய்யப்பட்ட விமர்சனத்தை இப்பொழுது பார்ப்போம். 1919ஆம் ஆண்டு 5 ஆம் ஜார்ஜ் மன்னரும் அவரது தாயார் இங்கிலாந்து மகாராணியும் கல்கத்தாவுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்று போற்றி பாட எழுதப்பட்ட கவிதைதான் 'ஜன கண மண'. இதைத்தான் நமது தேசிய கீதமாக ஆக்கி இருக்கிறார்கள். ஜன கண மண அதிநாயக ஜெஹே! இதுதான் நமது தேசிய கீதத்தின் ஆரம்ப வார்த்தை. இதன் பொருள் என்ன? மக்கள் தலைவனே வாழ்க! பாராத பாக்கியவிதாதா என்றால் பாரதத்துக்கு நன்மை பயப்பயவனே! என்று பொருள். இது இந்திய தேசத்தை பாரத மாதாவை குறிக்கிறதா? சிந்தியுங்கள். நிச்சயமாக இது இந்தியாவை குறிக்கவே இல்லை. ஆக இந்திய தேசிய கீதத்தின் ஆரம்பமே சரி இல்லை.
தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் சேர்க்கப்படவில்லை.
'பஞ்சாப சிந்து குஜராத மராத்தா' என்றுதான் இரவிந்தரநாத் தாகூர் எழுதி இருந்தார். இது தேசிய கீதமாக ஆக்கப்பட்டபொழுதுதான் திராவிடம் சேர்க்கப்பட்டு 'திராவிட உத்கல வங்கா' என்றானது. பிரிட்டிஷ; அரசாங்கத்துக்கு பஞ்சாப், சிந்து, குஜராத், மராத்தா ஆகிய சமஸ்தானங்கள் அடிமைபட்டுக் கிடந்தன. எனவே அந்த சமஸ்தானங்களின் பெயர்களை மட்டுமே இரவிந்தரநாத் தாகூர் எழுதி இருந்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, காஷ;மீர், ராஜஸ்தான் போன்ற இந்தியாவிலுள்ள எந்த மாநிலமும் இது தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் சேர்க்கப்படவில்லை.
இது தேசிய கீதமா? இந்தியாவை கூறு போடும் பிரிவினை கீதமா?
அதே போல் வங்காள விரிகுடா மட்டுமே கீதத்தில் உள்ளது. அரபிக் கடல், இந்து மஹா சமுத்திரம் இடம் பெறவில்லை. காரணம், அந்தப் பகுதிகளெல்லாம் போர்சுகீசியர்களிடம் இருந்தது. அதனால்தான் பிரிட்டிஷ; ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் பாராட்டி வர வேற்று குளிர வைக்க எழுதிய இந்த பாடலில் இந்தப் பகுதிகளின் பெயர்களெல்லாம் இடம் பெறவில்லை. இது தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் கூட இவை இடம் பெறவில்லை. இது தேசிய கீதமா? இந்தியாவை கூறு போடும் பிரிவினை கீதமா?
பிரிட்டீஸ் ராஜாவை நல்ல ஐஸ் வைத்து குளிப்பாட்டியுள்ளார்.
விந்திய இமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா' இது பற்றி எந்த விமர்சனமும் நாம் காண கிடைக்கவில்லை. தவ சுப நாமே ஜாகே, தவ சுப ஆஷpஷ மாகே, ஜாஹே தவ ஜெய காதா என்ன அர்த்தம். மக்கள் எல்லலோரும், உன் புனிதப் பெயரை எண்ணிய படியே கண் விழிக்கிறார்கள். உன் பெருமையை பாடிக் கொண்டே உனது அருளாசியைக் கோருகிறார்கள் என்று அர்த்தம். இப்படி பிரிட்டீஷ; ராஜாவை நல்ல ஐஸ் வைத்து குளிப்பாட்டியுள்ளார். மேலும் இரவிந்தரநாத் தாகூர் பிரிட்டிஸ் ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் எப்படியெல்லாம் பாராட்டி ஐஸ் வைத்து எழுதியுள்ளார் தெரியுமா?
ஓ ராணியே ஓ ராஜேஸ்வரனே நாங்கள் உன் பாதத்தில் அடி பணிகிறோம்.
உனது சிம்மாசனத்தைச் சுற்றி பல மதத்தினரும் வந்து தங்களது அன்பை தெரிவிப்பார்கள். உனது அன்பு மொழியினைக் கேட்க ஆவலாய் இருப்பார்கள். பண்டைய நாடோடிகளை பஞ்சத்திலிருந்து மீட்டு மேலே ஏற்றி நம்மை வழி நடத்திச் செல்லும் மாமன்னனைப் போற்றுவோம். அறியாமையிலும், அவதியிலும், பஞ்சத்திலும் அடிபட்டு சுரணையற்ற நிலையிலுள்ள நாடு உன் கண் அசைவுக்கும் உன் தாயின் நிஜ பாதுகாப்பையும் விரும்புகிறது. உனது கருணை மிக்க வழி நடத்தலால் தூங்கும் பாரதம் விழித்தெழும். ஓ ராணியே ஓ ராஜேஸ்வரனே நாங்கள் உன் பாதத்தில் அடி பணிகிறோம்.
இந்த விஷயங்களில் நாம் எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை.
இப்படி அடிமைத்தனமாய் பிரிட்டிஸ் ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் புகழ்ந்து இரவிந்தரநாத் தாகூரால் எழுதப்பட்ட கீதம்தான் 'ஜன கண மன'. இந்த அடிமைத்தனமான கீத்திலிருந்து 52 விநாடிகள் பாடும் அளவுக்கு எடுக்கப்பட்டதூன் இன்று இந்திய தேசிய கீதமாக உள்ள 'ஜன கண மன'. இது இந்தியனுக்கு பெருமையா? தலை குனிவா? இப்படி விமர்சனங்கள் அனல் பறந்தன. இந்த நிலையில்தான் மத்திய அரசு, இந்தியர்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணமும் இந்தியன் என்ற உணர்வை தூண்டும் வண்ணமும் அல்லாமா முஹம்மது இக்பால் எழுதியுள்ள ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஆக்கலாமா என பரிசீலித்தது. எனவே இந்த விஷயங்களில் நாம் எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை.
அரசியல் ஒரு சாக்கடை.
பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம் என்பதை போனில் விமர்சித்த சிலர் ''அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் -- கள்தான் மூழ்கி குளிக்கும். 'ஜன கண மண' வுக்கு எழுந்து நின்றாலும். முஸ்லிம் எழுதிய 'ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா' வுக்கு எழுந்து நின்றாலும் இரண்டுமே ஷpர்க்குதான். பஞ்சாயத்து போர்டுக்கு போனாலும் பார்லிமெண்டுக்கு போனாலும் இந்த ஷpர்க்குகளை செய்யாமல் இருக்க முடியாது. என்றதோடு வசை மாரியும் பொழிந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று அறிவுரை சொன்ன சகோதரர் கூற்றுப்படி இங்கு பெயர் சொல்ல மாட்டோம்.
சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை.
நாம் பெயர் சொல்லாவிட்டாலும் ''அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் -- கள்தான் குளிக்கும்'' என்ற விமர்சனத்தைப் படித்ததும். இந்த விமர்சனத்துக்கு சொந்தக்கார அமைப்பினர் யார் என்பதை எல்லாருமே எளிதாக அறிவீர்கள். குர்ஆன் ஹதீஸ் வழி நடப்போம் என சொல்லிக் கொண்டு அரசியல் ஒரு சாக்கடை என்கிறார்கள். அவர்களின் இந்தக் கூற்றுக்கு இதுவரை ஏதாவது ஒரு ஆயத்து-ஹதீஸ் ஆதாரத்தைக் காட்டி இருக்கிறார்களா? என்றால் இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்பவர்கள்தான் சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை என்பதை அவர்களது சமீபத்தி தேர்தல் நிலைப்பாடு படம் பிடித்துக் காட்டியது.
ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள்.
இவ்வளவு காலம் 'வரதட்சணை வாங்குபவனின் உணவு ஹராம்' என்றார்கள். இப்பொழுது 'திருமணத்திற்கு சென்றால் அதை நாம் ஆதரித்தது போல் ஆகும். தீமைக்கு பரிந்துரை செய்த குற்றவாளிகளாக ஆவோம் உணவு ஹராம் இல்லை'' என்று கூறியுள்ளார்கள். திருமணம் செய்வது சுன்னத் நபி வழி. அந்த நபி வழியை செய்பவர் வரதட்சணை என்ற ஒரு தவறை செய்தால் அந்த திருமணத்தையே புறக்கணிக்கச் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்கள் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள். திருமணத்திலாவது ஓரிரு தவறுகள் நடக்கும்.
அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.
டாஸ் மார்க், மலிவு விலை கள்ளுக்கடை, தனியார் பனை மரத்தில் கள்ளு தயாரிக்க அனுமதி, நிரோத்தை மாட்டிக் கொண்டு விபச்சாரம் செய்யுங்கள் என்ற பிரச்சாரம். லஞ்சம் ஊழல் உட்பட எழுதி முடிக்க முடியாத அளவுக்கு அனைத்து ஹராம்களையும் செய்ததுதான் ஜெயலலிதா அரசு. அந்த ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி தெருத் தெருவாய் -- மாதிரி அலைந்தார்களே அப்பொழுது அரசியல் சாக்கடையாகத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அரசியலை ஹராமாக சித்தரித்தார்கள். சட்ட மன்ற தேர்தலில் அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.
ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் வந்தாக வேண்டும்.
எனவே இவர்கள் ஆலிம்கள் தோற்றத்தில் உலவி வரும் ஷய்த்தான்கள். மார்க்கம் பற்றி சிந்திக்காத பொழுது போக்கிகளை கெடுக்க நடிக நடிகையர் போன்ற பொழுது போக்கிகள் ரூபத்தில் வருவான். மார்க்கம் பற்றி சிந்திக்கக் கூடியவர்களிடம் பொழுது போக்கிகள் ரூபத்தில் வந்தால் கெடுக்க முடியாது. அவர்களை மார்க்கத்தின் பெயரால்தான் கெடுக்க முடியும். மார்க்கத்தின் பெயரால் கெடுக்க வேண்டும் என்றால் ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் உலவி வந்தாக வேண்டும்.
அவர்கள் உருவத்தில் இருந்தவன் ஷய்த்தான்தான்.
களப்பணி ஆற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர்.... மற்றவர்கள் வரம்பு மீறிப் போயிருக்கலாம். ஆனால் நாம் அப்படி அல்லவே! நாம்தான் ஏகத்துவத்தில் உறுதியானவர்களாக இருக்கின்றோமே! நாம் களம் இறங்கினால் என்ன தவறு? என்று கேட்கலாம். நாம் என்ன தான் உறுதியானவர்களாக இருந்தாலும், நம்மீது நமக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும், 'யார் வேலியை சுற்றி மேய்கின்றாரோ அவர் வேலிக்குள்ளேயே சென்று விடக் கூடும் (புகாரி 2051) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் நிலைக்கு ஆளாக மாட்டோம் என்பது என்ன நிச்சயம்? என்று ஹதீஸ் ஆதாரத்தை எழுதி தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்றார்களே அப்பொழுதும் அவர்கள் உருவத்தில் உலவி வந்தவன் ஷய்த்தான்தான்.

அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

என்னடா தவ்ஹீது பேசும் ஆலிம்கள் உருவத்தில் ஷய்த்தான் உலவி வருவதாக எழுதுகிறானே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எந்த குர்ஆன் ஹதீஸ்கள் ஆதாரம் காட்டி எந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டம் தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்று சொன்னதோ, அதே தவ்ஹீது மவுலவிகள் கூட்டம்தான் அதே குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் காட்டி நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் களப் பணி ஆற்றச் சொன்னது. அந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டமும் தேர்தலில் க(ள்)ளப் பணி ஆற்றியது. அது மட்டுமா இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை கூறி அது பத்ருப் போரில் ரசூலுல்லாஹ்வுக்கு கிடைத்த வெற்றி மாதிரி என்றும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வி உஹது போரில் ரசூலுல்லாஹ்வுக்கு ஏற்பட்ட தோழ்வி மாதிரி என்றும் 12-05-2006 அன்று ஜும்ஆவில் ஒருவன் பேசினான். அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

இந்த மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது ஷய்த்தான்களா இல்லையா?

அவன்தான் அப்படி பேசினான் என்றால் அந்தக் கூடாரத்தில் உள்ள அத்தனை மவுலவி கூட்டமும் இப்பொழுது அதே கருத்தை ஏற்று எழுதியும் உள்ளன. இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை பத்ருக்கு ஒப்பிட்டும். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வியை உஹதுக்கு ஒப்பிட்டும் எழுதியுள்ளார்கள். ரசூலுல்லாஹ்வுக்கு பத்ரில் கிடைத்த வெற்றிக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ்வுக்கு உஹதில் ஏற்பட்ட தோழ்வியும் இந்த லிவாத் கூட்டத்துக்கு தேர்தலில் ஏற்பட்ட தோழ்வியும் சமமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கண்ட பத்ருக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சந்தித்த உஹதுக்கு எதுவும் ஈடாகுமா? இப்பொழுது சொல்லுங்கள் இந்த தமிழ்நாடு தவ்ஹீது மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது யார்? ஷய்த்தான்கள்தானே.

இன்ஷh அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம்.

ஷய்த்தான் பிடித்துள்ள இந்த பைத்தியக்கார மவுலவிகளின் உளறல்களை தூக்கி எறிவோம். இந்திய அரசியலில் ஈடுபடலாம். ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வது ஹராம் ஷpர்க் என்ற இவர்களின் வாதம் முட்டாள்தனமான வாதம் என்பதை புரிவோம். எழுந்து நிற்பது பாடுவது போன்றவை ஷpர்க்கு என்ற நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தால் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு அனுமதி படி செயல்படலாம். எனவே மீண்டும் சொல்கிறோம் பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். இன்ஷh அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம் வஸ்ஸலாம்.
வெளியீடு: கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி

Tuesday, August 01, 2006

ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 01-08-2006

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு வந்ததும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தும் வழக்கம் வந்து விட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள். முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு என்ற இந்த தலைப்பு உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான இந்த தலைப்பில் முஸ்லிம்கள் பேசுவதுடன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டும் முஸ்லிம்கள் பேச வைக்கிறார்கள். மீலாது மேடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார்கள் அல்லவா. அது போல் இந்த மேடையிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக நம்பும்படியாக பேசி விட்டுச் செல்கிறார்கள்.

நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும்.

வரலாறு தெரியாத முஸ்லிம்களும் வரலாற்றை மறந்து விட்ட முஸ்லிம்களும் வராலற்றை மறைத்திடும் இந்த பேச்சாளர்கள் பற்றி, எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி விட்டார் என நம்பி விடுகிறார்கள். அதனால் ஆஹா என்ன அருமையான பேச்சு என்று பேசியவர்களை முஸ்லிம்களின் நண்பன் என புகழ ஆரம்பித்து விடுகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு(தான்) வகித்தார்கள் என்று சொல்வது தவறு. இதை ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்களை கொண்டு ஆய்வு செய்துதான் தெரிய வேண்டும் என்பதில்லை. அப்படி ஆய்வு செய்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள் எப்படி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் விளங்க முடியும். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்று சொல்வது சரி அல்ல. இதை விளக்க பாமரர்களும் நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும். முதலில் உதாரணத்தின் மூலம் விளங்குவோம்.

எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று இருக்கிறார்கள்.

இரு நூறு கிலோ எடையுள்ள ஒரு பொருளை ஒருவர் தூக்குகிறார். அவர் தூக்கும்பொழுது இரண்டு பேர் வந்து அவருக்கு உதவி செய்கிறார்கள். இப்பொழுது பொருளை தூக்கியவரை இரு நூறு கிலோ தூக்கியவர் என்றும் உதவி செய்தவர்களை அவர் தூக்க இவர்கள் உதவி பங்களிப்பு செய்தார்கள் என்றும் சொல்வோம். யாராவது வந்து உதவி செய்தவர்களை இரு நூறு கிலோ தூக்கியவர்கள் என்றும் இரு நூறு கிலோ தூக்கியவரை பங்களிப்பு செய்தவர் என்றும் சொன்னால் எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று இருக்கிறார்கள். இன்னொரு உதாரணத்தின் மூலமும் விளங்குவோம்.

பொருளுக்குரியவர்கள் செய்த உயிர் தியாகத்தால்.

ஒரு சமுதாயத்தாரிடம் பொருள் ஒன்று இருக்கிறது. அந்த பொருளின் உரிமையாளர்களான அந்த சமதாயத்தவர்கள் அசால்ட்டாக இருக்கும்பொழுது கொள்ளைக் கூட்டம் வந்து அந்த பொருளை அபகரித்து விடுகிறது. பொருளை பறி கொடுத்தவர்கள் அதை மீட்பதற்காக உடனே போராட்டத்தில் குதிக்கிறார்கள். செத்தாலும் பரவாயில்லை தங்கள் பொருளை மீட்டே ஆக வேண்டும் என உயிரையே பணயம் வைத்து சண்டை போடுகிறார்கள். அப்பொழுது இன்னும் சில சமுதாயத்தவர்களும் வந்து சேர்ந்து உதவி செய்கிறார்கள். கொள்ளையடித்தவர்களோ பொருளுக்குரியவர்களை கொன்று விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். பொருளை தங்களுக்குரியதாக ஆக்கி விடலாம் என பொருளுக்குரியவர்களை அழித்தொளிப்பதிலேய குறியாக இருக்கிறார்கள். அதனால் பொருளுக்குரியவர்களே குறி வைத்து அதிகமாக கொல்லப்பட்டார்கள். பொருளுக்குரியவர்கள் செய்த உயிர் தியாகத்தால்; கொள்ளையர்களிடமிருந்து பொருள் மீட்கப்படுகிறது.

உங்களுக்கும் பங்கு உண்டு என பாராட்டுகிறோம்.

மீட்கப்பட்ட பின் பொருளை என்ன செய்ய வேண்டும். அந்த பொருள் எந்த சமுதாயத்திற்குரியதோ அந்த சமுதாயத்தவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். என்ன நடந்தது. உரியவர்களிடம் கொடுக்கவில்லை. என்ன செய்தார்கள். பொருளுக்குரியவர்களிடம்; சொல்கிறார்கள். இந்த பொருளை மீட்க நாங்கள் அனைவரும் போராடினோம். நீங்களும் எங்களுடன் வந்து சேர்ந்து உதவி செய்து உங்கள் பங்களிப்பை செலுத்தினீர்கள். உயிர்த் தியாகம் செய்தீர்கள். நீங்களும் உங்கள் பங்களிப்பை செலுத்தி உயிர்த் தியாகம் செய்ததால் பாராட்டுகிறோம். எப்படி பாராட்டுகிறோம்? இந்த பொருளை மீட்டதில் உங்களுக்கும் பங்கு உண்டு என பாராட்டுகிறோம் என்றார்கள்.

இவர்கள் யார்? என்கிறீர்களா? இவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

பாராட்டி விட்டு பொருளை மற்றவர்கள் வைத்துக் கொண்டார்கள். நன்றாக கவனிக்க வேண்டும். இந்த பொருளில் உங்களுக்கும் பங்கு உண்டு என்று கூட சொல்லவில்லை. பொருளுக்குரியவர்கள் இது எங்கள் பொருள் என்று உரிமை கோரவுமில்லை. பொருளுக்குரியவர்களும் என்ன செய்தார்கள். ஆம் அந்த பொருளை மீட்டதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பெருமையாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பொருள் என்பதையே மறந்து விட்டார்கள். இவர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள். இவர்கள் யார்? என்கிறீர்களா? இவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.

குட்டி குட்டி சமஸ்தானங்களாக இருந்தவற்றை இணைத்து ஹிந்துஸ்த்தான் என்ற பெரிய நாட்டை உருவாக்கியவர்களே முஸ்லிம்கள்தான். இதை முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். அரபி, உருது, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து உண்டு. தமிழ் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து இல்லை. எனவே தமிழ் போன்ற மொழி பேசுபவர்கள் இந்து என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் இந்தியா என யூகித்து விளங்கி உள்ளார்கள். இந்தியா என்று தமிழில் எழுதப்படும் நம் நாட்டுக்கு அல்-ஹிந்த், ஹிந்துஸ்தான் என பெயர் வைத்தவர்களே முஸ்லிம்கள்தான். இந்த உண்மையை முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.

சமுதாய தலைவர்கள் என்போர் அப்படி ஆக்கி விட்டார்கள்.

800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்கள் நாம் என்று பேசுவார்கள். ஆகவே இந்தியாவை ஆளும் உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உண்டு என்று பேச மாட்டார்கள். ஆகவே இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்றுதான் பேசுவார்கள். இந்தியாவே முஸ்லிம்களுக்கு உரியதுதான் என்று பேசத் தெரியாதவர்களாக ஆகி விட்டார்கள். சமுதாய தலைவர்கள் என்போர் அப்படி ஆக்கி விட்டார்கள். இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்பது தவறு. இந்தியாவே முஸ்லிம்களுக்கு உரியது என்பதே சரி.

இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து வரும் கூட்டத்தின் மூதாதையர்கள்.

இந்தியா என்ற நாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபொழுதுதான் வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அபகரித்தார்கள். இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள்தான், ஆட்சியை ஆங்கிலேயனிடம் பறி கொடுத்த முஸ்லிம்கள்தான் இழந்த நாட்டை மீட்க, இழந்த ஆட்சியை பிடிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக களம் கண்டார்கள். மற்றவர்கள் குறிப்பாக இன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து வரும் கூட்டத்தின் மூதாதையர்கள் ஆங்கிலேயனிடம் கிடைத்த பதவிகளை பெற்று சொகுசு வாழ்வு வாழ்ந்தார்கள்.

இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறோம்.

இந்தியாவை மீட்க இழந்த ஆட்சியை பெற போராடி வந்த முஸ்லிம்களுடன் மற்றவர்களும் சேர்ந்தார்கள். நாட்டை இழந்த முஸ்லிம்கள் நாட்டை மீட்க போராடினார்கள். ஆட்சியை இழந்த முஸ்லிம்கள் ஆட்சியை திரும்ப பெற போராடினார்கள். இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள். சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்கள். இந்தியாவே முஸ்லிம்களுக்குரியது. இதை எல்லாரும் மறந்து விட்டோம்.

ஜமாஅத் என்ற வார்த்தைக்கு பகராமாக வைக்கப்பட்டதுதான்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற போராட்டத்துக்கு காலப் போக்கில் அமைப்பு துவங்கினார்கள். சுதந்திர போராட்டுத்துக்காக 1885இல் துவங்கப்பட்ட அமைப்பு காங்கிரஸ். காங்கிரஸ் என்ற பெயர் வைக்க காரணம் என்ன? காங்கிரஸ் என்றால் என்ன? இதையும் முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். முஸ்லிம்கள் ஒன்று கூடினால் அதற்கு சொல்லப்படும் வார்த்தை ஜமாஅத். இந்த ஜமாஅத் என்ற பொருள் தரும் வார்த்தைதான் காங்கிரஸ் என்பது. காங்கிரஸ் என்ற பெயரே ஜமாஅத் என்ற வார்த்தைக்கு பகராமாக வைக்கப்பட்டதுதான்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விட்டது.

இந்த ஜமாஅத்தே (காங்கிரஸ் கட்சியே) முஸ்லிம்களுக்கு சொந்தமானதுதான். காலப் போக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை (ஜமாஅத்தை) விட்டு முஸ்லிம்களின் தலைவர்களாக அன்று கருதப்பட்டவர்கள் வெளியேறினார்கள். அதாவது ஜமாஅத்தை (காங்கிரஸ் பேரியக்கத்தை) விட்டு பிரிந்தார்கள். இந்த பிரிவினையால் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்த காங்கிரஸ் பேரியக்கத்தை (ஜமாஅத்தை) முஸ்லிம்கள் இழந்தார்கள். அதனால் அந்த பேரியக்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விட்டது.

முஸ்லிம் லீக் என்ற அமைப்பை- ஜமாஅத்தை துவங்கினார்கள்.

இது போன்ற உண்மைகளைச் சொல்லும்போது கசக்கும். யார் சொன்னாலும், யாருக்கு சொன்னாலும் உண்மையைச் சொன்னால் அது கசக்கும். அதனால்தான் ''உண்மை அது கசப்பாயினும் சொல்லி விடு'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிரிந்து விடாதீர்கள் என்று திரு குர்ஆனில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பிரிந்து விடாதீர்கள் என்று யாரைப் பார்த்து சொல்லப்பட்டிருக்கிறது. அழகிய உபதேசமாகவும் கட்டளைகளாகவும் முஸ்லிம்களை நோக்கித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த முஸ்லிம் தலைவர்கள்தான் பிரிந்தார்கள். பிரிந்த முஸ்லிம் தலைவர்கள் சார்பில் சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம் லீக் என்ற அமைப்பை- ஜமாஅத்தை துவங்கினார்கள்.

முஸ்லிம் லீக்கை ஒளித்தாக வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

இந்த முஸ்லிம் லீக் என்பதில் உள்ள லீக் என்பதும் ஜமாஅத் என்ற பொருள் தரக் கூடியதுதான். முஸ்லிம் ஜமாஅத் என்பதையே மற்றவர்களும் புரியும் வண்ணம் முஸ்லிம் லீக் என பெயரிடப்பட்டது. நாம் அடிக்கடி சொல்வோம் இந்தியா என்ற நாடு இருக்கும் வரை இ.யூ. முஸ்லிம் லீக் என்ற அமைப்பு இருந்தாக வேண்டும் என்று. காரணம் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட முஸ்லிம்களின் கட்சி காங்கிரஸ். அது முஸ்லிம்களுக்கு சொந்தமில்லை என்பது போல் ஆகி விட்டது. எனவே சுதந்திரத்துக்காக பாடுபட்ட கட்சி என்று முஸ்லிம்கள் சார்பில் சொல்லிக் கொள்ள முஸ்லிம் லீக் இருந்தாக வேண்டும் என்று. இதனால்தான் சங்பரிவார்கள் இந்திய சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வதற்கு தடையாக உள்ள முஸ்லிம் லீக்கை ஒளித்தாக வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் முஸ்லிம் என்ற பெயருடன் தேர்தலில் போட்டியிட.

அது மட்டுமல்ல சுதந்திரத்திற்குப் பிறகு தோன்றிய ஜாதி, மத பெயரில் உள்ள கட்சிகளை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளாக அங்கீகரிக்க இந்திய சட்டத்தில் தடை உள்ளது. அதனால்தான் ராமதாஸ், கிருஷ;ணசாமி, திருமாவளவன் போன்றவர்கள் துவங்கிய ஜாதி சங்கங்களின் பெயர்களை விட்டு விட்டு வேறு பெயரில் கட்சி கண்டார்கள். சுதந்திரத்திற்கு முன்பு தோன்றிய கட்சி என்பதால் முஸ்லிம் லீக் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் முஸ்லிம் என்ற பெயருடன் தேர்தலில் போட்டியிட முஸ்லிம் லீக் என்ற கட்சியால் மட்டுமே முடியும்.

முஸ்லிம் லீக்குக்கு தலைவர்களாக வருபவர்கள் செயல்பட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனாலும்தான் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் முஸ்லிம் லீக்கை ஒளிப்பதில் குறியாக இருக்கிறார்கள். நீங்கள் என்ன முஸ்லிம் லீக்கை ஒளிப்பது. முஸ்லிம் லீக்கை நாங்களே ஒளித்துக்கட்டி விடுவோம். குற்றுயிரும் குறை உயிராகவும் கூட விட மாட்டோம். அதற்கு ரூஹு (உயிர்) போகும் வரை இருந்து அதை முழுமையாக மவ்த்தாக்கி விட்டும் ஒதுங்க மாட்டோம். கபுருக்குளியில் வைத்து மண்ணைப் போட்டு மூடி சமாதி கட்டி விட்டுத்தான் ஒதுங்குவோம். இப்படித்தான் முஸ்லிம் லீக்குக்கு தலைவர்களாக வருபவர்கள் செயல்பட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி நளினமாக எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை.

த.மு.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த முஸ்லிம் லீக்கின் கண்ணியத்திற்குரிய தலைவர்களின் பல்வேறு தவறான போக்குகளை பலர் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். 2001 சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். 14-04-2001 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் பக்கம் 78 இல் 'தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் ஒரு வாசகம் இடம் பெற்றது. அது ''தலித் கிறிஸ்தவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இணையாக ஆக்கிட மத்திய அரசை வலியுறுத்தும். தலித் கிறிஸ்தவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் குழுவின் ஆய்வுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்பதாகும். இந்த அறிக்கை வந்ததும் த.மு.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலித் முஸ்லிம்கள் யோசனையை இவர்தான் சொல்லி இருப்பார் போலும்.

1999 வாழ்வுரிமை மாநாடு முதல் அ.தி.மு.க.வுக்கு த.மு.மு.க. வழங்கி வந்த ஆதரவை 2001 தேர்தலில் ரத்து செய்தது. அதற்கு காரணம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற தலித் முஸ்லிம்கள் என்ற வாசகமும்தான். ஆனால் அப்பொழுது அ.தி.மு.க.விடம் ஒரே ஒரு சீட்டு பெற்ற முனீருல் மில்லத் காதர் மைதீன் அவர்களுக்கு அந்த ஒரு சீட்டுதான் பெரிதாக தெரிந்தது போலும். அதனால் முனீருல் மில்லத் காதர் மைதீன் அதற்கு சால்ஜாப்பு கூறி சீட்டை மட்டும் வாங்கிக் கொண்டார். ,d;ndhU காரணம் அவரே இந்த கொள்கையில்தான் இருந்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவுக்கே இந்த தலித் முஸ்லிம்கள் யோசனையை இவர்தான் சொல்லி இருப்பார் போலும்.

அவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை.

அன்று முனீருல் மில்லத் காதர் மைதீன் சொன்ன சால்ஜாப் என்ன? ''கிறிஸ்தவ மதத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோருவதால் அதே வகையில் முஸ்லிம்களுக்கும் உரிமைகள் வழங்க எண்ணி அறிக்கையை எழுதியவர், ஆர்வக் கோளாறு காரணமாக இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது. தேர்தல் அறிக்கையில் வருவதெல்லாம் அரசாங்க சட்டமா என்ன? ஆட்சிக்கு வந்த பின் இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கையில் எங்கள் நிலையை தெரிவிப்போம்'' என்றார்.

இஸ்லாமிய விரோத கொள்கையை ஜெயலலிதா மூலம் சொல்ல வைத்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னால் எங்கள் நிலையை தெரிவிப்போம் என்றார் முனீருல் மில்லத். 5 வருடங்களுக்கு பின்னால் தங்கள் நிலையை தெரிவித்துள்ளார் முனீருல் மில்லத். 5 வருடங்களுக்கு முன்னால் இஸ்லாமிய விரோத கொள்கையை ஜெயலலிதா மூலம் சொல்ல வைத்துள்ளார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம் லீக் கட்சியின் தீர்மானமாக இப்பொழுது வந்த அறிக்கையாக இருக்கிறது. ''அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எழுதியவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது' என்று அன்று சொன்ன முனீருல் மில்லத் காதர் மைதீன் அவர்களுக்கும் சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது என்றுதான் நாமும் கூற வேண்டி உள்ளது. இதை விட நளினமான எழுத எனக்குத் தெரியவில்லை.

இஸ்லாமிய (யிஸத்திற்கு) கொள்கைக்கு எதிராகத் தோன்றியவைதான்.

இந்த முஸ்லிம் லீக் தலைவர்களின் பல்வேறு தவறான போக்குகளால், குறிப்பாக இஸ்லாமிய விரோத போக்கால் முஸ்லிம்களிடம் பல வகையான இஸ்லாமிய விரோத கொள்கைகள் ஊடுறுவி விட்டன. முஸ்லிம்கள் தங்களுக்கு தாங்களே கொள்கைகளை வகுத்துக் கொள்ள முடியாது. குர்ஆன் ஹதீஸ்கள் மூலம் இஸ்லாம் கூறியுள்ள கொள்கைகளைத்தான் முஸ்லிம்கள் தங்கள் கொள்கைகளாக ஏற்று கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அதற்கு பெயர்தான் முஸ்லிம். சோசலிஸம், கேப்டலிஸம், கம்யூனிஸம் என இன்று உலகில் உள்ள அனைத்து இஸங்களும் (கொள்கைகளும்) இஸ்லாமிய (யிஸத்திற்கு) கொள்கைக்கு எதிராகத் தோன்றியவைதான்.

தலைவர்கள்தான் தவறாக பயன்படுத்தி விட்டார்கள்.

சமுதாய அமைப்புகளில் குறிப்பாக முஸ்லிம் லீக் தலைவர்களாக பிரச்சார பீரங்கிகளாக அறிமுகம் ஆனவர்கள் செய்த செய்து கொண்டிருக்கிற தவறான செயல்களால் இஸ்லாம் வகுத்தளித்த வழியை (இஸ்லாமியயிஸத்தை) விட்டு வேறு வழியில் முஸ்லிம்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் வகுத்தளித்த கொள்கையை விட்டு வேறு கொள்கைக்கு போகிறோம் என்று சொல்லவில்லை. இஸ்லாம் வகுத்தளித்த கொள்கைக்கு விரோதமாக போக வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு அணுவளவும் கிடையாது. இஸ்லாம் காட்டிய வழியை தலைவர்கள் தவறாக பயன்படுத்தியதால் அந்த வழிவே தவறு என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். எனவே அவர்களது திட்டத்தில் இஸ்லாமிய விரோத கொள்கை புகுந்து விட்டது. இஸ்லாம் காட்டிய வழி சரியானது. தலைவர்கள்தான் தவறாக பயன்படுத்தி விட்டார்கள். தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ கொள்கையை செயல்படுத்தும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டார்கள்.

இந்த இஸ்லாமிய விரோத தலைவர்களைத்தான் சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். ''ஜிஹாதுகளில் மிகச் சிறந்தது. அக்கிரமக்கார அரசனின் முன்னால் உண்மையை எடுத்துச் சொல்வது'' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இதை நமது சகோதரர்கள் சிந்திக்க தவறி விட்டார்கள். அதன் விளைவு இஸ்லாத்திற்கு எதிரான கம்யூனிஸ கொள்கையை செயல்படுத்தும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டார்கள்.

இந்த பாவமெல்லாம் நிச்சயமாக --- தலைவர்களையே சாரும்.

இஸ்லாம் முஸ்லிம்(ஜமாஅத்தார்)களுக்கு இட்டுள்ள கட்டளை தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். தலைமைக்கு இட்டுள்ள கட்டளை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். கலந்தாலோசித்து முடிவு எடுத்து விட்டால் அல்லாஹ்வின் மீது தவக்கல் (எனும் அசைக்க முடியாத நம்பிக்கை) வைத்து எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மஷ{ரா சம்பந்தமான 3:159 வசனத்தைக் காட்டி கலந்தாலோசித்தல் என்பதை வெறும் நாடகமாக சில தலைவர்கள் ஆக்கி விட்டார்கள். அதனால் தலைமைக்கு கட்டுப்படுதல், தலைமைக்கு முடிவு எடுக்கும் உரிமை என்பதெல்லாம் வேண்டாம். கம்யூனிஸ்டுகள் மாதிரி பொலிட் பீரோ முறையை பின் பற்றுவோம் என்ற முடிவுக்கு சில சகோதரர்கள் சென்று விட்டார்கள். இந்த பாவமெல்லாம் நிச்சயமாக - - - தலைவர்களையே சாரும்.

இந்தியாவை பாகிஸ்தான், பங்ளாதேஸ் என பிரித்தாள வேண்டும் என்று போராடவில்லை.

இந்த மாதிரி தலைவர்களை, இஸ்லாமிய விரோத தலைவர்களை அவர்களது சமுதாய துரோகச் செயல்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாமல் இருக்கக் கூடாது. அப்படி இருப்பதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் செய்யும் துரோகம்தான். இந்த மாதிரி தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாததால்தான் முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்தியா என்ற பெரிய நாட்டையே இழந்து இருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தின் போது போராடியவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் அனைத்து மக்களின் நலனுக்காகவும்தான் போராடினார்கள். இந்தியாவை பாகிஸ்தான், பங்ளாதேஸ் என பிரித்தாள வேண்டும் என்று போராடவில்லை. தேசப் பிரிவினைக்கு யார் காரணம்? என்பதை http://tmmk.blogspot.com/2006/07/blog-post_11.html என்ற இந்த சைட்டில் எழுதியுள்ளார்கள். இதை படித்து மூல காரணம் யார்? என அறியலாம்.

பாதிப்பு அடைந்தவர்கள் யார்? இலாபம் அடைந்தவர்கள் யார்?

அகில இந்திய காங்கிரஸ் மகா சபை - அகில இந்திய முஸ்லிம் லீக் - இங்கிலாந்து ஆங்கில அரசு ஆகிய முத்தரப்பு முழு மனதுடன் கூடிய முழுமையான உடன்பாட்டினூடே பாகிஸ்தான் உதயமாயிற்று. பண்டித ஜவஹர்லால் நேரு, காயிதே ஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ், லார்டு மவுண்ட் பேட்டன் கையொப்பமிட்டு, களிப்போடு கைலாகு கொடுத்து இந்தியாவையும், பாகிஸ்தானையும் தனித்தனி இரு சுதந்திர நாடுகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படி வரலாற்றில் எழுதப்பட்டிருக்கலாம். புனித ரமழான் பிறை 27 ஆம் நாள் புதிய நாடு பாகிஸ்தான் உருவானது. இப்படி பாகிஸ்தானியர்களாக ஆகி விட்டவர்கள் (முன்னாள் இந்தியர்கள்) பெருமைப்படலாம். இந்த பிரிவினைக்கு யார் காரணமாக இருந்தாலும் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் யார்? இலாபம் அடைந்தவர்கள் யார்? சிந்திக்க வேண்டாமா?

தவறுகளை சுட்டிக் காட்டினால் இன உணர்வுதான் பிரதிபலிக்கிறது.

இந்திய சுதந்திரத்தின் போது கையெழுத்திடும் கட்சியாக இருந்த முஸ்லிம் லீக்கின் இன்றைய நிலை என்ன? வாங்கிய 3 தொகுதியில் ஒன்றை இழந்தார்கள். எஞ்சிய இரு தொகுதிகளின் வேட்பாளர்களைக் கூட முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வைத்து முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவிக்கவில்லை. அறிவிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலைக்கு யார் காரணம்? இதை பரிதாப நிலை என்பதா? இழி நிலை என்பதா? சிந்தியுங்கள். பிரிக்கப்படாத இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பதை கற்பனை செய்து கூட பார்த்து இருக்க முடியுமா? சிந்தியுங்கள். பாகிஸ்தான் (பங்ளாதேஸ் என) பிரிக்கப்பட்டதால் ஆள வேண்டிய நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கஷ;மீர் பிரச்சனை வேறு. இன மாச்சர்யம் பார்ப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முட்டாள்தனமானவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினால் இன உணர்வுதான் பிரதிபலிக்கிறது.

இழந்த உரிமை என்பது இந்தியாவின் ஆட்சி.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும் என்று உரைத்தவர்கள் நாம். பிறரது உரிமைகளை மதித்தவர்கள் நாம். உரிமைகளை வழங்கி வாழ்ந்தவர்கள் நாம். இன்று உரிமைகளை இழந்து நிற்கிறோம். இழந்த உரிமைகளை மீட்கவும் முடியாமல், இருக்கும் உரிமைகளை காக்கவும் முடியாமல் அலைகிறோம். இழந்த உரிமை என்பது இந்தியாவின் ஆட்சி. இதைக் கூட உணராமல் அலைகிறோம். இதற்கு யார் காரணம்?

கண் மூடி பின் பற்றியதால் ஏற்பட்ட கதி இது.

ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆலிம்கள் சொன்னார்கள். அந்த ஆலிம்கள் பின்னால் கண் மூடிப் போனதால் நமது கல்வி மண் மூடிப் போனது. நமது சமுதாயத்தவர்கள் அனைத்து துறைகளிலும் பின் தங்கிப் போனார்கள். இந்தியாவில்தான் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறுகிறோம். அரபு நாடுகளில் உயர் பதவிகளில் யார் இருக்கிறார்கள். குப்பை அள்ளும் வண்டியில் தொங்கிச் செல்பவர்களாக, சட்டிப் பானைகளை கழுபவர்களாக, சாக்கடையை அள்ளுபவர்களாக யார் இருக்கிறார்கள். இந்த கதி எதனால் ஏற்பட்டது. ஆங்கிலம் ஹராம் என்று சொன்ன ஆலிம்ஸாக்களை கண் மூடி பின் பற்றியதால் ஏற்பட்ட கதி இது.

அண்ணன் அன்று சொன்னவைகளை அப்படியே எழுதி இருப்பேன்.

ஓராண்டுக்கு முன்னால் அண்ணன் பி.ஜே.யும் அவருடன் உள்ள ஆலிம்ஸாக்களும் அரசியல் ஹராம் என்பது போல் பேசினார்கள். அன்று ஆங்கிலம் ஹராம் என்று சொன்னவர்கள் ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வெறுப்பால் சொன்னார்கள். த.மு.மு.க. மீது கொண்ட வெறுப்பால் அண்ணன் பி.ஜே. அரசியல் ஹராம் என்பது போல் பேசினார். ஆங்கிலம் ஹராம் என்று சொன்ன ஆலிம்ஸாக்களை 1986ரிலிருந்து 95 வரை அண்ணன் பி.ஜே. எப்படியெல்லாம் விமர்சித்தார். அவர் செய்த அத்தனை விமர்சனங்களும் அண்ணன் பி.ஜே.க்கு இன்று பொருந்தாதா? நளினமாக எழுத வேண்டும் என்று சொன்னதால்தான் இப்படி எழுதுகிறேன். மேலே உள்ள கோடு போட்ட இடத்தை நீங்களே நிரப்பிக் கொள்ள விட்டு விட்டேன். இல்லை எனில் அண்ணன் பி.ஜே. அன்று சொன்னவைகளை அப்படியே தொகுத்து பதிலாக எழுதி இருப்பேன்.

வீதியில் நிற்பதே நமது தலை விதியாக ஆகி விடும்.

அரசியல் ஹராம் என்று சொன்ன இந்த பி.ஜே. ஆலிம்ஸா? ஒரு வருடத்திற்குள் அவரே மாறி விட்டார். இவர்கள் அபகரித்த ஜாக் பள்ளிகளையெல்லாம் ஜெயலலிதா கட்சியின் தேர்தல் காரியாலமாக ஆக்கிக் காட்டினார். அன்று ஆங்கிலம் ஹராம் என்று சொன்னவர்கள் பின்னால் போனதால் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என பின் தங்கிப் போனோம். இன்று இவர் பின்னால் போனால் என்ன ஆகும்? இருக்கும் கொஞ்ச அரசியல் அதிகாரத்தையும் இழந்து விடுவோம். வீதியில் நிற்பதே நமது தலை விதியாக ஆகி விடும். இந்தியாவை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய நாம் இன்று ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி வருங்காலத்தில் நமது வாரிசுகளாவது ஆள வழி வகுப்போம்.

முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா.

எனவே இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தவறான சிந்தனையை பரப்பும் பணியில் நாம் ஈடுபடக் கூடாது. தமிழக முஸ்லிம்களால் பேரறிஞர், உத்தமர் என்று நம்பப்பட்ட அண்ணன் பி.ஜே. அவர்களால் சொல்லப்பட்டதுதான். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது. அவர் யாரிடம் ரகசிய பங்கு வாங்கி விட்டு இப்படிச் சொன்னாரோ? அவர் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர் என்பதை விளங்கி விட்டோம். அவரை இந்த விஷயத்தில் புறம் தள்ளி விட வேண்டும். இனி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா என்ற உண்மையையே நாம் சொல்ல வேண்டும். இதையே நமது வாரிசுகளுக்கு உணர வைப்போம். இன்ஷh அல்லாஹ் நமது வாரிசுகள் இந்தியாவை ஆளும். எப்படிப்பட்ட இந்தியாவை ஆளும்?

அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில்.

சூழ்ச்சிக்காரர்களால் பிரிக்கப்பட்ட இந்தியா அல்ல. நம்மவர்களால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், பங்ளாதேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும். அதற்கு நாம் இந்த சுதந்திர தினத்தில் உறுதி எடுப்போம். இன்னொன்றையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறேன். 1947 ஆகஸ்ட் 15! அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களும் கூடி இருந்தார்கள். அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில் இந்திய விடுதலை பிறந்தது என்பதற்கு அறிகுறியாக பனிரெண்டு மணி அடித்து ஓய்ந்தது.

இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதம்.

மணி அடித்து ஓய்ந்ததும் கணீரென ஒலித்தது சுதந்திர கீதம். அந்த சுதந்திர கீதத்தை திருமதி சுஸேதா கிருபளானி அவர்களும், டாக்டர் சுசீலா நய்யார் அவர்களும் குரலெடுத்துப் பாடினார்கள். அவர்களுடன் அங்கிருந்த அத்தனை தலைவர்களும் சேர்ந்து பாடினார்கள். அப்பொழுது ஒலித்த சுதந்திர கீதம் எது தெரியுமா? ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' இதுதான் இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதம். சுதந்திர கீதம்.

விண்ணிலும் மண்ணிலும் ஒலித்த இந்திய தேசிய கீதம்.

1984 இல் இந்தியாவும் சோவியத் ரஷ;யாவும் இணைந்து செலுத்திய விண் கலம் என்பது நினைவு. விண் கலத்தில் பயணம் செய்த முதல் இந்திய வீரர் ராகேஷ; சர்மா விண் வெளியில் உலா வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தொலை பேசி மூலம் ராகேஸ் சர்மாவுடன் பேசினார்கள். இந்த உரையாடலை உலகில் உள்ள அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒளிபரப்பினார்கள். அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பேசும்பொழுது, விண்வெளியிலிருந்து இந்தியாவை பார்க்கும் போது எப்படித் தெரிகிறது என்று கேட்டார்கள். ராகேஸ் சர்மா சொன்ன இரத்தின சுருக்கமான பதில் என்ன தெரியுமா? ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' இதுதான் அந்த பதில். விண்ணிலும் மண்ணிலும் ஒலித்த இந்திய தேசிய கீதம் ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்பதுதான்.

இந்த கீதத்தை, தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்?

இதே கீதத்தைத்தான் இந்திய முப்படை வீரர்கள் அணி வகுக்கும் போதும் எடுப்பான குரலில் இசையுடன் பாடி வந்தார்கள். இந்திய தொலைக்காட்சிகளின் எல்லா நிலையங்களிலிருந்தும் வானொலிகளிலும் இதே கீதத்தைத்தான் ஒவ்வொரு நாளும் ஒலி பரப்பி வந்தார்கள். சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதத்தை, விண்ணிலும் ஒலித்த இந்த கீதத்தை, இந்தியாவிலுள்ள பெரும்பாலோருக்கும் உலகிலுள்ள பெரும்பானவர்களுக்கும் தெரிந்த மொழியில் உள்ள இந்த கீதத்தை, தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்? இந்தியாவின் ஒரு மாநில மொழியாகிய வங்க மொழியில் உள்ள கீதத்தை ஏற்றுக் கொள்ளப்பட்டது ஏன்?

'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய கீதமாக உள்ள 'ஜன கண மண' பற்றி சர்ச்சை வந்தது. கேரளாவில் உள்ள 'பாலாமொழி' என்ற ஊருக்கு அருகில் சுதர்ஷன சமஸ்கிருதப் பள்ளி. அதன் நிர்வாகியும் தலைமை ஆசிரியருமான ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார் இந்த சர்ச்சையை - வாதத்தை தொடங்கி வைத்தார். ''ஜன கண மண' எத்தகைய தேசிய உணர்வையும் ஊட்டவில்லை. இது முதலில் தேசிய கீதமாக அமைக்கப்பட்டதுமில்லை. பிரிட்டிஸ் சக்கரவர்த்தி எட்வர்டை வரவேற்க பாராட்டி புகழ்ந்து பாடிய கீதம்தான் 'ஜன கண மண'. எனவே 1985 ஜுலை 26 ஆம் தேதி முதல் எமது பள்ளி கூடத்தில் 'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம். நானே சமஸ்கிருத மொழியில் எழுதிய 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலை பாடச் செய்வோம்'' என்றார்.

அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

அதே கால கட்டத்தில் அதே கேரளாவில் இன்னொரு பிரச்சனை எழுந்தது. கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினரான 'ஜெஹோவா' என்ற பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 'ஜன கண மண' கீதத்தை பாட மறுத்தார்கள். அது தங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்ட கருத்தைக் கொண்ட கீதம். எனவே அதை நாங்கள் பாட முடியாது என்றார்கள். இந்த இரு பிரச்சனைகளையொட்டி அரசியல் வாதிகள் வாதப் பிரதி வாதங்கள் செய்தார்கள். ஆன்மீகவாதிகள் மதக் கொள்கைக்கு முரண்பட்டது என்றார்கள். கேரள மாநில அரசு, உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், அடர்னி ஜெனரல் ஆப் இந்தியா என இந்தப் பிரச்சனை சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த வாதப் பிரதிவாதங்கள் பற்றியெல்லாம் நாம் இப்போது எழுதப் போவதில்லை. அது நமது நோக்கமும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு வருடமாக இருந்து வந்த இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒரு பரிசீலனை நடந்தது. அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

'ஜய ஜய ஜனனி' 'ஜன கண மண' பிரச்சனை அப்படியே அமுங்கி விட்டது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'ஜன கண மண' என்ற தேசிய கீதத்திற்குப் பதிலாக ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஆக்கலாமா என பரிசீலித்தது. இப்படி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்ற செய்தி 1986 செப்டம்பரில் வெளியானதுதான் தாமதம் 'ஜய ஜய ஜனனி' 'ஜன கண மண' பிரச்சனை அப்படியே அமுங்கி விட்டது. இப்பொழுதும் ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஏன் ஆக்கவில்லை என்பதற்கு காரணம் சொல்லப்படவில்லை.

ஒரு பாடலுக்கே இந்த நிலை என்றால் நமது உரிமைகளுக்கு என்ன நிலை?

காரணம் சொல்லப்படாவிட்டாலும் இரண்டு காரணங்கள்தான் தடையாக இருக்கிறது என்பதுதான் நமது நிலை. ஒன்று முஸ்லிம்களின் மொழி என பெரும்பாலான இந்தியர்களால் நம்பப்படும் உருது மொழியில் அது உள்ளது. இரண்டாவது, அதை எழுதியவர் அமரகவி அல்லாமா முஹம்மது இக்பால் என்ற ஒரு முஸ்லிம். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்கவே முடியாது. முஸ்லிம் கவிஞர் எழுதியது என்ற ஒரே காரணத்துக்காக தேசிய உணர்வு கொப்பளிக்கும் இந்த கீதம் தேசிய கீதமாக ஆக்கப்படவில்லை. ஒரு கவிதைக்கே இந்த நிலை என்றால் நமது உரிமைகளுக்கு என்ன நிலை?

''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா''

ஆகவே அரசியல் ஹராம் எனக் கூறும் அற்பப் பதர்களை புறந் தள்ளுவோம். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்ற தவறான பிரச்சாரத்தை தவிர்ப்போம். முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா என்ற உண்மைகளை உணர வைத்து மக்கள் உள்ளத்தை வெல்லுவோம். பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற தேசிய உணர்வுடன் செல்லுவோம். இழந்த ஆட்சியை மீட்போம். ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்போம். வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, 55. சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம், 627005.