Friday, June 30, 2006

ஹிஜ்ரி என்ற பெயருக்கு காரணம்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

உங்களுக்குத் தெரியுமா?உலகில் முதன் முதலாக கணக்கிட துவங்கிய ஆண்டு எது?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. இஸ்லாத்தில் குறித்த காலத்தில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளின் நேரங்களை சூரிய சந்திர ஓட்டங்களின் அடிப்படையில் அமைத்து தரப்பட்டுள்ளது. ''சூரியனும் சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே இயங்குகின்றன'' என்கிறது அல்குர்ஆன் 55:5வது வசனம். எனவே காலத்தை கணக்கிட முஸ்லிம்கள் சூரியனையும் சந்திரனையும் பயன்படுத்தப்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் காலத்தை கணக்கிட முஸ்லிம்கள் சந்திரனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் சந்திரனை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோம்; என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் தொழ வேண்டிய ஐங்காலத் தொழுகைகளுக்கான நேரங்களை சூரிய ஓட்டத்தை கணக்கில் கொண்டுதான் தொழ (அல் குர்ஆனின் 11:114, 17:78, 20:130, 30:17-18, 50:39-40 ஆகிய வசனங்கள் மூலம்) கட்டளையிடப் பட்டுள்ளோம். இந்த அடிப்படையில்தான் சூரிய ஓட்ட கணக்கை பயன்படுத்தி ஐங்காலத் தொழுகைகளை தொழுது வருகிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் சூரிய ஓட்ட கணக்கை 5 முறை கட்டாயமாக பயன்படுத்தி வரும் முஸ்லிம்களிடம் காலத்தை கணக்கிட சந்திரனை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோம்; என்ற தவறான நம்பிக்கை ஏன் ஏற்பட்டது? சிந்திக்கத் தவறியதால் ஏற்பட்டது. சிந்திக்கத் தவறினால் அறியாமை எனும் தவறான நம்பிக்கை எந்த ரூபத்திலும் நுழைந்து விடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.

முஸ்லிம்களில் எத்தனை பேர் விளங்கி வைத்துள்ளார்கள்.

ஓவ்வொரு நாளும் தொழுகை என்ற வணக்க நேரத்தை (மணியை) கணக்கிட சூரியனை பயன்படுத்தி வரும் முஸ்லிம்கள் நோன்பு, ஹஜ், ஜகாத் போன்ற வணக்கங்களை செய்வதற்காக (நாட்களையும் மாதங்களையும் ஆண்டையும் கணக்கிட) சந்திரனை பயன்படுத்தி வருகிறோம். முஸ்லிம்களின் ஆண்டு என பிற மத மக்களாலும் அறியப்பட்டுள்ள ஹிஜிரி ஆண்டு 1426 முடிந்து 1427 வந்துள்ளது. இப்பொழுது முதலில் கணக்கிட துவங்கியது கி.பி. ஆண்டா? ஹிஜிரி ஆண்டா? என்ற கேள்வியை முஸ்லிம்களிடம் கேட்டால் என்ன பதில் வரும்? ஹிஜிரி 1426 முடிந்து 1427 வந்துள்ளது என்பது கூட இதைப் படிக்கும்போதுதான் பலருக்கு ஞாபகம் வரும். அதுவும் மார்க்க விஷயத்தில் ஈடுபாடு உடையவர்களின் நிலைதான் இது. அப்படியானால் மற்றவர்களின் நிலை பற்றி சொல்லத் தேவை இ;ல்லை. கிறிஸ்துவர்களால் ஏசுநாதர் எனப்படும் ஈஸா(அலை) அவர்கள் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதுதான் கி.பி. ஆண்டு. ஈஸா(அலை) அவர்கள் பிறந்தது முதல் இது கணக்கிட துவங்கப்பட்டு விட்டது என முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டதுதான் ஹிஜிரி ஆண்டு என்பதை முஸ்லிம்களில் எத்தனை பேர் விளங்கி வைத்துள்ளார்கள்.

இப்படி கேட்கும்போதுதான் சற்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

இன்று என்ன தேதி இது என்ன மாதம் என்று முஸ்லிம்களிடம் கேட்டால் பட் என ஆங்கில தேதியை மாதத்தை பதிலாகச் சொல்லி விடுவார்கள். இன்று பிறை என்ன? இது என்ன மாதம் என்று கேட்டால் உடன் பதில் வருமா? அதுவும் பெண்களிடம் கேட்டால் என்ன பதில் வரும். ஹிஜிரி ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தையே ஹஸன் ஹுஸைன் பிறை என்று சொல்லக் கூடியவர்களாகத்தான் இன்றும் பலர் இருக்கிறார்கள். அந்த முஸ்லிம்களிடம் போய் முதலில் கணக்கிட துவங்கியது கி.பி. ஆண்டா? ஹிஜிரி ஆண்டா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்தக் கேள்வியை நாம் கேட்டு வருகிறோம். நாம் கேள்வி கேட்டவர்களில் பிரபலமான மவுலவிகள் உட்பட அனைவரும் கி.பி. ஆண்டுதான் முதலில் துவங்கியது என பட் பட் என பதில் தந்தார்கள். நீங்களும் கேட்டுப் பார்த்து அனுபவ ரீதியாக தெரிந்து கொள்ளுங்கள். கி.பி. 2006, ஹிஜிரி 1427 எனவே கி.பி. ஆண்டுதான் முதலில் உள்ளது என்று கூறுவார்கள். நாம் கேட்பது ஷஷஎது முந்தையது என்பது அல்ல. அதாவது ஹிஜ்ரத் முந்தையதா? கிறிஸ்துவின் பிறப்பு முந்தையதா? என்று நாம் கேட்கவில்லை. முதலில் கணக்கிட துவங்கியது எந்த ஆண்டு என்றுதான் கேட்கிறோம். இப்படி கேட்கும்போதுதான் சற்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்.

கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டு கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நபி(ஸல்) அவர்கள் கி.பி. எத்தனையாவது ஆண்டு பிறந்தார்கள் என கேள்வி கேட்டு முஸ்லிம்களே பரிசு கொடுக்கும் அறியாமை இப்பொழுது பரவி வருகிறது. வினாடி வினா என்ற பெயரால் இந்த அறியாமையை முஸ்லிம்களே முஸ்லிம்களிடம் வேகமாக பரப்பி வருகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு என்பதெல்லாம் கணக்கில் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு என்பது இருந்திருந்தால் நிச்சயம் ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கும். ஹதீஸ் நூல்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு இறைத் தூதரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு வரும் ஆண்டு இருந்திருந்தால், அதை இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக சொல்லி இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள சம்பவங்களையும், அவர்களுக்கு முந்தைய நூற்றாண்டின் சம்பவங்களையும் கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டே நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பார்கள். எந்த ஒரு சம்பவத்தையும் நபி(ஸல்) அவர்கள் கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டு கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

முஸ்லிம்கள் ஒவ்வொரும் உறுதியாக நம்ப வேண்டும்.

அது வரலாறுகளெல்லாம் முறையாக எழுதப்படாத காலம் என்பதுதான் உண்மை. சொல், செயல், அங்கீகாரங்கள் ஆகியவற்றுடன் உலகில் முதன் முதலாக தொகுக்கப்பட்ட வரலாறு நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறுதான்;. இதைத்தான் ஹதீஸ்கள் என்றும் சுன்னா என்றும் கூறுகிறோம். நபி(ஸல்) அவர்களின் வரலாற்றுக்கு மட்டும்தான் எவை எவையெல்லாம் ஆதாரங்கள் என முறையாக ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. நபி(ஸல்) அவர்களின் வரலாற்றில் பொய்மை கலந்து விடக் கூடாது என்பதற்காக சுமார் 5 லட்சம் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட நூல்களில் கூட நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்களுடன் சம்பந்தப்படுத்தி எது கூறப்பட்டாலும் அதற்கு குர்ஆன் ஹதீஸ்கள் ஆதாரம் இருந்தால்தான் ஏற்க வேண்டும். குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு இருந்திருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் ஒவ்வொரும் உறுதியாக நம்ப வேண்டும்.

சம்பவங்களை அடிப்படையாககக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயர்.

நபி(ஸல்) அவர்கள் காலத்து அரபுகளில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். ஏசு கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட கி.பி. ஆண்டு முறை அன்றே இருந்திருந்தால் அன்றைய அரபு கிறிஸ்தவர்கள் அதை கண்டிப்பாக பயன்படுத்தி இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு மட்டுமல்ல வரிசையாக கணக்கிடும் முறையில் எந்த பெயரிலும் ஆண்டுகள் இருக்கவில்லை. 12 மாதங்கள் இருந்தன. அதுவும் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் முஹர்ரம் முதல் துல்ஹஜ் வரையிலான மாதங்கள்தான் இருந்தன. அப்பொழுது இருந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூட ஜனவரி, பிப்ரவரி என்று மாதங்களை கணக்கிட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. யூதர்களாக, கிறிஸ்தவர்களாக இருந்த அரபுகள் உட்பட எல்லா அரபுகளும் முஹர்ரம், ஸபர் என முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் மாதங்களைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். இதற்குத்தான் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தெளிவான ஆதாரங்கள் உள்ளன. ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு ஆண்டு கணக்கில் கூறுவதாக இருந்தால் போன வருட முஹர்ரம் 2 வருடத்திற்கு முந்தைய துல்ஹஜ் என்றுதான் கூறுவார்கள். அல்லது பிரபலமான மறக்க முடியாத மிகப் பெரிய சம்பவங்களை அடிப்படையாககக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயர் சொல்வார்கள்.

யானை ஆண்டில் பிறந்தார்கள்.

உதாரணமாக ''பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட ஆண்டில் எனது மகள் பிறந்தாள்'' ''ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறு ஆண்டில்தான் எனக்கு கல்யாணம் நடந்தது'' என்று சொல்வார்கள் அல்லவா. அது போல், பிரபலமான மறக்க முடியாத சம்பவங்களை அடிப்படையாககக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயராகச் சொல்வார்கள். அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப் படையை கொண்டு வந்தான். அந்த யானைப் படையை அல்லாஹ் கூட்டம் கூட்டமான பறவைகளைக் கொண்டு அழித்தான். இதை அல்குர்ஆனின் 105வது அத்தியாயத்தின் மூலம் அறிகிறோம். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரபுகள் யானை ஆண்டு அமைத்துக் கொண்டார்கள். யானைப் படை நிகழ்ச்சி நடந்த சில மாதங்களில் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். இந்த அடிப்படையில்தான் நபி(ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வலில் பிறந்தார்கள் என்று வரும் ஹதீஸ்களில் ஆண்டைப் பற்றி குறிப்பிடும்பொழுது யானை ஆண்டு என்ற குறிப்பு மட்டுமே உள்ளது. இதைத் தவிர ஆண்டுகள் பற்றி வேறு எந்தக் குறிப்புகளும் ஹதீஸ்;களில் கிடையாது. எனவே நபி(ஸல்) அவர்கள் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள் என்ற குறிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய எந்த வரலாற்று நூல்களிலும் கிடையாது. கி.பி. ஆண்டு உட்பட எந்த பெயரிலும் ஆண்டுகள் வரிசையாக நம்பர்படி கணக்கிடும் முறை அப்பொழுது இருக்கவில்லை.

ஆண்டுகள் வரிசையாக கணக்கிடும் முறையை எப்பொழுதிலிருந்து துவக்கலாம்.

வாரத்தின் 7 நாட்கள் பெயர் வாரியாக வரிசையாக உள்ளன. வருடத்தின் 12 மாதங்கள் பெயர் வாரியாக வரிசையாக உள்ளன. மாதங்களின் நாட்களும் வரிசையாக எண்ணி கணக்கிடப்படுகின்றன. அதுபோல் ஆண்டுகளும் வரிசையாக எண்ணி கணக்கிடப்பட வேண்டும் என்ற ஏற்பாட்டை 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும் செய்யவில்லை. இந்த ஏற்பாட்டை உலகில் முதன் முதலில் செய்தது ஒரு முஸ்லிம்தான். அந்த முஸ்லிம் வேறு யாருமல்ல அவர்தான் 2ஆம் கலீபா உமர் (ரலி) அவர்கள். உமர் (ரலி) அவர்கள்தான் தனது ஆட்சி காலத்தில் நடந்த கொடுக்கல் வாக்கல் சம்பவத்தையொட்டி கேள்வி வந்தது. அதையொட்டி ஆண்டுகள் வரிசையாக கணக்கிடப்பட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்கள். ஆண்டுகள் வரிசையாக கணக்கிடும் முறையை எப்பொழுதிலிருந்து துவக்கலாம் என்று ஆலோசித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நபியான ஆண்டிலிருந்து துவக்கலாம். மிஃராஜ் சென்ற ஆண்டிலிருந்து துவக்கலாம். இப்படி நபி (ஸல்) அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்திய ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு அந்த ஆண்டிலிருந்து துவக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை ஸஹாபாப் பெருமக்கள் ஆலோசனைகளாக வழங்கினார்கள்.

ஹிஜ்ரி என்ற பெயருக்கு காரணம்.

அனைத்தையும் பரிசீலித்த கலீபா உமர் (ரலி) அவர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா? நபி (ஸல்) அவர்கள் மக்காவை துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்களே அந்த ஆண்டிலிருந்து துவங்கலாம் என முடிவு செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டதால்தான் அதற்கு ஹிஜ்ரி என பெயர் வந்தது. ஹிஜ்ரி என்ற பெயருக்கு நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் காரணம் என்ற உண்மை வரலாற்றை இன்றும் தெரியாத முஸ்லிம்கள் ஏராளமாகவே உள்ளனர். அப்படி இருக்க உலகில் முதன் முதலாக கணக்கிடத் துவங்கப்பட்ட ஆண்டு ஹிஜ்ரி ஆண்டுதான் என்ற உண்மையை எப்படித் தெரிவார்கள். ஹிஜ்ரி ஆண்டுதான் முதன் முதலில் துவங்கியது என்றால் கி.பி. ஆண்டு எப்படி உலகெங்கும் பரவியது? உலகப் பொது ஆண்டாக கி.பி. ஆண்டு ஆனது எப்படி? ஆகிய கேள்விகள் வரலாம். எனவே இதையும் விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். சீக்கியர்கள், புத்தர்கள், ஜைனர்கள் என ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் மதம் சார்ந்த ஆண்டுகள் உள்ளன. தமிழ், தெலுங்கு என மொழி சார்ந்த ஆண்டுகளும் உள்ளன. இருந்தாலும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மதத்தவர்களாலும் நாத்திகர்களாலும் அனைத்து மொழியினராலும் பயன்படுத்தும் உலகப் பொது ஆண்டாகத்தான் கி.பி. ஆண்டு உள்ளது.

அன்றைக்கு ஏற்பட்ட தாக்கம்தான் இன்றைக்கும் உள்ளது.

உலகப் பொது ஆண்டாக கி.பி. உள்ளது போல்தான் உலகப் பொது மொழியாக ஆங்கிலம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன இருந்துள்ளன. ஷஷகல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்தது தமிழ் எனப்படும் தமிழ் மாதிரி பழமை வாய்ந்த மொழிகளும் உள்ளன. இருந்த போதிலும் உலகப் பொது மொழியாக ஆங்கிலம்தான் உள்ளது. காரணம், உலகில் வெள்ளையர்களின் ஆட்சி ஆதிக்கம் வந்த பிறகு அவர்கள் பேசக் கூடிய ஆங்கில மொழி ஆதிக்கத்தையும் ஏற்படுத்தினார்கள். இது மனித இயல்புகளில் உள்ள ஒன்றுதான். ஹிந்தியை இந்திய பொது மொழியாக ஆக்க வேண்டும் என்று வட நாட்டில் உள்ள ஹிந்திக்காரர்கள் விரும்புவதை பார்க்கிறோம். உலகின் பாதிக்கு மேலான பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் இருந்ததது. அதனால் ஆங்கில மொழியை உலக மொழியாக ஆக்கினார்கள். எனவே உலகம் முழுவதும் பரவிய ஆங்கில மொழி தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்றைக்கு ஏற்பட்ட தாக்கம்தான் இன்றைக்கும் உள்ளது. அகில உலகத்துக்கும் ஒரு பொது மொழி மாதிரி ஆங்கிலம் ஆகி விட்டது.

ஹிஜ்ரி மாதிரியான ஆண்டுக் கணக்கை உருவாக்கினார்கள்.

உலக முழுவதும் தங்கள் ஆட்சி என்ற ஆதிக்கத்தையும் மொழி ஆதிக்கத்தையும் செலுத்திய ஆங்கிலேயர்கள் சரித்திரங்களிலும் தங்கள் ஆதிக்கம் வர கவனம் செலுத்தினார்கள். 1977க்கு முந்தைய இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவர்கள் விருப்பப்படி காலப் பெட்டகம் புதைக்கப்பட்டது. அடுத்து வந்த மொரார்ஜி தேசாய் ஆட்சி அந்த காலப் பெட்டகத்தை தோண்டி எடுத்தது. சரித்திரங்களை நிர்ணயிப்பதில் இன்றுள்ள மாநில ஆட்சியாளர்களும் கூட தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதை பாடப் புத்தகங்களில் ஏற்படுத்தி வரும் குழப்பங்கள் மூலம் கண் கூடாகவே பார்க்கிறோம். 5ஆண்டுகள் என கால நிர்ணயத்திற்கு உட்பட்ட, தட்டிக் கேட்க மத்திய அரசும், கேள்வி கேட்க எதிர் கட்சிகளும் உள்ள மாநில ஆட்சியாளர்களே வரலாறுகளை நிர்ணயிப்பதில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அப்படியானால் கால நிர்ணயம் இல்லாத, உலகின் பாதிக்கு மேலான பகுதியை ஆண்டவர்கள் சரித்திரங்களை நிர்ணயிப்பதில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த எண்ணியதில், செலுத்தியதில்; ஆச்சரியம் இல்லை. சரித்திரங்கள் முறையாக அமைக்க ஆண்டுகள் கணக்கு அவசியம். எனவே ஹிஜ்ரி மாதிரியான ஆண்டுக் கணக்கை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடந்து தொகுத்து வர முடியும்.

வெள்ளையர்களான ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். அதனால் கி.பி. (கிறிஸ்துவுக்குப் பின்), கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்) என சரித்திரங்களை நிர்ணயித்தார்கள். வெள்ளையர்களின் ஆங்கில மொழி இன்றும் உலகின் பொது மொழியாக ஆதிக்கம் செலுத்தி வருவதுபோல் வெள்ளையர்களான கிறிஸ்தவர்கள் நிர்ணயித்த சரித்திர குறிப்புகள்தான் இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. யாராக இருந்தாலும் 2அல்லது 3தலைமுறைக்கு முந்தைய அதாவது 100 ஆண்டுகளுக்குட்பட்ட வரலாற்றைத்தான் சரியாக தொகுக்க முடியும். இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு என்று உணர்ந்துள்ள காலத்தில்; உள்ளவர்களால் முறையாக எழுதப்பட்டு வரும் வராலற்று தொகுப்பு என்றால், தலைமுறை தலைமுறையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடந்து தொகுத்து வர முடியும்.

வகுக்கப்பட்ட கணக்கே தவிர தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது.

இந்த அடிப்படையில் ஒரு விளக்கத்திற்காக, கி.பி. ஆண்டு 2006 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் கி.பி. ஒன்றிலிருந்து உள்ளவைதான் தொகுக்கப்பட்ட வரலாறு என கூற முடியும். கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்) கி.மு. 500, கி.மு. 1000, கி.மு. 2000 என்றுள்ளவற்றை எப்படி தொகுக்கப்பட்ட உண்மையான வரலாறு எனக் கூற முடியும். அவை யாவும் தோராயமாக வகுத்து எழுதப்பட்ட வரலாறுகளே தவிர வேறில்லை. அது மாதிரிதான் ஒவ்வொரு ஆண்டிலும் ஹிஜ்ரி ஆண்டுக்கும் ஆங்கில ஆண்டுக்கும் வித்தியாசப்படும் நாட்களை கணக்கிட்டு வகுத்து இங்லீஷ; வருஷ கணக்குபடி நபி(ஸல்) அவர்கள் 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள் என எழுதி வைத்துள்ளார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள் என்பது வகுக்கப்பட்ட கணக்கே தவிர தொகுக்கப்பட்ட வரலாறு கிடையாது.

மூல நூல்களில் எந்த ஆதாரமும் கிடையாது, கிடைக்காது.

கி.பி. என்பது யேசு கிறிஸ்து பிறந்ததிலிருந்து கணக்கிட துவங்கப்பட்டது போல் காட்ட அதன் பெயரில் கிறிஸ்து(வுக்குப்பின்) என அமைத்தார்கள். இருந்தாலும் அது வெள்ளையர்களான ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்டதுதான் என்ற உண்மை மக்கள் சொல்லிலிருந்து இன்றும் மறையவே இல்லை. கிறிஸ்து பெயரால் ஆண்டுகள் துவங்கி தலை முறைகள் பல உருண்டோடி விட்டன. ஆனால் அது ஆங்கில வருடம் என்றும் இங்லீஸ் வருடம் என்றும்தான் இன்றும் உலக மக்களால் அழைக்கப்படுகிறது. கிறிஸ்து வருடம் என்று சொல்லும் வழக்கம் நடை முறையில் இல்லவே இல்லை. 400 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட கி.பி. என்றால் என்ன என்று யாருக்கும் தெரியாது. கி.பி. என்பதற்கு 5 நூற்றாண்டுகளுக்கு முந்தைய நூல்களில் எந்த ஆதாரமும் கிடையாது. திருத்தப்பட்ட புதிய பதிப்புகளில்தான் புகுத்தப்பட்டிருக்குமே தவிர மூல நூல்களில் எந்த ஆதாரமும் கிடையாது, கிடைக்காது. எனவே குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களில் இல்லாதவற்றை, இஸ்லாத்தின் பெயரால் இணைத்து வினாடி வினாக்களில் கேள்வி கேட்கக் கூடாது. இஸ்லாத்தில் இல்லாத வரலாற்றை, நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத கி.பி. ஆண்டை இருப்பதாக இட்டுக் கட்டிக் காட்டும் தீமைக்கு முஸ்லிம்களே துணை போவது நியாயமா? எனவே முஸ்லிம்கள் துணை போவதை விட்டும் தவிர்க்க வேண்டும். பொறுப்புணர்வுள்ளவர்கள் தடுக்க வேண்டும்.

அந்த தவ்ஹீது? டி.வி.யிலும் இந்த கிறிஸ்தவ புத்தாண்டு.

தவ்ஹீவாதிகளால் நடத்தப்படும் டி.வி. எனவே குறைந்த பட்சம் ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து சேர் சேருங்கள். 2 ஆண்டுகள் வரை எதுவும் கேட்காதீர்கள். 2 ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் கிடைத்தால் பங்கு தருவோம் இல்லை என்றால் அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுங்கள் என வெளி நாட்டில் வசூல் வேட்டையாடி வருகிறார்கள். அவர்களது அந்த தவ்ஹீது? டி.வி.யிலும் இந்த கிறிஸ்தவ புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மிகவும் கவனமாக இருந்து ஊடுருவலை தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒரு சாராரால் பேரறிஞர் என நம்பப்படும் ஒரு பிரபலமான மவுலவி குர்ஆன் தர்ஜுமா வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள தர்ஜுமாவில் கூட நபி(ஸல்) அவர்கள் கி.பி. 570ஆம் ஆண்டு பிறந்தார்கள் என எழுதியுள்ளார். வகுக்கப்பட்ட கணக்கை தொகுக்கப்பட்ட வரலாறு போல் எழுதி கிறிஸ்தவ தாக்கத்திற்கு குர்ஆன் தர்ஜுமா மூலம் துணை புரிந்துள்ளார். குர்ஆன் ஹதீஸ்களில் இல்லாத கி.பி.யை மட்டுமன்றி தெளிவான கற்பனை என விளங்கும் கி.மு.வையும் இஸ்லாமிய நூல்களில் பலர் தங்களை அறியாமல் புகுத்தி வருகின்றனர். இந்த அறியாமையை அகற்ற வேண்டிய ஆலிம் பெருமக்கள் கூட இதில் கவனக் குறைவாக இருக்கிறார்கள். ஆலிம்களால் மொழி பெயர்க்கப்பட்டு வரும் ஹதீஸ் நூல்களில் கூட ஹதீஸ்களில் இல்லாத கி.பி, கி.மு.க்களை அடிக்குறிப்புகளாக பதிப்பாளர்கள் சேர்த்து விடுகிறார்கள். எனவே இது விஷயத்தில் ஆலிம் பெருமக்களும், உண்மையான சமுதாய உணர்வுள்ள அமைப்பினரும் மிகவும் கவனமாக இருந்து ஊடுருவலை தடுக்க வேண்டும். ஊடுறுவலுக்கு துணை நிற்கும் ரகசிய கூலிகளை அடையாளம் காட்ட வேண்டும். வஸ்ஸலாம்.

ஆக்கம்: காஅ. முஹம்மது பஸ்லுல் இலாஹி,மேலப்பாளையம்

Wednesday, June 14, 2006

இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 14-06-2006

விளம்பர விரும்பிகளால் ஏற்படும் விபரீதங்கள்.

சமுதாய நலனில் அக்கறையுள்ள கண்ணியத்திற்குரியவர்களுக்கு கா.அ.மு. உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பழைய ஆட்சியின் கொடுமை இவ்வாட்சியிலும் தொடரும் அவலம் என்ற தலைப்பில் ஒரு மெயில் வந்துள்ளதை அறிவீர்கள். 10-06-2006 அன்று எனக்கு போன் செய்த தங்கப்பா அவர்கள் இந்த மெயிலுள்ள விஷயமாகவும் என்னிடம் பேசினார். அன்சாரி நாளை பரோலில் வருகிறார் அவரிடம் பேசுங்கள் என்றும் கூறினார்.

சிறைவாசிகளுக்குத் தெரியாமல் தங்கப்பா மறைத்து விட்டார்.

த.மு.மு.க. தலைவர்களுடன் பேசினீர்களா? என்று கேட்டேன் இல்லை என்றார் தங்கப்பா. பேசுங்கள் என்றேன், அவர் நான் பேச மாட்டேன் நீங்கள் பேசுங்கள் என்றார் தங்கப்பா. நீங்களே பேசுங்கள் என்றேன். காரணம் தங்கப்பா கேட்டுக் கொண்டதற்கிணங்க பல விஷயங்களை ஜவாஹிருல்லாஹ், ஹைதர் ஆகியவர்களிடம் பேசி த.மு.மு.க. மூலம் செய்து கொடுத்திருக்கிறேன். செய்து கொடுத்தும் த.மு.மு.க. சிறைவாசிகளுக்கு செய்த சேவைகளையெல்லாம் சிறைவாசிகளுக்குத் தெரியாமல் தங்கப்பா மறைத்து விட்டார். சிறைகளுக்கு சென்று நேரில் சந்தித்த போது இதனை அறிந்தேன்.

குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம்.

த.மு.மு.க. செய்த உதவியை சிறைவாசிகளுக்கு மறைத்து விட்டது பெரிய விஷயமல்ல. இவரது கோரிக்கைகளையெல்லாம் செய்து கொடுத்த த.மு.மு.க.வுக்கு எதிராக பொய்யான செய்திகள் சிறைவாசிகள் பெயரால் வரவும் துணை நின்று த.மு.மு.க.வுக்கு துரோகம் செய்து விட்டார். அலி அப்துல்லாஹ் பெயரால் உள்ள நோட்டீஸ் சைட்டில் வர வழி செய்துள்ளார். நான் கேட்டதற்கு அலி அப்துல்லாஹ் நம்ம கண்ரோலில் இல்லை. நாம சொன்னால் கேட்க மாட்டார் என்று சொன்னார். அலி அப்துல்லாஹ் அவர்களிடம் பேசிய போதுதான் உண்மை தெரிந்தது. அடுத்து அபூஸைபுத்தீன் என்ற பெயரால் சைட்டில் செய்தி போட்டார். அதில் தங்கப்பாவின் மெயில் ஐ.டி. இருந்தது. அதைப் பற்றி கேட்டதற்கு அவரிடம் சொல்லியாச்சு கேட்க மாட்டேன்கிறார் என்றார். அப்படியானால் நீங்கள் எப்படி அதை மெயிலாக அனுப்பலாம் என்று கேட்டேன் சரியான பதில் இல்லை.

குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம்.

இதனால்தான் த.மு.மு.க. தலைமையிடம் தங்கப்பாவையே பேசுங்கள் என்று கூறினேன். அதே நேரம் தங்கப்பா அணியிடம் குடி கொண்டு விட்ட விளம்பர மோகத்தையும் சுட்டிக் காட்டி விமர்சித்தேன். ஆட்சி மாறினால் முந்தைய ஆட்சி அமர்த்திய அரசு வக்கீல்கள் ராஜினாமா செய்வது நடைமுறையில் உள்ளது. அதை பெரிய விவகாரமாக ஆக்கி பத்திரிக்கை மூலம் விளம்பரம் தேடியுள்ளீர்கள் என்று விமர்சித்து கண்டித்தேன். இந்த விளம்பர மோகம்தான் தமிழகத்தைச் சார்ந்த பல சிறைவாசிகள் குடும்பங்களின் அவலங்களுக்கு முக்கிய காரணம். அவர்களுக்கு ஏற்பட்ட விபரீதங்களும் விளம்பர விரும்பிகளால் ஏற்பட்ட விபரீதங்கள்தான்.

குணங்குடி ஹனீபா அவர்களை உரிமையுடன் கூற முடியும்.

பேச்சு வார்த்தையில் எளிதாக முடிய வேண்டியதை விளம்பர நோக்கில் விவகாரமாக ஆக்கி விடுகிறார்கள். பெரும்பாலான சிறைவாசிகளின் பாதிப்புகளுக்கு காரணமே அவர்களது வாய்தான். இது விஷயத்தில் மற்றவர்களை சுட்டிக் காட்டுவதை விட எங்களது சம்பந்தியாக ஆகி விட்ட குணங்குடி ஹனீபா அவர்களை உரிமையுடன் கூற முடியும். அவரோடு சம்பந்தம் செய்தது அவர் ஒரு சிறைவாசி என்பதால்தான். அதற்கு முன் குடும்ப ரீதியாக வேறு எந்த உறவும் கிடையாது. இதை மொட்டை கடித பேர்வழிகள் புரிய வேண்டும்.

கணவன் இருந்தும் விதவையாக ஆக்கியது.

ஓன்றுக்கு பல முறை அவரிடமும் அவரது பிள்ளைகளிடமும் நேரில் கூறி இருக்கிறேன். குணங்குடி ஹனீபா அவர்கள் சிறை சென்றதற்கு காரணம் அவர் குற்றம் செய்தார் என்பதற்காக அல்ல. அவர் எந்த குற்றமும் செய்யவே இல்லை. இது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரியும். அவரை ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தது. இத்தனை ஆண்டு காலமாக சிறையில் தள்ளியது. அவரது மனைவியை கணவன் இருந்தும் விதவையாக ஆக்கியது. அவரது பிள்ளைகளை தந்தை இருந்தும் அனாதைகளாக ஆக்கியது. இவற்றுக்கெல்லாம் காரணம் தேவையில்லாமல் பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்த பேட்டிதான்.

மேலப்பாளையம் சிறைவாசிகளிடம் பேசினேன்.

நான் தமிழகத்தால் இருந்தபொழுது சிறைவாசிகளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை. அதற்காக அவர்கள் எதிர்ப்பைக் காட்ட உள்ளார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது. எனவே இது விஷயமாக உடனடியாக சிறைவாசிகளிடம் பேசுங்கள் என்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் போன் செய்தார்கள். மேலப்பாளையம் சிறைவாசிகளிடம் பேசினேன். மதுரை சிறையில் உள்ள ராஜ உசேன் அவர்களிடம் போய் பேசுங்கள் என்றார்கள். உடனே 19-04-2006 புதன் அன்று மாலை மதுரை மத்திய சிறை சென்றேன். என்னுடன் மேலப்பாளையத்தில் அல்-உம்மா என்று அறியப்பட்டவர்களையும் அழைத்துச் சென்றேன்.

ஜட்ஜுக்கு எதிராக எதிர்ப்பை காட்ட உள்ளோம்.

இமாம் அலி வழக்கை விசாரிக்கும் நீதிபதி சாவித்திரி சரி இல்லை. ஆர்.எஸ்.எஸ். மெண்டாலிட்டியாக உள்ளார். காலையிலிருந்து மாலை வரை காக்க வைக்கிறார். ஒண்ணுக்கு கூட போக அனுமதிப்பதில்லை. தண்ணீர் கூட குடிக்க விடுவதில்லை. இப்படி கோர்ட்டில் கொடுமைப் படுத்துகிறார். தொழுகைக்கு அனுமதிப்பதில்லை. தலையில் புண் இருந்ததால் தொப்பி போட்டுக் கொண்டு வந்தவரை தொப்பியை கழட்டு என்றார். இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கூறினர். அதற்காக ஜட்ஜுக்கு எதிராக எதிர்ப்பை காட்ட உள்ளோம் என்றும் ராஜ உசேன் கூறினார்.

த.மு.மு.க. தலைமை மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்கிறேன்.

இதைக் கேட்டவுடன் அப்படியே ஈ-மெயிலாக அனுப்பி விளம்பரம் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை. நீங்கள் சிறைவாசிகளாக உள்ளீர்கள். எவ்வளவு காலம்தான் சிறையிலேயே கிடக்கப் போகிறீர்கள். உங்கள் மீது நல் எண்ணம் ஏற்பட்டு விடுதலையாக வேண்டாமமா? எனவே உங்களுக்காக நீங்கள் எதிர்ப்பு காட்டும் முறை சரி இல்லை. நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறீர்கள். அந்த அம்மா தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருக்கிறார். வேகப்படாதீர்கள் விவேகமாக செயல்படுங்கள். உங்கள் குறைகளைச் சொல்லி விட்டீர்கள் அல்லவா. முறையாக த.மு.மு.க. தலைமை மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்கிறேன். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியவர்கள் சொல்லித்தான் வந்துள்ளேன் என்றேன்.

மக்கள் உரிமையில் போடச் சொல்லுங்கள்.

சுமார் ஒரு மணி நேரம் பேசி அவர்கள் எதிர்ப்பு காட்டும் திட்டத்தை கைவிடச் செய்தேன். சரி நாங்கள் எதிர்ப்பு காட்டும் திட்டத்தை விட்டு விடுகிறோம். உடனே சாவித்திரியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லுங்கள். மதுரையில் நீங்களே தலைமை தாங்குங்கள். எங்கள் சிறைவாசிகள் குடும்பத்தாரே நிறைய வருவார்கள். அல்லது த.மு.மு.க. சார்பாக கண்டன போஸ்ட்டர் ஒட்ட அனுமதி வாங்கித் தாருங்கள். நாங்களே செலவு செய்து போஸ்ட்டர் ஒட்டிக் கொள்கிறோம். என் பெயரில் கண்டன அறிக்கையை மக்கள் உரிமையில் போடச் சொல்லுங்கள். இப்படி நிறைய சொன்னார்கள்.

வெட்கங் கெட்ட விளம்பர பிரியர்களாக இருந்தால்.

அவர்கள் சொன்ன விஷயங்கள் யாவும் த.மு.மு.க.வுக்கும் எனக்கும் விளம்பரம் தேடித் தரக் கூடியவைதான். இதுதாண்டா சமயம் தேர்தல் நேரம் வேறு நல்ல விளம்பரம் கிடைக்கும் என பயன்படுத்திக் கொண்டோமா? மெயில் போட்டோமா? ராஜா உசேன் பெயரால் அறிக்கை வெளியிட்டு வெப் சைட்டுக்கு விளம்பரம் தேடினோமா? வெட்கங் கெட்ட விளம்பர பிரியர்களாக இருந்தால் இதைத்தான் செய்திருப்பார்கள்.

வியாபரா நோக்குடைய சக்கரை மிட்டாய் வியாபாரிகள்.

சிறைவாசிகள் சொன்னவை யாவும் மனம் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் சொன்னவை. அவர்கள் அந்த நிலையில்தான் இருப்பார்கள். நாம் தான் எது நல்லது என்று ஆய்வு செய்து செயல்பட வேண்டும். குழந்தைகள் சாக்குலேட்டுகள் கேட்டுத்தான் அடம் பிடிக்கும். அதனால் ஏற்பட்டுள்ள சலி, இருமல், காய்ச்சல், புண் மற்றுமுள்ள நோய் நீங்காது மேலும் கூடும் என்பதை குழந்தைகள் அறிய மாட்டார்கள். அன்றைக்கு தந்த சாக்குலேட்டுகள்தானே இன்றைக்கு ஏன் தர மறுக்கிறாய் என்றுதான் கேட்பார்கள். வியாபரா நோக்குடைய சக்கரை மிட்டாய் வியாபாரிகள் குழந்தைகளை சுற்றி சுற்றித்தான் வருவார்கள். காரணம் அவர்களுக்கு குழந்தைகள் பற்றி கவலை கிடையாது. வியாபாரம்தான் அவர்களது நோக்கம்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவில்லை.

ராஜா உசேன் கூறிய குற்றச்சாட்டுக்களை தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியவர்களுக்கு போன் போட்டுச் சொன்னேன். அப்பொழுது அவர்களிருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார்கள். இதுதான் வாய்ப்பு என அதை அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தவில்லை. வெப் சைட் விளம்பர விரும்பிகள் போல் அவர்கள் இருந்திருந்தால் அதையே தேர்தல் பிரச்சாரமாக ஆக்கி இருப்பார்கள். சரி அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய முயற்சிக்கிறோம் என்றே சொன்னார்கள்.

நீ உன் நெற்றியில் உள்ள பொட்டை அழி.

அதன் பிறகு வக்கீல் ஆபீஸுக்குப் போனோம். அங்கே சீனியர் வக்கீல் இல்லை. ஜுனியர் இருந்தார். அவரிடம் (ஹாமித் பக்ரியுடன் கைதாகி இருந்த) இளையான்குடி அப்துல்லாஹ் நீங்கள் சொன்னபடி 36 தொப்பிகள் வாங்கி கொடுத்து விட்டேன். நாளை கோர்ட்டுக்கு வரும்போது எல்லாரும் தொப்பி போட்டுக் கொண்டு வருவார்கள் என்றார். உடனே வக்கீல் நாளை தொப்பி பற்றி ஜட்ஜ் பேசினால் நீ உன் நெற்றியில் உள்ள பொட்டை அழி என்று சொல்வேன் என்றார். அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். நான் ராஜா உசேன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்பொழுதுதான் இளையான்குடி அப்துல்லாஹ் தொப்பி பார்சலை கொடுத்தார். அது இதுக்குத்தான் என தெரிந்திருந்தால் அப்பொழுதே இந்த விபரீத விளையாட்டு வேண்டாம் என தடுத்து இருக்கலாமே என வருந்தினேன்.

இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது.

மறுநாள் காலை 8 மணிக்கு த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி போன் செய்தார். மேலே பேசி விட்டோம். அவர்கள் உடனடியாக டிஸ்ரிக் ஜட்ஜு மூலம் அந்த அம்மாவிடம் பேசி விட்டார்கள். அந்த ஜட்ஜ் நான் அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அப்படி நடந்திருந்தாலும் இல்லை என மறுத்து உள்ளதே நல்ல நிலைதான். இன்று தொப்பி போட்டுக் கொண்டு போகும் விஷயமும் அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. தொப்பி போட்டுக் கொண்டு போனாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். தொப்பி சம்பந்தமாக அந்த அம்மாவிடம் கேட்டதற்கு, ஒரு வழக்கில் உள்ளவர்களை 2 அணிகளாக கொண்டு வருகின்றனர். அவர்களை யூனிபாமாக (ஒரே அணியாக) கொண்டு வாருங்கள் என்றேன். அதைத்தான் தவறாக புரிந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.மொத்தத்தில் இனி அந்த அம்மாவிடம் கடுமை இருக்காது. அதற்கு முன் அடையாளமாக அந்த கேஸில் உள்ள ஒரு அணி வந்ததும் அடுத்த அணி வராமலே வந்ததாக இன்ற பதிந்து விடுவார்கள் என்றார்.

த.மு.மு.க. தலைமைக்கு எங்கள் நன்றியை தெரிவியுங்கள்.

இந்த தகவலை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கச் செய்தேன். அந்த அம்மாவிடம் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் வீம்புக்கு தொப்பி போட்டு மீண்டும் விவகாரத்துக்கு வழி வகுக்க வேண்டாம் என்றும் கூறினேன். அவர்களும் வீம்பு பண்ணும் நோக்கில் தொப்பி அணிய இருந்ததை தவிர்த்தனர். அன்று மாலை மதுரை சிறைவாசிகளிடமிருந்து கிடைத்த தகவல். நீங்கள் சொன்ன மாதிரி ஜட்ஜ் நடந்து கொண்டார். ஒரு அணி மட்டும் ஆஜரானோம். அடுத்த அணியை வேனிலிருந்தபடியே திருப்பி அனுப்பி விட்டனர். நல்ல மாற்றம் சந்தோஷம். த.மு.மு.க. தலைமைக்கு எங்கள் நன்றியை தெரிவியுங்கள்.

சிறைவாசிகளின் நலனுக்காகத்தான் சொல்கிறோம்.

ஏந்த ஒரு விஷயமாக இருந்தாலும் இப்படி முறையாக அணுக வேண்டும். முறையாக அணுகியும் பலன் இல்லை என்றால்தான் பிரச்சனையை வெளியே கொண்டு வர வேண்டும். அதுவும் சிறைவாசிகள் பெயரால் கொண்டு வரக் கூடாது. சிறைவாசிகளும் அதை கையிலெடுக்கக் கூடாது என்று சொல்கிறோம். ஏன் சொல்கிறோம் சிறைவாசிகளின் நலனுக்காகத்தான் சொல்கிறோம். அவர்களது விடுதலைக்கு தடையாக உள்ளதே அவர்களது முரட்டுத் தன்மை மாறவில்லை என்ற குற்றச்சாட்டுதான். ஆட்சி மாறி எவ்வளவு நாட்களாக ஆனாலும் எல்லா செயல்பாடுகளும் முந்தைய நடை முறைப்படியே இருக்கும். எது அரசின் கவனத்திற்கு கொண்டு போகப்படுகிறதோ அதுதான் புதிய உத்தரவுக்குள்ளாகும்.

ஜவாஹிருல்லாஹ் சொன்ன மாதிரி 2 நாளில் நடந்தது.

nஷரீப் விஷயத்தில் போலீஸ்தான் பழைய நடைமுறையை பின்பற்றியுள்ளது. போலீஸ் செய்த செயலை புதிய அரசின் செயலாக சித்தரிப்பது சரியா? இது தேவையில்லாமல் புதிய அரசை பகைக்கும் தன்மையா இல்லையா? த.மு.மு.க.வை அணுகி அது ஈடுபட மறுத்ததா? சிறைத்துறை எஸ்றா மாற்றப்பட வேண்டும் என்றார்கள். தங்கப்பாவே என்னிடம் பல முறை கூறி இருக்கிறார். த.மு.மு.க. தொடர்ந்து கடுமையாக போராடி வந்தது. அவர் மாற்றப்படுவதற்கு 2 நாளுக்கு முன்பாக த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் சொன்னார் எஸ்றா 2 நாளில் மாற்றப்படுகிறார் என்று. இதை தங்கப்பாவிடம் சொன்னேன். ஜவாஹிருல்லாஹ் சொன்ன மாதிரி 2நாளில் மாற்றம் நடந்தது. http://www.tmmkonline.org/tml/archieves/others/98_711.htm

த.மு.மு.க.வின் முயற்சியால் சிறையில் கடுமை குறைந்தது.

சிறையில் கடுமையாக நடக்கிறார்கள் த.மு.மு.க. தலையிட்டால்தான் முடியும். த.மு.மு.க.வில் சொல்லுங்கள் என்றார் தங்கப்பா. நூறாண்டு பாரம்பரியம் என சொல்லிக் கொள்ளும் கட்சியின் பெயரைச் சொல்லி அவர்களிடம் சொல்லுங்களேன் என்றேன். அவங்களுக்கு மதிப்பே இல்லைங்க. அவங்களால ஒண்ணும் ஆகாதுங்க. த.மு.மு.க.வால்தான் முடியுங்க என்றார் தங்கப்பா. த.மு.மு.க.வின் முயற்சியால் சிறையில் கடுமை குறைந்தது. இப்ப கடுமை குறைஞ்சிட்டுங்க என்றார் தங்கப்பா.

த.மு.மு.க. தலைமையை அணுகாதது ஏன்?

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சிறைவாசிகளுக்கு பிரியாணி செய்து கொடுக்க அனுமதி தர மறுக்கிறார்கள் த.மு.மு.க.விடம் சொல்லுங்கள் என்றார் தங்கப்பா. த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் சொன்னேன். மேலதிகாரிகளிடம் பேசி விட்டு தகவல் தந்தார். அதை தங்கப்பாவிடம் தெரிவித்தேன். எங்கள் சார்பில் நன்றி சொல்லி விடுங்கள் என்றார். எதற்கும் தங்கப்பா த.மு.மு.க. தலைமைக்கு நேரடியாக நன்றி சொன்னது கிடையாது. இப்படி பல விஷயங்களை அ.தி.மு.க. ஆட்சியிலேயே த.மு.மு.க. செய்து கொடுத்திருக்கவே nஷரீப் விஷயத்தில் மட்டும் தங்கப்பா த.மு.மு.க. தலைமையை அணுகாதது ஏன்?

சமுதாய நலனில் அக்கறை உடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு கால அளவு கிடையாது. அவர்களை விடுதலை செய்து விடும்படி சுப்ரீம் கோர்ட் கூட உத்தரவு போட முடியாது. ஆனால் ஒரு மாநில அரசு நினைத்தால் எப்பொழுதும் விடுதலை செய்யலாம். எனவே போலீஸ் செய்த நடை முறைச் செயலை புதிய அரசின் செயலாக சித்தரித்துள்ளது தேவையற்ற பகைமையைத்தான் ஏற்படுத்தும். அதற்கு துணை போகும் விளம்பர விரும்பிகளால் விபரீதங்கள்தான் ஏற்படும். இந்த தவறான செயலை சமுதாய நலனில் அக்கறை உடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

விளம்பர விரும்பிகளிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக.

அ.தி.மு.க. ஆட்சியின்போது கூட தங்கப்பா நிறைய மெயில்கள் அனுப்பி இருக்கிறார் பலர் பார்வேடு செய்திருக்கிறார்கள். நான் பார்வேடு செய்தது கிடையாது. சிறைவாசிகள் பெயரால் அரசுக்கெதிராக அறிக்கைகள் வெளியிடச் செய்வது. அதை பரப்பவது அறிவுடையவர் செயல் அல்ல. சிறைவாசிகளின் விடுதலையை விரும்புவோர் செய்யும் செயலுமல்ல. இது போன்ற விளம்பர விரும்பிகளால் சிறைவாசிகளுக்கு கேடுதான் விளையும். விளம்பர விரும்பிகளிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்
கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி