Wednesday, April 19, 2006

போன் செய்தவன் பக்கா பொய்யன்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 19-04-2006

'முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது' என்று பேசிய முஸ்லிம் லீகர்.

கண்ணியத்திற்குரிய வளைகுடா வாழ் சகோரர்களுக்கு கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 11-04-2006 அன்று தூய திட்டமும் சதி திட்டங்களும். ( நடந்தது என்ன? ) பாகம் -1 என்ற தலைப்பில் மெயில் அனுப்பி இருந்தேன். 14-04-2006 அன்று பாளையங்கோட்டை தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்கள் வந்திருந்தார்கள். அப்பொழுது ''தாவூத் பாஷhவை விமர்சித்து நீங்கள் மெயில் அனுப்பியுள்ளதாக தாவூத் பாஷhவுக்கு போன் வந்துள்ளது. உங்களை விமர்சித்து பஸ்லுல் இலாஹி நிச்சயமாக எழுதி இருக்க மாட்டார் என்று தாவூத் பாஷhவிடம் சொன்னேன். உங்களைத்தான் மெயில் போடாதீர்கள் என்று சொன்னேனே. ஏன் போட்டீர்கள். காலம் வரும்போது உண்மை தானாக வெளி வரும். எனவே இனி மெயில் போடாதீர்கள்'' என்றார்கள்.

போன் செய்தவன் பக்கா பொய்யன் என்பதை அறிந்து விட்டார்கள்.

மேலப்பாளையம் பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்பொழுது நமது வெளியீட்டின் காப்பியை அண்ணன் ஹைதர் அலி அவர்களிடம் கொடுத்தேன். அதை படித்து விட்டு ராஜகிரி தாவூத் பாஷh அவர்களை விமர்சித்து எழுதியுள்ளதாக போன் செய்தவன் பக்கா பொய்யன் என்பதை அறிந்து விட்டார்கள். ''இனி மெயில் போட வேண்டாம்'' என்று அண்ணன் ஹைதர் அலி அவர்கள் சொன்னதால் மெயிலின் தொடர்ச்சியை அழித்து விட்டேன். 15-04-2006 அன்று மேலப்பாளையத்தில் முஸ்லிம் லீக் கூட்டம் நடந்தது. அதில் த.மு.மு.க. பற்றியும் என்னைப் பற்றியும் பொய்களை புனைந்து பேசியுள்ளார்கள். இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்பொழுது நான் அண்ணன் ஹைதர் அலி அவர்களுடன் திருவிதாங்கோடு கூட்டத்தில் இருந்தேன்.

நீங்கள் பேசியதை எழுத்து மூலமாக தருவீர்களா?

போனுக்கு மேல் போன் வந்தது. அசிங்கமாகவெல்லாம் பேசுகிறார்களே என்றார்கள். நான் ''பொறுமையாக இருங்கள்'' என்றேன். திடலுக்கு அருகில் காங்ரஸ் துணைத் தலைவர் முஹம்மது அலி அவர்களின் வீடு உள்ளது. முஸ்லிம் லீக்கினரின் பொய்ப் பிரச்சாரத்தை ஜீரணிக்க முடியாத அலி அவர்கள் மேடை அருகே சென்று கண்டித்து சப்தம் போட்டிருக்கிறார். ''இலாஹி என்ன சொன்னாலும் எழுத்து மூலமாக கைகெழுத்திட்டு தருவார். நீங்கள் பேசியதை எழுத்து மூலமாக தருவீர்களா? பொட்டப் பயல்களா'' என்று இன்னொரு கட்சிக்காரர் கேட்டிருக்கிறார். தகராறு ஆனதும் காவல் துறை புடை சூழ கூட்டம் நடந்துள்ளது. திருவிதாங்கோட்டிலிருந்து பாளையங்கோட்டை வந்து சேர்ந்த பின்னரும் இரவு இரண்டு மணி வரையும் மு.லீக் கூட்டம் சம்பந்தமாக போன்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்தக் கயவர்களை அடையாளம் காட்டியே தீர வேண்டும்.

பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்பதே எல்லோருடைய வற்புறுத்தலாகவும் இருந்தது. அண்ணன் ஹைதர் அலி அவர்கள் ''வேண்டாம் பொறுமையாக இருங்கள்'' என்று கூறி விட்டார்கள். எனவே அமைதியாக இருந்தோம். இந்த நிலையில் 17ஆம் தேதி இரவு 10மணிக்கு ஒரு போன் வந்தது. ''11-04-2006 அன்று பழனி ஆயக்குடி தெற்குத் தெருவில் ஒரு வீடு திறப்பு நிகழ்ச்சிக்கு வந்தார் மு.லீக் மாநில தலைவர் காதர் மைதீன். வந்ததும் த.மு.மு.க.வை விமர்சித்து பேசினார். பொதுக் கூட்டத்தில் பேசிய காதர் மைதீன் ''தி.மு.க. வற்புறுத்தியதால் பாளையங்கோட்டையை திரும்ப கொடுத்தோம்'' என்று கூறினார். வீட்டில் கூடி இருந்தவர்களிடம் ''ஜவாஹிருல்லாஹ் 60 இலட்சம் வாங்கி விட்டு பாளைத் தொகுதியை தி.மு.க.வுக்கு கொடுத்து விட்டார்'' என்று கூறினார்'' என்ற தகவல் கிடைத்தது.. எனவே மு.லீக் பெயரால் சமுதாயத்தை ஏமாற்றும் இந்தக் கயவர்களை அடையாளம் காட்டியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

கோதர் மைதீன் - - ஒரே பெண்ணிடம்தான் போவார்கள்.

உடனே மேலப்பாளையத்தில் நம்மை விமர்சித்தவர்களை அடையாளம் காட்டி ''எல்.கே.எஸ்.க்கு வேட்டு வைக்கும் மணியாச்சிகளும் மணி ஆட்டிகளும்'' என்ற பிரசுரத்தை 18ஆம் தேதி மாலை மேலப்பாளையத்தில் வினியோகித்தேன். அது கீழே உள்ளது பார்த்துக் கொள்ளவும். 15-04-2006 அன்று மேலப்பாளையத்தில் நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் பேசியதில் மிக முக்கியமானதையும் உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.


முஸ்லிம் லீக்கை காதர் மைதீன் என்ன தரத்தில் வைத்துள்ளார் என்பதை தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.

எம்.ஜி. காஜா என்பவர் பேசும்போது எல்.கே.எஸ். மீரான் எவ்வளவு நல்ல மனிதர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கூறினார். ''கோதர் மைதீன் எக்ஸ் எம்.எல்.ஏ. அவர்களும் ---- என்பவரும் ஒரே பெண்ணிடம்தான் போவார்கள். அவர்களுக்கு கார் ஓட்டிக் கொண்டு போகும் எல்.கே.எஸ். மீரான் வெளியில்தான் நிற்பார் உள்ளே போக மாட்டார்'' என்று பேசியுள்ளார். அதாவது எல்.கே.எஸ். மீரான் எப்படிப்பட்ட சேவகர் என்று சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியுள்ளார். (கோதர் மைதீனுக்குத்தான் சீட்டு கொடுப்பேன் என்று காதர் மைதீன் ஏன் அடம் பிடித்தார் என்பது இப்பொழுதுதான் புரிகிறது.) முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் எஸ்.கே. காஜா என்பவர் பேசும்போது ''எங்க முஸ்லிம் லீக் தலைமையை நாய் கூட மதிக்காது'' என்று பேசியுள்ளார். (தலைமையின் தரத்தை உணர்ந்த தொண்டர் இவர்தான் போலும்.) இனி இவர்களை அடையாளம் காட்டும் நமது பணி தொடரும். வஸ்ஸலாம்.
அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி,

Sunday, April 16, 2006

எல்.கே.எஸ்.க்கு வேட்டு வைக்கும் மணியாச்சிகளும் மணி ஆட்டிகளும்.


எங்களூர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 16.4.06

மு.லீக் தலைமையினர் தாங்கள் செயல்படவும் மாட்டார்கள் செயல்படுகிறவர்களை செயல்பட விடவும் மாட்டார்கள்.

எல்.கே.எஸ்.க்கு வேட்டு வைத்தவர்கள் யார்?

கண்ணியத்திற்குரிய மேலப்பாளையவாசிகளுக்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தமிழக சட்ட மன்ற தேர்தல் நாள் நெருங்கியதும். தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் த.மு.மு.க.வின் ஆதரவைப் பெற முயற்சிகள் செய்தன. இதை பத்திரிக்கைகள் வாயிலாக எல்லோரும் அறிந்துள்ளோம். 

இட ஒதுக்கீடு, அப்பாவி சிறைவாசிகள் விடுதலை உட்பட த.மு.மு.க. வைத்த பல்வேறு கோரிக்கைகளை ஏற்றது தி.மு.க. அதனால் த.மு.மு.க. ஆதரவு தரும் என்ற சூழல் உருவானது. த.மு.மு.க. வை அணுகிய தி.மு.க. தலைமையினர் "நீங்கள் போட்டியிடுவதாக இருந்தால் நீங்கள் விரும்பும் 5 தொகுதிகளை தருகிறோம்" என்று கூறியுள்ளனர். 

த.மு.மு.க.வினரோ "நாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம். எங்களுக்கு தருவதாகக் கூறும் தொகுதிகளை மு.லீக்குக்கு கொடுத்து விடுங்கள்" என்று கூறியுள்ளனர். இதையடுத்து மு.லீக் தலைவர்களுடன் த.மு.மு.க. தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர்.



துபையிலிருந்த எனக்கு 26-02-06 அன்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்கள் போன் செய்தார்கள். அப்பொழுது "பாளையங்கோட்டைத் தொகுதியில் முஸ்லிம் லீக் சார்பில் நீங்கள் போட்டியிட வேண்டும்" என்றார்கள். 

"முஸ்லிம் லீக் சார்பிலா போட்டியிடச் சொல்கிறீர்கள். என்னை அபுதாபி அப்துல்ரவூப் அவர்கள் நீண்ட நாளாக வற்புறுத்தி வருகிறார்கள். நான் மறுத்து வருகிறேன். மு.லீக் தலைமையினர் தாங்கள் செயல்படவும் மாட்டார்கள் செயல்படுகிறவர்களை செயல்பட விடவும் மாட்டார்கள். அது ஒரு சாபத்துக்குள்ளான தலைமையாக ஆகி விட்டது. 

த.மு.மு.க. சார்பில் என்றால் நிற்கிறேன்" என்றேன். "நீங்கள் முஸ்லிம் லீக்தானே" என்றார்கள். இருந்தாலும் மு.லீக் சார்பில் நான் நிற்க விரும்பவில்லை. எங்களூர் எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றேன். நீங்கள் நிற்பது சம்பந்தமாக மீண்டும் யோசியுங்கள் என்று கூறி போனை கட் செய்து விட்டார்கள்.



28-02-06 அன்று அதிகாலை துபை நேரம் 5 மணிக்கு மீண்டும் த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி  போன் செய்தார்கள். பாளைத் தொகுதியில் போட்டியிடுவது சம்பந்தமாக கேட்டார்கள். "தி.மு.க. ஜெயித்த தொகுதியை கொடுக்காது என பத்திரிக்கையில் எழுதுகிறார்களே எப்படி பாளைத் தொகுதி கிடைக்கும்" என்றேன். 

"அது பற்றி பேச வேண்டாம் பாளைத் தொகுதியை பெறுவது த.மு.மு.க.வின் பொறுப்பு. பெற்று விட்டோம் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் போட்டுயிடுவது பற்றி கூறுங்கள்" என்றார்கள். 

"எல்.கே.எஸ். மீரான் மைதீன் மு.லீக் சார்பில் ஒரு முறை நின்று தோற்றவர், இளைஞர் 40 வயது இருக்கும் எனவே எல்.கே.எஸ். மீரான் மைதீன் அவர்களுக்கே வாய்ப்பு கொடுங்கள்" என்றேன்.


அவர் மு.லீக்கில் தான் தொடர்ந்து இருக்கிறாரா? என்று த.மு.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் ஹைதர் அலி   கேட்டார். "தேசிய லீக்குக்கு சென்று வந்தவர்தான். அவர் மட்டுமல்ல இன்று மு.லீக்கில் உள்ள அனைவருமே தேசிய லீக்குக்கு சென்று வந்தவர்கள்தான். 

ஏ.எம். யூசுபின் தமிழ்நாடு மு.லீக்கிலிருந்தவர்தான், இஸ்மாயீல் சாகிபையே கீழ்தரமாக விமர்சித்தவர்தான் இன்றைய மு.லீக் தலைவர் காதர் மைதீன். 

எனவே எல்.கே.எஸ். மீரான் தேசிய லீக்குக்கு சென்றது பெரிய விஷயமல்ல. எல்.கே.எஸ். மீரான் நின்றால் நான் நின்ற மாதிரி. எனவே அவருக்கே வாய்ப்பு கொடுங்கள்" என்றேன். உங்களை மாதிரி செயல்படுவாரா? என்று கேட்டார். என்னை மாதிரி என்று சொல்ல முடியாது. ஏதோ செயல்படுவார்" என்றேன்.


பிறகு எல்.கே.எஸ். மீரான் அவர்களுக்கு நானே போன் போட்டு பேசினேன். அவர் "மு.லீக் தலைமைக்கு விண்ணப்பம் செய்துள்ளேன்" என்று கூறினார். "மு.லீக்கால் பாளைத் தொகுதியை பெற முடியாது. எனவே நீங்கள் சரி என்று சொல்லுங்கள். எனக்கு வந்த வாய்ப்பைத்தான் உங்களுக்கு தருகிறேன். 

த.மு.மு.க. மூலம் இந்த தொகுதியை உங்களுக்கு பெற்றுத் தருகிறேன். கோதர் மைதீன் எனக்கு நண்பர்தான். மேலப்பாளையவாசியான நீங்கள் நிற்பதை நான் விரும்புகிறேன்" என்றேன். மீண்டும் மீண்டும் "தலைமையில் மனுச் செய்துள்ளேன்" என்றே எல்.கே.எஸ். மீரான் கூறினார்.


தொடர்ந்து நான் வலியுறுத்தவே, "பண வசதி இல்லை. எனக்கு கடன் இருக்கிறது. 2 லட்சம்தான் செலவு செய்ய முடியும்" என்றார். "பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் தேர்தல் செலவுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நீங்கள் சரி என்று சொல்லுங்கள், சுறு சுறுப்பாக செயல்படுவேன் என்ற வாக்குறுதி மட்டும் தர வேண்டும்" என்றேன். 

திரும்பவும் தலைமையில் மனுச் செய்துள்ளேன் என்றே கூறினார். "எல்.கே.எஸ். நான் கட்சி சார்பில் பேசவில்லை, தனிப்பட்ட முறையில் பேசுகிறேன். மேலப்பாளையவாசி என்ற முறையில் பேசுகிறேன். நமது நட்பில் பேசுகிறேன். 

திரும்ப திரும்ப தலைமை தலைமை என்று சொல்லாதீர்கள். மு.லீக் தலைமையால் பாளை தொகுதியை பெற முடியாது. நீங்கள் நிற்காவிட்டால் மேலப்பாளையவாசியான வேறு யாரை நிறுத்தலாம்? நீங்கள் நிற்பதையே நான் விரும்புகிறேன். உங்கள் முடிவை சொல்லுங்கள்" என்றேன்.


இப்படியாக துபையிலிருந்து 15 நிமிடம் பேசினேன். பிறகு போன் போடுகிறேன் என்றார். போன் போடவில்லை. இந்த உண்மையை எல்.கே.எஸ். மீரான் மறைத்து விட்டார். அதனால் எல்.கே.எஸ். மீரானுக்கு போட்டியாக நான் துபையிலிருந்து வந்த மாதிரி. எல்.கே.எஸ். மீரானுக்கு கிடைக்க வேண்டிய சீட் என்னால் கிடைக்காமல் போய் விட்ட மாதிரி. கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்த விஷமிகளால் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. 

எனவே 9-4-2006 அன்று காலை எல்.கே.எஸ். மீரான் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். மேற்கண்டவாறு 15 நிமிடம் துபையிலிருந்தே பேசியதை சொல்லிக் காட்டினேன். அவரும் ஒப்புக் கொண்டார்.

அவதூறு பரப்பும் பொய்யர்கள் விஷமிகளே அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களே!

அப்பொழுது எல்.கே.எஸ். மீரானுடன் எல்.கே.எஸ். புகாரி, முன்னாள் மு.லீக் எம்.சி. ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர், முன்னாள் தி.மு.க. எம்.சி.யும் நெய்னா முஹம்மது மூப்பன் ஜும்ஆ பள்ளி முன்னாள் பொருளாளருமான அப்துல் லத்தீப், மஞ்சி மக்தூம், பவுசர் ஆட்டோ தாஜ்பாய் ஆகியோர் இருந்தார்கள். 

10-4-2006 அன்று மாலை முன்னாள் எம்.எல்ஏ. ஷம்சுல் ஆலம், ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர், ராஜகிரி தாவூத் பாட்சா ஆகியவர்களுடன் இன்ஜினியர் செய்யது அஹ்மது ஆபீஸில் எல்.கே.எஸ். மீரான் இருந்தார். அப்போதும் நானாகவே முன் வந்து பேசியதை சொல்லிக் காட்டி நிரூபித்துள்ளேன். எனவே அவதூறு பரப்பும் பொய்யர்கள் விஷமிகளே அல்லாஹ்வின் சாபத்துக்குரியவர்களே! என்று விளங்கிக் கொள்ளுங்கள்.


இத்துடன் நிற்கவில்லை. 2 மாதங்களுக்கு முன்பே பாளைத் தொகுதியை எல்.கே.எஸ். மீரானுக்கு கிடைக்கச் செய்ய முயற்சித்த நான், இப்பொழுது இன்னொரு முயற்சியும் செய்து வந்தேன். 

பாளைத் தொகுதிக்குப் பதிலாக எம்.எல்.சி. அல்லது அது போன்ற வேறு பதவி தருவதாக தி.மு.க. தலைமை கூறி உள்ளது. அதை பேட்டையைச் சார்ந்த கோதர் மைதீனுக்கே கொடுக்க வேண்டும் என்று மு.லீக் தலைவர்  காதர் மைதீன் கூறி உள்ளார். 

நாம் நமதூர்வாசியான எல்.கே.எஸ். மீரான் மைதீனுக்கே அதை கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்காக நான் களம் காணத் தயார். அந்த நேரத்தில் நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று 8-4-06 சனி அன்று த.மு.மு.க. மேலப்பாளையம் மண்டல செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசினேன். 

த.மு.மு.க.வினரும் எல்.கே.எஸ். மீரான் மைதீனுக்காக களம் காண்போம் என்று சபதம் செய்தார்கள்.


இந்தச் செய்தியையும் ஷம்சுல் ஆலம், ஹாபீஸ் முகைதீன் அப்துல் காதர், எல்.கே.எஸ். புகாரி, அப்துல் லத்தீப், மஞ்சி மக்தூம், பவுசர் ஆட்டோ தாஜ்பாய், சாந்து நூர் முஹம்மது, ஸ்டார் இபுறாஹீம் உட்பட பல சமுதாய பிரமுகர்களுக்கும் தெரிவித்துள்ளேன். 

மேலப்பாளையத்தைச் சார்ந்த எல்.கே.எஸ். மீரானுக்கு பதவி கிடைக்கக் கூடாது என்பதற்காக கூலிக்கு மாரடிப்பவர்கள் பேட்டைக்காரரிடம் பேரம் பேசி விட்டார்கள் போலும். எனவே எல்.கே.எஸ்.க்கு வேட்டு வைக்க முடிவு செய்து விட்டார்கள்.  எனவே எல்.கே.எஸ்.க்கு பதவி கிடைக்காமல் செய்வதற்காகவே  கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியாகிய எம்மை விமர்சித்துள்ளார்கள்.


இவர்கள்தான் டிரஸ்டு திருடன்களான பள்ளித் திருடன்கள் கொடுத்த கைக் கூலிக்காக நடு ரோட்டில் கிடந்து மாரடித்துள்ளார்கள். மேலப்பாளையவாசிகள் போட்டியிட வேண்டும் என்பதற்காக சீட் தந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். மேலப்பாளையவாசிகள் போட்டியிடுகிறார்கள் என்றதும் ஒதுங்கி வழி விட்டவர் டி.பி.எம். மைதீன் கான். 

மேலப்பாளையவாசிகளுக்கு சீட்டு இல்லை என்று ஆக்கியவர்கள் காதர் மைதீன் போன்றவர்கள்தான் எனவே வருங்காலத்தில் மேலப்பாளையவாசிகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், டி.பி.எம். மைதீன் கான் அவர்களை வெற்றி பெறச் செய்வது மேலப்பாளையவாசிகள் கடமையாகும். வஸ்ஸலாம்.
அன்புடன்:
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, பவுண்டர் மஸ்ஜிதுர் றஹ்மான், முன்னாள் மாவட்ட தலைவர் J.A.Q.H. 11.ஏ. ராவுத்தர் கீழத் தெரு, மேலப்பாளையம்,

Wednesday, April 05, 2006

எந்த அரசியல் கட்சிக்காவும் எந்த கூட்டணிக்காகவும் ஜாக் குரல் கொடுக்காது.

கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி அவர்களை பாளையங்கோட்டை வேட்பாளராக அறிவிக்குமாறு தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை வலிறுத்தியும் வாக்குறுதி மீறிய மு.லீக் தலைவர் காதர் மைதீனை கண்டித்தும் அரசியலில் ஈடுபடாத ஜாக் மேலப்பாளையம் கிளை சார்பில் 05-04-2006 புதன் அன்று மாலை 4.30மணிக்கு மேலப்பாளையம் சந்தை முக்கில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக் கிளை தலைவர் சிபகதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக் செயலாளர் மவுலவி ஆ.யு.ளு. செய்யது அஹ்மது ஸலபி, தமிழ் மாநில இந்திய தேசிய லீக் மாவட்டச் செயலாளர் நிஜாம், தவ்பா பள்ளித் தலைவர் அப்துல்லாஹ் ஆகியவர்கள் உரையாற்றினார்கள். ஜாக் செயலாளர் மவுலவி ஆ.யு.ளு. செய்யது அஹ்மது ஸலபி அவர்கள் விரிவான விளக்கத்துடன் உரையாற்றினார்கள். எனவே அந்த விளக்கமான உரையைத் தருகிறோம்.
டாக்டர் செய்யது சத்தார்; மு.லீக்கிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.
பாளைத் தொகுதி வாக்காளப் பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும். மு.லீக் கேட்ட தொகுதிகளில் பாளையங்கோட்டை இருக்கவில்லை. அதற்கு கொடுக்கப்பட்ட தொகுதி ராமநாதபுரமும் அரவாக்குறிச்சியும்தான். இதை பத்திரிக்கை படிக்கும் ஒவ்வொருவரும் அறிவீர்கள். தேர்தலில் போட்டியிடாத த.மு.மு.க.வின் தனிப்பட்ட செல்வாக்கில்தான் இந்த தொகுதி வாங்கப்பட்டது. பாளையங்கோட்டை தொகுதியை சகோதரர் பஸ்லுல் இலாஹி அவர்களுக்கென்று பேசிதான் கலைஞர் அவர்களிடம் வாங்கப்பட்டது. கலைஞர் அவர்களும் த.மு.மு.க. கூறும் வேட்பாளர்தான் பாளையங்கோட்டைக்கு என்று கூறித்தான் காதர் மைதீனிடம் கொடுத்தார். இதற்கு மு.லீக் மாநில பொதுச் செயலாளராக இருந்த டாக்டர் செய்யது சத்தார் சாட்சியாக உள்ளார். இப்பொழுது காதர் மைதீன் போக்கை கண்டித்து டாக்டர் செய்யது சத்தார் மு.லீக்கிலிருந்து ராஜினாமா செய்து விட்டார்.
உண்மையை காதர் மைதீன் மறைத்து விட்டார்.
மு.லீக், த.மு.மு.க. பேச்சு வார்த்தைகள் யாவும் யு.ஏ.இ. காயிதே மில்லத் பேரவை முன்னாள் தலைவரும் ராஜகிரி கல்லூரி தாளாளருமான தாவூத் பாட்சா அவர்கள் வீட்டில் வைத்துதான் நடந்துள்ளது. அந்த பேச்சு வார்த்தைகளின் போதே பாளைத் தொகுதி வேட்பாளர் பஸ்லுல் இலாஹி என்பதை த.மு.மு.க. தரப்பில் கூறி விட்டனர். மு.லீக்கும் ஏற்றுக் கொண்டுள்ளது. பாளைத் தொகுதி பஸ்லுல் இலாஹிக்கு என்ற உண்மையை காதர் மைதீன் மறைத்து விட்டார். கட்சியிலுள்ள மற்றவர்களுக்கு சொல்லாமல் காதர் மைதீன் மறைத்து மு.லீக் தொகுதியை இலாஹி உரிமை கொண்டாடுவது போன்ற மாயை ஏற்படுத்தி விட்டார். (இந்த உண்மையை 9443151267 என்ற தாவூத் பாட்சாவின் நம்பரில் கேட்டுக் கொள்ளவும்)
பஸ்லுல் இலாஹி திருமணம் மு.லீக் திருமணமாக நடந்தது.
பஸ்லுல் இலாஹி யார்? 1983ல் அவரது திருமணம் எவ்வளவு பரபரப்புடன் நடந்தது. ஓட்டு மொத்த மேலப்பாளையமே கலந்து கொண்டு கண்டு களித்த திருமணம் என்றால் அது அவர் திருமணம் மட்டுமே. ஊரே திரண்ட அந்த பிரபலமான திருமணத்தில் அப்பொழுது அமைச்சர்களாக இருந்த செ. அரங்கநாயகம், ளு. இராகவானந்தம், ளு.ளு.சு.சு. ராஜேந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. அப்பொழுது ஏற்பட்ட சமுதாய பிரச்சனையால் சமுதாய உணர்வுடன் முஸ்லிம் லீக்கில் இணைந்தார். எனவே சகோதரர் பஸ்லுல் இலாஹி திருமணம் மு.லீக் திருமணமாக நடந்தது. தாயிரா குழு நிகழ்ச்சி, அபுல் பரகாத் நிகழ்ச்சி, பாராட்டு நிகழ்ச்சி என தொடராக 7 நாட்கள் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் முஸ்லிம் லீக் சார்பில்தான் நடந்தது.
மு.லீக் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
திருமணம் முடிந்ததும் முஸ்லிம் லீக் இளைஞர் அணி தலைவராகவும், முஸ்லிம் லீக் மேலப்பாளையம் நகர பிரைமரி செயல்பாட்டுக் குழு தலைவராகவும் ஆனார். இந்த பொறுப்பை ஏற்றதும் மு.லீக் பிரச்சார பணிகளை முடுக்கி விட்டார். 1983 டிசம்பர் 29 முதல் 1984 ஜனவரி 4 வரை முஸ்லிம் லீக் பிரச்சார வாரம் நடத்தினார். 7 நாட்கள் நடத்திய தொடர் நிகழ்ச்சியில் மஜ்லிஸுல் உலமா சபையைச் சார்ந்த உலமாக்கள், காயல் மஹ்பூப். நெல்லை மஜீத், மதுரை ஆதீனம், ஏ.எம். யூசுப் ஸாஹிப், லத்தீப் சாஹிப். சாந்து காஜா மைதீன் ஸாஹிப், சமது ஸாஹிப் ஆகியோர் கலந்து கொண்டனர். இது மு.லீக் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
பாலைவனப் பசுஞ் சோலை பஸ்லுல் இலாஹி.
முஸ்லிம்கள் நிறைந்து வாழும் மேலப்பாளையத்தில் ஜெயலலிதா ஏற்றிய 63 அடி உயர அ.தி.மு.க. கொடிக் கம்பம் மானப் பிரச்சனையாக ஆனது. ஏனவே அதை விஞ்சும் வண்ணம் மிகவும் உயரமான முஸ்லிம் லீக் கொடிக் கம்பத்தை சொந்த செலவில் நிறுவியவர் சகோதரர் பஸ்லுல் இலாஹி. கொடியை ஏற்றி வைத்த சமது ஸாஹிப் அவர்கள் இதுதான் இந்தியாவிலேயே மிகப் பெரிய முஸ்லிம் லீக் கொடிக் கம்பம் என்று வியந்து பாராட்டினார். பாலைவனப் பசுஞ் சோலை பஸ்லுல் இலாஹி என புகழாரம் சூட்டி அவருக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடை பஸ்லுல் இலாஹிக்கு போர்த்தி கவுரவித்தார்.
காசுக்காக கொடியை வெட்டியவர்களுக்கு சீட்டு கொடுக்கலாமா?
ஜெயலலிதா ஏற்றிய கொடியை விட மு.லீக் கொடி உயரமாக இருப்பதை தங்களது மானப் பிரச்சனை என கருதினர் அ.தி.மு.க.வினர். எனவே பஸ்லுல் இலாஹி துபை சென்றதும் மு.லீக்கினருக்கு காசு கொடுத்து உயரத்தை குறைக்கச் செய்தனர். இப்படி காசுக்காக மு.லீக் கொடிக் கம்பத்தை குறைத்தவர்கள் தான் சகோதரர் பஸ்லுல் இலாஹிக்கென்று கொடுக்கப்பட்ட பாளைத் தொகுதியை கேட்டு உரிமை கொண்டாடுகின்றனர். காசுக்காக கொடியை வெட்டியவர்களுக்கு சீட்டு கொடுக்கலாமா?
பாளைத் தொகுதி மீண்டும் மு.லீக்குக்கு கிடைத்தது.
டெல்லி சென்று ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்க்க முடியாதவர்கள் மேலப்பாளையத்திலேயே பார்க்கும் வண்ணம் மேலப்பாளையத்தில் தாஜ் மஹால் செட்டிங் அமைத்தவர் பஸ்லுல் இலாஹி. அந்த தாஜ் மஹாலுக்குள் ஸமது ஸாஹிபு அவர்களை அமர வைத்து 1983லேயே இட ஒதுக்கீடு கோரிக்கையை முழங்க வைத்தவர் பஸ்லுல் இலாஹி. வரக்கூடிய சட்ட மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக்தான் இந்த தொகுதியில் போட்டியிடும் என உறுதிபட உரையாற்றிய பஸ்லுல் இலாஹி 1983லேயே சுவர் விளம்பரமும் செய்தார். பஸ்லுல் இலாஹியின் வேகமான விவேகமான செயல்பாடுகளின் பலனாகத்தான் 15 வருடங்களுக்குப் பிறகு பாளைத் தொகுதி மீண்டும் மு.லீக்குக்கு கிடைத்தது.
10 நாள் தொடர் நோன்பு வைத்தார்.
இந்திராகாந்தி அம்மையார் சுடப்பட்ட அனுதாப அலை, எம்.ஜி;.ஆர். சுகவீனம் அடைந்து அமெரிக்காவிலிருந்த அனுதாப அலை என இரண்டு அலைகளில் பல தலைவர்கள் தேர்தல் கடலில் கரையேறாது மூழ்கி விட்டனர். மேலப்பாளையத்தை உள்ளடக்கிய பாளைத் தொகுதியில் சம்சுல் ஆலம் அவர்களும், மேலப்பாளையம் மக்கள் நிறைந்து வாழும் சின்ன மேலப்பாளையமான திருவல்லிக்கேணி தொகுதியில் ஸமது ஸாஹிபு அவர்களும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றார்கள். அவர்கள் வெற்றிக்காக 10 நாள் தொடர் நோன்பு வைத்தார் பஸ்லுல் இலாஹி.
சொந்த மச்சானை தோற்கடித்தார்.
1986 ஆம் ஆண்டு நகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது இரண்டு வார்டுகளின் முழுப் பொறுப்பையும் ஏற்றார். இரண்டு வார்டுகளுக்குமாகச் சேர்த்து பணம் செலவு செய்தார். அது மட்டுமா? அப்பொழுது ஜனதா தளத்தில் இருந்த மணியாச்சி காஜா அவர்களை முஸ்லிம் லீக்கில் சேர்த்து 50ஆயிரம் ரூபாய் செலவு செய்து எம்.சி.யாக ஆக்கினார் அவரது வார்டில் மணியாச்சி காஜாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சொந்த மச்சானை தோற்கடித்தார். தி.மு.க.வில் இருந்த அப்துல் ஹமீது, மைதீன் பிள்ளை, டப்பா சாகுல் ஹமீது, ஆகியவர்களை மு.லீக்கில் இணைத்து தேர்தலில் மு.லீக் சார்பில் போட்டியிடச் செய்தார்.
மு.லீக்குக்கு மானப் பிரச்சனை ஏற்பட்டது.
நகர சபை தலைவர் பொறுப்புக்கு மு.லீக் சார்பில் போட்டியிட ஒப்புக் கொண்டிருந்தவர் எல்.கே.எஸ். மீரான் மைதீன். கடைசி நாளன்று வேட்பு மனு தாக்கல் செய்யாமல் ஒதுங்கி விட்டார். மு.லீக் இளைஞர் அணியினரை திரட்டிக் கொண்டு போய் எல்.கே.எஸ். மீரான் மைதீன் வீட்டு வாசலில் மணிக் கணக்கில் காத்து கிடந்து ஆர்ப்பாட்டம் செய்தார் பஸ்லுல் இலாஹி. கதவை பூட்டிக் கொண்டு அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. இவர்தான் இன்று பஸ்லுல் இலாஹிக்கென்று வாங்கப்பட்ட பாளைத் தொகுதியை கேட்டு உரிமை கொண்டாடுகின்றார். கொடுக்கலாமா இவருக்கு? எல்.கே.எஸ். மீரான் மைதீன் பின் வாங்கியதால் மு.லீக்குக்கு மானப் பிரச்சனை ஏற்பட்டது. மானத்தைக் காக்க வேறு ஒருவரை வேட்பாளராக ஆக்கினார் பஸ்லுல் இலாஹி. அப்பொழுது எம்.எல்.ஏ.வாக இருந்த சம்சுல் ஆலம் அவர்கள் போட்டியிட முன் வந்ததால் அவசரத்தில் வேட்பாளராக ஆக்கியவரை பஸ்லுல் இலாஹி திரும்பப் பெற்றார். பஸ்லுல் இலாஹி போட்ட வேட்பாளரை நிறுத்தி இருந்தால் வெற்றி பெற்று இருப்பார்.
தனிப்பட்ட சேவையை செயல்பாட்டை உணர்ந்துள்ளதால்தான் ஜாக் குரல் கொடுக்கிறது.
1987இல் துபை சென்ற ஸமது ஸாஹிபு அவர்களுக்கு சிறந்த வரவேற்பு செய்தார் பஸ்லுல் இலாஹி. வரவேற்பைக் கண்ட ஸமது சாஹிப் இது துபையா மேலப்பாளையமா என்று கேட்டுள்ளார். வரக் கூடிய தேர்தலில் மு.லீக் சார்பில் பாளைத் தொகுதியில் பஸ்லுல் இலாஹி போட்டியிட வேண்டும் என்றார். இரவு 3 மணியாக ஆனாலும் பஸ்லுல் இலாஹி அழைப்பை ஏற்று அவர் பணி புரியும் இடத்திற்கு ஸமது சாஹிப் அவர்கள் சென்று விடுவார். இப்படிப்பட்ட பஸ்லுல் இலாஹியைத்தான் முஸ்லிம் லீக் இல்லை என்கின்றனர். முஸ்லிம் லீக்குக்கு அவர் செய்துள்ள சேவையை பட்டியலிட்டால் நேரம் போதாது. அரசியலில் ஈடுபடாத ஜாக் பஸ்லுல் இலாஹிக்காக குரல் கொடுக்கிறது என்றால் அவரது தனிப்பட்ட சேவையை செயல்பாட்டை உணர்ந்துள்ளதால்தான் ஜாக் குரல் கொடுக்கிறது.
உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தார் தர்மலிங்கம்.
கட்சி பாகுபாடின்றி அனைவருடனும் நட்பாய் பழுகும் பண்பு உடையவர்தான் பஸ்லுல் இலாஹி. 1994 ஆம் ஆண்டு துபை சென்ற பாளை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தர்மலிங்கம் அவர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை அளித்தார். வரவேற்பில் மகிழ்ந்த தர்மலிங்கம் அவர்கள் தாங்களுக்கு என்ன தேவையானாலும் கேளுங்கள் என்றார். உடனே அம்பை வீதியிலிருந்து குறுக்குத் துறை வரை ரோடு சரி செய்யப்பட வேண்டும் என்றார். பஸ்லுல் இலாஹியின் இந்த வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தார் தர்மலிங்கம்.
உண்மைக்காக தனித்து நிற்பார் துணிந்து நிற்பார்.
1992 டிசம்பர் 7 அன்று மேலப்பாளையம் கலவரத்தில் சுடப்பட்டு 2 பேர் இறந்து விட்டார்கள். பலர் காயம் அடைந்தனர். வெறியூட்டி தூண்டி விட்டு பேசியவர்கள் ஒதுங்கி விட்டார்கள். துபையிலிருந்த போதிலும் தனது சார்பாக பிரதிநிதிகளை அனுப்பி பாதிக்கப்பட்டவர்கள் ஜெயிலில் இருந்த போதும் ஜாமீன் பெற்று ராஜபாளையத்தில் இருந்த போதும் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகள் செய்யச் செய்தார். இறுதியில் 2,25,000 (இரண்டே கால் லட்சம்) ரூபாய் அனுப்பி ஜமாஅத் மூலம் உதவினார். ஊரே திரண்டு நின்று எதிர்த்தாலும், எதிர்ப்பது அரசாங்கமாக இருந்தாலும் உண்மைக்காக தனித்து நிற்பார் துணிந்து நிற்பார். இது ஜாக் அறிந்துள்ள பஸ்லுல் இலாஹியின் வரலாறு.
போராட முன் வராதவர்கள் குரல் கொடுக்க பயந்தவர்கள் சீட் கேட்பது நியாயமா?
முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹ்பூப் குண்டாஸில் இருந்த போது பல முறை சிறை சென்று பார்த்து ஆறுதல் கூறியவர் பஸ்லுல் இலாஹி. வெளிநாட்டில் இருக்கிறீர்களே அரசு கண்காணிக்குமே என்று பலர் அச்சம் ஊட்டினர். பாதிக்கப்பட்டவரை பார்ப்பதால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதை சந்திக்கத் தயார் என்று காயல் மஹ்பூப் அவர்களையும் அவருடன் சிறையில் இருந்தவர்களையும் அடிக்கடி போய் பார்த்தார். காயல் மஹ்பூக்காக போராட்டம் நடத்த மு.லீக் தலைமையே பயந்தது. ஆனால் காயல் மஹ்பூப் விடுதலைக்காக பேரணி நடத்தி போராடியவர் பஸ்லுல் இலாஹி. அந்த பஸ்லுல் இலாஹிக்காக வாங்கிய சீட்டை காயல் மஹ்பூக்காக போராட முன் வராதவர்கள் குரல் கொடுக்க பயந்தவர்கள் கேட்பது நியாயமா?
இந்த லீக்கர்கள்தான் சீட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
தடா என்றால் தயங்காதவர்கள் கிடையாது. தடாவை எதிர்த்தவர்களெல்லாம் தடாவில் தள்ளப்பட்டார்கள். இதனால் தடா எதிர்ப்பு பேரணியை எங்குமே வெற்றிகரமாக நடத்த முடிந்ததில்லை. இந்தியாவிலேயே தடாவை எதிர்த்து வெற்றிகரமாக நடந்த ஒரே பேரணி 1995ஆம் ஜனவரி 22 அன்று மேலப்பாளையத்தில் நடந்த பேரணிதான். ஜாக் சார்பாக நடந்த அந்த பேரணியை நடத்தியவர், அது வெற்றியடைய அறிவுப்பூர்வமாக செயல்பட்டவர் பஸ்லுல் இலாஹி தான். இந்த துணிச்சல் மிக்க பஸ்லுல் இலாஹியைத்தான் பாளைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோருகிறோம். காயல் மஹ்பூப் விடுதலைக்காகவும் தடாவை எதிர்த்தும் நடந்த பேரணியில் எல்லாக் கட்சியினரும் கலந்து கொண்டார்கள். எல்.கே.எஸ். மீரான் மைதீன் உட்பட முஸ்லிம் லீக்கர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த லீக்கர்கள்தான் சீட்டுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
நியாயத்திற்காக எதிர்த்து நிற்கும் துணிச்சல் உள்ளவர்.
2000 செப்டம்பரில் நெல்லை டவுண் இன்ஸ்பெக்டர் மீரான் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அவரை எதிர்த்து நின்றவர் சக்திமிக்க அரசில்வாதியான ஆளுங்கட்சிக்காரர். இருந்தாலும் இன்ஸ்பெக்டர் மீரான் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக பேரணி நடத்தி நியாயம் பெற்றுக் கொடுத்தவர்தான் பஸ்லுல் இலாஹி. அரசில்வாதியாக இருந்தாலும் ஆளுங்கட்சிக்காராக இருந்தாலும் அரசாக இருந்தாலும் நியாயத்திற்காக எதிர்த்து நிற்கும் துணிச்சல் உள்ளவர் பஸ்லுல் இலாஹி.
2 வாட்டர் டேங்குகளும் பஸ்லுல் இலாஹி வைத்த நிபந்தனையில் வந்ததுதான்.
இந்த விவகாரத்தை ஒட்டி பஸ்லுல் இலாஹியை தனிப்பட்ட முறையில் சந்திக்க வீடு தேடி வந்தார் வீ கருப்பசாமி பாண்டியன். அவருடன் டி.பி.எம். மைதீன் கானும் வந்தார். பிரச்சனையை அப்படியே விடுங்கள். இன்ஸ்பெக்டர் மீரான் மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார் என்று கூறிய அவர்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் தேவை என்ன என்று கூறுங்கள் நிறைவேற்றித் தருகிNறோம் என்றார்கள். உடனே பஸ்லுல் இலாஹி தனது தனிப்பட்ட தேவையைக் கேட்டாரா? என்ன கேட்டார். நிறைவேற்றப்படாமல் இருக்கும் 2 வாட்டர் டேங்குகளை உடனே கட்டித் தர வேண்டும் என்றார். ஓன்று கீழப்பாளையம் ஜின்னா திடலில் உள்ளது. இன்னொரு மேலக் கொந்து கடைசி தெருவில் உள்ளது. இந்த 2 வாட்டர் டேங்குகளும் பஸ்லுல் இலாஹி வைத்த நிபந்தனையில் வந்ததுதான்.
மு.லீக்குக்கு பஸ்லுல் இலாஹி 25,000(இருபத்தைந்தாயிரம்) ரூபாய் அனுப்பிக் கொடுத்தார்.
ஹாமித் பக்ரி கைது செய்யப்பட்டபொழுது அவருக்காக துணிச்சலாக குரல் கொடுத்தது பஸ்லுல் இலாஹிதான். வெளிநாட்டில் இருந்தாலும் பயப்படாமல் பிரசுரங்கள் வெளியிட்டார். கூட்டங்கள் போட ஏற்பாடு செய்தார். வெளியில் முஸ்லிம் லீக் செய்தது மாதிரியான தோற்றம் ஏற்பட்டது. மேலப்பாளையத்தில் கூட்டம் போட 5,000(ஐயாயிரம்) ரூபாய் வாங்கிய மேலப்பாளையம் மு.லீக் கூட்டம் போட்டது. ஹாமித் பக்ரி வழக்கு வகைக்கு என்று மு.லீக்குக்கு பஸ்லுல் இலாஹி 25,000(இருபத்தைந்தாயிரம்) ரூபாய் அனுப்பிக் கொடுத்தார். பக்ரியிடம் கேட்டதற்கு அந்த பணம் தங்கள் வகைக்கு செலவு செய்யப்படவே இல்லை என்கிறார்.
சிறைவாசிகளின் பணத்தைத் தின்ற இந்த கூட்டத்திற்கு சீட்டு கொடுக்கலாமா?
காதர் மைதீன் காதர் மைதீனிடம் கேட்டதற்கு ஒழுங்கான பதில் இல்லை. சிறைவாசிகளின் பணத்தைத் தின்ற இந்த கூட்டத்திற்கு சீட்டு கொடுக்கலாமா? இப்படிப்பட்ட காதர் மைதீன் தான் பஸ்லுல் இலாஹிக்கு கொடுத்த பாளையங்கோட்டை சீட்டைக் காட்டி நேர் காணல் எனும் பெயரால் அப்பாவி மு.லீக்கர்களின் பணத்தையும் கரந்து விட்டார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஸா அனுப்பி இருக்கிறார்.
பஸ்லுல் இலாஹி மேலப்பாளையத்திலுள்ள பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் வளர்ச்சிக்கு உதவி உள்ளார். ஏராளமான ஏழைக் குமர்களுக்கு உதவியுள்ளார். தனது திருமணத்தின் போது ஏழைக் குமருக்கும் திருமணம் நடத்தினார். உஸ்மானிய்யா கல்லூரி கட்டிடம் கட்ட உண்டியக்கார மீரான் மைதீன் ஹாஜியார் அவர்களுக்கும் நண்டு முஹம்மது உசேன் அவர்களுக்கும் உதவியாக இருந்து ஏராளமான பொருளுதவி செய்துள்ளார். இன்றும் சிறைவாசிகளுக்கு உதவி வருகிறார். சிறை சென்று பாதிக்கப்பட்டவர்களை கண்டு ஆறுதல் சொல்லக் கூடியவராக இருக்கிறார். 500க்கும் மேற்பட்ட மேலப்பாளையவாசிகளுக்கு விஸா உதவி செய்து இருக்கிறார். தமிழக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஸா அனுப்பி இருக்கிறார்.
சொந்த செலவில் விஸா, சொந்த செலவில் டிகட்.
மற்றவர்களெல்லாம் விஸாவுக்கு முன் பணமாக ஆயிரக் கணக்கில் வாங்கி விட்டு இழுத்தடிப்பார்கள். பஸ்லுல் இலாஹி அவர்களோ சொந்த செலவில் விஸாவும் டிகட்டும் அனுப்பி விட்டு சம்பளத்தில் கழிப்பார். சிறைவாசிகள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற திட்டத்தில் விஸாவுடன் டிகட்டும் அனுப்பி உதவி வருகிறார். மதுரை சதக்கதுல்லாஹ் குடும்பம் கஷ;டப்படுகிறது என்ற செய்தியை நக்கீரனில் படித்தார். உடனே அந்த குடும்பத்தை தொடர்பு கொண்டு சதக்கதுல்லாஹ் தம்பி நூர் முஹம்மதுக்கு விஸா அனுப்பி கொடுத்தார். அத்துடன் டிகட்டும் ஏற்பாடு செய்து கொடுத்தார். சொந்த செலவில் விஸா, சொந்த செலவில் டிகட் அனுப்பி உதவி வந்த பஸ்லுல் இலாஹி பாளையங்கோட்டை சீட்டை நம்பி விஸா கோட்டையை விட்டு விட்டார்.
மறுமையில் மகத்தான வேதனை உண்டு என்பதை எச்சரிக்கிறோம்.
இந்த இழப்புகளுக்கு காரணம் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன்தான். எனவே இவரை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாளையங்கோட்டைத் தொகுதியை சகோதரர் பஸ்லுல் இலாஹி அவர்களுக்கென்றுதான் வாங்கப்பட்டது. இந்த உண்மையை முஸ்லிம் லீக்கர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும். மறுத்தால் அந்த முஸ்லிம் லீக்கர்களுக்கு மறுமையில் மகத்தான வேதனை உண்டு என்பதை எச்சரிக்கிறோம். சீட் வாங்கும் வரை வாக்குறுதி அளித்து விட்டு, வாங்கிய பின் வாக்குறுதி மீறியதால் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் முனாபிக் லீக் தலைவராக ஆகி விட்டார்.
ஜாக் பஸ்லுல் இலாஹி என்ற தனி நபருக்காகத்தான் குரல் கொடுக்கிறது
மாணவப் பருவம் முதல் 35 ஆண்டு காலமாக பொது வாழ்வில் இருந்து வரும் சமுதாயப் பணியாளர் சகோதரர் பஸ்லுல் இலாஹி விஷயத்தில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நீதி வழங்க வேண்டும் என்று கோருகிறோம். டாக்டர் கலைஞர் கருணாநிதி நீதி வழங்குவார் என்று நம்புகிறோம். மீண்டும் சொல்கிறேன் அரசியலில் ஈடுபடாத ஜாக், தேர்தலில் போட்டியிடல், ஓட்டுக் கேட்டல் போன்றவற்றுக்கலெ;லாம் அப்பாற்பட்ட ஜாக் பஸ்லுல் இலாஹி என்ற தனி நபருக்காகத்தான் குரல் கொடுக்கிறது. எந்த அரசியல் கட்சிக்காவும் எந்த கூட்டணிக்காகவும் ஜாக் குரல் கொடுக்காது. ஜாக் குரல் கொடுக்கவில்லை. ஜாக்கின் முதல் நெல்லை மாவட்ட தலைவரான பஸ்லுல் இலாஹி என்ற தனி நபரின் தனிப்பட்ட சேவையை செயல்பாட்டை உணர்ந்துள்ளதால்தான் ஜாக் குரல் கொடுக்கிறது. இவ்வாறு ஜாக் செயலாளர் மவுலவி M.A.S. செய்யது அஹ்மது ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள்.