Sunday, December 16, 2007

இப்படியும் ஒரு இறை இல்லம்.






இதுதான் உலகமா? இவ்வளவுதான் உலகமா?

இந்த படங்கள் உங்களுக்கு என்ன படிப்பினையை தருகின்றன. அந்த படிப்பினையை உலகுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.






Thursday, October 04, 2007

யாருடைய பணத்தில் யார் பெருமை தேடிகொள்வது.

நமதூரில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எத்தைனை ஏழைகள் இருக்கிறாகள்.
From: Vaappu Durai < vaappudhurai@yahoo.com >
Date: Oct 3, 2007 3:30 PM
Subject: Re: PORTONOVO FITHRAA
அஸ்ஸலாமு அலைக்கும்

அபுதாபி மற்றும் துபாயில் வசிக்கும் பறங்கிப்பேட்டை சகோதரர்களுக்கும் மற்றும் இந்த மடலை மற்ற நாடுகளில் இருந்தும் பார்வையிடும் நமது பறங்கிப்பேட்டையய் சேர்ந்த சகோதரர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். அல்லாஹ்வின் உதவியைகொன்டு இந்த வருடம் நமதூரிலுள்ள ஓர் 90 சதவிகிதத்தினர் இன்று ஒற்றுமையுடன் அதாவது ஜமாத்துடன் ஒருங்கினைந்துள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).

ஆனால் சில பீஜே வாதிகள் வருடம் வருடம் நமதூர் சகோதரர்களிடம் பித்ரா பணம் வசூலித்து அதை பீஜே அண்ணனுக்கு அனுப்பி விட்டு , பீஜே அண்ணன் பார்த்து ஏதாவது இந்த பறங்கிப்பேட்டை வாள் மக்களுக்கு பிச்சை போட்டாள் போதும் என்று விட்டுவிடுகின்றனர்.

பித்ரா பணம் என்பது என்ன அதை யாருக்கு கொடுக்க வேண்டும் யார் யாரெல்லாம் அதை வாங்க தகுதி பெற்றுளார்கள் என்பதை புரிந்துகொள்ளாமல் இந்த பீஜே வாதிகள் அதை எப்படி நமதூரிள் வளங்குகிறார்கள் என்பதை இன்ஷாஅல்லஹ் இப்போது பார்க்கலாம்.

பித்ரா பணம் எம்பது நமதூரிலுல்ல கருனாநிதி சாலையிலும் , ஆற்றங்கரை சாலையிலும் வுள்ள குடிசை வாசிகளுக்கு மட்டும்தான் சேர வேண்டும் என்பதைபோலவும் அவர்களை வரவலைத்து வரிசை படுத்தி பாரதிராஜ படம் எடுப்பதை போல வீடியோ படம் எடுத்து அதை வீடியோ சீடியா போட்டு அதை அவர்களுடைய பீஜே ஆன்லைன் வெப்சைட்டில் போட்டு அம்பளப்படுத்தி பெருமை தேடிகொள்கின்றனர்.
யாருடைய பணத்தில் யார் பெருமை தேடிகொள்வது.

இந்த பித்ரா பணம் என்ன பீஜே வாதிகளின் அப்பன் வீட்டு பணமா . ஒரு கையால் கொடுப்பதை மற்ற கைக்கு தெரியகூடாது என்று நபி ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீசே இறுக்கின்றது என்பதை மறந்து செயல்ப்பட்டு கொண்டுருக்கிரார்கள்.

நமதூரில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த எத்தைனை ஏழைகள் இருக்கிறாகள் , வரும் பெருநாளைக்கு தன்னுடைய மனைவி குழந்தைகளுக்கு ஒரு குறைந்த விலையிலான துணிகலை கூட எடுத்து கொடுக்க முடியாமல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த எத்தனை சகோதரர்கள் இன்று பித்ரா பணம் கொடுக்கவும் முடியாமல் வாங்கவும் முடியாத நிலையில் இருந்து கொண்டிருக்கின்றர்கள்.

சகோரர்களே, சிறிது சிந்தித்து பாருங்களேன் இதைபோல் உள்ளவர்கள், எப்படி இந்த டி என் டிஜே வழங்கும் பகிறங்க பித்றாவை பெறமுடியும். இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் இந்த வருடமாவது ஒற்றுமையுடன் கூடி ஏதோ நம்மால் முடிந்த தொகையையை வசூல்செய்து நமதூருக்கு அனுப்பி அங்கு வாடும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு உதவிட இதை பார்வையிடும் நமதூர் சகோதரர்கள் இன்ஷா அல்லாஹ் இந்த வருட பித்ரா பனத்தை நமதூர் பைத்துல்மா கமிட்டிகு அனுப்பி அல்லாஹ்வின் அருலை பெற்றிட வேண்டிகேட்டு கொள்கிரரோம்.

இன்ஷால்லாஹ் நாம் நமது பணமான பித்ரா பணத்தை நமதூர் சகோதரர்களுக்கு நாம் பகிர்ந்து கொடுப்பதை விட்டுவிட்டு , நாம் ஏன் நமது பணத்தை பீஜே மூலமும் பீஜேபி மூலமும் கொடுக்க வேன்டும். பீஜே யார் எங்கிருந்து வந்தார் இந்த பந்த பீஜே . ஏன் பீஜே மூலமாக பணம் கொடுத்தால்தான் , பித்ர ஏற்றுக்கொள்ள படுமா? , இதை ஏன் நமதூர் பீஜேயின் முறீதான வெட்க்கங்கெட்ட அறிவு ஜீவிகளுக்கு புரியா மாட்டேங்கிறது..

இப்படிதான் சென்ற வருடம் நமதூர் பீஜே வாதி ஒன்று கூறினாராம் , பறங்கிப்பேட்டை தியாகம் செஞ்ச பூமிடா அள்ளி எறங்கேட என்று சொன்னதாக சொல்லி அல்லாஹ்வை மறந்து விட்டு பீஜேயை தூக்கி புகழ்ந்து பேசியுள்ளார்.

அபுதாபியில் TNTJ யால் ஏர்ப்பாடு செய்யப்பட்டு உம்ரா செய்த சகோதரர்களுக்கே இன்னும் இந்த பீஜே வாதிகள் கனக்கு காட்டாமல் ஏமாற்றி வரும் இவர்களை நம்பி பித்ரா பணத்தை எப்படி கொடுப்பது.

Thursday, September 27, 2007

1880 இல் கட்டப்பட்டு 1989 இல் மூடப்பட்ட பள்ளிவாசலின் சரிதை.

இரண்டு கோடிக்கும் மேலான சொத்துக்களை இழந்து நிற்கும் பள்ளி வாசலின் பரிதாப நிலை.

திருநெல்வேலி டவுண் சாலியா தெருவில் உள்ளது மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல். இது ஹிஜிரி 1297 இல் (ஆங்கில ஆண்டு 1880 இல்) கட்டப்பட்டது. டிஸ்ரிக் முன்சிப் ஆக இருந்த மதார் ஸாஹிப் அவர்கள் இதை தனது சொந்தச் செலவில் கட்டினார்கள்.

80 பேர்கள் மட்டுமே நின்று தொழும் அளவுக்கு கட்டப்பட்ட இந்த பள்ளிவாசலுக்கு ஏராளமான சொத்துக்களையும் டிஸ்ரிக் முன்சிப் மதார் ஸாஹிப் அவர்கள் எழுதி வைத்துள்ளார்கள். இமாம், முஅத்தின் சம்பள வகைக்கும் விளக்கு எரிக்க எண்ணெய் வகைக்குமாக சில வீடுகளையும் ஒரு தோப்பையும் எழுதி வைத்துள்ளார். ரமழானில் நோன்பு கஞ்சி வகைக்காக சாலியா தெருவில் 2 வீடுகளை எழுதி வைத்துள்ளார். மேலும் பள்ளிவாசலுக்காக திருநெல்வேலி குற்றலாம் ரோட்டில் 2 கடைகள். திருநெல்வேலி டவுண் மேல ரத வீதியில் 2 கடைகள். என சொத்துக்களையும் எழுதி வைத்துள்ளார்.

ஆக இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு இரண்டு கோடிக்கும் மேலாகும். 4 கடைகள் ஒரு தோப்பும் 2 வீடுகள் இரண்டு கோடிக்கு மேலா என எண்ணாதீர்கள். இது புற நகர் அல்ல. இவை யாவும் திருநெல்வேலி டவுணின் மிக முக்கியமான மத்திய பகுதியில் உள்ளது.

இப்படி இரண்டு கோடிக்கு மேல் சொத்து உடைய இந்த பள்ளிவாசலை 1989இல் இழுத்து மூடி விட்டார்கள். மூடியவன் ஆர்.எஸ்.எஸ். காரனோ இந்து முன்னணியோ அல்ல. ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிதான். அவன் தான்தான் அக்குதார் என்று கூறி இழுத்து மூடி விட்டான். அத்துடன் சிறுகச் சிறுக பள்ளியின் எல்லா சொத்துக்களையும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு விற்று விட்டு திருநெல்வேலியை விட்டே ஓடி விட்டான்.

வேறு மாவட்டத்துக்கு சென்று விட்டாலும் பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாமல் இருக்க சதி வேலைகளை செய்து கொண்டே இருந்தான். பள்ளியை மீண்டும் திறந்து விட்டால் அவனது மோசடி மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதால், யாராவது பள்ளியின் பக்கம் தொழ வந்தால் முஸ்லிம் பெண்களை விட்டே கெட்ட அறுவெறுப்பான வார்த்தைகளால் திட்ட வைத்திருந்தான். அதற்காகவே சில முஸ்லிம் பெண்களை ஏற்பாடு செய்து வைத்திருந்தான். முஹல்லாவாசிகள் ஜமாஅத் நிர்வாக ரீதியாக ஒன்று கூட முயன்றால் முஸ்லிம் அல்லாத ரவுடிகளைக் கொண்டு மிரட்டி வந்தான்.

இந்தச் சூழலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2004 இல் திருநெல்வேலி டவுண் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வந்த ஒரு மகான் அந்த பள்ளியை திறந்து நிர்வாகம் செய்தான். பள்ளியின் பெயரால் வசூல் செய்தான். தமிழ்நாட்டில் நாங்கள் மட்டும்தான் ஏகத்துவத்தை சொல்லுகிறோம் என மார் தட்டிக் கொள்ளும் அமைப்பின் ஆதரவில் உள்ள அவன் தொழிலே பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துவதுதான் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.

பள்ளிவாசல் இடத்தில் நின்ற பெரிய பெரிய மரங்கள் பிற சமுதாயத்தவர்கள் வெட்டி கொண்டு சென்றார்கள். அதைப் பார்த்து பிடித்த அந்த முஹல்லாவைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் என்பவர் விசாரித்தபொழுதுதான் பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துபவனின் முகத்திரை கிழிந்தது.

நன்றாக இருந்த பள்ளிச் சுவர்களின் வெளிப்புறத்தை சேதப்படுத்தி இருக்கிறான். அதை போட்டோ எடுத்து பள்ளியின் மராமத்து பணிக்கு உதவுங்கள் என்ற பெயரால் வசூல் செய்துள்ளான் இந்த விபரமும் தெரிய வர ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் அவர்கள் கடுமையாக தட்டிக் கேட்டு ஜமாஅத்தாரிடம் கணக்கு காட்டச் சொல்லி உள்ளார்.

ஆத்திரம் அடைந்த பள்ளித் திருடன் அவரை ஆள் வைத்து அடிக்க முயன்றான். பள்ளியின் பெயரால் பிழைப்பு நடத்தி வரும் பள்ளித் திருடனின் முகத்திரை கிழிந்ததும் 2005 ஆரம்பத்தில் பள்ளியை பூட்டி விட்டான். ஏகத்துவத்தை சொல்லுகிறோம் என மார் தட்டிக் கொள்ளும் அமைப்பின் ஆதரவில் உள்ள அவன். பள்ளியை சுற்றியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் கடும் எதிர்ப்பு உள்ளது என்று கூறி சாவியை திருநெல்வேலி வக்பு போர்டில் கொடுத்து விட்டான்.

ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் அவர்களும் அந்த முஹல்லாவைச் சார்ந்த பலரும் முயற்சி செய்தும் இரண்டு திருடன்களின் கூட்டணி எதிர்ப்பால் அந்தப் பள்ளியை மீண்டும் திறக்க முடியவில்லை. மாவட்ட வக்பு நிர்வாகம் பள்ளிச் சாவியை மஹல்லாவாசிகளிடம் கொடுக்க பயந்தது. எனவே அந்த முஹல்லாவாசிகள் சுற்று வட்டாரத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினரை அணுகினர் பள்ளியை திறக்க சுன்னத் வல் ஜமாஅத்தினர் யாரும் முன் வரவில்லை.

ஜமாஅத்துல் உலமா சபையினரை அணுகினர் ஜமாஅத்துல் உலமா சபையினரும் முன் வரவில்லை. தப்லீக் ஜமாஅத்தினரை அணுகினார்கள். உங்கள் பள்ளியில் பிரச்சனை உள்ளது. அதை நீக்கி விட்டு சொல்லுங்கள். மேலும் உங்கள் பள்ளியில் கழிவரை வசதி இல்லை அதனையும் ஏற்பாடு செய்து விட்டு சொல்லுங்கள் என தப்லீக் ஜமாஅத்தினர் கூறி விட்டனர். இப்படி சுற்று வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு சபையையும் ஜமாஅத்தினரையும் பல முறை அணுகியும் அந்தப் பள்ளியை மீண்டும் திறக்க யாரும் முன் வரவில்லை.

இறுதியாக த.மு.மு.க. மாவட்ட நிர்வாகி உஸ்மான் அவர்களை அணுகினார்கள். அவரும் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களும் பாழடைந்த நிலையில் முட்செடிகளால் சூழப்பட்டிருந்த பள்ளியை போய் பார்வையிட்டனர். 2007 ஜனவரியில் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்தார்கள். அப்பொழுது அப்பாஸ், அஷ்ரப், காதர், சாகுல் ஹமீது போன்ற மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல். முஹல்லா பெரியவர்கள் சென்று சந்தித்தனர். இந்தப் பள்ளியை திறந்து த.மு.மு.க.வினரே நிர்வாகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். முஹல்லாவாசிகள் நிர்வாகம் செய்யுங்கள் த.மு.மு.க. ஒத்துழைப்புத் தரும் என்று கூறினார்கள்.

நாங்கள் நிர்வாகம் செய்தால் பள்ளியின் சொத்துக்களை விற்றுத் தின்றவனும் பள்ளியின் பெயரால் வசூல் மோசடி செய்தவனும் ஆள் வைத்து மிரட்டுவார்கள். எனவே த.மு.மு.க.வினரே நிர்வாகம் செய்ய வேண்டும் என முஹல்லாவாசிகள் வற்புறுத்தினார்கள்.

முதலில் பள்ளியை திறக்க உரிய முயற்சி மேற்கொள்ளுமாறு அப்பொழுது த.மு.மு.க. மாவட்ட வர்த்தகர் அணி தலைவராக இருந்த உஸ்மான் அவர்களை த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பணித்தார்கள். பள்ளியை திறந்தால் இந்து முஸ்லிம் கலவரம் வரும் என்று பள்ளித் திருடன் பூச்சாண்டி காட்டியதால் மாவட்ட வக்பு நிர்வாகம் பள்ளியை திறக்க தயக்கம் காட்டி வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி அவர்கள் 26.3.07 அன்று பொறுப்பு ஏற்றார்கள். 29.3.07 அன்று அஸரில் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பூட்டைத் திறந்து மஃ ரிபு தொழுகை நடத்தி விட்டு தகவல் தர வேண்டும் என்று திருநெல்வேலி வக்பு அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார். உடனே அன்று மஃரிபிலிருந்து மீண்டும் தொழுகை ஆரம்பமானது. உபயோகப்படுத்தப்படாததால் தூசிகளால் மூடப்பட்ட பள்ளியை த.மு.மு.க. தொண்டர்களும் முஹல்லாவாசிகளும் சுத்தம் செய்தனர். மீண்டும் ஒலி பெருக்கியில் பாங்கொலி கேட்டதால் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் பார்வை பள்ளியின் பக்கம் திரும்பியது.

1989க்குப் பிறகு முறையான எந்த மார்க்கப் பிரச்சாரமும் அங்கு நடைபெறவில்லை. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக 29.4.2007 நெல்லை இப்னு கலாம் ரசூல் அவர்களைக் கொண்டு இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டம் நடத்தப்பட்டது. இருந்தாலும் தொழச் வந்தவர்கள் மீண்டும் பெண்களைக் கொண்டு பேச வைக்கப்பட்டார்கள். புதிய நிர்வாகிகள் மிரட்டப்பட்டார்கள். அஷ்ரப் அவர்களை தாக்க அஷ்ரப் அவர்கள் வீட்டுக்கு அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களுடன் வந்தார்கள். அப்பொழுது அஷ்ரப் அவர்கள் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.

6.5.2007 அன்று நெல்லை வந்த வக்பு வாரிய தலைவரும் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளருமான எஸ். ஹைதர் அலி அவர்கள் பள்ளி இடங்களை பார்வையிட்டார்கள். பள்ளிக்கு தொழ வருபவர்களை மிரட்டக் கூடியவர்களுக்கும் பெண்களை தூண்டி விட்டு பேச வைப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து சென்றார்கள்.

முறையாக பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது. 11 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. த.மு.மு.க. நெல்லை மாவட்டச் செயலாளர் உஸ்மான் அவர்கள்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று முஹல்லாவாசிகள் ஒரு மனதாக முடிவு செய்து விட்டார்கள். செயலாளராக ஆட்டோ ஓட்டுனர் அஷ்ரப் அவர்களையும் பொருளாளராக எம். எஸ். காதர் அவர்களையும் தேர்வு செய்துள்ளார்கள்.

பள்ளியில் கழிவரை வசதி இல்லாததால் மரக் கம்புகளையும் ஓலை தடுப்புகளைக் கொண்டும் பிஸாப்கானா உருவாக்கினார்கள். சில சமூக விரோதிகள் இரவோடு இரவாக வந்து அதை பிரித்து எரிந்து விட்டு போய் விட்டார்கள். இந்தக் குறையை நிவர்த்தி செய்ய புதிய நிர்வாகிகள் பொது வேண்டுகோள் வைத்தனர். அதை ஏற்று திருநெல்வேலி டவுணில் உள்ள ஒரு பிரமுகர் இரு சிறிய கழிவரைகளையும் ஒழுச் செய்வதற்குரிய பைப்புகளையும் வைத்துக் கொடுத்துள்ளார். பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துபவன் சேதப்படுத்திய வெளிப்புறச் சுவர்களையும் பூசி கொடுத்துள்ளார்.

சாலியா தெரு மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் திருநெல்வேலி டவுணிலிருந்து தச்சநல்லூர் போகும் வழியில் மெயின் ரோட்டில் உள்ளது. பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட பிறகு அந்த வழியாகச் செல்லும் முஸ்லிம் அல்லாதவர்களில் தண்ணி பார்ட்டிகள் வந்து பள்ளியின் பில் புக் தாருங்கள் என கேட்டு வருகிறார்கள். அவர்களை விசாரித்தபொழுதுதான் பள்ளி பெயரால் வசூலித்து அறுபது நாற்பது என பங்கு போடப்பட்டுள்ள விபரங்கள் தெரிய வந்துள்ளது.

இப்பொழுது பள்ளியை வைத்து பிழைப்பு நடத்துபவன் திருநெல்வேலியில் வேறு ஒரு கிராமத்தில் உள்ள பள்ளிச் சுவர்களை அவனே சேதப்படுத்தி போட்டோ எடுத்து பள்ளியின் மராமத்து பணிக்கு உதவுங்கள் என்ற பெயரால் வசூல் செய்து வருகிறான். திருநெல்வேலியில் வசூல் செய்தால் மாட்டிக் கொள்வான் என்பதால் சென்னை போன்ற தொலை தூர நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் ஆள் அனுப்பி வசூல் செய்து வருகிறான் என்ற தகவல் கிடைத்துள்ளது. எனவே திருநெல்வேலியில் உள்ள சுத்து பத்து கிராமத்து பள்ளி பெயரால் யாரும் வசூலுக்கு வந்தால் நன்கு விசாரித்துக் கொள்ளுங்கள். பள்ளியின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களிடம் எதையும் கொடுத்து ஏமாறாதீர்கள்.

மஹ்மூதிய்யா பள்ளிக்கு சற்று அருகாமையில் ஒரு கிறஸ்தவ ஆலயம் உள்ளது. பள்ளிக்கு மிக மிக அருகில் ஒரு இந்துக் கோயில் உள்ளது. ஆக சாலியா தெரு மஸ்ஜித் மஹ்மூதிய்யா ஜுமுஆ பள்ளிவாசல் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என பல மதத்தவர்கள் சூழ அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பள்ளி மூடி கிடந்ததால் முஹல்லாவாசிகள் இஸ்லாம் மார்க்கம் பற்றிய விபரங்களை மறந்து விட்டனர். புதிய முஸ்லிம்கள் என்றே சொல்ல வேண்டும். பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் உள்ள அவர்களுக்கு இஸ்லாமிய நூல்களை அனுப்பிக் கொடுங்கள். உருது மொழியை தாய் மொழியாகக் கொண்ட அவர்களுக்கு உருதுவில் உள்ள நூல்களும் பயன்படும்.

பள்ளியின் தரை கூரை மற்றும் சுற்றுப் புறங்கள் மராமத்து செய்யப்பட வேண்டிய மோசமான நிலையில்தான் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடக் கூடியவர்கள் புனிதமிக்க ரமழானில் செய்யும் உதவிகளை தலைவர் (9443310150) செயலாளர் (9940842905) பொருளாளர் (9442063308) ஆகியவர்களை தொடர்பு கொண்டு உதவலாம். அல்லது நீங்களோ உங்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து முழுமையாகவோ ஏதாவது ஒரு மராமத்து பணியையோ செய்து கொடுக்கலாம். நீங்களோ உங்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து செய்வதையே தலைவர், செயலாளர், பொருளாளர் விரும்புகிறார்கள். வஸ்ஸலாம்.

Sunday, September 23, 2007

த.மு.மு.க. மேலப்பாளையம் கிளையின் மனித நேயப் பணிகள்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மேலப்பாளையம் கிளையின் மனித நேயப் பணிகளின் தொடரில் அடுத்த அம்சம் அமரர் குளிர் சாதனப் பெட்டி.



த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை கடந்த காலங்களில் செய்த மனித நேயப் பணிகள். ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு. இரத்த தானம், இலவச மருத்துவ முகாம். தொழில் உபகரண உதவி. கல்வி உதவித் தொகை, இலவச புர்கா, நோன்புப் பெருநாள் பித்ரா, கூட்டுக் குர்பானி வினியோகம். சமுதாய உரிமை மீட்பு, சிறைவாசிகள் விடுதலை கோரி சிறை நிரப்புதல், டிசம்பர் 6 மற்றும் போராட்டங்கள்



Thursday, August 30, 2007

நிம்மதியாக இருக்கவிடமாட்டார்களா?

மாலை நாளிதழான நெல்லை தமிழ்முரசு 4-ஆம் பக்கத்தில் ஐதராபாத் குண்டுவெடிப்பு செய்தியை மேலப்பாளையத்துடன் தொடர்புபடுத்தி போட்டுள்ளார்கள்.மேலப்பாளைய மக்களையும் முஸ்லிம்களையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டார்களா?

போட்டோ எடுப்பது தீவிரவாத செயலா?

நெல்லையில் இந்து மகாசபை ஆர்ப்பாட்டத்தை செல்போனில் படம் பிடித்த பக்கீர்மைதீன் கைது.

Sunday, July 29, 2007

உருப்பட மாட்டார்கள். உருப்பட விடவும் மாட்டார்கள்.

வெற்றி முரசையும் நிறுத்தியாச்சு. மு.லீக் இளைஞர் அணியையும் கலைச்சாச்சு.

18-07-2007 அன்று சென்னை சென்ற நாம் புழல் ஏரியில் திறக்கப்பட்டுள்ள புதிய மத்திய சிறைக்குச் சென்று குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களை சந்தித்தோம். எந்தக் குற்றமும் செய்யாமல் 10 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்.

மத்திய மந்திரியாக ஆகி இருப்பார்.

சென்னை செல்லும் முன் பா.ம.க. நெல்லை பிரமுகர் ஒருவர் நம்மை சந்தித்தார். 1995இல் நடைபெற்ற தடா எதிர்ப்பு பேரணிக்காக அவர் இல்லம் சென்று அழைத்ததை நினைவூட்டினார். குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லாமல் பா.ம.க.வில் மாநில பொருளாளர் பதவி வழங்கினார் டாக்டர் ஐயா ராமதாஸ். அதுமட்டுமல்ல கொடுங்கையூரில் வீடு கட்டி கொடுத்ததும் பா.ம.க.தான். அவர் தொடர்ந்து பா.ம.க.வில் இருந்திருந்தால் மத்திய மந்திரியாக ஆகி இருப்பார்.

யாராலும் வெளியில் எடுக்க முடியவில்லை.

கண்டவர்களின் சொல் கேட்டு பா.ம.க.வை விட்டு வெளியேறினார். பா.ம.க.வை விட்டு விலகிய பின்னர் என் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது புத்திமதி சொன்னேன் கேட்கவில்லை. இன்று அநியாயமாக சிறையில் வாடி வருகிறார். 10 ஆண்டுகள் ஆகியும் அவரை யாராலும் வெளியில் எடுக்க முடியவில்லை பார்த்தீர்களா? என்றார்.

கோவை தீர்ப்புக்குப் பின்னர் ஜாமீன் கிடைத்து விடும்.

புழல் சிறை சென்ற நாம் குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களிடம் பா.ம.க. நெல்லை பிரமுகர் சந்தித்து பேசிய விபரத்தைச் சொன்னோம். கோவை தீர்ப்புக்குப் பின்னர் ஜாமீன் கிடைத்து விடும் என்று த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி கூறியதாக குணங்குடி ஆர்.எம். ஹனீபா அவர்களின் மகனார் மைதீன் ரஸாக் கூறினார்.

இந்த ஜோக்கை கட்சி அலுவலக வாசலில் மாட்டி வைத்துள்ளார்கள்.

சென்னையின் பல பகுதிகளுக்குச் சென்ற நாம் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஜோக் ஒன்றைக் கண்டோம். அமீரகத்தில் பணிபுரிந்தபொழுது அறிமுகமாகி நண்பர்களான வரிசை கனி, குத்புத்தீன் ஐபக் போன்றவர்களை சந்திக்க மரைக்காயர் லெப்பைத் தெருவுக்குச் சென்றோம். அங்குதான் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஜோக்கைக் கண்டோம். வரிசை கனி வீட்டுக்கு எதிரில் ஒரு கட்சியின் மாநில தலைமை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் வாசலில்தான் அந்த ஜோக் எழுதப்பட்டுள்ளது. மாநில தலைவர் - - - அவர்களே மாநில பொதுச் செயலாளர் - - - - அவர்களே வருக வருக. இதுதான் அந்த ஜோக். ஒரு தகர போர்டில் பெயிண்டால் எழுதப்பட்டிருந்த இந்த ஜோக்கை கட்சி அலுவலக வாசலில் மாட்டி வைத்துள்ளார்கள்.

அப்பொழுது அந்த மனைவியின் நிலை எப்படி இருக்கும்?

இந்த கட்சியின் மாநில தலைமைக்கு அதன் மாநில தலைவரும் மாநில பொதுச் செயலாளரும் வருவது அபூர்வமானது கட்சி மய்யித்தானது என்பதைத்தான் இந்த வருக வருக போர்டு காட்டுகிறது என்றேன். இன்னொருவர் சொன்னார். வீட்டை விட்டு விட்டு ஊர் சுற்றும் கணவன் எப்பொழுதாவதுதான் மனைவியிடம் வருவான். அப்பொழுது அந்த மனைவியின் நிலை எப்படி இருக்கும்? அதே மாதிரிதான் இது உள்ளது என்றார். இந்த அலுவலகம் எது என கேட்கிறீர்களா? அதுதான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை அலவலகம்.

வெற்றி முரசை நிறுத்தி விட்டு மணிச்சுடர் வெளியிடுகிறார்கள்.

அங்கே ஒருவர் மு.லீக் மாநில இளைஞர் அணி எனும் பெயரால் கொடி கட்டி பறந்ததாரே என்பதாலும் நண்பர் என்ற முறையிலும் அவரை விசாரித்தோம். சி.எம்.என். சலீம் எப்படி இருக்கிறார் என கேட்டதுமே வந்த பதில் சி.எம்.என். சலீமா? மு.லீக் மாநில இளைஞர் அணியையே கலைத்து விட்டாச்சே என்ற பதில் வந்தது. வெற்றி முரசையும் நிறுத்தியாச்சு. மு.லீக் இளைஞர் அணியையும் கலைச்சாச்சு என்று இன்னொருவர் சொன்னார். ஏன் என்ன என்று கேட்டதற்கு சையது சத்தார் கை ஓங்கி விட்டது மு.லீக் கட்டிடம் முழுவதும் அவர் பொறுப்பில்தான் இருக்கிறது. சலீம் வளர்ச்சி பிடிக்கவில்லை. வெற்றி முரசை நிறுத்தி விட்டு மணிச்சுடர் வெளியிடுகிறார்கள் என்றார்கள்.

வங்கி தேர்தலில் மு.லீக் இளைஞர் அணி.

சி.எம்.என். சலீம் அவர்களின் இல்லத்திற்குச் சென்று கேள்விப்பட்டவைகளைக் கூறி நேரில் விசாரித்தோம். மு.லீக் மாநில இளைஞர் அணியை கலைத்து விட்டதாக அறிவித்து விட்டார்கள் என்றார். வட்டியை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு வங்கி தேர்தலில் மு.லீக் இளைஞர் அணி ஆதரவு பெற்ற வேட்பாளர் என்றெல்லாம் மேலப்பாளையத்தில் போஸ்ட்டர் பார்த்தோமே என்றோம். அது எல்.கே.எஸ். மீரான் மைதீன் ஒட்டி இருப்பார் என்றார். வருக வருக என எழுதி வைத்துள்ளார்களே என்றேன். இவர்களை திருத்த முடியாது. நம்பி ஏமாந்து விட்டோம். இவர்கள் காருக்கு பெட்ரோல் போட முடியாமல் கஷ்டப்பட்டபொழுது போட்டுக் கட்டியவர்கள் துபை காயிதே மில்லத் பேரவையினர். அவர்களுக்கே துரோகம் செய்து விட்டார்கள் என்றார்.

இப்பொழுது ஐ.டி.எம்கே. என்ற புதிய அமைப்பு ஆரம்பித்துள்ளார்கள்.

வரிசை கனி, குத்புத்தீன் ஐபக், அப்துர்ரவூப் போன்றவர்கள் காயிதே மில்லத் பேரவையில் இணைந்து செயல்பட்டு மு.லீக்கை வளர்க்க பல தடவை என்னை அழைத்தார்கள். மு.லீக்கில் நான் பட்ட அணுபவத்தைச் சொன்னேன் அவர்கள் கேட்கவில்லை. 2004 ரமழானில் இரண்டு முறை துபை வந்து விடிய விடிய வரிசை கனி, குத்புத்தீன் ஐபக் ஆகியவர்கள் என்னிடம் பேசினார்கள். மு.லீக்கை வளர்க்க பல்வேறு தொலை நோக்கு திட்டங்களைச் சொன்னார்கள். அதற்காக காதர் மைதீனிடம் தனியாக சந்தித்து பேசி அணுமதி வாங்கி விட்டதாகக் கூறினார்கள். அப்பொழுது அவர்களிடம் சொன்னேன். உங்களை நான் தடுக்க மாட்டேன். நீங்கள் சரி செய்து விட்டால் சந்தோஷம். ஆனால் முடியாது என்பது என் நிலை என்றேன். பிறகு அணுபவப்பூர்வமாக உணர்ந்து வெளியேறி இருக்கிறீர்கள். இப்பொழுது ஐ.டி.எம்கே. என்ற புதிய அமைப்பு ஆரம்பித்துள்ளார்கள்.

மு.லீக்கினரின் லட்சணங்கள் பற்றி கூறி இருக்கிறேன்.

2003க்குப் பிறகு துபை வந்தபொழுதெல்லாம் நேரில் வந்து என்னை சந்தித்த நீங்கள் மீண்டும் மு.லீக்கில் இணைந்து செயல்படும்படி கூறினீர்கள். நான் மறுத்து மு.லீக்கினரின் லட்சணங்கள் பற்றி கூறி இருக்கிறேன். மு.லீக் என்பது ஆட்டு மந்தை. அதை அவர்கள் மட்டுமே அறுத்து திண்ண வேண்டும் என்று உள்ளார்கள். அவர்களை திருத்தவே முடியாது. உருப்பட மாட்டார்கள். உருப்பட விடவும் மாட்டார்கள். நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். உங்களை நான் தடுக்க மாட்டேன். நீங்கள் திருத்தி விட்டால் மீண்டும் இணைவோம். ஆனால் திருந்த மாட்டார்கள் என்பது உறுதி என்றேன். இப்பொழுது அணுபவப்பூர்வமாக நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள்.

லீக் எனும் பெயரால் உள்ள கட்சிகளில் அரை டஜன்.

நீங்களும் அபு ஆஸியாவும் இணைந்து புதிய அமைப்பு துவங்கி உள்ளதாக கேள்விப்பட்டோமே என்றோம். புதிய அமைப்பு எதுவும் இல்லை. அது ஏற்கனவே உள்ள கல்வி அமைப்பு. அவர்கள் என்ன மு.லீக் இளைஞர் அணியை கலைப்பது நாம் நடத்துவோம் என கடையநல்லூர் சகோதரர்கள் சொல்கிறார்கள். 22.7.2007 அன்று கடையநல்லூரில் மு.லீக் இளைஞர் அணி சார்பில் கூட்டம் வைத்துள்ளார்கள். எனவே 22ஆம் தேதி அங்கு போகிறேன் என்றார் சி.எம்.என். சலீம். அதன் பிறகு நமது சமுதாயத்தின் இன்னொரு பிரமுகரை சந்தித்தோம். சமுதாயத்தின் பெயரால் புற்றீசல்கள் போல் வந்து விட்ட அமைப்புகள் பற்றி கவலைப்பட்டார். தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் சார்பில் எத்தனை அமைப்புகள் உள்ளன என்று கேட்டோம் நூற்றுக்கு மேல் உள்ளது என்றார். லீக் எனும் பெயரால் உள்ள கட்சிகளில் அரை டஜன் பெயர்களைச் சொன்னார். அவை.

லீக் (கட்சியின்) பெயர் தலைவர்
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக். திருச்சி கே.எம். காதர் மைதீன்.
2. அகில இந்திய முஸ்லிம் லீக். திருச்சி எம். ரபீக் அஹ்மது.
3. தேசிய லீக் தருமபுரி ஏ.எம். அப்துல் காதர்.
4. தமிழ் மாநில தேசிய லீக் திருப்பூர் அல்தாப்
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக் எஸ். Nஷக் தாவூது
6. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் அ.சா. உமர் பாரூக்

உங்க ஆளு டவுசர் பாய் வைத்திருக்கும் கட்சியின் கொடி கூட த.மா.ந.வா.பே. உடையதுதான் என்றார். அது என்ன த.மா.ந.வா.பே. என்றோம். தமிழ் மாநில நபிமார் வாரிசுப் பேரவை. அதன் கொடி மேல் பகுதி பச்சை. கீழ்ப் பகுதி கருப்பு, மத்தியில் வெள்ளை. என்றார். அது ஆய்வு செய்து முடிவு செய்த கொடி என்றுதானே களவாடிய பத்திரிக்கையில் போட்டார்கள் என்றோம். உடனே த.மா.ந.வா.பே.யின் ஆதாரத்தை எடுத்துப் போட்டார். கருப்பு நிறம் தீமைகளுக்கு எதிர்ப்பும், பச்சை நிறம் நன்மைகளுக்கு ஆதரவும், வெள்ளை நிறம் நல்லிணக்கம், ஒற்றுமை இவைகளை குறிக்கும் என பேரவையின் கொடி என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. ஆக அது ஆய்வு செய்து முடிவு செய்த கொடி அல்ல. களவாடிய கொடி என்பது இன்னும் உறுதியானது.

Tuesday, June 19, 2007

இது ஹைதர் அலி காலம்.

ஆயிரக் கணக்கான ரூபாய் வாடகை பெறுமானமுள்ள வக்ஃபு நிலத்தில் பண்டைய திப்பு சுல்தான் காலத்தில் கொடுக்கும் வாடகை போல, 1 ரூபாயும் அரை ரூபாயும் கொடுத்து விட்டு லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் பண முதலைகளை சமுதாயம்தான் அடையாளம் காட்ட வேண்டும். இது ஹைதர் அலி காலம் என்பதை நினைவில் கொள்க என்கிறார் இஸ்மி வாசகர் ஒருவர்




Tuesday, June 12, 2007

முறையான முன்னறிவிப்பு செய்யாமல் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பற்றி த.மு.மு.க. வர்த்தகர் அணி தலைவர் புகார்.

Monday, June 11, 2007

பிறையை பார்க்காமலேயே த.த.ஜ. அறிவித்த மோசடி பெருநாள் அறிவிப்பு பற்றி வெளியான நோட்டீஸ்

Monday, May 28, 2007

ஒரு வாரத்தில் இட ஒதுக்கீடு என்பது உண்மையா?

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒடுக்கீடு என்ற அவசர சட்டம் ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்பட இருக்கிறது என்றச் செய்தி காட்டுத் தீ போல் பரவி இருக்கிறது. சன் டி.வி. செய்தி பார்த்த வெளி நாட்டவர் பலர் மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரியாணி போட்டு செய்தியை பரப்பி இருக்கிறார்கள். பகிர்ந்து இருக்கிறார்கள். தினத்தந்தியின் வெப் சைட்டில் வந்த செய்தியை பாருங்கள்.

பக்கத்திலே உள்ள கர்நாடகாவில் 4 சதவீதம் சிறுபான்மை சமுதாயத்துக்கு என்று இட ஒதுக்கீடு, கேரளாவிலே இட ஒதுக்கீடு, ஆந்திராவிலும் அவ்வாறே இட ஒதுக்கீடு அந்த அடிப்படையில் தமிழகத்திலும் நிலை நாட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அங்கெல்லாம் அப்படி இட ஒதுக்கீடு இப்போது நடைமுறையில் இருக்குமானால் நாளைக்கே அதற்கான ஆணை தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் களிப்பு மிகுதியால் கைதட்டுகிறீர்கள். நானும் உட்சாகத்தோடு அதை உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். ஆனால் கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஓரளவு அது நடைமுறையிலே அது இருந்த போதிலும் ஆந்திராவிலே இன்னும் நடைமுறைக்கு வர முடியாமல் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தி குறுக்கு பாதையிலே போனவர்கள் குறுக்கு பாதை என்றால் உங்களுக்குப் புரியும் அந்த குறுக்கு பாதையிலே போனவர்கள் அதை தடுத்து வைத்து இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். இல்லை அது அங்கே அமல்படுத்தப்படுகிறது என்றால் விரைவிலே இந்த வாரத்திலே அதைப்பரிசீலித்து அதற்கான ஆணை பிறப்பிக்கப்படும். அந்த அவசர சட்டத்துக்கு நான் மாத்திரமல்ல நம்முடைய கவர்னரும் கையெழுத்திட தயாராக இருப்பார் என்பதை நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

இதுதான் அந்தச் செய்தி விரிவாகப் பார்க்க இதை கிளிக் செய்து பார்க்கவும்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=338825&disdate=5/28/2007&advt=1

தினமலர் செய்தி

கர்நாடகத்திலும் கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒரு வாரத்தில் சட்டம் கொண்டு வரப்படும். என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார். என்று தினமலர் செய்தி போட்டுள்ளது.

http://www.dinamalar.com/2007may28/political_tn8.asp

தாட்ஸ் தமிழ் செய்தி

முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், முதல்வர் கருணாநிதி இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி அவருக்கு உமறு புலவர் விருது வழங்கியது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி,

இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என கேட்டுகொண்டது போல் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

ராஜ்ய சபை துணை தலைவர் ரகுமான் கான், கர்நாடகா மற்றும் கேரளாவில் 50 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்காக 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் ஒதுக்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.

அதே போல தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் ஒரிரு வாரத்திற்குள் இயற்றப்படும் என்றார் என தாட்ஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. . http://thatstamil.oneindia.in/news/2007/05/28/cm.html

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒடுக்கீடு என்ற அவசர சட்டத்தை கருணாநிதி கூறியள்ளபடி ஒரு வாரத்தில் தமிழக அரசு பிறப்பித்தாலும் அது பலனளிக்குமா?
முஸ்லிம்களுக்கு என தனி இட ஒதுக்கீடு அல்ல. 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கும் தனி இட (உள்)ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம்தான்.

69 சதவீத இடஒதுக்கீடு என்று பல காலங்களாக பேசப்பட்டு வந்தபோதிலும் 1994ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில்தான் 69 சதவீத இடஒதுக்கீடு என்ற சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்தினார். அன்று கோர்ட்டுக்கு போனதுதான் இது.

மக்கள் மன்றமா? கோர்ட்டா பார்த்து விடுவோம் என்று அன்றைய அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் பேசினார்கள். 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்றும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த 69க்குள்தான் முஸ்லீம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் ஒரிரு வாரத்திற்குள் இயற்றப்படும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடிய பி.ஜெ.

இன்று மதியம் நெல்லையில் பேட்டி அளித்த பி.ஜெ. தங்களது சிறை நிரப்பும் போராட்டத்துக்கு பயந்துதான் இட ஒதுக்கீடு அறிவித்து விட்டதாக அடித்த ஜோக்கை கேட்டு நிருபர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

கிழவி குமரியான கடையநல்லூர் ஆம்புலன்ஸ் கதை பற்றி கேட்டதும் என்ன கேட்கிறீர்கள் என்று கோபமாகியுள்ளார். பழைய வண்டி என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்றதும் இல்லை புது வண்டிதான். அது பற்றிய விபரத்தை எங்கள் மாவாட்ட நிர்வாகிகளிடம் கேளுங்கள் என்று கூறி விட்டு அடுத்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடி இருக்கிறார்.



Sunday, May 27, 2007

சவால்களை ஏற்பாரா? சறுக்கி விழுவரா?

இது களியக்காவிளை.. .. அல்ல கடையநல்லூர். முஸ்ஜிதுல் முபாரக் பள்ளி விவகாரத்தை மக்கள் மன்றத்தில் ஆதாரங்களுடன் விவாதிக்கத் தயாரா? விண் டி.வி. பொய்யை.. .. கடையநல்லூர் வீதியில் விவாதிக்கத் தயாரா? சவால் விட்டுள்ளது கடையநல்லூர் ஜாக். இந்த சவாலை ஏற்று இன்று பி.ஜெ. பதில் சொல்வரா?

ஜாக்கிலிருந்து பிரிந்து சென்ற பி.ஜெ.யும் அவருடன் உள்ளவர்களும் காபிர்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார். பி.ஜெ. என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என கடையநல்லூர் மவுலவி கே.எஸ். ரஹ்மதுல்லாஹ் இம்தாதி செல்லுமிடங்களிலெல்லாம் சவால் விட்டு வருகிறார். இந்த சவாலை பி.ஜெ. இன்று வரை ஏற்கவில்லை.

கிழவியை குமரியாகக் காட்ட இன்று கடையநல்லூர் வரும் பி.ஜெ. இந்த இரு சவால்களையும் ஏற்பாரா? சறுக்கி விழுவரா? பி.ஜெ.யை காபிர் என கூறும் ரஹ்மதுல்லாஹ் இம்தாதியை ஒரே மேடையில் சந்திக்கத் தயார் என அறிவிப்பாரா?

ஜவாஹிருல்லாஹ் முழக்கம்





Saturday, May 26, 2007

இந்த கிழவி தேவையா?

கிழவி குமரியான கதை. கடையநல்லூர் த.த.ஜா. ஆம்புலன்ஸ்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையிலுள்ள இத்துப்போன ஒரு (ஆம்புலன்ஸ்) வாகனத்தை மதுரை வினாயகா பாடி பில்டர்ஸ் நிறுவனத்தினர் வெறும் 75,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்கள். எந்த வித டாக்குமென்டுகள் இல்லாமலும், ஆர்.சி புக் ரோடு டாக்ஸ் போன்ற சட்ட விதிகளை பின்பற்றாமலும்தான் இதை வாங்கியுள்ளார்கள். கிழவியான இந்த வண்டியை குமரியாக்கிய மதுரை வினாயகா பாடி பில்டர்ஸினரிடமிருந்து 2,25,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கடையநல்லூர் த.த.ஜ. கூறுகிறது.

இத்துப்போன செத்துப்போன 75,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஒரு வாகனத்துக்கு 2,25,000 ரூபாய் கொடுத்து பொது நலம் கருதி குறைந்த விலையில் வாங்கியுள்ளதாக கடையநல்லூர் த.த.ஜ. பீற்றிக் கொள்கிறது.

இந்த தரங்கெட்ட தௌஹீத் ஜமாத் இதற்காக வெளிநாட்டில் வாழும் கடையநல்லூர் தௌஹீத் சகோதரர்களிடம் புதிதாக ஆம்புலன்ஸ் வாங்க இருக்கிறோம் என 4,50,000 வசூல் செய்துள்ளார்கள். பாக்கி 2,25,00 ரூபாயை வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளதாக விஷயமரிந்த தௌஹீத் சகோதரர்களே புலம்பித் திரிகின்றனர்.

இந்தக் கிழவியை அறிமுகப்படுத்த பாக்கர் விபச்சாரத்தை பெருந்தன்மையோடு மன்னித்த அண்ணன் அவர்கள் கடையநல்லுர்ர் வருவதால் தவ்ஹீத் சகோதரர்கள் குஷியாகி இந்தக் கிழவியை பார்த்து குமரி என அண்ணன் சொன்னால்தான் நம்புவோம் என சில தக்லீத் சகோதரர்கள் குதிக்கின்றனர்.

கிழவி குமரியான கதையிலான வண்டி இது. 75,000 ரூபாய்க்கு வாங்கப்பட்டதை 2,25,000 ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறுகிறார்கள். வசூலித்த 4,50,000ல் மீதி 2,25,00 ரூபாயை வக்கீல்களுக்கு லஞ்சமாக கொடுத்து விட்டார்கள் என செய்தி பரவி விட்டது.

எனவே 28ஆம் தேதி நிகழ்சியில் ஆம்புலன்ஸ் பற்றிய வரவு செலவு கணக்கையும் அதன் டாக்குமென்டுகளையும் காவல்துறை உயர்அதிகாரிகள் முன் சமர்ப்பிப்போம் என கடையநல்லூர் த.த.ஜ.வினரில் சிலர் கூறி விட்டனர். கணக்கு காட்ட முடியாத த.த.ஜ. நிர்வாகிகளோ ஏன் இப்படி வாய் உளறினீர்கள். எப்படி வரவு செலவு கணக்கையும் டாக்குமென்டுகளையும் காட்ட முடியும் என கடிந்துள்ளனர்.

இந்த ஊழல் சம்பந்தமான செய்தி காவல்துறை உயர்அதிகாரிகளுக்கும் சென்று விட்டதாம். எனவே அந்த அதிகாரி வருவாரா? என்ற சந்தேகமும் உள்ளதாம்.

சில சகோதரர்கள் காவலர் ஆம்புலன்ஸ், அரசு ஆஸ்பிடலில் உள்ள வாகனம் மற்றும் கிங் ஆப் கிங்ஸ் ஆம்புலன்ஸ் இருக்கும் போது இந்த கிழவி தேவையா எனவும் புலம்பித் திரிகின்றனர்.

Friday, May 25, 2007

வக்பு வாரிய ஆக்ரமிப்புகள்




நமது சமுதாயத்தின் நிலை

பெயர்தான் உலமாக்கள் ஓய்வு ஊதியம். ஆனால் அது பேஷ் இமாம் முஅத்தின்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. உலமாக்களுக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலான உலமாக்கள் அரபிக் கல்லூரிகளில்தான் பணியாற்றுகிறார்கள். எனவே அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் பென்சன் கிடைக்க வழி செய்ய வேண்டும். அல்லது இந்த திட்டத்தை பேஷ் இமாம் முஅத்தின் பென்சன் திட்டம் என அறிவிக்க வேண்டும் என உலமாக்கள் விரும்புகிறார்கள் என்று 6.5.07 அன்று நடந்த ஜமாஅத்தார்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி பேசினார்.

இதற்கு பதில் அளித்த வக்பு வாரிய தலைவர் S.ஹைதர் அலி அவர்கள் அந்த திட்டம் அரபிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் உண்டு என்றுதான் உள்ளது. அதைக் கூட அறியாததாகத்தான் நமது சமுதாயத்தின் நிலை உள்ளது என வருந்தினார்.

Tuesday, May 22, 2007

பி.ஜே.பி.யின் சேவை நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை.

திருமணமான பி.ஜே.பி. எம்.எல்.ஏ.வின் நிலையே இது என்றால் நாங்கள் சந்நியாசிகள் என்று கூறித் திரியும் பி.ஜெ.பி.களின் நிலையை சொல்லவும் வேண்டுமா?



Sunday, May 20, 2007

மானமுள்ளவர்கள் என நிரூபித்துள்ள கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்கள்.

த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற தலைப்பில் பேச பி.ஜே.யும் பாக்கரும் தொண்டிக்குப் போனார்கள். இந்த தலைப்பில் பேசுவதற்கு முன் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் பாக்கர் பற்றி வந்துள்ள செய்திக்கு பதில் தாருங்கள். அதற்கு பதில் தந்துவிட்டு த.மு.மு.க.விலிருந்து விலகியது ஏன்? என்ற உங்கள் தலைப்பில் பேசுங்கள் என்று சொன்னதும் நெஞ்சு வலி வந்தது போல் பாக்கர் தன் நெஞ்சில் வைக்கிறார். என்ன ஆச்சு பாக்கர் உங்களுக்கு என்று பி.ஜே. பாக்கரை பிடிக்கிறார்.
10 நிமிடம் கரண்ட் இல்லாமல் ஆகி விடுகிறது.
4 மாதங்களுக்கு முன் நாகூரில் இறை நேசன் சொன்னது.'சத்தி நேசன்' ஈ-மெயில் ஆசிரியர் குழுவில் உள்ள 'முற்பகலு'(லுஹாவு)க்கு பாக்கர் என்றாலே பிடிக்காது. அந்த அளவு அவர் மீது பழைய பகை உள்ளது. நெஞ்சு வலி வர மூல காரணமான சம்பவம் நடந்து ஒரு மாதமாகியும் அது வெளி வரவில்லையே என்று ஆத்திரம் வந்துள்ளது 'முற்பகலு'(லுஹாவு)க்கு. எங்கு சொன்னால் இந்தச் செய்தி நம்மை வந்தடையுமோ அங்கும் போய் சொல்லி உள்ளது. கடைசியாக எதை எழுதினால் இந்தச் செய்தி வெளிவரும் என்று யோசித்துள்ளதோ என்னவோ? 4 மாதங்களுக்கு முன் நாகூர் சென்ற இறை நேசன் அங்குள்ள பள்ளிவாசலில் கூடி இருந்தவர்களிடம் சொல்லிக் காட்டியதை அப்படியே அச்சிடச் செய்து வெளியிட்டு விட்டது. பழைய பாசத்தில் முற்பகலுக்காக பாக்கர் நெஞ்சி வலியை ஒட்டிய செய்தியை கடைசியில் குறிப்பிட்டுள்ளோம்.
இது பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதில் உள்ள முன்னுரை. அதன் முடிவுரையை இதன் கடைசியில் தருகிறோம்.
கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்களின் கீழ் காணும் விளக்கம் தமிழகத்தில் உள்ள அனைத்து த.த.ஜ.வினரும் விபச்சாரத்துக்கு துணை போகின்றவர்கள் என நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எவன் பொண்டாட்டி எவனோடு போனால் என்ன எனக்கு 5 பணம் என்கிற மாதிரியான மவுலவிகள்தான் த.த.ஜ.வில் உள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் மானமுள்ள கடலூர் தவ்ஹீது ஜமாஅத்தார்களின் அறிக்கை இதோ


பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதை மறுத்த பி.ஜெ. இன்று தரும் வாக்கு மூலம் பாரீர்.







அவசரமாக வெளிப்பட்ட அந்த ஆண் வேறு யாருமல்ல.
மண்ணடி ஒய்.கே. மேன்சன் முன் அன்பார்க்கிங்கில் ஒரு பைக் நிற்கிறது. போலீஸ் வருகிறது. பைக் யாருடையது? லாட்ஜ் பொறுப்பாளி பைக்குக்கு உரியவர் பெயர் சொல்லி இந்த ரூமில் இருப்பார் கூட்டி வா என்கிறார். நீண்ட நேரத்திற்குப் பிறகு கதவு திறக்கப்படுகிறது. கதவை திறந்தவர் யாஸ்மின் என்ற பெண். பைக்கை அன்பார்க்கில் விட்டு விட்டு வந்துள்ளவர் பெயரை சொல்லி கேட்டதற்கு இல்லை என்று பதில் சொல்லி உள்ளார் யாஸ்மின். போலீஸ் வந்துள்ளது என்றதும் ஒரு ஆண் மகன் அவசரமாக வெளிப்படுகிறார். அவர் வேறு யாருமல்ல தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் டைரக்டர் பாக்கர்தான் அந்த ஆண் மகன். பெண் யார்? என்று கேட்டால் ஐ.ஏ.எஸ். கோச்சிங்குக்கு வந்துள்ளது என்று உளறி இருக்கிறார். ஐ.ஏ.எஸ். கோச்சிங் காலம் இது அல்லவே என்ற குறுக்கு கேள்வியில் மாட்டிக் கொண்டார்.
முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி?
மீடியா வேல்டு பெயரில் போடப்பட்டுள்ள லாட்ஜ் ரூமில் யாஸ்மின் என்ற பெண். செய்தி காட்டுத் தீயாக பறக்கிறது. சத்திய நேசன் ஆசிரியர் முற்பகல் போன்றோருக்கு சந்தோஷமோ சந்தோஷம். சத்திய நேசன் மெயிலின் ஒரிஜினல் ஆசிரியரோ தலையில் அடித்துக் கொண்டு பரபரக்கிறார். உடனே தலையிட்டு என்ன கேஸ் வேண்டுமானாலும் பதியுங்கள் விபச்சார வழக்காக பதிந்து விடாதீர்கள் என்று கெஞ்சி கூத்தாடி பாக்கரை காப்பாற்றி விட்டு தனது மானத்தையும் காப்பாற்றி விடுகிறார். யாஸ்மின், 10. புது ஆயக்குடி, பழனி. என்ற முகவரியில் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் சுற்று வட்டாரங்களில் விசாரித்தால் உண்மைகள் வெளி வரும். இன்று சத்திய நேசன் முன்பு இறை நேசன் 1988ல் உண்மை நேசன் ஒரு பள்ளிவாசல் பெயரால் கடிதம் வெளியிட்டு முபாஹலாவுக்கு அழைத்தது எப்படி? அடுத்த இதழில். (இது பாக்கருக்கு நெஞ்சு வலி வந்தது ஏன்? என்ற தலைப்பில் 22.07.2004 அன்று நாம் வெளியிட்டதில் உள்ள அதன் முடிவுரை.)

த.த.ஜ. மவுலவிகளுக்கு படித்தவர்கள் என்றாலே பிடிக்காது பாக்கர் என்றால் அறவே பிடிக்காது நந்தினி விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன். தங்களுக்கும் ஒரு நந்தினியை செட் பண்ணி பி.ஜெ. தருவார் என எதிர் பார்த்து மவுனியாக இருக்கிறார்களா?