Saturday, May 26, 2018

பக்கீர் பாபுவுக்கு யாஸ்மீன், அண்ணணுக்கு யார்.?

அஸ்ஸலாமு அலைக்கும்...,

இன்று முதல் முனீபாகிய நான் ததஜ என்கிற இயக்கத்தின் உறுப்பினர் என்கிற நிலையில் இருந்து விலகிக் கொள்கிறேன். இனி மேல் அடிப்படைக் கொள்கைகள் ரீதியாக மட்டுமே அந்த அமைப்பின் ஆய்வுகளை பின்பற்றும் ஒரு கொள்கை ஆதரவளான் என்கிற நிலையில் இன்ஷா அல்லாஹ் தொடருவேன். 

மற்ற இசுலாமிய இயக்கங்கள் அடிப்படைக் கொள்கையிலேயே தடம் புரண்டு விட்டதால் அவைகளில் இன்ஷா அல்லாஹ் ஒரு பொழுதும் அங்கம் வகிக்க மாட்டேன். 

அல்ஹம்துலில்லாஹ் இது நாள் வரை அந்த அமைப்பில் இருந்து பல இறைப் பணிகளை செய்ய வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கு நன்றி கூறிகிறேன்.

அல்லாஹ் மென் மேலும் அந்த இயக்கத்தை தூய்மையானதாகவும், சுதந்திரமானதாகவும் இயக்க என் உளமாற இறைஞ்சுகிறேன். அந்த இயக்கத்தை விட்டு நீங்கி விட்டேன் என்பதற்காக வழி கெட்ட சலஃபுக் கொள்கையினரோ இன்ன பிற இயக்க தோழர்களோ எம்மை அணுக வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வின் அருளால் மிகத் தெளிவாக உள்ளேன்.

என்னருமை ததஜ சகோதரர்களுக்கு நன்றியையும் அல்லாஹ் உங்களுக்கு எல்லா வகையிலும் அருள் புரிய வேண்டும் என்கிற துஆவோடும் முடித்துக் கொள்கிறேன். 

இனி மேல் கொள்கை ரீதியாக மட்டுமே விவாதக் களங்களில் ஈடுபவேனே தவிர இயக்க ரீதியாகவோ அல்லது அதில் அங்கம் வகிக்கும் முக்கியப் பிரமுகர்கள் சார்பாகவோ எவ்வித கருத்துக்களையும் கூற மாட்டேன். 

அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் வைத்து இரு உலகிலும் வெற்றி அடையச் செய்வானாக!

ஏகத்துவச் சகோதரன்,

முனீப் அபு இக்ராம்

அண்ணண் தவறு செய்தார், ஆதாராம்.?

அண்ணண் விபச்சாரம் செய்தார், ஆதாரம் இல்லையை, ? பக்கீர் பாபுவுக்கு யாஸ்மீன், அண்ணணுக்கு யார்.?
மாநில நிர்வாகம் தெளிவாக சொல்லி இருக்கு பெண் வீட்டார் மிரட்டினார்கள், அதான் அண்ணண் பயந்து விட்டார், அண்ணண் மிரட்டினார் மாநில நிர்வாகம் பயந்து எழுத்து மூலம் வாங்கி இருக்காம் (ஆனால் அதுவும்இப்ப வெளியீடு இல்லை) மற்றவர்களை மிரட்டி வீடியோ எடுத்த மாநில நிர்வாகம் பிஜேவின் மிரட்டலுக்கு அடிபணிந்ததுஉறுப்பினராக இருக்கும் போதே மாநில நிர்வாகத்தை எதிர்கிறார் என்றால்நிர்வாகத்தில் இருக்கும் போது என்ன என்ன செய்து இருப்பார். ஆனாலும் அவரை அடிப்படை உறுப்பினரில் இருந்து விலக்க மாட்டோம்.! ஏன்னா அவரை தக்லீத் செய்தே பழகி விட்டோம் மாநில நிர்வாகம்.

இஸ்மாயில் அப்துல் ரஹ்மான்

No comments: