Thursday, May 24, 2018

ஆதாரத்தை கொண்டு வாங்க இதே மேடையில் உலகம் பூரா வீடியோ லைவ் பன்றோம்


அன்னைக்கு கூடுமா கூடாதான்னு ஊருக்கே ஆய்வு பண்ணி சொன்னார்.
இப்போ அவரது ஆய்வு கூடுமா கூடாதான்னு ஊரே ஆய்வு பண்ணிட்டு இருக்கானுக.
வாட் எ மெடிக்கல் மிராக்கிள்.

எந்த ஒரு கொள்கையை பறைசாற்ற TNTJ என்கிற இயக்கம் துவங்கப்பட்டதோ அப்படியாபட்ட ஒரு இயக்கத்தை துவக்கி அதில் influential ஆக இருந்தவராலேயே அந்த இயக்கத்தின் ஊடாக பிரச்சாரம் செய்த கொள்கையை பின்பற்ற முடியவில்லை எனும்போது அப்படியாபட்ட இயக்க கட்டமைப்பால் எவருக்கு என்ன பயன்?

நம்பக் கூடாத யாரை நம்பினாராம் P.J? அந்த பெண்ணையா.... அல்லது இது அனைத்தும் முழுக்க தெரிந்திருந்த முக்கிய TNTJ புள்ளிகள் இறுதியில் காப்பாற்ற வழியில்லாமல் கைவிரித்து விட்டதையா....? பச்சை துரோகத்தை பல காலம் செய்துவிட்டு இப்ப ஃபீல் செய்கிறாராம்....
இது யார் யாருக்கு எந்தெந்த நிர்வாகிக்கு முன்னமே எப்போதிலிருந்து தெரியும் என்கிற நோக்கில் வெளிப்படை தன்மைக் கொண்ட தீவிர தெளிவான விசாரணை வேண்டும்...

எப்ப ஒருவர் con-man ஆக அவரது தொடர் நெடுநாள் குற்ற ஒழுக்க கேட்டின் அடிப்படையில் அடையாளம் காணப்படுகிறாரோ அப்ப அவரது முந்தைய சர்ச்சைக்குரிய சுய காரண காரியம் கொண்ட வியாக்கியானம் கொண்ட விவர ஆக்கங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை தான் உருவாகும்.
காரணம்.... அதிலும் அவரது ஆய்வின் மீது பிறர் கொண்டிருந்த நம்பிக்கையை பயன்படுத்தி நம்பிக்கை மோசடி செய்து இருக்க மாட்டார் என்று எப்படி கூற முடியும்.
உதாரணத்திற்கு பலதார திருமணம் செய்துக் கொள்ள இவர் குறிப்பிட்ட நிபந்தனை...
இப்ப PJ இந்த TNTJ சமூகத்திற்கும் தனக்குமாக செய்துக் கொண்ட இந்த கேடுக்கெட்ட கருமத்திற்கு பேசாம தனது உடல் தேவைக்கு கூடுதலாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடித்துவிட்டு போய் இருக்கலாமே.... குறைந்த பட்சம் இந்த அளவிற்கு அசிங்கப்பட்டு இருக்க தேவையில்லை.

புஹாரி இமாம் வரலாற்றில் ஒரு சம்பவம்
இமாம் புஹாரி ஹதீஸ் ஓன்று அரியதாக ஒருவரிடம் மட்டும்தான் இருந்தது அந்த ஹதீஸை பெற பல நூறு மைல் தூரம் பிரயாணித்து வந்து அந்த ஊர் மக்களிடம் அந்த ஹதீசை மனனமிட்டு வைத்துள்ள நபர் பற்றி விசாரித்தார்கள் அப்போதுஅந்த ஊர் மக்கள் அனைவரும் அந்த நபர் நாணயமானவர் உண்மையாளர் என சான்று கூறினார்கள்.
அதன்பிறகு அந்நபரிடம் ஹதீஸை நாடி சென்றார், அவரை சந்திக்கும் போது அவர் தன்னுடைய குதிரையை தொழுவத்தில் கட்டிவிட்டு வருகிறேன் என்று புஹாரி இமாமிடம் கூறிவிட்டு ஒரு கூடையை எடுத்து அதில் புள் இருப்பது போல் காட்டி அந்த குதிரையை ஏமாற்றி அதை தொழுவத்தின் பக்கம் அழைத்தார்கள்,
இதை கண்ட இமாம் புஹாரி நீங்கள் மனிதர்களிடம் உண்மையாக இருந்தாலும் நீங்கள் விலங்குகளை ஏமாற்றிவிட்டீர்கள். நீங்கள் அறிவிக்கும் ஹதீஸ் தேவை இல்லை . நான் நபிமொழிகளின் உண்மை தன்மையில் உறுதியானதை மட்டும் சேகரிக்க விரும்புகிறேன் என்று கூறி தன்னுடைய பல நூற்றுக்கணக்கான பயணத்தை கூட பொருட்படுத்தாமல் அந்த ஹதீஸை பெறாமல் சென்றார்.
இன்று பல ஆண்டுகளாக பொய்களை கூறிவரும் பீஜே யின் ஆய்வுகளை எப்படி சந்தேகம் கொள்ளாமல் ஏற்றுக்கொள்வது? இமாம் புஹாரி சந்தித்த மனிதரை விட பல மடங்கு மோசமானவர் பொய்யன் பீஜே . நான் பாலியல் தப்பு செய்தால் ஆதாரத்தை கொண்டு வாங்க இதே மேடையில் உலகம் பூரா வீடியோ லைவ் பன்றோம் என்று நா கூசாமல் பொய் சொன்ன பீஜே யின் ஆய்வுகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதற்கு முன்பு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டவர்க
ளின் ஆடியோ வீடியோ நீக்கப்பட்டது போல் இவருடைய ஆய்வுகளும் இணையத்திலிருந்து நீக்க வேண்டும். செய்வார்களா?

No comments: