Thursday, August 30, 2018

அண்ணன் பாசம் இன்னும் போகவில்லையோ? என்று கேட்டவர்களுக்காக


அந்த ரம்பம் எங்கே? அதாங்க அந்த "பைலா" என்னும் ரம்பத்தால் குற்றம் செய்யும் ஆட்களை அறுப்போம் என்று.. திரைவசனம் பேசிய டலைவா.லுஹா?
ஆக அன்று அல்தாஃபி மீது நீங்கள் ததஜ தலைமை கொண்டது பொறாமை, பேராசை, பகைமையின் வெளிப்பாடு என்று நல்ல புரியுது.
அண்ணனுக்கு ஒரு நீதி
அல்தாஃபிக்கு ஒரு நீதி
கரடியே காறித்துப்பும் உங்கள் ரம்பத்தை (பைலாவை) பார்த்து.

அல்தாஃபி வீடியோவிற்கு யார் 👍 போடுகிறார் என்று கண்ணில் எண்ணெய் ஊற்றி பார்த்துக் கொண்டிருந்த மா.நிர்வாகிகள் எங்கே?
#எங்கள்_அண்ணா💎Sulaiman Alaaf கண்டுபிடித்து தருவோருக்கு 1kg எரும கறி ப்ரீ


எங்களுக்கு எருமையா? ரஹ்மதுல்லாவா? என்ற நிலை வந்தால்.. சல்லாகுட்டிய காப்பாற்ற எருமையை காலி செய்வோம்.. 
ததஸ எருமைக்கு தடை?
10 hrs · 
கடும் வீழ்ச்சியில் ததச, மக்கள் ஆதரவை இழந்து வரும் TNTJ அதற்கு காரணம்
@
முட்டாள் தனமான ஃபத்வாகள்l
@
திமிர் தனமான பேச்சுக்கள்l



TNTJவை விட்டு தற்போது வெளியேறும் சகோதரர்கள் முனாஃபிக் என்று சிலர் கூறிவருகிறார்கள். காரணம் அவர்கள் இத்தனை மாதங்கள் நடித்துக் கொண்டு பொதுக்குழு முடிந்த பிறகு தன் சுய ரூபத்தை காட்டிவிட்டார்களாம்.
முனாஃபிக்கள், சந்தர்ப்பவாதிகள் யார் என்பதற்கு அர்த்தம் விளங்கவில்லை பாவம்..
உலக மகா சந்தர்ப்பவாதிகளே TNTJ மாநில நிர்வாகிகள் தானே. 
ஆட்சி மாறும் போது கட்சி மாறும் அரசியல்வாதிகளைவிட மோசமான சந்தற்பவாதிகள்....
ஏன்? அல்தாஃபி இருக்கும் வரை அவருக்கு ஜால்ரா அடிப்பது
பி.ஜே இருந்தவரை அவர் கூறிய அத்தனை கருத்துக்களையும் ஆமோதித்து அதை நூற்றுக்கணக்கான கள-ஆய்வுகளிலும் ஆதரித்து பேசிய திருவாய்கள். 
பொதுக்குழுவில் ஒரு பெரிய பல்டி.. அடே..ஙப்பா
"
இதற்கும் ஜமாத்திற்கும் சம்மந்தமில்லை அது பி.ஜேவின் சொந்த கருத்து" என்று..
இடத்திற்கு ஏற்ப நிறத்தை மாற்றும் பச்சோந்திகளே! நீங்கள் சொல்லலாமா? மற்றவர்களை முனாஃபிக் என்று? பதவிக்காக உண்மைகளை மறுக்கும் நீங்கள் உத்தமர்களா? உண்மையை உணர்ந்து வெளியேறிய அவர்கள் முணாஃபிக்களா#வெளியேபோன_முனாஃபிக்குhttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f8b/1/16/1f465.png👥

Hasan Hasan
Hasan Hasan வெட்கக்கேடு ராமநாதபுரம் மாவட்டம் பிஜே க்கு பின்னல் போக தயார் நிலையில் உள்ளது தகுதியற்ற நிர்வாகத்தால்



Apm Mohideen ஏன் அதையும்ம்ம்ம் தாண்டி எறுமை மாடுகளா ?

இறைவனின் பெயரால்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்! தமிழக முஸ்லிம்களில் அநேகமக்களை வென்றெடுத்து, இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றியை அடைய சரியான வழியை காமித்த ஜமாஅத்.
இந்த ஜமாஅத்தில் இருந்த பல கொள்கை சொந்தங்கள் தற்போது இந்த இயக்கத்தில் இல்லை! அவர்கள் தர்ஹா வழிபாட்டிற்க்கு சென்று விட்டார்களா? இல்லை நபி ஸல் அவர்களைத்தவிர மற்றவர்களை பின்பற்றலாம் என்று முடிவெடுத்தார்களா? இல்லை தலைவனாக வேண்டும், தனிஇயக்கம் காண வேண்டுமென ஆசைப்பட்டார்களா? என்றால் எதுவுமே இல்லை! பின் ஏன் ஜமாஅத் உடைந்தது? அதற்க்கான தீர்வை யார் கொடுப்பது! பாதிக்கப்பட்டது யாராக இருப்பினும் இந்த உலகத்திலேயே சரி செய்ய வேண்டுமே!
தீணாரும் திர்ஹமும் பலனளிக்காத நாளில் நம்முடைய செயலுக்கு நம்மிடம் பதில் என்ன?
இது போன்ற பல கேள்விகளுக்கும் இந்த தொடர் பயனளிக்கும் என்ற நோக்கத்துடனும்! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணங்களை கருத்தில் வைத்து நடுநிலையாக இந்த பதிவுகள் செல்லுமென வாக்குறுதி அளிக்கிறேன்.
தற்ப்போது இருக்கும் இந்த அசாதாரன சூல்நிலையை நாம் நீதீயாக கையாலவேண்டுமென்றால் ஒரு இரண்டு வருடம் முன்னால் நாம் எந்த மநநிலையில் இருந்தோமோ! அதே மநநிலையில் இந்த கடிதத்தை வாசித்தால்! தெளிவு பெரலாம்.
மாநில தலைவராக இருந்த அல்தாஃபி தவறு செய்து விட்டார்! இது மனிதஇயல்பாகவே அனைவரும் மேடையில் பேசியிருக்கிறோம்!
அல்தாஃபி தான் செய்த தவறை மறைத்தால், தான் ஒத்துக்கொண்டதை மறுத்தால் அவர் மீது எல்லா கொள்கை சொந்தமும் கோபப்படுவதற்க்கு முழு உரிமை உண்டு!
இருந்தாலும் அவரை நாம் வைத்திருந்த இடத்தில் அவர் செய்தது பாவமே! இதை நாம் மட்டும் சொல்ல வில்லை அவரும் அதே கருத்தில்தான் இருக்கிறார்! அதை அவர் பொது வெளியில் தவ்ஹீத் ஜமாஅத் ஒவ்வொறு உறுப்பினரிடமும் மன்னிப்பும் கேட்டார்!
அதையும் சிலர் ஏளனம் செய்கின்றனர்.
அவர் எந்த அளவிற்க்கு மன்னிப்பு கேட்க தயாராக இருந்தாரென்றால், அவருக்காக கூட்டப்பட்ட மாநில பொதுக்குழுவில், பரிந்துரையின் பெயரில் தானே வந்து உள்ளதை விளக்கி பொதுக்குழு உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டு பைலா படி என்ன நடவடிக்கையோ அதை முழு மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பக்குவத்திலேயே இருந்தார்!
சரி! ஒரு தவறு நடந்து விட்டது! அதை சரி செய்ய அவர் மீது நடவடிக்கை எடுத்தாயிற்று! அதையும் அவர் ஏற்றுக்கொண்டார்! தன் மீது நம்பிக்கை வைத்த அத்தனை பேரிடமும் தான் செய்த தவறுக்காக மன்னிப்பும் கேட்டுவிட்டார்!
இறைவன் இதை மன்னிக்க முடியாத குற்றமாக சொல்லாத போது! மன்னிப்பு கேட்டால் மன்னிக்க இறைவன் தயாராக இருக்கும் போது! அவர் மீது ததஜ கொள்கை சொந்தங்களுக்கு அப்படியென்ன கோபம்!
தவறு செய்து தன்னை திறுத்தி மன்னிப்பு கேட்டு பின்னர் இதற்க்கடுத்தும் ஒரு மனிதனால் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்!
இதற்க்கு மேல் வேறு எதுவும் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?
இன்னும் ஒருபடி தவ்ஹீத் வட்டத்திற்க்குள் வந்து சிந்தியுங்கள்! தவறு செய்து உள்ளதை சொல்லி உண்மையாக மன்னிப்பு கேட்டு திருந்தியவரை இறைவன் நேசிக்ககூடியவனாக இருக்கிறான்!
இதை நாம் மேடையில் பேசியிருக்கோமே தவிர அவ்வாறு நடந்த அல்தாஃபியை ஏதோ பெறுங்குற்றத்திலேயே நீடிப்பது போன்று, மறைவான வற்றை அறிந்தவர்கள் போல நினைத்து ஒரு சகோதரனின் மான மரியாதைகளில் விளையாண்டூ வருகிறோம்!
அல்தாஃபி விசயத்தில் நாம் உண்மையை உணரவில்லை என்பதே உண்மை! மேலும் ஒப்புக்கொண்டு திருந்தியவரை! இல்லாததை சொல்லி அடையாளபடுத்துவது, அபாண்டத்தையும், அவதூறையும் சொல்வது தவ்ஹீத் வாதிக்கு அழகா!?
தனிமையில் இருப்பது கூடுமா? கூடாதா? என்று அவரைச்சார்ந்தோரிடம் கேட்கிறார்கள்!
இது பாவம் என்று நம் அனைவருக்கும் தெறிந்தது தானே! அல்தாஃபி என்ன கூடும் என்று சொன்னாரா? அவர் சரி என்றாரா? எந்த வகையில் நியாயப்படுத்தினார்?
ஒருவர் கடந்த காலத்தில் செய்த தவறை! தவறென்று ஒப்புக்கொண்டு நடவடிக்கையும் பெற்று, தன் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களிடம் மனதார மன்னிப்பும் கேட்டு! இறைவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுகொண்டிருக்கும் ஒரு முஸ்லிமை! அவர் திருந்திய விசயத்தில் வார்த்தைகளால் காயப்படுத்துவது எந்த வகயில் நியாயம்?
தான் செய்த தனிமை எனும் காரியத்திற்க்காக நம்மிடம் பேசுவதற்க்கு கூனி குறுகி நின்றதாக சொன்னாரே! அந்த தனிமையை அவர் நியாயப்படுத்தியது போல் கேக்கிறார்கள்!
உணர்ந்தும், உணராமல் இருப்பவர்களே! அடுத்தவர் மீது இல்லாததை சொல்லும் போது நம்மை படைத்த இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள்.
மனிதர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள்தான்! அது அல்தாஃபிக்கு மட்டும் விதிவிலக்கல்ல!
ஆனால் பாவம் செய்த எத்தனையோ முஸ்லிம்கள் நம் கண் முன்னே இருக்கிறார்களே! ஏன் நமது நண்பர்கள், சகோதரர்கள், குடும்பத்தார்கள், அனைவரும் செய்த பாவங்களில் சிலதை நாம் அறிந்திருப்போம்! அவர்கள் சிலதை இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தன்னையும் மாற்றிக்கொண்டு இருப்பார்கள்! அப்படடி திருந்திய நமது நண்பர்களை, சொந்த பந்தங்களை நாம் இப்படி விமர்சித்தது இல்லையே! பின் ஏன் அல்தாஃபி மீது மட்டும் சிலருடைய காட்டம் தெறிகிறது!
மறுமையை நம்பும் மக்களுக்கு அவரை தரம் தாள்ந்த வார்த்தைகளால் விமர்சிக்காமல் இருப்பதற்க்கு இன்னும் ஓர் சான்று உண்டு!
அவர் அந்த நேதாஜி நகர் பெண் விசயத்தில் பெரும்பாவமான விபச்சாரம் செய்யவில்லை எனவும், நீண்ட நாட்கள் தொடர்பு இல்லை எனவும், நான்கு மணி நேரம் தனித்திருக்க வில்லை எனவும், இப்படி அந்த பெண் சம்பந்தமாக பரப்பட்ட பல அவதூறைகளை மறுத்து இறைவனிடம் சாபத்தை வேண்டினார்!
அந்த முபாஹலாவிற்க்கு பின் ஒரு உண்மை தவ்ஹீத் வாதி, இறைவனையும், மறுமையையும் நம்பக்கூடிய ஒரு முஸ்லிம் அவர் மறுத்த விசயங்களை மறுபடியும் விமர்சிக்க கூடாது! அப்படி விமர்சித்தால்! அது நிச்சயமாக வரம்பு மீறிய செயலே!
வரம்பு மீறி நடப்போரை இறைவன் நேசிக்க மாட்டான் என்பதை தவ்ஹீத் சொந்தங்கள் கவணத்தில் வைக்க வேண்டும்.
இன்ஷாஅல்லாஹ்! தொடரும்.
வஸ்ஸலாம் நெல்லை உமர்
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
தொடர் 2.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து வெளியேறிய கொள்கை சொந்தங்களின் மீது ததஜ கொள்கை சொந்தங்களுக்கு கோபம் இருக்கலாம்! ஆனால் நீங்கள் நடுநிலையோடு சிந்தித்து எதிர் தரப்பினர் எதை எதிர் பார்க்கிறார்கள்! அவர்களுடைய போக்கு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கவணிக்க வேண்டும்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னது போன்று இந்த தொடரில் தற்போதைய சூழல் குறித்து எழுதவில்லை! இந்த பிரச்சனைகள் ஆரம்பத்திலேயே எழுந்த போது நாம் சரியாக அனுகவில்லை! சரியாக கையாளவில்லை! ஜமாஅத்திற்க்கு எதிரில் நின்று கோரிக்கை வைத்தைவர்களை, ஜமாஅத்தின் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டது, நாமும் அவர்களை எதிரிகளாகவே பார்த்துவிட்டோம்!
எனவே நடுநிலையோடு நீதிக்கண்ணோடு சிந்தித்தால்தான் பாதிக்கப்பட்டவர் யார்? அதை தெறிந்து கொண்டு மார்க்கத்தின் அடிப்படையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவிற்க்கு வரமுடியும்.
குறிப்பாக இந்த பிரச்சனைகள் அனைத்தும் அல்தாஃபியை சார்ந்தே வருவதால் அவருடைய நிலையை, அவர் என்ன பேசினார், ஜமாஅத்திடம் என்ன கேட்டார், என்பதை தெளிவாக நடுநிலையோடு உணர்ந்தால் இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த அசாதாரன சூல்நிலையில் பல பிரச்சனைகளை நாம் சுமூகமாக முடிவுக்கு கொண்டு வர முடியும்.
இந்த பிளவிற்க்கு அடிப்படை காரணம், சரியான புரிதல் இல்லாமல், நம்மை தூண்டியதுமே,! அதனால்தான் நாம் கோவப்பட்டோம், வெறுத்தோம், எதிரிகளாக நினைத்தோம்!
அன்றைய சூல்நிலையில் நாம் கோவப்பட்டதினால், ஒரே கொள்கையில் இருந்துகொண்டே எதிர் எதிர் அணியில் இருப்போதை போன்ற உணர்வு நமக்கு ஏற்ப்பட்டுள்ளது!
எனவே இந்த பிரச்சனைகள் ஆரம்பித்த காலத்தில் புரிதல் இல்லாமல் ஏற்ப்பட்ட கருத்து வேருபாட்டையும், கோபத்தையும், குரோதத்தையும், நடுநிலை கண்ணோடு, நீதியாக செயல்பட்டு இன்றைய தினம் நம்மால் சிந்தித்து நல்ல முடிவை மேற்கொள்ள முடியும்.
இதிலே யார் தவறிலைத்திருந்தாலும், அதை இந்த உலகத்திலேயே, நாம் வாழும் காலத்திலேயே சரி செய்து கொள்வோம்.
#* அன்றைய தினம் அல்தாஃபி மீது நாம் கோபப்படுவதற்க்கு சரியான காரணமாக பட்டது அவர் பொதுதளத்தில் பேசியது என்று தோன்றியது! அவர் பொதுதளத்தில் பேசியது தவறென்று உணர்ந்து பல சகோதரர்கள் அவர் பேசிய பேச்சுக்களையும், கேள்விகளையும், நியாயங்களையும் செவி சாய்க்காமல் விட்டுவிட்டனர்! மாறாக அவர் பொதுதளத்தில் பேசியதற்க்காக கோவம் கொண்டனர்.
அன்புள்ள கொள்கை சொந்தங்களே இந்த நிலை நமக்கு வரவேண்டாம்! ஆனால் அல்தாஃபியின் நிலையில் இருந்து உணருங்கள்! பாதிப்பிற்க்குள்ளாகியுள்ளேன் என்று சொன்னவரிடம் நடுநிலையாக என்ன பாதிப்பு என்று இன்றாவது செவி தாள்த்தி கேளுங்கள்.
பொதுக்குழு வரை அவருடைய நடவடிக்கை விசயத்தை பேசக்கூடாது,யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், கேட்பவருக்கு ராஜினாமா செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டுமென தலைமை நிர்வாகிளால் அல்தாஃபியிடம் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
வாக்குறுதி அளித்த சக நிர்வாகிகளே! வாக்கை மீறி இல்லாததையும், பொல்லாததையும் பரப்பினார்கள்! இது அன்றைய தினம் வேண்டுமானாலும் நமக்கு தெறியாமல் நம்மை தலைமை நிர்வாகிகள் ஏமாற்றியிருக்கலாம்! ஆனால் இன்றைய தினம் அது வெட்ட வெளிச்சமாகிய பின்னும் அல்தாஃபி தலைமை நிர்வாகிகளை சந்தேகித்தது சரிதான் என்று #நீதியாக ஏன் உணரவில்லை!
இப்படி அல்தாஃபி சந்தேகித்ததினால், சிலர் அல்தாஃபியை வெறுத்தோமல்லவா! அந்த வெறுப்பின் காரணமாக ஏற்ப்பட்ட விளைவை இன்று நாம் பல கூறுகளாக அனுபவித்து கொண்டு இருக்கிறோம்.
சரி இந்த செயலை அல்தாஃபி கண்டதும், தலைமையின் மீது நம்பிக்கை வைத்து தலைக்குத்தானே சொன்னார்! அதுதானே நியாயம்! அதையும் அவர் சாதாரணமாக அவருக்கு மட்டும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற நோக்கத்தில் சொல்லவில்லை!
இது எணக்கு மட்டும் கேடல்ல ஜமாஅத் வாங்கியிருக்கும் நற்பெயருக்கும் கேடு விளைவிக்கும் தானே!இதை தலைமைக்கு சொல்கிறார்! இது போன்ற ஜமாஅத்திற்க்கு கேடு வரக்கூடாது என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட அல்தாஃபியின் கடிதங்களை பொது வெளியில் வைத்து அவரை எதிரியாக சித்தரித்து #யார்???
தலைமையும் அவருக்கு கொடுத்த வாக்கு மீறி பொதுக்குழுவை கூறியவார்த்தைகளால் அழங்கரிக்கிறது! இதை கேட்டு தலைமைக்கு கடிதம் எழுதினால்!
தலைமையோ பொது இடத்தில் வைக்கிறது!
இந்த சூல்நிழையில் அல்தாஃபியை #பொதுவெளியில் பேச வைத்தது யார்? அவர் மீது பொதுக்குழுவில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், தலைமை பொதுதளத்தில் வெளியிட்ட #கடிதத்திற்க்கு விளக்கமும் அல்தாஃபிதானே கொடுக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் பொதுக்குழுவில் அவர் குறித்து என்ன பேசவேண்டும் என்பதையும், எதை பேசவேண்டும் என்பதையும் முன்பே தலைமையே தீர்மாணித்தது! அவர் யதை ஒப்புக்கொண்டாரோ! அதைத்தவிர வேறு எதுவும் பேசமாட்டோம் எனவும் தலைமை அல்தாஃபிக்கு வாக்குறுதி அளித்தது!
ஆனால்! அதே தலைமையே சகோதரர் யூசுப் சொன்னதை தவிர அதிகமாக பேசிவிட்டார்! அது அவருடைய கருத்து என்று பலரும் இன்றைய தினம் யூசுபை தலைமை நிர்வாகிகளே விமர்சித்ததை நம் கண்ணால் பார்த்தோம்!
நீதியாக நடுநிலைக்கண்ணோடு பதில் சொல்லுங்கள்! யூசுப் வரம்புமீறி பேசிவிட்டார் என்று இன்றைய தலைமை சொல்வதை பார்த்தால்! யூசுப் அப்போது தலைமை நிர்வாகிதானே! அப்படியென்றால் அல்தாஃபிக்கு தலைமை அநீதியிலைத்து விட்டது, வரம்புமீறிவிட்டது! என்றுதானே அர்த்தம்.
அது மட்டுமில்லாமல் பொதுக்குழுவில் பேசப்பட்ட பல விசயங்கள் பல உயிர்களாக உயிரெடுத்து கை கால் தலை மூக்கு முளி வைத்து பிரச்சனை வெளியே பூதாகரமாய் வெடித்தது!
இப்போது வெளியே பேசப்பட்ட அனைத்து அவதூறையும், வாழ்நாள் முழுவதும் இல்லாததையும், பொல்லாததையும் சுமந்து வாழச்சொல்கிறீர்களா?
அல்லது! அல்தாஃபியின் நேர்மையான, பின்பற்ற தகுதியான, #தவறு_செய்யத்தான்_அஞ்ச_வேண்டும்_செய்த_தவறை_ஒத்துக்கொள்ள_அஞ்சக்கூடாது! என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில்! பொதுதளத்தில் கொள்கை சொந்தங்களிடம் உள்ளதை சொல்லி, மன்னிப்பு கேட்டு, அதிலே தலைமையின் வரம்புமீறிய (இன்று அவர்கள் வாயாலே சொல்ல வைத்தவன் இறைவன் என்பதை மறக்க வேண்டாம்) செயலை சொல்வது சரியாணதா? என்பதை நடுநிலை கண்ணோடு கொள்கை சொந்தங்கள் தற்போது சிந்திக்க வேண்டும்.
அவர் பொதுதளத்தில் பேசியதற்க்காக கோவப்பட்ட கொள்கை சொந்தங்களே! சற்று சிந்தியுங்கள்!
அதனால் அந்த சின்ன பிணக்கால்,கோபத்தால் ஏற்ப்பட்ட பிரச்சனைகளை தற்ப்போது ஒரே கொள்கையிலிருந்து பல அணியில் இருந்து பல கூறுகளாக ஒருவரையொருவர் குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
இந்த விசயம் இன்று நமக்கு சாதாரணமாகவும், சிறியதாகவும் இருக்கலாம்! ஆனால் அன்றைய தினம் இதுவே பூதாகரமாக பேசப்பட்டது என்பதை உணர் வேண்டும்.
இந்த பிளவிற்க்கு நாமும் ஏதோ ஒரு வகையில் காரணமாகிவிட்டோம்! அதை இந்த உலகத்திலேயே சரி செய்வோம்!
பாதிக்க பட்டவர்களின் நிலையை உணர்ந்து பாதிக்கப்பட்டர்களிடம் மன்னிப்பை கேட்டு சகோதரத்துவம் பாராட்டுவோம்.
தொடர் ஒன்றினை காண்பதற்க்கு!
இன்ஷா அல்லாஹ் தொடரும் வஸ்ஸலாம்.
நன்மையை எதிர்பார்த்தவனாக!
நெல்லை உமர்.
 அண்ணன் பாசம் இன்னும் போகவில்லையோ? 31ல் PJ திருவிளையாடல் பற்றி வாயே திறக்காத தம்பிகள்.பிஎங்கே ?

No comments: