Tuesday, July 18, 2006

இஸ்லாமிய சகோதரியின் கடிதம்.


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மதிப்பிற்குரிய இலாஹி காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது மெயில் படித்தேன். பதில் அனுப்புவதற்கு முன் வழக்கம் போல் கம்ப்யூட்டரின் Cpuவில் ஏதோ கோளாறு ஆகிவிட்டது. தங்களிடமிருந்து forward செய்யப்படும் மெயில்கள் சிலவற்றை printout எடுத்துப் படித்துப் பார்ப்பேன். (P.J. பற்றி வரும்விமர்சனக்கடிதங்களைத் தவிர), காரணம் தங்களது மெயிலில் பார்த்துதான் அந்த மனிதரைப் பற்றி தெரிய வண்டியதில்லை.)
தங்களது மெயிலைப் படித்த போது தங்களின் மன வருத்தம் புரிந்தது. அது மட்டுமல்ல! பல்வேறு நபர்களுக்கு நீங்கள் தரும் பதில்கள், மறுபடி அவர்கள் கொடுக்கும் கேள்வி கணைகள், பல பொய்யான குற்றச்சாட்டுகள், அதன் பின் அக்குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஆதார பூர்வமாக தரும் பதில்கள் இவற்றையெல்லாம் படிக்கும் போது தங்களிடம் தான் நியாயமும் ஆதாரமும் இருப்பதாக தோன்றுவது உண்மை.
ஆனால் மேற்சொன்ன தர்க்கங்கள் தொடரும் போது (உதாரணமாக pj உடனான 'முபாஹலா' விஷயம்) மனரீதியாக நீங்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதன்பின் மனம் பலவீனம் அடையும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். உடலில் பல உபாதைகளுக்கு இத்தகைய நிலை charge ஏற்றுவது போல் இருக்கும்.

மேலும் இத்தகைய தாக்கங்கள் நாம் அல்லாஹ்வை நினைப்பதை விட்டும் நம்மை தூரமாக்கி விடும். தொழும் போதும் இத்தகைய நினைவுகளால் விரைவில் தொழுகையை முடிக்கத் தூண்டும். தஸ்பீஹ் செய்.ய நேரம் இருக்காது. நம்மில் பலர் சமுதாய சேவை என்ற களத்தில் இறங்கி இறை கடமைகள் பலவற்றை ஏனோதானோவென்று செயல்படுத்துவதை தற்போது காண முடிகிறது.
இதயத்தை கடினமாக்க இதை விட வேறு என்ன வேண்டும்.? எனவே காக்கா நான் தங்களுக்கு இத்தகைய குழப்பங்கள் மனச்சோர்வையும் உடல் பலஹீனத்தையும் அதிகப்படுத்தி விடுமோ என்றுதான் கவலைப்படுகிறேன்.
அதனால் இரண்டொரு மாதங்கள் எந்த சமூகப்பணியையும் மேற்கொள்ளாமல் முடிந்தால் உம்ரா செய்யுங்கள். தொழுகையில் அதிக நேரம் இறைவனிடம் முறையிடுங்கள்.
அவரவர் அள்ளிப்போடும் அவதூறுப்புழுதிகள் அவர்கள் மீதே விழுவதை காண்பீர்கள். சூழ்ச்சிக்காரர்கள் வெட்டும் குழியில் அவர்களே விழுந்து தத்தளிப்பதை நீங்களே காண்பீர்கள். ஏன்னதான் உண்மையை வெளிக்கொண்டு வர நாம் பாடுபட்டாலும் தர்க்கவாதிகள் தங்களது வாதத்திறமையால் உண்மையை பொய்என்றும் பொய்யை உண்மையென்றும் நம்ப வைத்துவடுவார்கள் என்பது நாம் அறிந்ததே!
எனவே நாம் அனைத்தையும் அறிந்த ரப்பில் ஆலமீனிடம் முறையிட்டு விடுவோம். சூழ்ச்சிக்காரர்கள் அவர்களுக்குள்ளாகவே மோதிக்கொண்டு உண்மைகளை கக்கும் போது இலாஹி காக்கா அன்று சொன்னது உண்மையாகிவிட்டதே என சமுதாயம் உணரும் காலம் வரும். காக்கா நான் இப்படி சொல்வது தங்களுக்கு போரடிக்கலாம். ஆனாலும் எப்போதும் பலஹீனர்களாகவே உள்ள நாங்கள் எங்களது வாழ்வில்அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை இது.
எல்லாம் வல்ல அல்லாஹ் பொய்யர்களின் அவதூறுகளிலிருந்து தங்களை காப்பானாக! ஆமீன்!
வஸ்ஸலாம்
இங்ஙனம்
அன்புடன்
இஸ்லாமிய சகோதரி

No comments: