Saturday, July 08, 2006

தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று.

மார்க்கத்தில் உள்ளது அல்ல.

From: Mohamed Abuthageer
To: mdfazlulilahi@hotmail.com
Subject: doubt regarding hajj of foreigners
Date: Fri, 7 Jul 2006 12:10:25 -0700 (PDT)

Assalamu alaikkum varah…

I am Mohamed, my native is madurai, Tamilnadu. I came Saudi Arabia before one year. Insha Allah I want to perform the hajj coming year. Somebody told, before four months of dulhajj, anybody not performance umrah, that people no need to give qurbani at the time of hajj performance. I want the detail of rectification of the doubt. If u cannot understand the question, please give the details rules of " hajj performance of foreign workers" ( they came for work ). Please rectify my doubt. I will expect your result.

My email id is : mthageer@yahoo.com

Vassalam.

Mohamed
Saudi Arabia
07.07.2006
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 08-07-2006

அன்புள்ள முஹம்மது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. எனக்கு இங்லீஸ் தெரியாது. தமிழில் கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

ஹஜ்ஜுக்கு செல்பவர் துல்ஹஜ்ஜுக்கு நான்கு மாதத்திற்கு முன் உம்ரா செய்யக் கூடாது. அப்படி உம்ராச் செய்தால் ஹஜ்ஜின் போது அவர் குர்பானி கொடுக்கத் தேவை இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா என்று கேட்டுள்ளீர்கள்.

இஸ்லாமிய சட்டங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில்தான் சொல்ல வேண்டும். மேற்கண்டவாறு சொல்பவர்கள் அதற்குரிய ஆதாரத்தை தர வேண்டும். அவர்களால் தர முடியாது. காரணம் அந்தக் கூற்றுக்கு குர்ஆன் ஹதீஸ்களுக்கு முரணாகவே உள்ளது.

ஹஜ்ஜுடைய கிரியைகள் துல்ஹஜ் 8முதல் 13 வரையிலான 6 நாட்கள்தான். ஆனால் அல்லாஹ் ஹஜ்ஜுக்குரிய காலம் தெரிந்த மாதங்களாகும் என திருக்குர்ஆன் 2:197இல் கூறியுள்ளான். நாட்கள் என கூறவில்லை. காரணம் ஹஜ்ஜுடைய 3 வகைகளில் ஹஜ் 'தமத்துவ்' என்பதும் ஒன்று. இந்த ஹஜ் 'தமத்துவ்' செய்பவர் உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட வேண்டும். ஹஜ்ஜுடைய நாட்கள் வந்ததும் மீண்டும் இஹ்ராம் ஆகி ஹஜ் செய்ய வேண்டும்.

இந்த 'தமத்துவ் ஹஜ்ஜை நிறைவேற்ற விரும்புபவர்கள் ஷவ்வால் மாதமே உம்ராவுக்காக இஹ்ராம் ஆகி உம்ராவை நிறைவேற்றி இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்கள். பிறகு ஷவ்வால், துல்காயிதா இரு மாதங்கள் மக்காவிலேயே தங்கி விடுவார்கள். துல்ஹஜ் வந்ததும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் ஆகி ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள். இவ்வாறு ஹஜ்ஜை நிறைவேற்றுபவர்கள் மூன்று மாதங்களை செலவிடுகிறார்கள். அதனால் ஷவ்வால், துல்காயிதா, துல்ஹஜ் ஆகிய மூன்று மாதங்களை ஹஜ்ஜுக்குரிய அறியப்பட்ட மாதங்களாக திருக்குர்ஆன் 2:197இல் அல்லாஹ் கூறியுள்ளான்.
மேலும், ரமழானில் உம்ரா செய்வது என்னுடன் ஹஜ் செய்வது போன்றதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்படி கூறியுள்ள நபி(ஸல்) அவர்கள் ரமழானில் உம்ராஜ் செய்தவர் அதற்கடுத்த மாதம் ஹஜ் செய்ய இருப்பவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஹஜ் செய்யக் கூடாது என்றும் கூறவில்லை. நீங்கள் கேட்டுள்ளது மக்களிடம் பரவி விட்ட எத்தனையோ தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. மார்க்கத்தில் உள்ளது அல்ல.

No comments: