Thursday, May 03, 2007

இமாம்களுக்கு மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 5000 ரூபாய் முஅத்தின்களுக்கு 3000 ரூபாய்

பெறுனர்:- தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜமாஅத்தார்கள்.

பொருள்:- இமாம்களுக்கும் முஅத்தின்களுக்கும் சம்பள உயர்வு அறிவித்துள்ள வக்பு வாரிய மாண்புமிகு தலைவர் வருகை.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நமது த.மு.மு.க.வின் மாநில பொதுச் செயலாளரும் வக்பு வாரியத்தின் தலைவருமான மாண்புமிகு எஸ். ஹைதர்அலி அவர்கள் இமாம்களுக்கு மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 5000 ரூபாய் எனவும் முஅத்தின்களுக்கு மாதச் சம்பளம் குறைந்த பட்சம் 3000 ரூபாய் எனவும் அறிவித்துள்ளார்கள். மேலும் இமாம்கள் முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுடைய வருமானத்துக்கு உத்திரவாதம் அளித்ததுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கல்விச் செலவுகளையும் வக்பு வாரியம் ஏற்பதாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பயன்படும் நல்ல பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். குறிப்பாக கல்வி நிலையங்கள், தொழிற்பயிற்சி கூடங்கள், தொகுப்பு வீடுகள், மாணவர் விடுதிகள், மருத்துவ மனைகள் போன்றவை வக்பு வாரியம் சார்பாக அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இவற்றில் நமது மேலப்பாளையம் பகுதிக்கு தேவையானதை அமைத்து தர வலியுறுத்தி தங்கள் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படி சிறந்த பல திட்டங்களை அறிவித்துள்ள வக்பு வாரியத்தின் தலைவர் மாண்புமிகு எஸ். ஹைதர்அலி அவர்கள் 06-05-2007 ஞாயிறு அன்று நமது மேலப்பாளையம் மாநகருக்கு வருகை தருகிறார்கள். மேலப்பாளையம் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்களை சந்திக்கும் நிகழ்ச்சி 2 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்ஷh அல்லாஹ் 06-05-2007 ஞாயிறு மாலை மஃரிபுக்குப் பின் ஞானியாரப்பா நகர் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் ஜும்ஆ பள்ளி முன்பும். இஷhவுக்குப் பின் மேலப்பாளையம் அல்லாமா இக்பால் (பசார்) திடலில் வைத்தும் நடைபெறும். மழையாக இருந்தால் புதுமனைப் பள்ளியில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும்.
இப்படிக்கு
கே.எஸ்.ரசூல் மைதீன்
குறிப்பு:-இதை ஜும்ஆவில் வாசித்து அறிவிப்பு பலகையில் ஒட்டவும்.

No comments: