Monday, July 30, 2018

சையதுஇப்ராஹீமுக்கு எதிராக அநியாயமான தீர்ப்பு வழங்கியதா TNTJ?

நாகூர் கனி கள்ள ஐடி: அஹ்மத் கபீர் ஐடி: ஹலீல் இப்ராஹீம் என்ற பெயரில் கலீல் ரசூலின் கள்ள ஐடி: அல்தாஃபி ஐடி முடக்கம்: அப்பாஸ் அலி மெயில் ஐடி முடக்கம்: ஜட்டி விளம்பரத்திற்கு என்ன பதில்? நெல்லை சகோதரர்கள் மூலம் நாம் செய்த இரு செயல்களுக்கும், சந்திக்கு வந்த சங்கதிகள் பாரீர் லுஹா உள்ளிட்டவர்கள் இதை நாம் தான் போட்டோமா என்று உயர்நிலைக்குழுவில் கேட்கும் போதும் கூட அது குறித்து மௌனமே பதில். உயிரினும் மேலான உத்தமத்தூதர் விஷயத்தில் மூன்று முக்கிய நிர்வாகிகள் மட்டும் கூடி 27.03.18 அன்று ஒரு முக்கிய முடிவெடுத்தோமே!

அது இன்றுவரை தற்போது உயர்நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் உங்களில் ஒரேயொரு நிர்வாகியைத் தவிர யாருக்கும் தெரியாது.

தவ்ஹீதை அறிய வந்த ததஜ பெண்கள் மதரஸா மாணவிகள் உஸ்ததாக்கள் என எல்லா குடும்பத்துப் பெண்களையும் விபச்சாரிகளாக ஆக்கியவனுக்கு எதிராக கொதித்து எழாத ததஜக்களே    சையது இப்ராஹிம் தனக்கு என வந்த உடன் கொதித்து கொட்டி உள்ளதைப் பாரீர். ததஜவின் கேடுகெட்ட  தலைமையின் கள்ள ஐ.டி. காம லீலைகளைப் பாரீர். அஹ்மது கபீர் என்பது ததஜ தலைமையிலிருந்துதான் வருகின்றது என்று நான் சொன்னபொழுது ஏற்க மறுத்தவர்களே! செய்யது இபுறாஹீம் போட்டு உடைக்கிறார் பாருங்கள்.  

பீ.ஜே. குலசை மம்மது பாத்து மாஸ்கான்சாடி ரம்ஜான் இன்னும் வெளியிடப்படாத ஆடியோக்களில்  பேசியதைவிட அசிங்கமாக எழுதியவர்கள்தான் அஹ்மது கபீர். இவர்கள் தலைமை நிர்வாகிகள் என்றால். அத்தனை பேருமே விபச்சாரகர்கள்தான் என்பது  தெளிவாகி விட்டது. 

இனியும் விபச்சாரகர்களையும் அதற்கு துணை நின்றவர்களையும் போலீஸில் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சிக்காத  ததஜ தொண்டர்களின் ஒவ்வொரு குடும்பத்தவருக்கும் எதிராக உன் சாபத்தை இறக்கு என்று என்னைப் படைத்த அல்லாஹ்விடம் துஆச் செய்தவனாக அந்தக் கடிதத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

# சையதுஇப்ராஹிம் # கடிதம்

“எனக்கு எதிராக அநியாயமான தீர்ப்பு வழங்கிய உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு எதிராகவும் அனுதினமும் தொழுகையில் என்னைப் படைத்தவனிடம் துஆச் செய்து வருகின்றேன்!”

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம் எழுதிக் கொள்வது…
ரியாத் மைதீன் விவகாரத்தில் என்மீது உயர்நிலைக்குழு எடுத்த நடவடிக்கை முடிவை அறிந்தேன்.

நான் மரணிக்கும் வரை மாநில நிர்வாகாத்திற்கும், உயர்நிலைக்குழுவிற்கும் வரக்கூடாது.
ஐந்து ஆண்டுகளுக்கு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகத்திற்கும் கூட வரக்கூடாது.
ஒருவருட காலம் தாவா பணி செய்ய தடை என்ற உங்களது அநியாயமானத் தீர்ப்பை அறிந்து வேதனை அடைந்தேன்.

இதை மாவட்டங்களுக்கு அறிவிப்புச் செய்து, கிளைகளுக்கும் இந்த செய்தி பரவி வரும் நிலையில், “நீங்கள் விபச்சாரக் குற்றம் ஏதும் புரிந்தீர்களா? அல்லது பொருளாதார மோசடி செய்தீர்களா?

ஏன் இந்த அளவிற்கு பாரதூரமான தீர்ப்பை உங்கள் விஷயத்தில் சொல்லியுள்ளார்கள் என்று பல சகோதரர்கள் கேட்கும் கேள்வியால் மனம் வெதும்பிய நிலையில், கூனிக்குறுகிப் போய் இந்த மெயிலை அனுப்புகின்றேன்.

ரியாத் மைதீன் என்ற போலி முகவரி மூலமாக அல்தாஃபி செய்த கேவலச் செயலை அதன் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வந்ததற்காகவா இவ்வளவு பெரிய தண்டனை?

எனது விஷயத்தில் நான் செய்த ஒரு செயலுக்காக இதுபோன்றதொரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக, “கள்ள ஐடி வழியாக இதுபோன்ற செய்திகளை இதற்கு முன்னதாக மாநில நிர்வாகம் எதுவும் பரப்பியதே இல்லையா?”

உயர்நிலைக்குழுவில் உள்ள மற்ற நிர்வாகிகளுக்குத் தெரியாமல் நம்மில் சில நிர்வாகிகள் மட்டும் பல வேலைகளை ஜமாஅத்தின் நலன் கருதி தனியாக செய்ததே இல்லையா?” என்பதை ஒரு கனம் உங்களது உள்ளங்களில் அசைபோட்டுப் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய அநியாயமான முடிவை எனக்கு எதிராக எடுத்திருக்கமாட்டீர்கள்.

கடந்த 20.05.18 அன்று திருச்சியில் நடந்த மாநிலச் செயற்குழுவில், “இனிமேல் கள்ள ஐடிகள் மூலம் செய்யப்படும் இரண்டாம் நம்பர் வேலைகள் மாநில நிர்வாகத்தால் செய்யப்படாது என்றும் ஹிக்மத் என்ற பெயரில் இதற்கு முன்னதாக நாம் செய்து வந்த செயல்பாடுகள் இனி தொடராது” என்றும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய தேதி வரை ஜமாஅத்தின் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.

உயர்நிலைக்குழு உறுப்பினர்களாலும், மாநில நிர்வாகத்தாலும் நேரடியாக செய்ய முடியாத காரியங்களை மற்றும் சொல்ல முடியாத செய்திகளை வேறு ஆட்களை வைத்து மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியாத வண்ணம், மறைமுகமாக செய்வதும், கள்ள ஐடிகளை உருவாக்கியும், அல்லது கள்ள ஐடிக்களுக்கு தகவல் கொடுத்தும் எழுத வைப்பதையும், நிர்வாகத்தில் இல்லாத மற்ற நபர்கள் மூலமும், நமது ஆதரவாளர்கள் மூலமும் வேறு பெயர்களில் செய்திகளை சொல்வதும் சரி தான் என்ற கொள்கை முடிவை நாம் அனைவரும் எடுத்திருந்தோம்.

அதையே பல விஷயங்களில் கடைப்பிடித்தும் வந்திருந்தோம்.

கள்ள ஐடி வேலை வேண்டாம் என்று நாம் என்றைக்கு மாநிலச் செயற்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தோமோ அதன் பிறகுதான் அது நமது நிர்வாக ரீதியாக தவறான செயலாக அறிவிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய தேதிவரை இந்த வேலைகள் அனைத்தும் தாரளமாகச் செய்யலாம் என்பதை நமது நிர்வாக நிலைப்பாடாகவும், கொள்கை முடிவாகவும் எடுத்திருந்தோம்.

அந்த முடிவின் அடிப்படையில் பல செயல்களை பலருக்கும் தெரியாமல் செய்திருக்கிறோம். அது நிர்வாக அடிப்படையில் தவறல்ல என்பதை நாமும் ஒப்புக் கொண்டும் இருக்கின்றோம்.

தற்போது ரியாத் மைதீன் விவகாரத்தில் என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது மாநிலச் செயற்குழுவில் நாம் எடுத்த முடிவிற்கு முன்னதாக சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு செய்த செயல். அதை மிகப்பெரிய குற்றமாக சித்தரித்து உயர்நிலைக்குழு எடுத்துள்ள முடிவு சரியா என பதில் சொல்லுங்கள்.

இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னதாக மாநில நிர்வாகம் செய்த சில செயல்களை மட்டும் இங்கு நான் பட்டியலிடுகின்றேன்.

இவற்றுக்கெல்லாம் உங்களது பதிலை ரியாத் மைதீன் விவகாரத்தில் எனக்கு எடுத்த நடவடிக்கை போல இவைகளுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாமல் ஏன் விதிவிலக்கு வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்கு பதில் சொல்லுங்கள்.

உங்களது நினைவுகளை அசைபோட்டுப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாம் செய்தவைகளில் ஒரு சில செய்திகளை மட்டும் பட்டியலிடுகின்றேன்.

இவைகளை சக மாநில நிர்வாகிகளுக்கே தெரியாமல், அல்லது சக உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் தெரியாமல் அல்லது மாவட்ட கிளை நிர்வாகிகள் எவருக்குமே தெரியாமல் நாம் செய்த இந்த செயல்களுக்கு என்ன தண்டனையை உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளப்போகின்றீர்கள் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அஹ்மத் கபீர் ஐடி:
மாநிலத் தலைமையால் அதற்கென்றே ஒரு நபரை நியமித்து இயக்கப்பட்டதுதான் அஹ்மத் கபீர் ஐடி.

அந்த அஹ்மத் கபீர் ஐடியுடன் ஒப்பிடும் போது ரியாத் மைதீன் என்பது லட்சத்தில் ஒரு பங்குதான்.

அந்த அளவிற்கு அஹ்மத்கபீர் ஐடியில் பல செய்திகளை எழுதியுள்ளோம்.
ஒரு பக்கம் அஹ்மத் கபீர் ஐடிக்கும் மாநிலத் தலைமையகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஃபேஸ்புக்கில் அறிவிப்பும் செய்துவிட்டு, மறுபக்கம் அதற்காக நியமிக்கப்பட்ட நபர் மீது எக்மோர் சாதிக் அவர்கள் கவனம் செலுத்துவார்.

கடந்த மாதம் வரை கள்ள ஐடியில் எழுதுவதை எக்மோர் சாதிக் அவர்கள் கண்காணித்து கவனித்து வந்தாரே!

திருவாரூர் அப்துர்ரஹ்மான் தான் அஹ்மத் கபீர் என எதிரிகள் பரப்பிய போதும் கூட வாய்மூடி மௌனம் காத்தோம். உண்மையை உலகிற்குச் சொல்லவில்லை.

அஹ்மத் கபீர் கள்ள ஐடியில் எழுதுவதற்கு மாநிலத்திலிருந்து செய்திகளைக் கொடுத்தோம் என்பதை மாநிலச் செயற்குழுவிலேயே அறிவித்தோமே!

ரியாத் மைதீன் விவகாரத்திற்காக எனக்கு ஆயுட்காலத் தடை என்றால் அதைவிட பல மடங்கு பெரிய அஹ்மத் கபீர் ஐடி விவகாரத்தில் அனைத்தையும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் மறைத்த உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?

ஒட்டுமொத்த உயர்நிலைக்குழுவிற்கும் ஆயுட்காலத்தடையா? என்பது குறித்து எனக்கு விளக்கமளியுங்கள்.

சக மாநில நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்தாததுதான் என் மீதான குற்றம் என்றால் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களை கடந்த செயற்குழுவிலும் கூட அஹ்மத் கபீர் குறித்த முழு உண்மைகளை அவர்களுக்குச் சொல்லாமல் மறைத்து முட்டாள்களாக்கினோம் என்று சொல்ல வருகின்றீர்களா?

10 நபர் அதை இயக்கியதாக அறிவித்தோமே!
அந்த 10 நபர்களுக்கும் இதுபோன்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?
இதை ஆமோதித்து வழிகாட்டிய உயர்நிலைக்குழுவிற்கு என்ன தண்டனை?
இந்த செயலுக்கு உங்களுக்கு நீங்களே என்ன தண்டனை வழங்கிக் கொள்ளப்போகின்றீர்கள்? என்பது குறித்து எனக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.

நாகூர் கனி கள்ள ஐடி:
நாகூர் கனி கள்ள ஐடிக்கு கோவை ரஹ்மத்துல்லாஹ் தகவல் கொடுத்து வந்தார்.
அவருடைய வழிகாட்டுதலின் பெயரிலேயே பல ஆக்கங்கள் அதில் எழுதப்பட்டன.

இது குறித்து லுஹா அவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட போதும் கூட அதை நான் வெளிப்படுத்தவில்லை.
நாகூர் கனி ஐடி விவகாரத்தில் ரஹ்மத்துல்லாஹ்விற்கும் ரியாத் மைதீனுக்கு எடுத்த அதே முடிவை அறிவிக்கப்போகின்றீர்களா?

நாகூர் கனி ஐடிக்கு கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரைக்கும் தகவல் கொடுத்த விஷயம் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்றளவும் கூட தெரியாதே!

சக நிர்வாகிகளிடம் மறைத்த அதே குற்றத்திற்கு அவரும் ஆளாகப்போகின்றாரா?

ரியாத் மைதீன் பெயரில் நான் செய்த விவகாரம் முற்றுப்பெற்றுவிட்டது. நாகூர் கனி ஐடி இன்றளவும் தொடர்ந்து கொண்டு உள்ளது. மாநிலச் செயற்குழுவில் இனி கள்ள ஐடி பிரச்சாரம் கிடையாது என்று அறிவித்த பிறகும் நாகூர் கனி ஐடி தொடருகின்றதே!

இதற்கு உங்கள் பதில் என்ன?
குமரி ஜலீல் மூலம் செய்த செட்டிங் வேலைகள்:
ரியாத் மைதீன் கள்ள ஐடியில் எழுதிய செய்தியை ரஹ்மத்துல்லாஹ் குமரி ஜலீல் என்பவருக்கு அனுப்பி பரப்பச் சொன்னதை மைசூர் தர்பியாவில் அறிவிப்புச் செய்திருந்தோம்.

அது குறித்து குமரி ஜலீல் ரஹ்மத்துல்லாஹ்வை இன்றைக்கும் முபாஹலா செய்ய அழைத்துக் கொண்டிருக்கின்றார்.

ரஹ்மத்துல்லாஹ் ஜலீலுக்கு அனுப்பிய மெஸ்ஸேஜை – ஜலீல் என்பவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்காட்டுவதுதான் பிரச்சினையே என்று நான் பலமுறை சுட்டிக்காட்டினேனே!

ரியாத் மைதீன் பெயரில் வந்த செய்தியை பரப்பிய ரஹ்மத்துல்லாஹ்விற்கு என்ன தீர்ப்பு வழங்கக் காத்திருக்கின்றீர்கள்.
நானும் ரஹ்மத்துல்லாஹ்வும் அல்தாஃபி குறித்த செய்திகளை பொதுக்குழுவிற்கு முன்னரே பலரிடம் சொல்லியுள்ளோம் என மேலாண்மைக்குழுவிற்கு நாங்கள் இருவரும் இணைந்து எழுதிய கடிதத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தோமே!

அதற்கு என்ன நடவடிக்கை தீர்ப்பு வழங்கப்போகின்றீர்கள்?

பொதுக்குழுவில் நாம் நினைப்பதுபோல கருத்துக்கள் வரவழைப்பதற்காக கோவை ரஹ்மத்துல்லாஹ் மூலம் ஜலீலை வைத்து சில நபர்களை செட்டிங் செய்ததற்கும் இதே நடவடிக்கை பாயுமா?

இதை மாநில செயற்குழுவில் அறிவிப்புச் செய்த பிறகு நடந்த குற்றப்பட்டியலில் இணைக்கப்போகின்றீர்களா? இல்லை இதுவெல்லாம் முன்பே நடந்த விஷயங்கள் என விளக்கம் கொடுக்கப்போகின்றீர்களா?
பதில் சொல்லுங்கள்.

ஹலீல் இப்ராஹீம் என்ற பெயரில் கலீல் ரசூலின் கள்ள ஐடி:
ஹாமீம் இப்ராஹீம் என்பவர் வட்டி வங்கியில் ஆவணக் காப்புப்பிரிவில் வேலை செய்து வருவதாக வந்த புகாருக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தாவா பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இது அபுதாபி மண்டலத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலாண்மைக்குழு உறுப்பினர் கலீல் ரசூல் அவர்கள் “ஹலீல் இப்ராஹீம்” என்ற தனது கள்ள ஐடியில் ஹாமீம் இப்ராஹீம் மீதான நடவடிக்கை குறித்தும், அவர் ஒரு நயவஞ்சகர் என்றும் அல்தாஃபியுடன் கூட்டில் உள்ளார் என்றும் எழுதி பரப்பினாரே!

20.05.18 அன்று மாநிலச் செயற்குழுவில் இனிமேல் கள்ள ஐடி கலாச்சாரம் கிடையாது; அது ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்புச் செய்த பிறகு கலீல் ரசூல் அவர்கள் ஹாமீம் இப்ராஹீம் விஷயத்தை தனது கள்ள ஐடியில் பரப்பி ஹாமீம் இப்ராஹீமை அம்பலப்படுத்தினார்.

ரியாத் மைதீன் பெயரில் நான் அல்தாஃபியை அம்பலப்படுத்தியது போல, ஹலீல் இப்ராஹீம் என்ற கள்ள ஐடியில் ஹாமீம் இப்ராஹீமை அம்பலப்படுத்தினார் கலீல் ரசூல்.

இந்த செய்தியை ஹாமீம் இப்ராஹீமே தலைமை நிர்வாகிகளுக்கு எடுத்து அனுப்பிய நிலையிலும் அதை அவருக்குத் தெரியாமல் மறைத்தோம். மக்கள் கண்ணிலும் மண்ணை தூவினோம்.

இவையெல்லாம் மாநில செயற்குழுவிற்குப் பிறகு நடந்தவை.
மாநிலச் செயற்குழுவில் இனிமேல் ஹிக்மத் கிடையாது; கள்ள ஐடி கிடையாது என அறிவிப்புச் செய்த பிறகு கடந்த 27.05.18 அன்று இரவு இது குறித்து ஹாமீம் இப்ராஹீம் மாநில நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப்பில் அந்த செய்தியை அனுப்புகின்றார்.

அப்போதும் கூட அந்த கள்ள ஐடி கலீல் ரசூல் உடையதுதான் என்பது யாருக்கும் தெரியாது. லுஹா உள்ளிட்டவர்கள் இதை நாம் தான் போட்டோமா என்று உயர்நிலைக்குழுவில் கேட்கும் போதும் கூட அது குறித்து மௌனமே பதில்.

அதன் பிறகு 30.05.18 அன்றுதான் இது நல்ல ஐடியும் இல்லை; கள்ள ஐடியும் இல்லை; என்னுடைய நொள்ள ஐடி என கலீல் ரசூலிடமிருந்து பதில் வந்தது.
கள்ள ஐடி கூடாது என மாநில செயற்குழுவிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிப்புச் செய்த பிறகும் நொள்ள ஐடியில் எழுதியதற்காக கலீல் ரசூல் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரியாத் மைதீன் செய்ததைவிட பல மடங்கு ஹலீல் இப்ராஹீம் கள்ள ஐடியின் செயல் நிர்வாக கட்டமைப்பை மீறிய செயல் என்பதை சிந்தித்தீர்களா?

மாநிலச் செயற்குழுவில் அறிவிப்புச் செய்யப்பட்ட கள்ள ஐடி கலாச்சாரம் ஒழிந்துவிட்டது என்ற அறிவிப்பு கலீல் ரசூல் அவர்களின் நொள்ள ஐடி மூலம் பெருநாளைக்குப் பிறகும் தொடர்ந்ததே!
இதற்கு உங்கள் பதில் என்ன?

அல்தாஃபி ஐடி முடக்கம்:
முபாஹலா செய்ய இருந்த ஒரு சில தினங்களுக்கு முன்னதாக அல்தாஃபியின் ஃபேஸ் புக் ஐடி முடக்கப்பட்டது.

இதுவும் இன்னும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
இதிலே என்ன தீர்ப்பு வழங்கக் காத்திருக்கின்றீர்கள்?

அப்பாஸ் அலி மெயில் ஐடி முடக்கம்:
இதுபோலவே அப்பாஸ் அலியின் மெயில் ஐடியும் முற்றிலுமாக முடக்கப்பட்டது.

அவரது பாஸ்வேர்ட் தெரிந்த ஒரு முக்கிய நபரால் தான் இது நடந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட அப்பாஸ் அலி தனது மெயில் ஐடியை முடக்கியவரை மோசடிக்காரர் என்று சொல்லி அவருக்கு எதிராக துஆ செய்தார்.

அந்த முக்கிய நபர் மீதும் இதே நடவடிக்கை பாயுமா?
அவருக்கும் எனது நிலைதான் கதியா?

வரம்புமீறி ஆட்டம் போடுபவர்களுக்கு சில பதிலடிகளை வழங்கியுள்ளோம்.
அது பல உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது.

தற்போதைய மாநிலப் பொதுச் செயலாளர் தவ்ஃபீக் அவர்கள் செய்த விஷயம் அப்போது தணிக்கை குழு தலைவராக இருந்த எனக்கும் கூட தெரியவில்லை.
அந்த செயலுக்கும் இதே தண்டனையை தற்போது அறிவிக்கப்போகின்றீர்களா?

அதுபற்றி தெரிந்தும் தற்போது வரை சக நிர்வாகிகளுக்கு மறைத்து வரும் இதர உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு நீங்கள் என்ன தண்டனையை வழங்கப்போகின்றீர்கள்?

நெல்லை சகோதரர்கள் மூலம் நாம் செய்த இரு செயல்களுக்கும், தேனீ கொட்டிய விஷயத்திற்கும் அதைச் செய்த, ஆமோதித்த உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் என்ன தண்டனை வழங்கப்போகின்றீர்கள்.

யூசுப் அலி அவர்களை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு பழி கொடுக்கப்போகின்றீர்களா? அதற்காக நமது உடல் - பொருள் - ஆவியெல்லாம் செலவழிக்கப்பட்டதே!

அது சக நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியுமா?

அல்லது அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்குமாவது தெரியுமா?
அதை மறைத்த குற்றத்திற்காக யாரை தண்டிக்கப்போகின்றீர்கள்?
ரியாத் மைதீன் விவகாரத்தோடு ஒப்பிட்டால் இவற்றையெல்லாம் தற்போதும் மறைத்து வைத்திருப்பது மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா?(உங்கள் பார்வையில்)
இதற்கு என்ன தீர்ப்பு வழங்கப்போகின்றீர்கள்?.

ஜட்டி விளம்பரத்திற்கு என்ன பதில்?

அதற்கும் ஒரு நபர் தான் பழிகடாவா? அல்லது ஒட்டுமொத்த உயர்நிலைக்குழுவிற்கும் ஆயுட்காலத்தடை விதிக்கப் போகின்றீர்களா?
பதில் சொல்லுங்கள்.

மேற்கூறப்பட்ட இவற்றையெல்லாம் செய்ய வழிகாட்டிய, மூளையாக செயல்பட்ட, அதை ஆமோதித்து அமைதிகாத்த அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் மீதும்,

என் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைவிட கூடுதலான நடவடிக்கையை அல்லவா அறிவிக்க வேண்டும்.

எனக்கு எதிராக அநியாயமான முடிவை எடுத்த உங்களுக்கு மேற்கண்ட செயல்களையெல்லாம் நாம் அனைவரும் ஒன்றுகூடி செய்துள்ளோமே! இவற்றையெல்லாம் கொள்கை முடிவாக, ஜமாஅத்தின் நிர்வாக நிலைப்பாடாக எடுத்து செயல்படுத்தியுள்ளோமே! இத்தகைய செயல்பாடுகளை செய்த நாம் அதோடு ஒப்பிடும்போது அற்பத்திலும் அற்பமான ரியாத் மைதீன் விவகாரத்திற்காக இவன் மீது இப்படிப்பட்ட ஒரு அநியாயமான தீர்ப்பை சொல்லலாமா? அது தவறல்லவா? என்று ஏன் உங்கள் உள்ளம் உறுத்தவில்லை.

உங்கள் அனைவரது உள்ளமும் என் விஷயத்தில் முடிவெடுக்கும் போது பாறை போல இறுகிவிட்டதா?

அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
உயிரினும் மேலான உத்தமத்தூதர் விஷயத்தில் மூன்று முக்கிய நிர்வாகிகள் மட்டும் கூடி 27.03.18 அன்று ஒரு முக்கிய முடிவெடுத்தோமே!

அது இன்றுவரை தற்போது உயர்நிலைக்குழுவில் அங்கம் வகிக்கும் உங்களில் ஒரேயொரு நிர்வாகியைத் தவிர யாருக்கும் தெரியாது.

இதற்கும் அந்த நிர்வாகி மீது இதே நடவடிக்கை தானா?
அல்லது இதைவிட கூடுதல் தண்டனை வழங்கப்படுமா?

நாம் அனைவரும் சேர்ந்து செய்த மேற்கண்ட காரியங்கள் அனைத்தும் மலைபோன்றது; நான் மட்டும் தனித்துச் செய்தது மடு போன்றது. ஆனால் இவை அனைத்தையுமே நாம் கொள்கை முடிவின் அடிப்படையில் ஜமாஅத்தின் நலன் கருதி தான் செய்தோம்.
அதுபோலதான் ரியாத் மைதீன் விவகாரத்தையும் ஜமாஅத்தின் நலன் கருதி அல்தாஃபி என்ற துரோகியை அம்பலப்படுத்துவ
தற்காகவே செய்தேன்.

இதுவெல்லாம் இனி செய்யமாட்டோம் என்று எப்போது அறிவித்தோமோ அவ்வாறு அறிவித்த பிறகு இதைச் செய்தால்தான் அது குறித்து கேள்வி கேட்க முடியும். அதன் பிறகு செய்வதுதான் குற்றமாகும் என்ற ஒரு அடிப்படை அறிவுகூடவா உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது?
மடுவுக்கே இந்த தண்டனை என்றால் மலைக்கு என்ன தண்டனை என்பதை சிந்தித்திருந்தால் இப்படிப்பட்ட அநியாயமான முடிவை துணிந்து எடுத்திருக்கமாட்டீர்கள்.

மேற்கண்ட இரண்டாம் நம்பர் வேலைகளில் பெரும்பாலானவைகளை நம்மில் சிலர் சிலருக்குத் தெரியாமல் செய்துள்ளோம்.

அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிந்தோ அல்லது தெரியாமலோ பல செயல்கள் செய்யப்பட்டுள்ளன.
ரியாத் மைதீன் என்ற பெயரில் நான் மட்டும் தனித்துச் செய்த செயலை உங்களுக்கு தெரியப்படுத்தாதது மட்டுமே இதில் என் மீது நீங்கள் குறைசொல்ல தகுமானது.
ஒரு வருட தாவாவிற்கு தடை; ஐந்து ஆண்டு கிளை மாவட்டத்திற்குத் தடை; மாநில நிர்வாகத்திற்கு ஆயுட்காலத்தடை என்பதெல்லாம் நாம் ஏற்கனவே எடுத்த கொள்கை நிலைப்பாட்டிற்கு மாற்றமாக உங்களது இஷ்டப்படி எடுத்து எனக்கு அநியாயம் இழைத்துள்ளீர்கள் என்பதை சுட்டிக்காட்டத்தான் மேற்கண்ட செய்திகளை நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

கடந்த கால நமது செயல்பாட்டோடு ஒப்பிட்டால் ரியாத் மைதீன் விவகாரம் என்பது ஒரு விஷயமே அல்ல என்பதை சுட்டிக்காட்டத்தான் ஒரு சில உதாரணங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன்.

இதைவிட இன்னும் பற்பல மடங்கு இதுபோன்ற வேலைகளை நாம் கடந்த காலங்களில் செய்துள்ளோம். அதையெல்லாம் எழுதினால் பக்கங்கள் போதாது. அவைகளில் பீஜே அல்தாஃபி யூசுபிற்கும் மட்டும் தெரிந்தவை என்று இன்னும் பல பட்டியல் உள்ளது. அவர்களெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் என்பதால் அவை பற்றியெல்லாம் இங்கு குறிப்பிடவில்லை.

கலீல் ரசூலும், தவ்ஃபீக்கும் ஹிக்மத்தில் கரைகண்டவர்கள் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

என்னைப்பற்றி புகார் வந்ததால் தான் இத்தகைய நடவடிக்கை என்று சொல்வீர்களேயானால், வந்த புகாருக்காகத்தான் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துவிட்டீர்களே!

மேற்கொண்டு எடுக்கும் நடவடிக்கை யாரை திருப்திப்படுத்த?
சக உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு ரியாத் மைதீன் விவகாரத்தை வெளிப்படுத்தாததுதான் என் மீதான பாரதூரமான குற்றம் என்றால்,
நாம் செய்த பல வேலைகள் இன்றளவும் நம்மில் பல நிர்வாகிகளுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளதே!
இப்போது இந்த நிமிடம் வரை பல விஷயங்களை மறைத்து வரும் அவர்கள் மீது என்ன நடவடிக்கை?
நம்மில் பல உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாததுதான் நான் செய்த குற்றம் என்றால் நமது உயர்மட்ட அதிகார அமைப்பாக விளங்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இவை அனைத்தும் இதுபோன்று நாம் செய்த இன்னும் பல வேலைகள் மறைக்கப்பட்டுள்ளதே!

அப்படியானால் அவை அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்கப்போகின்றீர்களா?

எனக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் போன்றதோ அல்லது அதைவிட இன்னும் கூடுதலாகவோ தண்டனைகளை உங்களுக்கு நீங்களே அறிவித்துக் கொள்ளப் போகின்றீர்களா?
இப்படி தண்டனைகளை அறிவித்தால் உயர்நிலைக்குழுவில் யாரும் மிஞ்சுவார்களா?
ஏன் இந்த முரண்பாடு?
தயவு செய்து எனக்கு பதிலளித்து உங்களது முரண்பாடுகளுக்கு விளக்கமளியுங்கள்.

இவ்வளவு செயல்பாட்டையும் அனைவரும் சேர்ந்து செய்துவிட்டு, அனைத்தையும் இதற்கு முன்னதாக சரிகண்டுவிட்டு, தற்போது ரியாத் மைதீன் விவகாரத்தில், “எனக்கு எதிராக அநியாயமான தீர்ப்பு வழங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கு எதிராகவும் அனுதினமும் தொழுகையில் என்னைப் படைத்தவனிடம் துஆச் செய்து வருகின்றேன்.

”இறைவா! எனக்கு அநியாயமிழைத்த இவர்களை நீயே பார்த்துக் கொள்” என்று இரவின் கடைசி நேரங்களில் துஆ செய்து கொண்டு இருக்கின்றேன்.

அஹ்மத் கபீர் ஐடிக்கு உங்கள் பதில் என்ன?

நாகூர் கனி ஐடி தற்போதும் தொடர்கின்றதே! உங்கள் பதில் என்ன?
மாநிலச் செயற்குழுவிற்கு பிறகு எழுதப்பட்ட,
ஹலீல் இப்ராஹீம் என்ற கலீல் ரசூலின் கள்ள ஐடிக்கு உங்கள் பதில் என்ன?
ஜலீலை வைத்து பரப்பிய மற்றும் செட்டிங் செய்த செயல்களுக்கு உங்கள் பதில் என்ன?
தவ்ஃபீக், யூசுப் அலி உள்ளிட்டோர் செய்த செயல்பாடுகளுக்கு பதில் என்ன?
அல்தாஃபி, அப்பாஸ் அலி ஐடி முடக்கப்பட்டதற்கு என்ன பதில்?
மேற்கண்ட எனது கேள்விகளுக்கு விளக்கம் தாருங்கள்.

நீங்கள் செய்தது முரண்பாடு அல்ல என்பதை எனக்கு விளக்குங்கள். உங்கள் விளக்கம் நீதி நியாயத்தின் அடிப்படையில் இருந்தால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன்.

விளக்கமளிக்க மறுத்தால் இப்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் எதிராக என்னைப் படைத்தவனிடத்தில் கையேந்தி வருவதைவிட இன்னும் பலமடங்கு உங்கள் அநீதிக்கு எதிராக கையேந்துவேன். இறைவா! இவர்களை நீயே பார்த்துக் கொள்!

எனக்குச் செய்த அநியாயத்திற்காக உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் படைத்த இறைவனிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இப்படிக்கு,
உங்களால் அநியாயமிழைக்கப்பட்ட
எம்.எஸ்.சையது இப்ராஹீம்

பொது மக்களே! அநியாயத்திற்கு எதிராக கிளம்பாத ததஜ தொண்டர்களின் ஒவ்வொரு குடும்பத்தவருக்கும் எதிராக யா  அல்லாஹ் உன் சாபத்தை இறக்கு என்று  மன்றாடுங்கள்.

No comments: