Saturday, May 20, 2006

தமிழில் தொழுகை

உலகளாவிய மார்க்கத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது.

அன்புள்ள பசுலுள் இலாஹி அவர்களுக்கு எனது நண்பர் புகாரியின் கேள்விஙைதங்களுக்கு அனுப்பியுள்ளேன்.. தயவுசெய்து தகுந்த பதிலை தாருங்களேன்.
அன்புடன்.
ரசிகவ் ஞானியார்
---------- Forwarded message ----------From: Asan Buhari <buhari@gmail.com>Date: May 16, 2006 3:56 AM Subject: Re: A Prostitute (SALMA) and TMMKTo: ரிஷி ரிஸ்வான் <msmrishi@gmail.com>Cc: Mujib <mujibudeen@gmail.com>, sadayan sabu < sadayan.sabu@gmail.com>, "A.R. ZAREENA" <rzareena@gmail.com>, Asif Meeran AJ , Abul <abulfasal@gmail.com>, JAZEELA BANU <sjazeela@gmail.com>, gnaniyar rasikow mailto:rasikow@gmail.com

அன்பின் ரிஸ்வான்,
அமைதியும் அன்புமே ஆளட்டும் (அஸ்-அலை) எனக்கென சில எதிர்பார்ப்புகள் உண்டு. ஏனோ இவ்வேளையில் அதைச் சொல்ல வேண்டுமென விழைகிறேன்.
1. தொழுகை தமிழில் இருக்கவேண்டும்
2. ஒருவனுக்கு ஒரு மனைவி போதும். நாலு மனைவி சரியென்றால் நாலு கணவன்சரியென்று ஆகவேண்டும்.
3. ஓர் ஆணைப்போல ஒரு பெண் சாட்சி சொன்னால் அது செல்லுபடியாகவேண்டும்
4. ஆணைப்போல அனைத்தையும் பெண்ணும் கற்கவேண்டும்
5. ஆணின் சொத்துரிமைபோல பெண்ணுக்கும் வேண்டும்
6. பெண் படுக்கையறையில் தனக்கு விருப்பமில்லை என்று சொன்னால் அவள்நரகத்துக்குச் செல்லக்கூடாது.
7. சொர்க்கத்தில் கவர்ச்சியான வாலிபர்கள் ஆண்களுக்குக் கிடைப்பார்கள்என்று இருத்தல் கூடாது.
8. சொர்க்கத்தில் ஏழு கன்னியர் காத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுதல் கூடாது.
9. ஆணும் பெண்ணும் அறிவிலும் அன்பிலும் பண்பிலும் உரிமையிலும் இணையானவர்கள் என்பதை ஏற்கவேண்டும்.
10. காபிர்கள் என்று கேவலமாக எவரையும் எண்ணுதல் கூடாது.
அன்புடன் புகாரி
உலகளாவிய மார்க்கத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 20-05-2006

உலகளாவிய மார்க்கத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது.

கண்ணியத்திற்குரிய ஞானியார் அவர்கட்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உங்கள் நண்பர் புகாரியின் கேள்விகளுக்கு பதில் தரும்படி எழுதி அவரது மெயிலை பார்வேடு செய்திருந்தீர்கள். இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது அரிது என்றிருந்தது. அது ஒரு காலம். இறையருளால் இப்பொழுது ஏராளமான இஸ்லாமிய இணைய தளங்கள் வந்து விட்டன. அவற்றில் பல்வேறு விதமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் விளக்கங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் பதில் தரும்படி நீங்கள் எனக்கு எழுதியுள்ளதால் எனக்குத் தெரிந்த விளக்கங்களை விரிவாகவே தருகிறேன். இன்ஷhஅல்hஹ்.

நடை முறைக்கு சாத்தியமாகாது.

சகோதரர் புகாரி அவர்கள் எழுதியுள்ள 10 விஷயங்களை அவர் கேள்விகள் என்று குறிப்பிடவில்லை. 10 விஷயங்களையும் அவரது எதிர் பார்ப்புகள் என்றே குறிப்பிட்டுள்ளார். கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள் புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ள மாதிரியான எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும் அவரவர் வாழும் சூழ்நிலைகளால்தான் ஏற்படுகின்றன. கைர். சகோதரர் புகாரி அவர்களின் 1.ஆவது எதிர் பார்ப்பான் ''தொழுகை தமிழில்தான் இருக்க வேண்டும்'' என்பதை எடுத்துக் கொள்வோம். இது போன்றவற்றை படிப்பதற்கும் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் நடை முறைக்கு சாத்தியமாகாது.

தாய் (தமிழ்) மொழியை தொழுகையில் மட்டும் ஏன் தவிர்க்கிறது?

இஸ்லாம் கூறும் வணக்கங்களில் தொழுகையில் மட்டும்தான் தாய் (தமிழ்) மொழி தவிர்க்கப்படுகிறது. மற்றபடி வேண்டுதல்கள் (பிரார்த்தனைகள்) யாவையும் தாய் (தமிழ்) மொழியில் கேட்க தடை இல்லை. இன்னும் சொல்லப் போனால் சில வேண்டுதல்களை தாய் (தமிழ்) மொழியில்தான் கேட்க வேண்டும் என்கிறது இஸ்லாம். அப்படிப்பட்ட இஸ்லாம் தாய் (தமிழ்) மொழியை தொழுகையில் மட்டும் ஏன் தவிர்க்கிறது? சிந்தித்தால் விளங்கலாம்.

மளையாளிகளுக்கு வடத்தே இடத்தே என கூற வேண்டும்.

உதாரணத்திற்கு இந்திய ராணுவத்தை எடுத்துக் கொள்வோம். இந்தியாவின் ராணுவத்தில் தமிழர்களுக்கு தமிழில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தால் மளையாளிகளுக்கு மளையாளத்தில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்று மளையாளிகளும் எதிர்பார்ப்பார்கள். எனவே இந்த எதிர்பார்ப்பையும் ஏற்கத்தான் வேண்டும். இதை ஏற்றால் லெப்ட் ரைட் என்று கூறாமல் தமிழர்களுக்கு வலது இடது என கூற வேண்டும். மளையாளிகளுக்கு வடத்தே இடத்தே என கூற வேண்டும். இப்படியே போனால் நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் வரும்.

மொழி வாதம் பேசியே நின்று விடும்.

அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் என்ற பெயரில் ராணுவ ஆணைகளை அமைத்தால் என்ன ஆகும்? ஒரு தலைமையின் கீழ் ஓர் ஆணையின் கீழ் இல்லாத இப்படி உருவாக்கப்பட்ட ராணுவம் போர் களங்களுக்கு சென்றால் என்ன ஆகும்? அனைத்து மொழிகளிலும் ஆணைகளை சொல்லி முடிப்பதற்குள் எதிரி நாட்டு ராணுவம் நம் நாட்டுக்குள் புகுந்து விடும். அல்லது போர் களங்களுக்கு செல்லாமலே கதை முடிந்து விடும். அதாவது ஒவ்வொரு மொழிக் குழுவும் அந்த மொழிக்காரர்களை முதலில் அனுப்பு, இந்த மொழிக்காரர்களை முதலில் அனுப்பு என்று மொழி வாதம் பேசியே நின்று விடும்.

எங்கள் மொழியில்தான் ஆணைகளை கூற வேண்டும்.

எத்தனையோ விஷயங்களில் மாநிலத்துக்கு தகுந்தவாறு மொழி வாதம் பேசி வரும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். இவர்களில் எந்த அரசியல்வாதியும் ராணுவத்தில் எங்கள் மொழியினருக்கு எங்கள் மொழியில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்ற வாதம் வைக்கவில்லையே ஏன்? குறைந்த பட்சம் தங்கள் மாநில காவல் துறையிலாவது எங்கள் மொழியில்தான் ஆணைகளை கூற வேண்டும் என்ற வாதம் வைத்தார்களா? இல்லையே.

முட்டாள் அரசியல்வாதிகள் கூறினாலும் கூறலாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எங்கும் தமிழ் எதிலும் என்று கூறுபவர்களை பெருவாரியாக கொண்டதுதான் தமிழ்நாடு. இந்தக் கோஷத்திற்கு சொந்தக்காரர்கள்தான் 35 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார்கள். தெலுங்கு தேசம் என்ற பெயரில் கட்சி கண்டு ஆட்சி அமைத்தவர்கள் ஆந்திராவில் உண்டு. கன்னடக் கருணாநிதி என்றழைக்கப்பட்ட வாட்டாள் நாகராஜை கண்டதுதான் கர்நாடகம். இப்படி மொழி உணர்வுகளைக் கொண்ட எல்லா மாநிலத்திலும் போலீஸ் ஆணைகளுக்கு இன்றும் லெப்ட் ரைட் தான் பயன்படுத்தப்படுகிறது. இதை ஏன் மாநிலத்துக்கு தகுந்தவாறு மாற்றுமாறு யாரும் கூறவில்லை. சுயநல மிக்க முட்டாள் அரசியல்வாதிகள் கூறினாலும் கூறலாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்னுதாரணமே இஸ்லாம்தான்.

இஸ்லாம் காட்டிய தொழுகை முறைதான்.முட்டாள் அரசியல்வாதிகள் கூற்றுப்படி போலீஸ் ஆணைகளை மாநில மொழியில் அமைத்தாகி விட்டது என வைத்துக் கொள்வோம். மாநில மொழியில் பழகிய பல்வேறு மாநில போலீஸ்கள் கலவரம் போன்ற அவசர தேவைக்கு ஒரு மாநிலத்திற்கு வந்தால் என்ன ஆகும். ஒவ்வொரு மொழியினருக்கும் அவரவர் மொழியில் ஆணையிட வேண்டும். அதற்குள் கலவரக்காரர்கள் காவல் துறையை மொழி வாரியாக காலி செய்து விடுவார்கள். அதனால்தான் பல மொழிக்காரர்கள் இடம் பெறக் கூடிய ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் ஒரு மொழி மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னுதாரணமே இஸ்லாம்தான். இஸ்லாம் காட்டிய தொழுகை முறைதான் இந்த ஒருமைப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் உலகுக்கு கற்றுக் கொடுத்தது.

உலகுக்கு ஏராளமான பயன்களும் படிப்பினைகளும் உள்ளன.

முஸ்லிம்கள் தொழும்போது அணி வகுத்து நிற்பதைப் பார்த்துதான் அணி வகுப்பு முறையை உலகம் கண்டது. ஒருவர் முன் நிற்க அவர் கூறும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அனைவரும் குனிவது நிற்பதை கண்டுதான் ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் ஒரு ஆணை முறை வந்தது. இஸ்லாம் வகுத்து தந்துள்ள ஒவ்வொரு வணக்க முறைகளிலும் உலகுக்கு ஏராளமான பயன்களும் படிப்பினைகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பல மொழியினராக உள்ள மனிதர்கள் ஒரு மொழிக்கு கட்டுப்பட்டு இயங்குவது என்ற முறை.

தமிழ்நாட்டில் பாங்கு அழைப்பு தமிழில் இருந்தால் என்ன?
தொழுகை நேரம் வந்ததும் பாங்கு, அதான் என்ற அழைப்பு விடுக்கப்படுகிறது. இது தொழுகை நேரம் வந்து விட்டது என்பதை மட்டும் அறிவிக்கவில்லை. ஜமாஅத்தாக (சேர்ந்து) தொழ வாருங்கள். அதற்கான பள்ளிவாசல் இங்கு இருக்கிறது என்பதையும் பறை சாற்றுகிறது. ''தொழுகை தமிழில்தான் இருக்க வேண்டும்'' என்று எதிர் பார்ப்பவர்கள் தமிழகப் பள்ளிவாசல்களில் தொழுகை அழைப்பு தமிழில்தான் இருக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கலாம். புரியாத மொழியில் அழைப்பதை விட புரிகின்ற மொழியில் அழைக்க வேண்டும் என்றும் எதிர் பார்க்கலாம். அரபு நாட்டிலுள்ளவர்களுக்கு அரபு மொழியில் அழைப்பது சரி. தமிழ்நாட்டில் பாங்கு அழைப்பு தமிழில் இருந்தால் என்ன? என்றும் கேட்கலாம். எனவே இதைப் பற்றியும் விளங்க வேண்டும்.

அந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழத்தான் விரும்புவார்.

இஸ்லாம் ஏக இறைவன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் என்ற இறை வசனத்தை ஏற்காதவர்கள் உலகில் உண்டு. அவர்கள் கூட இஸ்லாம் உலகளாவிய மார்க்கம் என்ற உண்மையை உணர்ந்து இருக்கிறார்கள். அந்த இஸ்லாம் கற்றுத் தந்த வணக்கங்களில் கூட்டாகச் செய்ய வலியுறுத்தப்பட்ட வணக்கம்தான் தொழுகை. ஜமாஅத்தாக (கூட்டாக) தொழுகை நடந்து கொண்டிருக்கும்பொழுது தனித்து தொழுவது ஹராம் என தடை செய்துள்ளது இஸ்லாம். தனித்து தொழுவதை விட ஜமாஅத்தாக தொழும்போது 27 மடங்கு நன்மை அதிகம் எனவும் இஸ்லாம் கூறுகிறது. எனவே இந்த 27 மடங்கு நன்மை பெற விரும்பும் முஸ்லிம் எந்த நாட்டுக்குப் போனாலும் அந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுடன் சேர்ந்து தொழத்தான் விரும்புவார்.

ஓட்டுப் பிச்சைக்காக ஏதோ ஒரு கட்சிக்காரன் மைக் போட்டு அழுகிறான்.

சேர்ந்து தொழ வேண்டும் என்ற எண்ணம் உடைய ஒரு அமெரிக்கர் இந்தியா வந்துள்ளார். அல்லது ஒரு இந்தியர் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். அல்லது நமது நாட்டிலேயே தனது மாநில மொழி மட்டுமே தெரிந்த முஸ்லிம் இன்னொரு மாநிலத்துக்கு செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். தொழுகை நேரம் வந்ததும் அந்த பகுதி மொழியில் தொழுகை அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த பகுதி மொழி தெரியாதவர் என்ன நினைப்பார். தேர்தல் நேரமாக இருந்தால் ஓட்டுப் பிச்சைக்காக ஏதோ ஒரு கட்சிக்காரன் மைக் போட்டு அழுகிறான் என்றே எண்ணுவார்.

உலக நாடுகளின் தேசிய கீதங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

அதனால் தொழுகை நேரம் வந்து விட்டதை அவர் உணர மாட்டார். அந்த பகுதியில் பள்ளிவாசல் உள்ளதை அறிய மாட்டார். இஸ்லாம் காட்டியுள்ள ஒரே அழைப்பு முறையால் உள்ள பயன். மொழி விளங்குகிறதோ இல்லையோ, இது முஸ்லிம்களின் தொழுகை அழைப்பு என முஸ்லிம் அல்லாதவர்களும் விளங்கி விட்ட நிலை. எனவே எந்த நாட்டவரும் எந்த நாட்டுக்குச் சென்றாலும் இது தொழுகை அழைப்பு என்பதை உணர்வார். அருகில் பள்ளிவாசல் உள்ளதை எளிதில் அறிவார். இந்த பாங்கு முறைதான் இன்று உலக நாடுகளின் தேசிய கீதங்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

தேசிய கீதம் தாய் (தமிழ்) மொழியில் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் ஒருமைப்பாட்டையும் கட்டுப்பாட்டையும் கருத்தில் கொண்டு மொழி உணர்வு பாராமல் செயல்படுத்தும் செயல்களில் தேசிய கீதமும் ஒன்று. இதில் நமது சொந்த எதிர்பார்ப்புகளுக்கும் மொழி உணர்வுளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒருமைப்பாட்டை கட்டுக் கோப்பை கெடுத்து விடக் கூடாது என்பதில் ஒவ்வொரு நாட்டின் குடி மகனும் உறுதியாக உள்ளான். அதனால்தான் நமது நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் இருந்தும் வங்காள மொழியில் உள்ள தேசிய கீதத்தை அனைத்து மொழியினரும் ஏற்று இருக்கின்றனர். மனித உணர்வு நமது தேசிய கீதம் தாய் (தமிழ்) மொழியில் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக இந்த எதிர்பார்ப்பை ஒதுக்கித் தள்ளி விடுகிறோம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக நமது எதிர்பார்ப்பை புறந் தள்ளி விட்டு அந்நிய மொழியை ஏற்றுக் கொள்கிறோம்.

நமது மொழி எதிர்பார்ப்பை திணிக்க எண்ணக் கூடாது.

அது போல்தான் உலக ஒருமைப்பாட்டுக்காக தொழுகையிலும் பாங்கிலும் நமது எதிர்பார்ப்பை புறந் தள்ளி விட வேண்டும். இதனால் உலகளாவிய ஒற்றுமை என்ற நன்மை ஏற்படுகிறது. இனம், குலம், நிறம், நாடு, என பாகுபாடு பாராமல் எல்லா பிரிவுகளையும் மறந்து உலக அளவில் மனிதர்களை ஒன்றிணைப்பது தொழுகை. மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நாம் அனைவர்களும் மனிதர்கள் என்ற ஒருமைப்பாடு இதன் மூலம் நிலை நிறுத்தப்படுகிறது. எனவே அதில் நமது மொழி எதிர்பார்ப்பை திணிக்க எண்ணக் கூடாது.

மொழி தெரிந்தவர் குனிவார். மொழி தெரியாவர் பணிவார்.

பள்ளிவாசல்களில் தொழும்போது அங்கே நில்லுங்கள் என்றோ குனியுங்கள் என்றோ சொல்லப்படுவதில்லை. அல்லாஹு அக்பர் என்றதும் கட்டுக் கோப்பாக அணி வகுத்து நிற்பார்கள். அல்லாஹு அக்பர் என்றதும் குனிந்து நிற்பார்கள். ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்றதும் நிமிர்ந்து நிற்பார்கள். அல்லாஹு அக்பர் என்றதும் பணிந்து தரையில் சாஷ;டாங்கம் செய்வார்கள். அல்லாஹு அக்பர் என்றதும் எழுந்து உட்காருவார்கள். இப்படி அனைத்தும் குறிப்பிட்ட வார்த்தையின் கீழ் கட்டுக் கோப்பாக நடக்கும். இந்த யூனிபாம் முறை இல்லாமல் அவரவர் மொழியில் சொன்னால் என்ன ஆகும். மொழி தெரிந்தவர் குனிவார். மொழி தெரியாவர் பணிவார். கட்டுக் கோப்பு சீர் குலையும்.

இப்படி ஆய்வு செய்வது பயனாக இருக்கும்.

எனவே உலகளாவிய மார்க்கமான இஸ்லாத்தை ஒரு மொழிக்குள் நின்று பார்க்கக் கூடாது. இந்த தொழுகை முறை மூலம் இஸ்லாம் உலகுக்கு யூனிபாம் - கட்டுக் கோப்பு முறையையும் கற்றுத் தந்துள்ளது. ஒரு தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்றும் கற்றுத் தருகிறது. எனவே நமது எதிர் பார்ப்புகளை இஸ்லாத்தில் நுழையச் செய்வது எப்படி என்று ஆய்வு செய்வது சரி அல்ல. அதைவிட இந்த முறைகளை இஸ்லாம் ஏன் அமைத்து தந்துள்ளது என்று ஆய்வு செய்ய வேண்டும். இப்படி ஆய்வு செய்வது பயனாக இருக்கும். புகாரி அவர்களின் மற்ற 9 எதிர்பார்ப்புகளுக்கு அடுத்த இதழில் பதில் இன்ஷh அல்லாஹ். வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

No comments: