Sunday, May 28, 2006

நாலு கணவன்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 28-05-2006

நாலு மனைவி சரியென்றால் நாலு கணவன் சரியென்றாகுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. சகோதரர் புகாரி அவர்களின் 1. ஆவது எதிர் பார்ப்பான ''தொழுகை தமிழில்தான் இருக்க வேண்டும்'' என்பதைப் பற்றிய விளக்கத்தை முந்தைய வெளியீட்டில் பார்த்தோம். ''ஒருவனுக்கு ஒரு மனைவி போதும். நாலு மனைவி சரியென்றால் நாலு கணவன் சரியென்று ஆக வேண்டும்'' இது புகாரி அவர்களின் இரண்டாவது எதிர்பார்ப்பாகும். இது பற்றிய விளக்கத்தை இந்த இதழில் பார்ப்போம்.

சம உரிமை கோருபவர்கள் சரி சமமானவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புப்படி ஒரு ஆணுக்கு நாலு மனைவி என்பது எத்தனை வழிகளில் சரியென்றாகிறதோ அத்தனை வழிகளிலும் பெண்ணுக்கு நாலு கணவன் என்பது சரி என்றாக வேண்டும். இந்த கருத்தும் அதில் மறைந்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்திலும் இருவர் அல்லது இரு தரப்பினர் சம உரிமை கோரலாம். சம உரிமை கோருகிறார்கள் என்ற காரணத்தால் மட்டும் சம உரிமை வழங்கிட முடியாது. சம உரிமை கோருபவர்கள் சரி சமமானவர்களாகவும் இருக்க வேண்டும். இதுதான் நியதி.

வெளிப்படையான வித்தியாசங்களை ஏராளமாக கூற முடியும்.

அந்த வகையில் ஆணும் பெண்ணும் சமமா? ஆணும் பெண்ணும் சமம் என்று வரட்டு வாதம் செய்பவர்களால் கூட சமம் என்பதை நிரூபிக்க முடியாது. நடை, உடை, பாவணை, பேச்சு, உடல்வாகு, மனம், குணம் என அனைத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்பதற்கு இது மாதிரியான வெளிப்படையான வித்தியாசங்களை ஏராளமாக கூற முடியும். இந்த வெளிப்படையான வித்தியாசங்களை விட்டு விடுவோம். இங்கு எதிர்பார்க்கப்படும் சம உரிமையே நாலு கணவன் என்பதுதான். எனவே அதை ஒட்டியே நமது விளக்கத்தை காண்போம்.

4 மனைவிகளுக்கும் 4 குழந்தைகளை கொடுக்க முடியும்.

ஒரு ஆண் ஒரே நேரத்தில் நாலு பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆண் அவரது 4 மனைவிகளுடன் 10 மாதங்களோ, ஒரு ஆண்டோ வாழ்ந்து விட்டால் 4 மனைவிகளுக்கும் 4 குழந்தைகளை கொடுக்க முடியும். அதாவது அந்த 4 மனைவிகள் அவர் மூலம் ஒரே காலத்தில் தனித் தனியே 4 பிள்ளைகளை பெற்றெடுக்க முடியும். இந்த பிள்ளை இன்ன மனைவிக்குப் பிறந்தது என்று கணவரும் அறிவார்.இந்த பிள்ளை இன்ன தாய்க்கும் இன்ன தந்தைக்கும் பிறந்தது என ஊர் உலகமும் எளிதில் அறியும்.

4 கணவர்களுக்கும் 4 பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க முடியுமா?

புகாரி அவர்கள் எதிர்பார்ப்புப்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் நாலு ஆண்களை திருமணம் செய்து கொண்டார் என்று வைத்துக் கொள்ளட்டும். அந்தப் பெண் அவரது 4 கணவர்களுடன் ஒரு ஆண்டு வாழ்ந்து விட்டால் அந்த 4 கணவர்களுக்கும் அவர் 4 பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க முடியுமா? ஒரு ஆண் தனது 4 மனைவிகள் மூலம் 4 பிள்ளைகள் பெற முடியும். இது மாதிரி ஒரு பெண் 4 கணவர்களுக்கும் 4 பிள்ளைகளை பெற்றுக் கொடுக்க முடியுமா? ஒரு பெண் ஒரே கர்ப்பத்தில் 2 பெற்றாலும் 4 பெற்றாலும். ஒரு கருவின் (ஒரு ஆணின்) மூலம் மட்டுமே பெற முடியும். இதுதான் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை.

குழந்தைகளுக்கு இதைவிட வேறு கேவலம் உண்டா?

ஒரு ஆணுக்கு 4 மனைவிகள் மூலம் பத்துப் பதினைந்து பிள்ளைகள் பிறந்தாலும் அந்தப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியும். 4 கணவர்களுடனுள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் பிள்ளைகளுக்கு தாய் யார்? என்பது மட்டும் தான் தெளிவாக தெரியும். தந்தை யார்? என்பதை தெரிந்து கொள்ள முடியாது. தன் தந்தை யார்? என்று தெரிந்து கொள்ள முடியாத இந்த நிலையை விட மோசமான நிலை வேறு உண்டா? அந்தக் குழந்தைகளுக்கு இதைவிட வேறு கேவலம் உண்டா?

யார்தான் ஜீரணிப்பார்கள். யாரால்தான் ஜீரணிக்க முடியும்.

மனிதனுக்கு ஆரம்ப உறவே தாய் தந்தை உறவுதான். ஆந்த ஆரம்ப உறவிலேயே சிக்கல் என்றால்? இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத வாரிசுகள் நிலை என்ன ஆகும். தந்தை பெயர் தெரியாதவர்கள் என்பதால் சமுதாயம் ஒரு மாதிரியாக பார்க்கும். அந்தப் பார்வையால் மனம் உடைந்து மன நோயாளிகளாக ஆவார்கள். நாட்டில் மன நோயாளிகள் கூட்டம் பெருகும். பல அப்பன்களுக்கு பிறந்தவர்கள் என்றழைக்கப்படுவார்கள். இந்த வார்த்தையை யார்தான் ஜீரணிப்பார்கள். யாரால்தான் ஜீரணிக்க முடியும்.

யாரை நிர்ப்பந்திக்க முடியும்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் 10 பிள்ளைகளைப் பெற்றாலும் அந்த 10 பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு அந்த ஒருவனையே சாரும். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்க வேண்டிய கடமை அவனுக்கு மட்டுமே ஏற்படும். மறுத்தால் கூட சமுதாயம் நிர்ப்பந்தம் செய்யலாம். ஆனால் ஒரு பெண் நான்கு கணகளுடன் வாழ்ந்து பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு இந்த உரிமை கிடைக்குமா? உத்திரவாதம்தான் கொடுக்க முடியுமா? அந்த பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பை எந்தக் கணவன் மீது சுமத்த முடியும். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவைக் கொடுக்குமாறு யாரை நிர்ப்பந்திக்க முடியும்.

குழந்தையைக் கூறு போட்டு பிரித்துக் கொடுக்க முடியுமா?

நான்கு கணவர்களுமே அந்தக் குழந்தைகள் தங்களுக்கு பிறந்ததில்லை என்று மறுத்து விட்டால் என்ன ஆகும். என்ன ஆதாரத்தின் அடிப்படையில் ஒரு கணவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும். இதனால் வளரப் போகும் அந்தக் குழந்தையின் ஆரம்ப காலமே இருள் சூழ்ந்ததாக அல்லவா ஆரம்பமாகும். அப்படியானால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும். அது போல் ஒவ்ஒவாரு கணவவனும் தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் ஆளுக்கு ஒரு பாகம் என அந்தக் குழந்தையைக் கூறு போட்டு பிரித்துக் கொடுக்க முடியுமா?

தந்தையின் சொத்து என்று பங்கு கேட்க முடியுமா?

ஒருவனுக்கு 4 மனைவியர் மூலம் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் அத்தனை குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும். 4 கணவருடையவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று பங்கு கேட்க முடியுமா? எந்தப் பிள்ளையாலும் வாரிசு உரிமை கொண்டாட வழியில்லாமல் போகும். யாராலும் சொத்தில் பங்கு கேட்க முடியாது.

உலகத்தாருக்குள்ள நன்மைகளை புரியலாம்.

மேலும் ஒருவன் நாலு மனைவிகளை கட்டியாக வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். நான்கு திருமணங்களை செய்யுமாறு இஸ்லாம் கட்டளை எதுவும் பிறப்பிக்கவிi;லை. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி தேவை என்ற எதிர்பார்ப்புள்ளவர்களுக்கு அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது. ஏன் இந்த அனுமதி என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்தால். இதில் இந்த உலகத்தாருக்குள்ள நன்மைகளை புரியலாம். அது பற்றிய ஆய்வை எழுதுவதாக இருந்தால் இன்னும் நீண்டு கொண்டே போகும்.

'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் யாரிடமிருந்து உற்பத்தியாகிறது.

நமது இந்த ஆக்கம், ''.. நாலு கணவன் சரியென்று ஆக வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு சரியில்லை என்பதை விளக்குவதற்காகவே உள்ளது. எனவே ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை பெண்களுக்கு அனுமதிக்காமல் இஸ்லாம் தடை விதித்துள்ளது ஏன் என்பது சம்பந்தமான விளக்கத்தை மட்டுமே இதில் காண்போம். இன்று உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடிய நோய் ஷஎய்ட்ஸ். இந்த எய்ட்ஸ் என்ற கொடிய நோய் பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும்தான் வருகிறது. அது மட்டுமல்ல பெண்ணிடமிருந்து ஆணுக்கும், ஆணிடமிருந்து பெண்ணுக்கும்தான் பரவுகிறது. ஆனால் இந்த 'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் யாரிடமிருந்து உற்பத்தியாகிறது. இதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.

இதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களிடம் உறவு வைத்துள்ள ஆணிடமிருந்து இந்த ஷஎய்ட்ஸ் என்ற நோய் உற்பத்தி ஆகவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களிடம் உறவு வைத்துள்ள பெண்களிடமிருந்துதான் இந்த 'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் உற்பத்தியாகிறது. இது மருத்துவ உலகம் கண்டுபிடித்துள்ள உண்மை. மருத்துவ உலகம் தந்துள்ள ஆய்வறிக்கை. இந்த நோய் முதலில் உருவானது அமெரிக்காவில்தான். காலம் காலமாக ஒரே நேரத்தில் 4 பெண்களை திருமணம் செய்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் அரபு நாடுகளில் அல்ல. இதையும் இங்கே நினைவுபடுத்திக் கொள்கிறேன். பெண்ணின் விந்து சக்தியும் ஆணின் விந்து சக்தியும் இணைவதால் எய்ட்ஸ் உற்பத்தி ஆகாது. ஒரு பெண்ணிடமுள்ள ஆணின் விந்து சக்தியுடன் இன்னொரு ஆணின் சக்தி இணைவதால்தான் எய்ட்ஸ் உற்பத்தியாகிறது.

பெண்கள் உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது.

ஒருவனுக்கு 4 மனைவியர் வரை அனுமதி அளித்துள்ள மாதிரி மனைவி இறந்து விட்டால், அல்லது விவாக ரத்து ஆகி விட்டால் உடனடியாக மறுமணம் செய்து கொள்ளவும் ஆண்களுக்கு அனுமதி அளித்துள்ளது இஸ்லாம். ஆனால் கணவன் இறந்து விட்டால் அல்லது விவாக ரத்து ஆகி விட்டால் உடனடியாக மறுமணம் செய்து கொள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்கள் உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது என்று தடையும் விதித்துள்ளது. கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும் கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதம் 10 நாட்களும் (இத்தா) கழியும் வரையிலும் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்கிறது இஸ்லாம்.

கற்பனைகளை விரிவுரைகளாக்கி வழங்கியவர்களும் உண்டு.

ஏன் இந்த சட்டம் என்பது சம்பந்தமாக பலரும் பலவிதமான விளக்கங்களை தந்துள்ளார்கள். ஷஇத்தா என்பதற்கு கரு அறியும் காலம் வரை காத்திருத்தல் என்பதுதான் பொருள் என விளக்கம் சொன்னவர்களும் உண்டு. அதற்காக கற்பனைகளை விரிவுரைகளாக்கி வழங்கியவர்களும் உண்டு. கருவில் உள்ளது முதல் கணவனின் குழந்தையா? இரண்டாவது கணவனின் குழந்தையா? என்ற பிரச்சனை வரும் என்று கூறி இதை அறியத்தான் ஷஇத்தா என்று கூறியும் விரிவுரை வழங்கி இருக்கிறார்கள்.

மார்க்க விளக்கம் போல் காட்டினர்.

கருவறையில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதுமே. அந்த மாதத்தில் மாத விலக்கு வந்தால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே. நான்கு மாதம் 10 நாட்கள் என்பது அதிகம் அல்லவா என்று கேட்டனர். இதற்கும் தங்கள் வாதத் திறமையை பயன்படுத்தி பதில் அளித்து மார்க்க விளக்கம் போல் காட்டினர்.

கருவறையில் குழந்தை இருக்கிறதா என்பதை அறிவதற்காக அல்ல.

கருவறையில் குழந்தை இருப்பதை அறியத்தான் என்றால் குழந்தை இருக்கிறது என்று அறிந்த பின் திருமணம் செய்ய அனுமதித்திருக்க வேண்டுமே. கர்ப்பமாகி இருந்தால் குழந்தை பிறக்கும் வரை இத்தா இருக்க வேண்டும் என்ற சட்டம் ஏன்? கணவனை பிரியும்போது முதல் மாதக் கருவை சுமந்திருந்தால் பிரசவிக்கும் வரை அதாவது 8 அல்லது 9 வரை இத்தா இருக்க வேண்டும் என்று உள்ளதே ஏன்? எனவே இதையெல்லாம் ஆய்வு செய்தால் இத்தா என்பது கருவறையில் குழந்தை இருக்கிறதா என்பதை அறிவதற்காக அல்ல என்பதை புரியலாம்.

'எய்ட்ஸ்' என்ற கொடிய நோய் உற்பத்தியாகாமல் தடுப்பதற்காகவே.

மனிதனின் உடலில் உணவாகச் செல்லும் ஒரு பொருளின் சக்தி அந்த உடலை விட்டு முழுமையாக காலியாக 40 நாட்களிலிருந்து 3 மாதங்கள் வரை ஆகும். இது பொருளைப் பொறுத்து வித்தியாசப்படும். உடலுறவின் மூலம் பெண்ணின் உடலுக்குள் செல்லும் ஆணின் விந்து அதன் சக்தியை முழுமையாக இழக்க எத்தனை மாதங்கள் வரை ஆகும். இதை ஆய்வு செய்தால் ஷஎய்ட்ஸ் என்ற கொடிய நோய் உற்பத்தியாகாமல் தடுப்பதற்காகவே இத்தா என்பதை அறியலாம். புகாரி அவர்களின் மீதமுள்ள 8 எதிர்பார்ப்புகளுக்கும் அடுத்த இதழில் பதில் இன்ஷh அல்லாஹ். வஸ்ஸலாம்.

அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி
அன்புடன்: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

குறிப்பு:- பல சகோதரர்கள் தங்கள் மெயில்களுக்கு முன் போல் உடனுக்குடன் பதில் கிடைப்பதில்லை என்று வருத்தப்பட்டுள்ளனர். பலர் சமீப காலமாக சிறைவாசிகள் பெயரால் உலவி வரும் மெயில்கள் பற்றியே கேட்டுள்ளனர்.03-04-2006 திங்கள் கிழமை மாலை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், 19-04-2006 புதன் மாலை மதுரை மத்திய சிறைக்கும், 26-04-2006 புதன் மாலை கோவை மத்திய சிறைக்கும், 15-05-2006 செவ்வாய் மதியம் திருச்சி சிறைக்கும், 25-05-2006 வியாழன் காலை மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கும், 26-05-2006 வெள்ளி மாலை சென்னை மத்திய சிறைக்கும் சென்றேன். அங்குள்ள அல்-உம்மா, ஜிஹாத் கமிட்டி மற்றுமுள்ள சிறைவாசிகளை சந்தித்துப் பேசினேன். இந்த பணிகளாலும் இது போன்ற இன்னும் பல பணிகளாலும்தான் பதில் எழுத முடியவில்லை. சிறைவாசிகள் சம்பந்தமான சகோதரர்கள் கேட்டுள்ள கேள்விகளுக்கும் மொட்டைக் கடிதங்களுக்கும் விரைவில் பதில் தருவேன் இன்ஷh அல்லாஹ்.

No comments: