Monday, March 11, 2019

ஒரு முஸ்லிம்லீக் தொண்டனின் மனக்குமுறல் கடிதம் இது!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடை நிலை ஊழியனாக மனம் நொந்து எழுதுகிறேன். திமுக கூட்டணியில் நமக்கு 1 தொகுதி தரப்பட்டுள்ளது இந்த தொகுதியை எத்தனையோ ஆயிரம் தொண்டர்களில் ஒருவருக்கு தரலாம் ஆனால் நம்ம தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் கார்ப்ரேட்டுக்கு விலை பேசி விற்று விட்டது? மனம் நோக செய்கிறது.

வேட்பாளர் தேர்வு கென்யாவில் நடந்து முடிந்துள்ளது முஸ்லீம் லீக்கின் அரசியல் புரோக்கர்கள் குத்தாலம் ,திருப்பனந்தாள் ஏற்பாட்டில் கார்ப்ரேட் முதலாளிகள் நோபல் மெரைன் சாஹுல், பிளாக் துலிப் யக்யா,கீழக்கரை கமால்,மற்றும் முஸ்லீக் லீக்கின் கார்ப்ரேட் பிரமுகர்கள் சம்மதத்தோடு எஸ்டி கூரியர் முதலாளி நவாஸ் கனி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெட்ககேடு .. உள்ளூரில் கட்சி நடத்தி விட்டு வேட்பாளரோ வெளிநாட்டில் கார்ப்ரேட்டுகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளது . இது எத்தனை ஆபத்தான போக்கு.. இதனை விசயத்தை வெளி கொண்டு வந்து நமது சமுதாயத்தின் மானம் காத்திட மன்றாடி கேட்டு கொள்கிறேன். நீங்கள் இறைவனுக்கு கட்டுபட்டவர் இதனை வெளியாக்குவீர்கள் என நம்புகிறோம். போட்டோவில் வட்டமிட்டுள்ளது நவாஸ் கனி அவர்கள். எனது எண்ணை வெளியிட வேண்டாம் அமானிதம்.

குறிப்பு: இவரது அடுத்த கடிதமும் வந்துள்ளது.இன்ஷா அல்லாஹ்...அதனையும் வெளிப்படுத்துவோம்.
நன்றி
https://m.facebook.com/story.php?story_fbid=1180337715454223&id=100004340167833

-----------------------------------------------------------------------------------------

No comments: