Thursday, December 14, 2006

கூட்டுக் குர்பானி பங்கு ஒன்றுக்கு 50 திர்ஹங்கள் மட்டுமே!

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை தயாராக உள்ளது.

வளைகுடா வாழ் நண்பர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. குர்பானி கொடுக்க பொருளாதார வசதி இருக்கிறது அறுத்துப் பலி இட வசதி இல்லையே என்ற கவலையா? வேண்டாம் இனி அந்தக் கவலை. உங்கள் சார்பில் த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை குர்பானி கொடுக்க தயாராக உள்ளது.

எல்லா வசதியும் இருக்கிறது. நமது குர்பானி இறைச்சியை வசதி உள்ளவர்களுக்கு மட்டும்தானே கொடுக்க முடிகிறது. வாங்குவதற்கு நம்மைச் சுற்றி எந்த ஏழையும் இல்லையே என ஏங்குகிறீர்களா? நீங்கள் கொடுக்கும் குர்பானி இறைச்சி ஏழைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் ஏக்கத்தைப் போக்கிட உங்கள் இரக்க உள்ளத்தின் நல் எண்ணத்தை நிறை வேற்றிட த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை தயாராக உள்ளது.

நீங்கள் கொடுக்க விரும்பும் குர்பானி ஆடு மாடுகளுக்குரிய தொகையை த.மு.மு.க. மேலப்பாளையம் கிளைக்கு உடனே அனுப்பி வையுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும் இன்ஷh அல்லாஹ்.

தனியாகக் குர்பானி கொடுக்க வசதியில்லையே என்ற தவிப்பு வேண்டாம். இஸ்லாம் வழங்கியுள்ள சலுகையான கூட்டுக் குர்பானி கொடுத்து நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக கூட்டுக் குர்பானி திட்டத்தையும் த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை வைத்துள்ளது. கூட்டுக் குர்பானி பங்கு ஒன்றுக்கு 50 திர்ஹங்கள் மட்டுமே!

தொடர்புக்கு:-
நகர தலைவர் ரசூல் மைதீன் 0091-9943144666
நகரச் செயலாளர் மைதீன் 0091-9362995475
த.மு.மு.க. மேலப்பாளையம் கிளை ஈ-மெயில் tmmkmpm@yahoo.co.in,

யு.ஏ.இ.யில் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள மைதீன் ரஸாக் 050 - 5755341

Sunday, December 10, 2006

டாக்டர் வேலாயுதம் பிள்ளை மருத்துவமனை இலவச மருத்துவ முகாம்.


இலவச மருத்துவ முகாமுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் மவுலவி ஜே. எஸ். ரிபாஈ பாஸி ரஷhதி தலைமை தாங்கினார்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நெல்லை மாவட்ட வர்த்தக அணி தலைவர் உஸ்மான் கான் உரையாற்றினார்.

Thursday, December 07, 2006

2006 டிசம்பர் 6 இல் திசை திரும்பிய பாராளுமன்றம்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 1992 டிசம்பர் 6 இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு டிசம்பர் 6 களிலும் மேலப்பாளையத்தின் உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெகுண்டெலுந்தனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஐ துக்க நாளாக அறிவித்தனர். கறுப்புக் கொடிகளைக் கட்டி கடைகளை அடைத்து பந்த் நடத்தி பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டி வந்தனர். இந்த ஆண்டும் மேலப்பாளையத்தில் கடைகளை அடைத்து பந்த் நடத்தி எதிர்ப்பு காட்டியுள்ளனர். மேலப்பாளையம் போன்று உணர்வுள்ள முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் இது போன்று நடந்திருக்கலாம். இது அன்றி எந்த அமைப்புகளும் 92க்குப் பிறகு அமைப்பின் சார்பில் எந்த டிசம்பர் 6 ரிலும் பாபரி மஸ்ஜித் பற்றி எந்த பேச்சும் பேசவில்லை.
அது கிழட்டு நரிகளின் கூடாரமாக ஆகி விட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில ராணுவத்தின் துப்பாக்கி முன் ஆடையை தூக்கிக் காட்டியும் நெஞ்சை நிமிர்த்துக் காட்டியும் சுடுடா என வீரியத்துடன் கர்ஜித்த சிங்கங்கள் இருந்த முஸ்லிம் லீக் இருந்தது. 92இல் அது கிழட்டு சிங்கங்களின் கூடாரமாகக் கூட இருக்கவில்லை. கிழட்டு சிங்கங்களின் கூடாரமாக ஆகியிருந்தால் கூட அது சிங்கங்களின் கூடாரம் என்ற வீரியத்துடன் எதிரிகள் அச்சப்படும் வண்ணம் கர்ஜித்திருப்பர். ஆனால் அது கிழட்டு குள்ள நரிகளின் கூடாரமாக ஆகி இருந்தது. எனவே சடங்கு சம்பிரதாயத்துக்காக 92இல் மட்டும் அறிக்கை விட்டனர்.
எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது.
அதனால் 92க்குப் பிறகு பாபரி மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம் லீக் மய்யத் லீக்கானது. எனவே டிசம்பர் 6இல் கூட பாபரி மஸ்ஜித் பற்றி சட்டமன்றம் பாராளுமன்றம் உட்பட நாட்டில் எங்குமே பேச நாதி இல்லை என்ற நிலை ஆனது. அல்லாஹ்வின் அருளால் 1995இல் வீறு கொண்டெழுந்தவர்களால் புணர் நிர்மானம் செய்யப்பட்ட த.மு.மு.க. உருவானது. த.மு.மு.க. தான் முதன் முதலில் அமைப்பு சார்பான எதிர்ப்பைக் காட்டியது. பாபரி மஸ்ஜித்துக்காக தமிழகத்தில் த.மு.மு.க. குரல் எழுப்பிய பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6களில் சட்ட மன்றம் பாராளுமன்றம் என எல்லா அவைகளிலும் பாபரி மஸ்ஜித் பற்றி பேசும் நிலை வந்தது. சட்ட மன்றத்தில் தேசிய லீக் லத்தீப் ஸாஹிபும் பாராளுமன்றத்தில் பனாத்வாலாவும் குரல் கொடுத்தனர்.
பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி.
1996இல் இருந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து லோக்சபாவையும் ராஜ்யசபாவையும் ஒத்தி வைக்குமாறு இடதுசாரி கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இதை 7 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து செய்து வந்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் அமளி என்ற செய்தி ஊடகங்களில் கண்டு வந்தோம். அப்பொழுதெல்லாம் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட தமிழ்நாட்டிலிருந்து பாராளு மன்றத்துக்கு சென்றிருக்கவில்லை.
2004இல் எதுவும் நடக்கவில்லை.
15ஆண்டுகளுக்கு (1989க்குப) பிறகு 2004இல் மு.லீக் தலைவரான காதர் மைதீன் என்பவர் உட்பட 2முஸ்லிம்கள் பாராளுமன்றத்துக்குச் சென்றனர். உணர்வுள்ள முஸ்லிம்களின் அமைப்பான த.மு.மு.க.வின் பேராதரவில் வென்ற முஸ்லிம் எம்.பி.க்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து விட்டனர். இனி அவர்கள் கர்ஜிப்பார்கள் என்று இடதுசாரிகள் எண்ணினார்களோ என்னவோ? 2004இல் இடதுசாரிகள் எதுவும் பேசவில்லை. காதர் மைதீனோ கிதர்(எங்கே) மைதீன் (என்று) ஆகி விட்டார். எனவே இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் எதுவும் நடக்கவில்லை.
பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.
இருந்தாலும் டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்திய பேரணி. த.மு.மு.க. தலைவர்கள் பிரதமர் மற்றும் சோனியாவை சந்தித்து பாபரி மஸ்ஜித்தைக் கட்டித் தரக் கோரினார்கள். தமிழக எம்.பி.க்களில் முஸ்லிம் அல்லாத எம்.பி.க்களும் த.மு.மு.க. தலைமையின் கீழ் டெல்லியில் அணிவகுத்தனர். பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து 2004இல் மக்களவையிலும் மாநிலங்களவையிலும்; அமளி நடைபெறாதது சமுதாயத்துக்கு ஒரு பொருட்டாகத் தெரிந்ததில்லை. த.மு.மு.க.வின் டெல்லி பேரணி மக்களவை மாநிலங்களவை அமளிகளை விட பேரெழுச்சியையும் புத்துணர்ச்சியையும் சமுதாயத்துக்கு தந்தது.
சமுதாயம் அமைதி பெற்றது.
2005லும் த.மு.மு.க. டெல்லி செல்லும் என்று சமுதாயம் எதிர் பார்த்தது. த.மு.மு.க. அறிவிக்கும் டெல்லி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பலர் குளிர் ஆடைகளையும் வாங்கி தயாராக வைத்திருந்தனர். சில தூர நோக்கத்துடன் மீண்டும் டெல்லி சென்று போராடும் திட்டத்தை த.மு.மு.க. தவிர்த்தது. 2005லும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து எதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் நடந்த போராட்டங்களை மட்டும் கண்டு சமுதாயம் அமைதி பெற்றது.
இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.
2001-2006 வரையிலான சட்ட சபையில் மு.லீக் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் இருக்கவில்லை. இப்பொழுது இருக்கிறார்கள் தேசிய லீக் லத்தீப்புக்குப் பிறகு மு.லீக்கர்கள் பாபரி மஸ்ஜிதுக்காக டிசம்பர் 6இல் சட்ட மன்றத்தில் குரல் எழுப்புவார்கள் என்று பலர் நம்பி இருந்தனர். (நாம் நம்பவில்லை என்பது தனி விஷயம்.) மக்கள் எதிர் பார்த்தபடி தமிழக சட்ட மன்றம் அமளியானது. ஆனால் அது அ.தி.மு.க.வினர் கொண்டு வந்த இன்னொரு பிரச்சனையால் சட்ட மன்றம் அமளியாகி இருந்தது.
நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.
2006 டிசம்பர் 6 மதியம் தொலைக் காட்சிகளில் மக்களவை மாநிலங்களவை அமளி காட்சிகளைக் காட்டினார்கள். ஆ பாராளு மன்றத்தில் பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலிக்கிறது என்று மகிழ்ந்தார்கள். தலைப்புச் செய்தியிலும் ஷஷபாபரி மஸ்ஜித் இடிப்பு எதிரொலி மக்களவை மாநிலங்களவைகளில் அமளி என்றுதான் சொல்லப்பட்டது. இதைக் கேட்டதும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்ப்பு காட்டி விட்டார்கள் என்றே நம்பி மகிழ்ந்தது நம் சமுதாயம். விரிவான செய்தியைக் கேட்டதும் நம் சமுதாயத்தவர் மனங்கள் இடிந்து விட்டன. வழக்கம் போல் நம்பி ஏமாந்த நம் சமுதாயம் கொதிக்கத் துவங்கி விட்டது.
இக்கதி ஏற்பட்டிருக்குமா?
7 ஆண்டுகளாக தொடர்ந்து டிசம்பர் 6ஐ துக்க நாள் என்று கூறி பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து அமளி நடந்த பாராளுமன்றம் திசை திரும்பி விட்டது. பாபரி மஸ்ஜிதை கட்டித் தர வேண்டும் என்ற குரல் ஒலிக்க வேண்டிய பாராளு மன்றத்தில் பள்ளி இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற குரல் ஒலித்து திசை திரும்பியுள்ளது. உயிரை பணயம் வைத்து உழைக்கும் த.மு.மு.க. தொண்டர்கள் உழைப்பின் மூலம் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் யார் யாரையோ அனுப்பி விட்டதால்தான் இக்கதி. த.மு.மு.க. சார்பிலான உண்மையான முஸ்லிம்கள் உணர்வுள்ள முஸ்லிம்கள் சுய சின்னத்தில் சட்ட மன்றத்துக்கும் பாராளு மன்றத்துக்கும் சென்றிருந்தால் இக்கதி ஏற்பட்டிருக்குமா?
பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.
எனவே சட்ட மன்றம் பாராளு மன்றம் உட்பட ஆட்சித் துறை அனைத்துக்கும் த.மு.மு.க.வினர் செல்ல வேண்டும். தேர்தலில் த.மு.மு.க. போட்டியிட வேண்டும். இது 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடுவது ஹராம் என்ற பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்ட பத்வாவின் தாக்கத்திலிருந்து த.மு.மு.க. விடுபட வேண்டும். தேர்தலில் களப் பணி ஆற்றினால் ஈமான் போய் விடும் என்று 2004இல் பத்வா கொடுத்தவர்தான் பி.ஜெ. அது பிராடுத்தனமான பத்வா என்பதை த.மு.மு.க. 2004இல் களப்பணி ஆற்றி நிரூபித்தது. பிறகு களப் பணி பத்வாவை மாற்றியதுடன் பி.ஜெ.யே 2005இல் தேர்த்தலில் களப் பணி ஆற்றினார்.
த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி.
அது போல் தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க அறிவித்து விட்டால். அடுத்து பி.ஜெ.யும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அவரே தேர்தலில் நின்று விடுவார். 2006 டிசம்பர் 6 ஏற்படுத்தியுள்ள நிர்ப்பந்தம். தேர்தலில் போட்டியிடும் முடிவை த.மு.மு.க. விரைந்து எடுத்தாக வேண்டும் என்பதே. இந்த முடிவை எடுப்பதில் கால தாமதம் செய்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். சட்ட ரீதியாக போராட த.மு.மு.க. வந்த பின்தான் சட்டத்தை கையிலெடுத்து செயல்படுபவர்கள் ஒதுங்கினார்கள். இதை த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி மற்றுமுள்ள தலைமைப் பொறுப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

Tuesday, December 05, 2006

1992 டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் இடிப்பு தின சிந்தனை.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
1992 டிசம்பர் 6 இந்தியாவில் இது மாதிரி எத்தனை இளைஞர்களை உருவாக்கி விட்டதோ?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 14 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 தினத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக நினைவு கூர்ந்து இடிக்கப்பட்ட மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட மறுநாள் 1992 ஆம் ஆண்டு தமிழத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு மேலப்பாளையத்தில் மட்டும்தான் துப்பாக்கி சூடு நடந்தது.

பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள்.

1992 டிசம்பர் 7இல் நடந்த அந்த துப்பாக்கி சூட்டுக்கு இறையாகி இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்;. 25 இஸ்லாமிய இளைஞர்கள் படு காயம் அடைந்தார்கள். துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த 40 இஸ்லாமிய இளைஞர்கள் மீது அநியாயமாக பொய் வழக்கு போட்டு சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப் பணமாக உதவிட இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரம் அனுப்பிக் கொடுத்தோம்.

கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில்

மேலும் வழக்கு வகைகளுக்கு, சிறையில் உள்ளவர்களை அடிக்கடி சென்று பார்த்து ஆறுதல் கூறி வருவதற்கு, கண்டிஷன் பெயில் பெற்று ராஜபாளையத்தில் இருந்தவர்களுக்கு உணவு மற்றும் வசதிகள் செய்தி கொடுத்திட என அவ்வப்போது பணம் அனுப்பிக் கொடுத்தோம். மொத்தம் 3 இலட்சம் ரூபாய் வரை அனுப்பிக் கொடுத்து உதவினோம்.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ.

இந்த உதவிகளை முன்னின்று செய்திட முதலில் மவுலவி பி.ஜெ.யை அணுகினோம். பணத்தை உங்களுக்கு அனுப்பித் தருகிறோம். ஜாக் சார்பில் நீங்கள் வினியோகியுங்கள். இதன் மூலம் தவ்ஹீதுவாதிகள் மீது மக்களுக்குள்ள வெறுப்புகள் நீங்கும் என்றோம். தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாத பி.ஜெ. மறுத்து விட்டார்.

கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே.

தவ்ஹீது கொள்கை வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர் பி.ஜெ. என்பதை என்றும் உறுதியாகக் கூறுவோம். இதுபோன்ற உதவிகளை முன்னின்று செய்ய மறுத்த பி.ஜெ. இன்று தகுதியற்ற உதவிகளை செய்வதுபோல் காட்டி டி.வி. கேமராக்களுக்கு முன்னால் நின்று நடித்துக் கொண்டிருப்பதே இதற்கு போதிய ஆதாரங்களாகும். இதை 6-4-2002இல் பி.ஜெ.க்கு எழுதிய 25 பக்க கடிதங்கள் என்று பிரபலமான கடிதத்திலும் சுட்டிக் காட்டியுள்ளோம். http://www.pkblogs.com/mdfazlulilahi.blogspot.com/2002/04/blog-post.html

சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன.

1992 ஆம் ஆண்டு மேலப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை முன்னின்று செய்திட பி.ஜெ. மறுத்ததால் மேலப்பாளையம் சர்வ கட்சியினர் மூலம் உதவினோம். வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி குற்றவாளிகளுக்கு உதவி விட்டார் என சில நல்ல உள்ளங்கள்? அரசாங்கத்துக்கு போட்டுக் கொடுத்து விட்டன. போலீஸ் விசாரணை ஐ.பி. என பிரச்சனை ஆனது. இதனால் எமது தாயகப் பயணம் காலதமதமானது. 1991 ஜுலையில் துபை வந்த நாம் இதை சரி செய்து தயாகம் செல்ல 1994 ஆகஸ்டு ஆனது. தாயகம் சென்ற நாம் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் சிலரை நேரில் கண்டு ஆறுதல் கூறினோம்.

எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

அப்பொழுது ஒருவர் வந்து "என் பெயர் அமானுல்லாஹ். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனக்கு யாரும் உதவவில்லை. அரசாங்கத்தின் உதவியும் கிடைக்கவில்லை. நீங்கள் அனுப்பிய உதவியும் எனக்கு கிடைக்கவில்லை. நான் போய் கேட்டதற்கு இலாஹி அனுப்பிய லிஸ்ட்டிலும் உன் பெயர் இல்லை என கூறி விட்டார்கள்" என்றார். மேலப்பாளையத்தைச் சார்ந்த அவர் 1992 டிசம்பர் மாதம் பம்பாயில் இருந்துள்ளார். அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட அவர் உயிரைக் காத்துக் கொள்ள மேலப்பாளையம் வந்து விட்டார். அதனால் மராட்டிய அரசு உதவி, தமிழக அரசு உதவி உட்பட எந்த உதவியும் அவருக்கு கிடைக்கவில்லை.

JAQH மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

எனவே JAQH மேலப்பாளையம் கிளை சார்பில் அவருக்கு உதவிகள் செய்தோம். அவரது நெற்றியில் பாய்ந்த குண்டு அப்படியே தலையில் மூளைக்கு அருகில் தங்கி விட்டது. அதனால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. மூளைக்கு அருகில் அந்த குண்டு இருப்பதால் அதை ஆபரேஷன் செய்து எடுப்பது மிக மிக கடினம். ஆபரேஷன் செய்ய அவரிடம் பொருளாதார வசதி இல்லை. எனவே JAQH மேலப்பாளையம் கிளை சார்பில் ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம்.

குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

ஆபரேஷன் செய்து குண்டை எடுக்கும்போது மூளையின் ஏதாவது ஒரு நரம்பு பாதித்து விட்டால் காலோ, கையோ, கண்ணோ செயல் இழந்து விடும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். குடும்பத்தாரிடம் கலந்து விட்டு ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தோம். ஆபரேஷன் செய்யப்பட்டது. குண்டை எடுக்க முடியவில்லை. அவரது மனம் பாதித்து விடக் கூடாது என்பதற்காக டாக்டரின் ஆலோசனைப்படி குண்டை எடுத்து விட்டதாக அந்த இளைஞரிடம் கூறப்பட்டது.

யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார்.

இருந்தாலும் காலப் போக்கில் குண்டு எடுக்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்து விட்டார். அடிக்கடி பிக்ஸ் வந்து விடுகிறது. விலை உயர்ந்த 400 ரூபாய் ஊசி போட்டால் ஓரிரு வாரங்களுக்கு பிக்ஸ் வருவதில்லை. இந்த ஊசி போடக் கூட வழி இல்லாமல் அவ்வப்போது யாரிடமாவது உதவி பெற்று ஊசி போட்டு வருகிறார். 1992 டிசம்பர் 6 இந்தியாவில் இது மாதிரி எத்தனை இளைஞர்களை உருவாக்கி விட்டதோ?

குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு

இந்தியா சுதந்திரம் பெற்றதும் 1947இல் மேலப்பாளையம் ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. அதன் பிறகு 1992 டிசம்பரில் அதே ஜின்னா மைதானம் அருகில் உள்ள ஆஸ்பத்திரி ரோட்டில் துப்பாக்கி சூடு நடத்தது. ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த குழந்தைகளையும் தாயையும் தள்ளு வண்டியில் போட்டு இழுத்துச் சென்ற பரிதாப காட்சிகள் பத்திரிக்கைகளில் வந்தன.

500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம்.

இந்த அவலங்களைக் கண்ட நாம் யு.ஏ.இ. வாழ் மேலப்பாளையம் முஸ்லிம்கள் சார்பாக ஒரு கடிதம் எழுதினோம். இந்தியாவிலுள்ள அனைத்து பிரிவு முஸ்லிம்களையும் அரசியல் அளவில் ஒரே அமைப்பின் கீழ் ஒன்று படுத்த வேண்டுதல் என்ற தலைப்பிட்டு அந்தக் கடிதத்தை எழுதி இருந்தோம். 10-12-1992 அன்று எழுதிய அந்தக் கடிதக் காப்பிகளை பி.ஜெ, சமது சாகிப், லத்தீப் சாகிப், சுலைமான்சேட், பனாத்வாலா, மு.லீக் சமது அணி, முஸ்லிம் லீக் லத்தீப் அணி என நமது சமுதாயத்தின் எல்லா அமைப்புகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் பொறுப்பாளர்களுக்குமாக 500க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பி வைத்தோம். (குறிப்பு: அப்பொழுது த.மு.மு.க. இருக்கவில்லை)

உண்மையான சமுதாய பற்றாளர் யார்?

சமுதாய ஒற்றுமை நோக்கில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்திற்கு யாரிடமிருந்தும் பதில் வரவே இல்லை. ஒரே ஒருவரிடமிருந்துதான் பதில் வந்தது. அந்த ஒரே ஒருவர் யாராக இருக்கும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். உத்தமர், பெருந்தகை, இவர்தான் உண்மையான மில்லத் என்று நீங்கள் எண்ணக் கூடியவர்களில் யாராவது இருப்பார்களா? நினைத்துப் பாருங்கள். உண்மையான சமுதாய பற்றாளர் யார் என்ற விடை காண http://fazlulilahi.blogspot.com/2006/12/blog-post_04.html
நாம் எழுதிய கடிதத்தைக் காணவு http://fazlulilahi.blogspot.com/2006/12/10-12-1992.html
அன்புடன்: காஅ.முஹம்மது பஸ்லுல் இலாஹி.

Tuesday, November 28, 2006

ஒமானில் நடந்த சம்பவம்-மண்ணறை வேதனையை மனிதர்கள் அறிய முடியாது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ரசிகவ் ஞானியார் அவர்கள் அனுப்பிய மண்ணறை வேதனை என்ற தலைப்பிலான போட்டோவுடன் கூடிய மெயில் கண்டேன். ரசிகவ் ஞானியார் அவர்கள் தமிழில் எழுதி இருந்ததால் எனக்கு புரிந்தது. மிகச் சமீப காலமாக இதே போட்டோவுடன் கூடிய மெயில்கள் பலரிடமிருந்தும் நமக்கு வந்துள்ளன. அவை ஆங்கிலத்தில் இருந்தது. எனக்கு ஆங்கிலம் அதனால் அது என்ன போட்டோ என்ன செய்தி என புரிய முடியாமல் டெலிட் செய்து விட்டேன். ஞானியார் அவர்கள் தமிழில் அனுப்பிய மெயிலைக் கண்ட பின்தான் அதன் பின்னணி புரிந்தது.

ஓமானில் நடந்த உண்மைச் சம்பவம். குர்ஆனை காலால் எட்டி உதைத்த 12 வயது முஸ்லிம் சிறுமி குரங்காக மாறி விட்டாள். இது 3 மாதங்களுக்கு முன்பு வரை உலவி வந்த செய்தி. பாம்பு தீண்டிய ஜனாஸா என்று படத்துடன் செய்தி வந்தது. காஃபதுல்லாஹ்வில் வைத்து பொய் சத்தியம் செய்தவரின் தலை பாம்புத் தலையாக மாறி விட்டது என்றும் படத்துடன் செய்தி வந்தது. இப்படி ஏராளமான செய்திகள் அடிக்கடி வருகின்றன. இவை முஸ்லிம்கள் நடத்தும் பத்திரிக்கைகளும் செய்திகளாக வந்து விடுகின்றன.

மேலோட்டமாக பார்க்கும்பொழுது இஸ்லாத்தின் உயர்வை இயம்புவது போல் இந்த செய்திகள் இருக்கும். சிந்தித்துப் பார்த்தால் இவை யாவும் ஈமானுக்கு வேட்டு வைக்கும் செய்திகளே. இஸ்லாத்தின் எதிரிகளான ஷய்த்தான்களால் இஸ்லாத்துக்கு எதிராக இட்டுக் கட்டப்பட்ட கட்டுக் கதைகளே என அறியலாம். அந்தக் கட்டுக் கதைகளில் ஒன்றுதான் இப்பொழுது வந்துள்ள மண்ணறை வேதனை என்ற செய்தியும்.

இம்மை என்று கூறும் நாம் வாழும் இந்த உலகுக்கும் மறுமை என்று கூறும் மறு உலகுக்கும் இடைப்பட்ட ஒரு நிலை (வாழ்க்கை) உண்டு. அந்த நிலையை (வாழ்க்கையை)த்தான் கபுறு வாழ்க்கை என்கிறோம். அந்த கபுறு வாழ்க்கையில் நடக்கும் மண்ணறை வேதனையை மனிதர்கள் அறிய முடியுமா? நிச்சயமாக முடியாது. இதோ அதற்குரி ஆதாரம்.

.. .. அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் பர்ஸக் (திரை - தடுப்பு) இருக்கிறது என்று அல் குர்ஆனின் 23:100வது வசனத்தில் அல்லாஹ் கூறி உள்ளான். எவர்களுக்குப் பின்னால் பர்ஸக் (திரை - தடுப்பு) இருக்கிறது என்று அல்லாஹ் கூறி விட்டானோ அவர்களின் நிலையை யாராலும் அறியவே முடியாது. மண்ணறை வேதனையை மனிதர்கள் அறிய முடியாது என்பது ஈமான் சம்பந்தப்பட்டது. எனவே இப்பொழுது வெளியாகியுள்ள செய்தி ஈமானுக்கு வேட்டு வைக்கும் செய்தி என்பதை இந்த ஒரு ஆயத்து மூலமே விளங்கிக் கொள்ளலாம். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி.

Sunday, November 26, 2006

நேச குமார் மாதிரி முட்டாள்தனமான குற்றச்சாட்டுகளைக் கூற மாட்டோம். ஆதாரங்களை மட்டுமே வெளியிடுவோம்.

Saturday, November 25, 2006

தஞ்சை பெரிய கோயில் நிழல் அற்புதமா? அறிவியலா?

Friday, October 06, 2006

அண்ணன் அன்று எழுதியது வேத வாக்கா? இன்று ஓட்டுப் பிச்சைக் கேட்டு தெருத் தெருவாய் சொன்னது வேத வாக்கா?
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
ஏ தாழ்ந்த தமிழகமே!
தேர்தல் வரப்போகிறது! நம்மை ஆளப்போகின்றவர்களை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்! தேர்ந்தெடுப்பதற்கான தகுதிகளை நாம் முன்பே நிர்ணநித்து விட்டோம். கைலியை மடித்துக் கட்டத் தெரிய வேண்டும்! தேவைப்பட்டால் அதை சட்டசபையில் அவிழ்த்துக் காட்டவும் தெரிந்திருக்க வேண்டும்! கட்டிப்புரளத் தெரிய வேண்டும்! குத்துச்சண்டையும் தெரிய வேண்டும்! பேப்பர் வெயிட்டுகளை எடுத்துக் குறிபார்த்து எறியத் தெரிய வேண்டும் சிறப்புத் தகுதியாக அகராதியில் இல்லாத வார்த்தைகளில் அதிக புலமை இருக்க வேண்டும். இந்தத் தகுதி உள்ளவர்களை நம்மை ஆள்வதற்கு நாம் தேர்வு செய்யப் போகிறோம். நமக்குதான் இதில் முன் அனுபவம் நிறைய உண்டே!

நம்மை ஆளப் போகிறவர்கள் தங்கள் தகுதிகளை இப்பொழுதே மேடைகளில் காட்டத் துவங்கிவிட்டனர். 'உனக்கு நடிக்கத் தெரியுமா? பாட்டுப்பாடத் தெரியுமா? வசனம் எழுதத் தெரியுமா? அடேய் நீ தமிழனா? உனக்கு ஆங்கிலம் பேசத் தெரியுமா? குரங்கு மூஞ்சி! உன்னிடம் அழகு இருக்கிறதா? பனைமரம்! வழுக்கைத்தலை! கோட்டான்! என்றெல்லாம் அரசியல் மேடைகள் களைகட்டிவிட்டன.

'அண்ணாவின் ஆட்சியை அமைப்போம்! புரட்சித் தலைவர் ஆட்சித்தான் அமையும்! காமராஜரின் ஆட்சியை அமைத்தே தீருவோம்!' என்று எதிர்கால திட்டங்களை எடுத்துவைக்க துவங்கிவிட்டனர். ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி போடுவோம் என்று அரியணை ஏறி மூன்றுபிடி அரிசி கூட தரமுடியாதவர்களின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம். தாய்மேல் ஆணையிட்டு கள்ளுக்கடைகள் மூடி, பின்னர் திறந்து, பின்னர் மூடி, பின்னர் தளர்த்தி மொத்த சமுதாயத்தையும் முட்டாளாக்கியவர்களின் ஆட்சியை அமைக்கப் போகிறார்களாம். அவுன்ஸ் கணக்கில் அரிசி வழங்கி, போதாவிட்டால் எலிக்கறியைச் சாப்பிடுங்கள் என்று போதித்த புண்ணியவான்களின் ஆட்சியை அமைக்கப்போகிறார்களாம். செத்து விட்டவர்கள் செய்த அக்கிரமங்களை மக்கள் மறந்திருப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

எனக்கு ஆட்சியில் பங்கு உண்டா? வாரியத்தில் இடமுண்டா? கொள்ளை அடிப்பதில் எனக்கு எவ்வளவு? என்ற பேரங்களை சமுதாயக் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. சமுதாயமாவது! மண்ணாங் கட்டியாவது. பதவி நாற்காலியில் அமர வேண்டுமென்ற இலட்சியம் (?) என்னாவது?

இப்படி களைகட்டிவிட்ட 'தேர்தல்' முடிந்தபின் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடத்தான் போகிறது. எல்லாரும் எல்லாமும் பெறத்தான் போகிறோம், இப்படித்தான் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

தேர்வு செய்து அனுப்புகின்ற நம்மைவிட, அரசியல்வாதிகள் ஒழுக்கத்திலோ, நேர்மையிலோ எந்த வகையிலும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை இனியேனும் உணரமறுத்தால் 'ஏ தாழ்ந்த தமிழகமே!' என்று உலகம் காரி உமிழ்வதை எவரும் தடுக்க இயலாது.
நன்றி: 1988 மே அல் ஜன்னத் நுழைவாயில்!
இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வன் முஃமின் பில்லாஹ் அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுக்கு புரிவானாக. ஆமீன்.

அண்ணன் அன்று எழுதிய வேத வாக்கு.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்ரஹீம்
உங்கள் பொன்னான வாக்குகள்!

இதோ வரப்போகிறது. அதோ வரப்போகிறது என்று ஆவலுடன் (?) எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் வந்துவிட்டது! செந்தமிழ் நாட்டுக்கே புதுக்களை வந்துவிட்டது! அலங்கார விளக்குகள்! ஆளுயர சுவரொட்டிகள்! செவிப்பரையைக் கிழிக்கும் ஒலிபெருக்கிகள்! மின்னல் வேக சுற்றுப் பயணங்கள்! மனதை மயக்கும் வாக்குறுதிகள்! இத்தனையும் தாங்கிக் கொள்ள தமிழகம் தயாராகிவிட்டது!

எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள்! வெள்ளையும் கறுப்புமாக ஏது இவ்வளவு பணம்? தேர்தல் முடிந்த பிறகு என்ன தான் நடந்து விடப்போகிறது என்பதைப்பற்றியெல்லாம் அக்கரை காட்டாத தமிழ்ப் பெருங்குடி மக்கள்!

யாரைத் தேர்ந்தெடுத்தாலும் லஞ்ச லாவண்யங்கள் ஒழிந்து விடப்போகிறதா? வறுமைக்கோட்டை தாண்டிவிடப்போகிறதா தமிழ்ச் சமுதாயம்? ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஏற்ப்பட்டுவிடப்போகிறதா? குற்றங்கள் குறையப் போகின்றனவா? ஏறிவரும் விலைவாசி இறங்கிவிடத்தான் போகின்றதா? இதில் எதுவுமே ஏற்பட போவதும் இல்லை! அவர்கள் வாங்கிய லஞ்சத்தை, வாரிச்சுருட்டிய வரிப்பணத்தை இவர்கள் வாங்கப் போகிறார்கள். ஏற்படப் போவது ஆட்சி மாற்றம் அல்ல. ஆள் மாற்றம் மட்டுமே. பதவி பித்துப்பிடித்து அலையக் கூடிய எவரைத் தேர்ந்தெடுத்தாலும் தீமைக்குத் துணை நிர்ப்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. இறைவனைப் பூரணமாக நம்பி அவனை அஞ்சக் கூடிய உண்மை முஸ்லிம் என்னதான் செய்வது? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

யார் தீமையை பரிந்துறை செய்கிறானோ, அந்த தீமையில் அவனுக்கும் ஒரு பங்கு உண்டு. யார் நன்மைக்கு பரிந்துறை செய்கிறானோ அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் எல்லாவற்றையும் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். (அல் குர்ஆன் 4:85)

நல்ல காரியத்திலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்! தீமையிலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் துணை நிற்கவேண்டாம். (அல் குர்ஆன் 5:2)

வட்டியும், மதுவும், சூதும், லஞ்சமும், ஊழலும், ஒழுக்ககேடுகளும், குற்றங்களும் எவராலும் ஒழியப்போவது இல்லை. இறைவன் தீய காரியங்கள் என்று அறிவித்துள்ள இந்தக் குற்றங்களைச் செய்யத்தகுதியானவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதால் என்ன வந்துவிடப்போகிறது? அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலையைத் தவிர வேறு எதுவும் ஏற்படப்போவதில்லை.
நன்றி:ஜனவரி 1989அல் ஜன்னத் நுழைவாயில்
அண்ணன் அன்று எழுதியது வேத வாக்கா இன்று சொல்வது வேத வாக்கா?
இதனை கம்யூட்டரில் டைப் செய்து அனுப்பித் தந்த செல்வி ரஜா அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

Wednesday, September 20, 2006

இது இறைவனும் இறைத் தூதரும் இட்டுள்ள கட்டளை.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 20-09-2006
உறவுகளை வெட்டி (முறித்து) வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உண்மையை உரத்துக் கூறும் உமர் என்ற பெயரில் மெயில்கள் அனுப்பி வரும் முத்துப் பேட்டை பரகத் அலி அவர்களே! உங்களைப் போன்றவர்கள் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் மார்க்கக் கடமையை செய்து வந்திருக்கிறோம். அது போல் உபதேசம் என்ற மார்க்கக் கடமையை இந்த மெயில் மூலம் செய்கிறோம்.
நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை.
வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதி விட்டது போல் எண்ணிக் கொண்டு எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக என்ன என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வழியில் இலங்கை டூ காத்தான்குடி என்ற தலைப்பில் மெயில் அனுப்பியுள்ளீர்கள். அதிலுள்ள உங்கள் அறியாமையை நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை. பலஹீனத்தினால் இப்படி எழுதி இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்து விடக் கூடாது. அதனால் அந்த மெயிலில் நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளில் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டி விட்டு இந்த மெயிலின் நோக்கத்திற்கு வருகிறேன்.
அந்நஜாத் வெளிவர காரணமாக இருந்தது.
'இலங்கையைப் பொறுத்த வரை ஏகத்துவ எழுச்சி என்பது வான்சுடர் என்ற பத்திரிக்கை வாயிலாக நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் மூலம் ஏற்பட்டது. அவர் இறந்ததும் தவ்ஹீத் இறந்தது என இலங்கையிலுள்ள எல்லா சுன்னத் ஜமாஅத் பள்ளி குத்பாக்களிலும் பேசினார்கள். அந்த அளவுக்கு இலங்கையில் தவ்ஹீத் தாக்கத்தை ஏற்படுத்தியது நிஸார் குவ்வத்திதான். அவர் ஏற்படுத்திய அந்த தாக்கம்தான் தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சி ஏற்பட வாயிலான அந்நஜாத் வெளிவர காரணமாக இருந்தது' என்று நான் எழுதி இருந்தேன்.
இடைச் செருகல்கள் செய்து எழுதி வாதம் வைத்துள்ளீர்கள்.
அதை உங்கள் மெயிலில் வான்சுடர் என்ற பத்திரிக்கையின் வாயிலாக நிஸார் குவ்வத்தி என்ற அறிஞர் தான் ஏகத்துவத்தை இலங்கையில் முதன் முதலாக போதித்தார் அவர் இறந்ததும் தவ்ஹீதும் இறந்து விட்டது என்று இன்றளவும் இலங்கையின் சுன்னத் வல் ஜமாத்துடைய எல்லாப் பள்ளிகளிலும் குத்பாக்களில் கூறுகிறார்கள் என்றும் கூறுகிறார். என்று இடைச் செருகல்கள் செய்து எழுதி வாதம் வைத்துள்ளீர்கள்.
அதே சித்து வேலையைத்தான் நீங்களும் செய்து வருகிறீர்கள்.
இப்படி இல்லாத ஒன்றை இட்டுக் கட்டி இடைச் செருகல் செய்வது. அந்த இடைச் செருகலை பயன்படுத்தி வாதம் வைத்து எதிர் தரப்பை பொய்யர்களாக ஆக்குவது. சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி வாதம் வைப்பது. அந்த பொய்யான வாதத்தை வைத்து எதிர் தரப்பினரை பொய்யர்கள் என சித்தரிப்பது. இதுவெல்லாம் அந்நஜாத் அபுஅப்துல்லாஹ் அவர்கள் விஷயம் முதல் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வரை அண்ணன் பி.ஜெ. செய்து வரும் சித்து வேலை. அதே சித்து வேலையைத்தான் நீங்களும் செய்து வருகிறீர்கள். அதை எனது எழுத்திலும் செய்து காட்டியுள்ளீர்கள்.
அந்த ஆயத்து ஹதீஸ்களின் உபதேசம் யாருக்கு?
விஷயத்திற்கு வருவோம். இந்த நிலையில் நான் செத்து விட்டால் உலகம் இருக்கும். நீங்கள் செத்து விட்டாலும் உலகம் இருக்கும். ரசூல்(ஸல்) அவர்கள் இறந்து 14 நூற்றாண்டுகள் ஆன பின்பும் உலகம் இருக்கிறது. எனவே நாம் செத்து விட்டால் அடுத்த நிலை என்ன என சிந்தியுங்கள். உங்களை மட்டும் சொல்லவில்லை. ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் அனுப்பும் மெயில்களில் பெரும்பாலும் ஆயத்து ஹதீஸ்களை எழுதுகிறீர்கள். அந்த ஆயத்து ஹதீஸ்களின் உபதேசம் யாருக்கு? ஊருக்கு மட்டும்தானா? உங்களுக்கு இல்லையா?
மூன்று முறை (வானவர்களுக்கு) கட்டளையிடப்படுகின்றது.
''திங்கள் மற்றும் வியாழன் தோறும், சுவன வாயில்கள் திறக்கப்படுகின்றன. (அந்நாட்களில்) இறைவன் தனக்கு இணைக்கற்பிக்காத அனைவரையும் மன்னிக்கின்றான் ஆனால் எவர் தன் சகோதரருடன் வெறுப்புடனும், பகைமையுடனும் இருக்கின்றாரோ அவரைத்தவிர. ''அவ்விருவரும் சமாதானமாகும் வரை தாமதியுங்கள்'' என்று மூன்று முறை (வானவர்களுக்கு) கட்டளையிடப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:- நூல்: முஸ்லிம்
அந்த வாதம் அல்குர்ஆனின் பார்வையில் தவறு.
அபுஅப்துல்லாஹ் அவர்கள் துவங்கி இன்று வரையுள்ள யாருடனாவது அண்ணன் பி.ஜெ. சமாதானமாக ஆகி இருக்கிறாரா? ஹதீஸில் தன் சகோதரருடன் என்றுதான் உள்ளது. எனவே அது உடன் பிறந்த சகோதரர்களைத்தான் குறிக்கும். அபுஅப்துல்லாஹ், இக்பால் மதனி, மைதீன் உலவி, கமாலுத்தீன் மதனி, ஹாமித் பக்ரி, ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி போன்றவர்களை குறிக்காது என்று கூட அண்ணன் வாதம் வைக்கலாம். அந்த வாதம் அல்குர்ஆனின் பார்வையில் தவறு. இதோ அதற்குரிய ஆதராம்.
உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்.
''நிச்சயமாக இறைநம்பிக்கையாளர்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரர்கள் ஆவார்கள். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளைச் சீர்படுத்துங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் மீது கருணை பொழியப்படும்'' அல்குர்ஆன் 49:10. இந்த வசனத்திற்கு அண்ணன் பி.ஜெ. அவர்களின் மொழி பெயர்ப்பிலிருந்தும் தருகிறேன். ''நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்''
எச்சரிக்கைகள்.
''உறவுகளை வெட்டி (முறித்து) வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்'' என்பது நபி (ஸல்) அவர்களது எச்சரிக்கையாகும். (முஸ்லிம்) ''தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள். அவர்களுக்கே கடும் வேதனை உண்டு. இது அல்லாஹ்வின் எச்சரிக்கையாகும். (அல்குர்ஆன் 3:105)
போதகர் பி.ஜெ. போக மறுத்து விட்டார்.
இன்னும் இது போன்றுள்ள ஆயத்துகளையும் ஹதீஸ்களையும் எழுதியவர்கள்தான் பேசியவர்கள்தான் அண்ணன் பி.ஜெ. அணியினர். இதுவரை யாருடனாவது உறவாக ஆனார்களா? சென்னையில் பி.ஜெ. உடல் நிலை சரி இல்லாது இருந்த போது நாகர்கோயிலிருந்த கமாலுத்தீன் மதனி சென்னை வந்து பி.ஜெ.யைப் பார்த்து உடல் நிலை விசாரித்தார் கமாலுத்தீன் மதனி ஆபரேஷன் செய்யப்பட்டு இருந்தார். அந்த நேரத்தில் குமரி மாவட்டம் வேர்க்கிளம்பியில்தான் பி.ஜெ. 2 நாள் தங்கி இருந்தார். போய் விசாரித்து விட்டு வாருங்கள் என்று பாமரர்கள் சொன்னார்கள். படித்த போதகர் பி.ஜெ. போக மறுத்து விட்டார்.
அவர்களில் யாருமே இறை மார்க்கமாம் இஸ்லாத்தை பின் பற்றவே இல்லை.
பி.ஜெ. தாயார் இறந்து விட்ட துக்க நிலையில் வீடு தேடிப் போய் விசாரிக்கச் சென்றார் ஜவாஹிருல்லாஹ். கதவைப் பூட்டி வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார் அண்ணன் பி.ஜெ. எந்த ஆயத்து ஹதீஸ்களின் அடிப்படையில் பி.ஜெ. இவ்வாறெல்லாம் நடந்து கொண்டார்? முஸ்லிம் அல்லாதவர்கள் சமீபத்தில் இறந்து விட்ட வலம்புரி ஜாண் உட்பட பலர் இஸ்லாமிய பிரச்சார மேடைகளில் பேசி இருக்கிறார்கள். சாதாரண கூட்டங்களில் பேசவில்லை. மிகப் பிரம்மாண்டமானக் கூட்டங்களில் பேசி இருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமாகப் பேசி இருக்கிறார்கள். இறை மார்க்கம் இஸ்லாம்தான் என புத்தகங்களும் எழுதி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாருமே இறை மார்க்கமாம் இஸ்லாத்தை பின் பற்றவே இல்லை. அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் பி.ஜெ. அணியின் சொல்லுக்கும் செயலுக்கும் என்ன வித்தியாசம்.
ஹதீஸ் அடிப்படையில் நீங்கள் சமாதான முயற்சி செய்து பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களைப் பார்த்து கேட்டார்கள். ''(நஃபிலான - உபரியான) நோன்பு நோற்பது, தர்மம் கொடுப்பது மற்றும் தொழுவதை விட அதிக நன்மையை பெற்றுத்தரும் நற்செயல் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா'' என்று. அதற்கு அவர்கள் ஆம் என்றனர். ''அதுதான் மக்கள் மத்தியில் சமாதானம் செய்து வைப்பது. ஏனெனில் மக்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் பிளவுகளை ஏற்படுத்துவது மழிப்பதற்கு சமமாகும். தலைமுடிகளை மழிப்பதை நான் சுட்டிக்காட்ட வில்லை. மாறாக இது மார்க்கத்தையே மழித்து (அழித்து) விடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி இந்த ஹதீஸ் அடிப்படையில் நீங்கள் சமாதான முயற்சி செய்து பாருங்கள்.
இது இறைவனும் இறைத் தூதரும் இட்டுள்ள கட்டளை.
பி.ஜெ.யின் சமாதான அறிக்கைகள் எப்படிப்பட்டது என்பதை பி.ஜெ. த.மு.மு.க.வில் இருக்கும்கொழுதே எழுதி இருக்கிறேன். என்னதான் மனக் கசப்பானாலும் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனால் பகைமை பாராட்ட அனுமதிக்கப்பட்ட நாட்கள் மூன்றுதான். பிறகு ஸலாமைக் கொண்டு சமாதானம் ஆகி விட வேண்டும். இது இறைவனும் இறைத் தூதரும் இட்டுள்ள கட்டளை. த.மு.மு.க.வினருக்கு ஸலாம் சொல்லாதே! ஸலாம் சொன்னால் பதில் சொல்லாதே!! இது பி.ஜெ. அணியின் பிரச்சாரம். இது யாருடைய கட்டளைகளுக்கு எதிரான பிரகடனம்? அல்லாஹ்வும் ரசூலும் ஒரு வழியைக் காட்டி இருக்க அதற்கு நேர் மாற்றமான வழியைக் காட்டுபவன் யார்? சிந்தியுங்கள் இன்ஷh அல்லாஹ் நேர் வழி பெறுவீர்கள். நேர்வழி பெற துஆச் செய்து விடை பெறுகிறேன். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

Friday, September 15, 2006

கில்லாடி ஜெயலலிதா பின்னாடி ஒரு அமைப்பு.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹிம். 16-09-2006
உண்மை பிரச்சனை முனீர்ஹுதாவா? சிறைவாசிகள் விடுதலையா? சதியின் பின்னணியில் யார்?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. தமிழக அரசின் உள்துறைச் செயலாளராக இருந்தவர் செய்யது முனீர் ஹுதா. ஜெயலலிதா ஆட்சியின் போது சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்தவர் முஸ்லிம் என்ற காரணத்துக்காக நீக்கி ஓரங்கட்டப்பட்டவர்களில் செய்யது முனீர் ஹுதாவும் ஒருவர். முனீர் ஹுதாவை நீக்க அவர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை இட்டுக் கட்டினார் ஜெயலலிதா. முனீர் ஹுதா. முறையாக நீதி மன்றம் சென்றார். நீதி மன்றம் முனீர் ஹுதா. குற்றமற்றவர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா அரசு மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை.
அதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை.
செய்யது முனீர் ஹுதாவை மீண்டும் பணியில் அமர்த்தக் கூறியது நீதித்துறை. இந்திய ஜனாதிபதியும் ஆணை பிறப்பித்தார். எதனையும் கண்டு கொள்ளாது அவமதித்த ஜெயலலிதா எந்த மறு விளக்கமும் கூறவில்லை. அது பற்றி பேசவே இல்லை. முனீர் ஹுதாவை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டார். ஜெயலலிதாவின் இந்த முஸ்லிம் விரோத செயலை த.மு.மு.க. கண்டித்து விமர்சனம் செய்தது. அதற்கும் ஜெயலலிதா பதில் சொல்லவில்லை.
அப்பொழுதும் ஜெயலலிதா தனது செல்ல வாயை திறக்கவில்லை.
சட்ட மன்ற பொதுத் தேர்தல் வந்தது. செய்யது முனீர் ஹுதாவை ஜெயலலிதா நீக்கியது அநியாயம் என்பதை விளக்கி தேர்தல் பிரச்சாரத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் த.மு.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தார்கள். அப்பொழுதும் ஜெயலலிதா எந்த பதிலும் சொல்லவில்லை. த.மு.மு.க.வின் இந்த பிரச்சாரத்தின் பயனாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முனீர் ஹுதா முதல்வரின் முதன்மைச் செயலாளராக ஆக்கப்பட்டார். அப்பொழுதும் ஜெயலலிதா தனது செல்ல வாயை திறக்கவில்லை.
விவகாரம் முனீர் ஹுதா அல்ல.
முனீர் ஹுதாதான் பிரச்சனை என்றால் நீதி மன்ற தீர்ப்பு, த.மு.மு.க.வின் எதிர்ப்பு, இந்திய ஜனாதிபதியின் ஆணை என இவற்றில் எதற்காவது மறுமொழி கூறி இருப்பார். முதல்வரின் முதன்மைச் செயலாளராக ஆக்கப்பட்டதும் ஆட வேண்டிய ஆட்டங்களை ஆடி இருப்பார். பாட வேண்டிய பாட்டுக்களை பாடி இருப்பார். அப்பொழுதும் எந்த விவகாரமும் பண்ணவில்லை. முனீர் ஹுதா முதல்வரின் முதன்மைச் செயலாளராக ஆகி நூறு நாட்கள் ஆன பின் இப்பொழுதுதான் அவரை ஒரு விவகாரமாக ஆக்கி பேசுகிறார். எனவே விவகாரம் முனீர் ஹுதா அல்ல. அப்படியானால் விவகாரம் என்ன? அதன் பின்னணி என்ன?
ஜட்ஜுகளுக்கு பீதியை ஏற்படுத்தி விட்டார்.
அப்துல் நாஸர் மதானிக்கு ஜாமீன் கிடைத்து விடும். அவர் விடுதலையாகி விடுவார் என்ற நம்பிக்கை நாட்டு மக்கள் எல்லாருக்கும் ஏற்பட்டு விட்டது. இதை தடுத்து நிறுத்த ஆட்சி அதிகாரம் ஜெயலலிதாவிடம் இல்லை. எனவே தான் முனீர் ஹுதாவை விவகாரமாக ஆக்கி சூழ்ச்சி செய்து விட்டார் ஜெயலலிதா. அப்துல் நாஸர் மதானிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளித்த உள்துறைச் செயலாளராக இருந்தவருக்கே தேச துரோகி பட்டமா? அப்படியானால் ஜாமீன் அளித்தால் நமக்கு என்ன பட்டம் ஜெ. வழங்குவாறோ? என ஜட்ஜுகளுக்கு பீதியை ஏற்படுத்தி விட்டார்.
கில்லாடி ஜெயலலிதா பின்னாடி ஒரு அமைப்பு.
இந்த விமர்சன சூழலில் தமிழக அரசு மதானி விடுதலையில் நேரடியாக தலையிட முடியாது. தலையிட்டால் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. போன்ற சங்பரிவார் அமைப்புகள் பிரச்சனை பண்ணும். எனவே தமிழக அரசும் தலையிட முடியாத அளவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார் சூழ்ச்சிக்காரி ஜெயலலிதா. சிறைவாசிகளின் விடுதலைக்காக தி.மு.க. அரசிடம் சிபாரிசு செய்து கொண்டிருக்கும் அமைப்பு த.மு.மு.க. இது பகிரங்கமானது. சிறைவாசிகளின் விடுதலைக்கு தடை போட்டுக் கொண்டிருக்கும் கில்லாடி ஜெயலலிதா பின்னாடி ஒரு அமைப்பு இருக்கிறது. அதுதான் இப்பொழுது ஜெயலலிதாவை சிறைவாசிகளுக்கு எதிராக இயக்கிக் கொண்டிருக்கிறது. அது அந்தரங்கமானது. அந்த அமைப்பு எது என்பதை நான் எழுத விரும்பவில்லை. பின்னணியில் யார்? என்பதற்கு க்ளு தருகிறேன் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
தெளிவாகப் புரிந்து விட்டீர்களா?
மதானி விடுதலை ஆகி விட்டால் அடுத்து அன்சாரி, கோவை பாட்சா என அடுத்தடுத்து முஸ்லிம் சிறைவாசிகள் அனைவரும் வரிசையாக விடுதலையாகி விடுவார்கள். ஜெ. விடுதலை செய்யாதவர்களை கருணாநிதி விடுதலை செய்து விட்டால் த.மு.மு.க.வுக்கு அந்த புகழ் கிடைத்து விடும். இதை விரும்பாத மார்க்க அறிஞன் உருவத்தில் ஒரு ஷய்த்தான் உலவி வருகிறான். யார் என்று புரிந்து விட்டீர்களா? ஜெ.க்கு முன்னால் ஒரு எழுத்தைப் போட்டால் வரும் ஷய்த்தான் தான். ஓ தெளிவாகப் புரிந்து விட்டீர்களா? எடுத்தெறியப்பட்ட ஷய்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி.

Wednesday, August 30, 2006

த.த.ஜ.வினரின் தற்கொலை முயற்சி.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. லுஹா, பி.ஜெ, மசூதுயூசுபி போன்ற பூசாரிகள் மஸ்ஜிதுர்றஹ்மான் பணத்தில் மஞ்சள் குளிப்பு நடத்தி வருகிறார்கள். கடையநல்லூர் பள்ளியை வக்பு போர்டுக்கு கீழ் கொண்டு வந்தார்கள். அதே மாதிரி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானுக்கும் வக்பு அதிகாரிகள் வந்து விட்டார்கள். மக்களே பள்ளியை கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்து விட்டார்கள் ஓடி வாருங்கள் என்று மைக்கில் சத்தம் போட்டு இருக்கிறார்கள். துப்பரவாக இருந்தாலும் இல்லா விட்டாலும் எல்லா பெண்களும் வாருங்கள் என அழைத்து 60க்கும் மேற்பட்ட பெண்களை பள்ளிக்குள் வைத்துள்ளார்கள். அவர்களில் பெரும்hலானவர்கள் தொழ முடியாதவர்கள். அதாவது சுத்தமில்லாதவர்கள்.

எல்லாரையும் கூலி பேசி கூட்டி வந்துள்ளார்கள். த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்ற லுஹா நேற்று காடை பஷPர் வீட்டில் கூட்டம் போட்டு ரவுடிகளை பேரம் பேசி உள்ளார். ஒரு ஆளுக்கு 2000ரூபாய் என 15 பேரை ஏற்பாடு செய்துள்ளார். இந்த 15 பேரும் இரவு முழுவதும் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார். வக்பு வாரியத்தால் நியமிக்கப்பட்ட புதிய முஅத்தினும் இமாமும் இன்று அஸரில் பள்ளிக்குள் சென்றார்கள். லுஹாவால் கூலிக்கு பிடித்து வரப்பட்ட சுனாமி திருடர்களான த.த.ஜ.வினரில் 14 பேர் பள்ளியின் 3வது தளமான மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள். சிலர் கீழே படுத்துக் கொண்டு செத்து விடுவோம் என்று கூறி இருக்கிறார்கள்.

பி.ஜெ.க்கு தேவைப்பட்டால் தற்கொலையை ஹராம் என்பார். தேவைப்பட்டால் முஸ்தபா ரஷhதி போன்றவர்கள் உடலில் குண்டை கட்டி சிந்தாதிரி பேட்டைக்கு அனுப்பி ஹலால் என்பார். அந்த பி.ஜே. இப்பொழுது தற்கொலை ஹலால் என கூறி விட்டார். எனவே த.த.ஜ. வினர் தற்கொலை முயற்சி செய்ததால் வக்பு சூப்ரண்டெண்ட் கடையநல்லூர் உஸ்மான் மைதீன் திரும்பி விட்டார். தவ்ஹீது வியாபாரிகளான லுஹாவோ, பி.ஜெ.யோ, மசூதுயூசுபியோ தற்கொலை செய்ய மாட்டார்கள் பிறரைத்தான் தூண்டி விட்டுத்தான் பிழைப்பு நடத்துவார்கள்.

Monday, August 28, 2006

காலில் விழவும் தயாராக ஆகி விட்டார்கள்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்

கடையநல்லூர் ஜாக் பள்ளியை வக்பு பள்ளி என தீர்ப்பாயம் மூலம் தீர்ப்பு பெற்றது த.த.ஜ. அதன் எதிரொலி மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர். கோர்ட் தீர்ப்பு வரும்வரை பள்ளி வக்பு வாரிய பொறுப்பில்இருக்க வேண்டும் என்கிறார்கள் அதிகாரிகள். த.த.ஜ.வினரும் லுஹாவும் அதிகாரிகளின் கைகளை பிடித்து கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் பார்க்காத இடத்தில் நின்று காலில் விழவும் தயாராக ஆகி விட்டார்கள். எப்படியாவது பேரம் பேசி முடித்து விடுங்கள் என கிரிமினல் அண்ணன் உத்தரவு போட்டுள்ளார். போலீஸ் படை புடை சூழ மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மானில் வக்பு அதிகாரிகள் நுழைந்து விட்டனர். மற்ற செய்திகள் விரைவில்

Tuesday, August 08, 2006

தமிழ்நாடு தவ்ஹீது மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது யார்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா என்ற தலைப்பில் முந்தைய நமது வெளியீடு இருந்தது. அதை பலர் பாராட்டி இருக்கிறார்கள். இது போன்ற ஆக்கங்களை தொடர்ந்து தாருங்கள் என்று எழுதி இருக்கிறார்கள். சிலர் விமர்சித்து இருக்கிறார்கள். ஆனால் அனைவருமே தங்கள் கருத்தையும் பெயரையும் சைட்டிலோ மெயில்களிலோ போட்டு விடாதீர்கள் என்பதை மறவாமல் எழுதி இருக்கிறார்கள். பலர் போன் மூலம் வரவேற்று இருந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று ஒருவர் அறிவுரை கூறி இருந்தார். சிலர் விமர்சனம் செய்திருந்தார்கள். முதலில் விமர்சனங்களைப் பார்ப்போம்.
யாரும் தேசிய கீதத்தை விமர்சித்து இருக்க மாட்டார்கள்.
விமர்சனம் செய்தவர்கள் சுட்டிக் காட்டியவற்றில் இரண்டு விஷயங்கள் நாம் மிகைப்படுத்தி எழுதியுள்ளதாக கூறியுள்ளார்கள். அதில் ஒன்று கேரள சுதர்ஷன சமஸ்கிருதப் பள்ளியில் 'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று கூறி இருக்க முடியாது. யாரும் தேசிய கீதத்தை விமர்சித்து இருக்க மாட்டார்கள். யாரும் தேசிய கீதம் பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று கூறி இருக்க மாட்டார்கள். தாங்கள் உருவாக்கிய 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலையும் பாடுவோம்'' என்று கூறி இருப்பார்கள். அது கிருஸ்ணவாரியார் எழுதிய பிரார்த்தனை அடிப்படையிலான பக்தி பாடலாக இருக்கும். அதையொட்டிதான் பிரச்சனை வந்திருக்கும் என்று எழுதியுள்ளார்கள்.
'ஜன கண மண' பாடுவதை நிறுத்தியும் விட்டார்.
இது விமர்சனம் எழுதியவர்களின் யூகம்தான். உண்மை நிலை அது அல்ல. பெரும்பாலான பள்ளி கூடங்களில் அன்று முதல் இன்று வரை தாங்கள் உருவாக்கிய அல்லது அவர்கள் மதம் சார்ந்த பிரார்த்தனை அடிப்படையிலான பக்தி பாடல்கள் பாடத்தான் செய்கிறார்கள். அதனால் எங்கும் பிரச்சனை வரவில்லை, வராது. ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார் 1985 ஜுலை 26 ஆம் தேதி முதல் எமது பள்ளி கூடத்தில் ஷஜன கண மண பாடுவதை நிறுத்தி விடுவோம் என்று மட்டும் சொல்லவில்லை. ஷஜன கண மண பாடுவதை நிறுத்தியும் விட்டார்.
கேரள அரசு எச்சரிக்கை செய்தது.
'ஜன கண மண' பற்றி விமர்சித்தும் இருந்தார். என்ன விமர்சனம் என்பதை முந்தைய வெளியீட்டில் சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறோம். அந்த நேரத்தில் 'ஜன கண மண' பற்றி செய்யப்பட்ட விமர்சனத்தை இதில் விரிவாகவே தருவோம். 'ஜன கண மண' பாடுவதை வாரியார் நிறுத்தியதும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து விடுவதாக கேரள அரசு எச்சரிக்கை செய்தது. இந்த எச்சரிக்கைக்குப் பிறகுதான் அரசின் உத்தரவுக்கு கிருஸ்ணவாரியார் பணிந்தார். 'ஜன கண மண' வுடன் அவரது 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலை பாடச் செய்தார்.
இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
நாடு சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நாளில் தேசிய கீதத்தைப் பற்றி கடும் சர்ச்சை ஏற்பட்டிருப்பது மிக மிக வருந்தத் தக்கது. ஏந்த நாடும் ஏற்றுக் கொண்ட தேசிய கீதத்திற்கு இப்படி ஒரு சர்ச்சை ஏற்படவில்லை. அதுவும் 40 ஆண்டுகளாக நடை முறையில் உள்ள தேசிய கீதத்தைப் பற்றி இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததாக வரலாறு இல்லை. என அப்பொழுது பத்திரிக்கைகள் கூட கருத்துக்கள் எழுதியுள்ளன. எனவே இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.
எழுத்து வித்தியாசம் இருக்கலாம்.
கிறிஸ்துவ மதத்தில் 'ஜெஹோவா' என்பது கேள்விப்படாத பெயராக உள்ளது. எனவே இது உண்மையாக இருக்காது என்று எழுதியுள்ளனர். 'ஜெஹோவா' என்பது எழுத்து அல்லது வார்த்தை பிசகலாகக் கூட இருக்கலாம். நடந்த சம்பவம் உண்மை. 1985இல் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள் 'ஜெஹோவாவின்' சாட்சிகள் என்ற பிரிவைச் சார்ந்த என்றும் ஜஹோலா பிரிவைச் சார்ந்த என்றும் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் ஓரிரு எழுத்து வித்தியாசத்தில் இந்த செய்திகளை வெளியிட்டன. எனவே எழுத்து வித்தியாசம் இருக்கலாம்.
சரியான வார்த்தையை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள்.
முஸ்லிம்களின் பெரிய அமைப்பு த.மு.மு.க.தான் என்று எல்லா பத்திரிக்கைகளும் ஒப்புக் கொண்டுள்ளன. அந்த பெரிய அமைப்பின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்களின் பெயரை ஆரம்பத்தில் வித விதமாக எழுதினார்கள். இப்பொழுது சரியாக எழுதினாலும் பெயரைச் சொல்லும்போது உச்சரிப்பில் இன்றும் பேதம் உள்ளது. எனவே 'ஜெஹோவாவின்' சாட்சிகள் என்ற பிரிவின் சரியான உச்சரிப்பை சரியான வார்த்தையை சம்பந்தப்பட்டவர்களே அறிவார்கள். நாம் ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார், ஜெஹோவா பற்றி எழுதியது அதையொட்டி கருத்தைச் சொல்லத்தான். அவற்றைப் பற்றிய விபரங்களைத் தர அல்ல. விமர்சனங்கள் வந்துள்ளதால் விபரங்களை தர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
'ஜன கண மண'வை நாங்கள் பாட மாட்டோம்.
பள்ளிகூடங்களில் தேசிய கீதம் போடும்போது எல்லாரும் எழுந்து நின்று பாட வேண்டும் என்பது கேரள அரசின் சட்டம். ஷஜெஹோவாவின் மாணவர்கள் மூன்று பேர் திருச்சூருக்கு அருகில் உள்ள பள்ளி கூடத்தில் தேசிய கீதம் போடும்போது மரியாதைக்காக எழுந்து நின்றார்கள். ஆனால் சேர்ந்து பாடவில்லை. அதைப் பற்றி கேட்டதற்கு, 'ஜன கண மண' எங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்ட கருத்தைக் கொண்ட கீதம். அதனால் 'ஜன கண மண' வை நாங்கள் பாட மாட்டோம். தேசிய கீதம் என்ற முறையில் 'ஜன கண மண' மற்றவர்கள் பாடும்போது அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் எழுந்து நிற்போம் என்று கூறி விட்டார்கள்.
பாடத்தான் வேண்டும் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு.
தேசிய கீதம் பாட மறுத்ததற்காக மூன்று மாணவர்கள் மீதும் பள்ளி விதிகளுக்கு முரணாக நடந்ததாக குற்றஞ்சாட்டி பள்ளியிலிருந்து நீக்கி விட்டார்கள். மாணவர்கள் சார்பில் நீதி வேண்டி கேரள ஹைகோர்ட்டில் வழக்காடப்பட்டது. கேரள அரசின் உத்தரவுப்படி தேசிய கீதமான 'ஜன கண மண' வை பாடத்தான் வேண்டும் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. பிறகு இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி சின்னப்ப ரெட்டி, நீதிபதி தத் ஆகிய இருவரையும் கொண்ட மன்றத்தில் விசாரணை நடந்தது. அந்த உச்ச நீதி மன்றம் கீழ் உள்ளவாறு தீர்ப்பளித்தது.
'தேசிய கீதம் பாட வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.
கேரள மாநில உயர் நீதி மன்றம் தவறான வழியில் சென்று தடம் புரண்டு தீர்ப்பு அளித்து விட்டது. கேரள உயர் நீதி மன்றம் தேசிய கீதத்தின் ஒவ்வொரு சொல்லையும் ஆழ ஆராய்ந்து எந்த மதத்தாரின் உணர்வுகளையும் புண்படுத்தக் கூடிய எதுவும் தேசிய கீதத்தில் இல்லை என்று சொல்லி தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால் பிரச்சனை அது அல்ல. ஜஹோலா பிரிவைச் சார்ந்த அந்த மாணவர்கள் தங்கள் கடவுளை நோக்கி செய்யப்படும் பிரார்த்தனைகள் தவிர வேறு எந்த சடங்கிலும் தாங்கள் கலந்து கொள்வது தங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்டது என்று உண்மையாகவே நம்புகிறார்கள். எனவே, அவர்கள் தேசிய கீதம் பாட வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
பாடத்தான் வேண்டும் என்று சொல்ல எவ்வித சட்ட ஆதாரமும் இல்லை.
கேரள அரசின் உத்தரவு இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவுக்கு முரண்பட்டது. சிலருடைய மத நம்பிக்கைகள் மற்றவர்களுக்கு ஆச்சரிமாகப்பட்டாலும் அவர்கள் அந்த நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் நம்பிக் கொண்டிருந்தால் அவர்களை இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு பாதுகாக்கும். பள்ளிகூடங்களில் தேசிய கீதம் போடும்போது எல்லாரும் எழுந்து நின்று பாடத்தான் வேண்டும் என்ற கேரள மாநில அரசின் கல்வித்துறை அதிகாரிகளின் சுற்றறிக்கைக்கு எவ்வித சட்ட ஆதாரமும் இல்லை.
அந்த மூன்று மாணவர்களையும் அதே பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும்.
அந்த மூன்று மாணவர்களையும் அவர்கள் படித்த அதே பள்ளி கூடத்தில் சேர்க்க வேண்டும். அவர்கள் எந்த இடர்பாடும் இன்றி படிக்க வகை செய்ய வேண்டும். நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையை போதிக்கின்றது. நமது தத்துவமும் அதை போதிக்கின்றது. நம் அரசியல் அமைப்பு அதை நடைமுறைப் படுத்துகிறது. நாம் அதை களங்கப்படுத்தி விடக் கூடாது என்று கூறி கேரள உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது உச்ச நீதி மன்றம். தீர்ப்பு வந்த உடனேயே கிருஷ;ணவாரியார் தமது பள்ளியில் 'ஜன கண மண' பாடுவதை மீண்டும் நிறுத்தி விட்டார். அவர் தாமே எழுதிய சமஸ்கிருத பாடலைப் பாடச் செய்தார். அதற்குப் பிறகு பெரும்பாலான பள்ளி கூடங்களில் தேசிய கீதம் பாடுவதையே நிறுத்தினார்கள்.
இந்திய தேசிய கீதத்தின் ஆரம்பமே சரி இல்லை.
'ஜன கண மண' பற்றி அப்பொழுது செய்யப்பட்ட விமர்சனத்தை இப்பொழுது பார்ப்போம். 1919ஆம் ஆண்டு 5 ஆம் ஜார்ஜ் மன்னரும் அவரது தாயார் இங்கிலாந்து மகாராணியும் கல்கத்தாவுக்கு வந்தார்கள். அவர்களை வரவேற்று போற்றி பாட எழுதப்பட்ட கவிதைதான் 'ஜன கண மண'. இதைத்தான் நமது தேசிய கீதமாக ஆக்கி இருக்கிறார்கள். ஜன கண மண அதிநாயக ஜெஹே! இதுதான் நமது தேசிய கீதத்தின் ஆரம்ப வார்த்தை. இதன் பொருள் என்ன? மக்கள் தலைவனே வாழ்க! பாராத பாக்கியவிதாதா என்றால் பாரதத்துக்கு நன்மை பயப்பயவனே! என்று பொருள். இது இந்திய தேசத்தை பாரத மாதாவை குறிக்கிறதா? சிந்தியுங்கள். நிச்சயமாக இது இந்தியாவை குறிக்கவே இல்லை. ஆக இந்திய தேசிய கீதத்தின் ஆரம்பமே சரி இல்லை.
தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் சேர்க்கப்படவில்லை.
'பஞ்சாப சிந்து குஜராத மராத்தா' என்றுதான் இரவிந்தரநாத் தாகூர் எழுதி இருந்தார். இது தேசிய கீதமாக ஆக்கப்பட்டபொழுதுதான் திராவிடம் சேர்க்கப்பட்டு 'திராவிட உத்கல வங்கா' என்றானது. பிரிட்டிஷ; அரசாங்கத்துக்கு பஞ்சாப், சிந்து, குஜராத், மராத்தா ஆகிய சமஸ்தானங்கள் அடிமைபட்டுக் கிடந்தன. எனவே அந்த சமஸ்தானங்களின் பெயர்களை மட்டுமே இரவிந்தரநாத் தாகூர் எழுதி இருந்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, காஷ;மீர், ராஜஸ்தான் போன்ற இந்தியாவிலுள்ள எந்த மாநிலமும் இது தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் சேர்க்கப்படவில்லை.
இது தேசிய கீதமா? இந்தியாவை கூறு போடும் பிரிவினை கீதமா?
அதே போல் வங்காள விரிகுடா மட்டுமே கீதத்தில் உள்ளது. அரபிக் கடல், இந்து மஹா சமுத்திரம் இடம் பெறவில்லை. காரணம், அந்தப் பகுதிகளெல்லாம் போர்சுகீசியர்களிடம் இருந்தது. அதனால்தான் பிரிட்டிஷ; ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் பாராட்டி வர வேற்று குளிர வைக்க எழுதிய இந்த பாடலில் இந்தப் பகுதிகளின் பெயர்களெல்லாம் இடம் பெறவில்லை. இது தேசிய கீதமாக ஆக்கப்பட்ட பின்னரும் கூட இவை இடம் பெறவில்லை. இது தேசிய கீதமா? இந்தியாவை கூறு போடும் பிரிவினை கீதமா?
பிரிட்டீஸ் ராஜாவை நல்ல ஐஸ் வைத்து குளிப்பாட்டியுள்ளார்.
விந்திய இமாசல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா' இது பற்றி எந்த விமர்சனமும் நாம் காண கிடைக்கவில்லை. தவ சுப நாமே ஜாகே, தவ சுப ஆஷpஷ மாகே, ஜாஹே தவ ஜெய காதா என்ன அர்த்தம். மக்கள் எல்லலோரும், உன் புனிதப் பெயரை எண்ணிய படியே கண் விழிக்கிறார்கள். உன் பெருமையை பாடிக் கொண்டே உனது அருளாசியைக் கோருகிறார்கள் என்று அர்த்தம். இப்படி பிரிட்டீஷ; ராஜாவை நல்ல ஐஸ் வைத்து குளிப்பாட்டியுள்ளார். மேலும் இரவிந்தரநாத் தாகூர் பிரிட்டிஸ் ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் எப்படியெல்லாம் பாராட்டி ஐஸ் வைத்து எழுதியுள்ளார் தெரியுமா?
ஓ ராணியே ஓ ராஜேஸ்வரனே நாங்கள் உன் பாதத்தில் அடி பணிகிறோம்.
உனது சிம்மாசனத்தைச் சுற்றி பல மதத்தினரும் வந்து தங்களது அன்பை தெரிவிப்பார்கள். உனது அன்பு மொழியினைக் கேட்க ஆவலாய் இருப்பார்கள். பண்டைய நாடோடிகளை பஞ்சத்திலிருந்து மீட்டு மேலே ஏற்றி நம்மை வழி நடத்திச் செல்லும் மாமன்னனைப் போற்றுவோம். அறியாமையிலும், அவதியிலும், பஞ்சத்திலும் அடிபட்டு சுரணையற்ற நிலையிலுள்ள நாடு உன் கண் அசைவுக்கும் உன் தாயின் நிஜ பாதுகாப்பையும் விரும்புகிறது. உனது கருணை மிக்க வழி நடத்தலால் தூங்கும் பாரதம் விழித்தெழும். ஓ ராணியே ஓ ராஜேஸ்வரனே நாங்கள் உன் பாதத்தில் அடி பணிகிறோம்.
இந்த விஷயங்களில் நாம் எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை.
இப்படி அடிமைத்தனமாய் பிரிட்டிஸ் ராஜாவையும் அவரது தாயார் மகாராணியையும் புகழ்ந்து இரவிந்தரநாத் தாகூரால் எழுதப்பட்ட கீதம்தான் 'ஜன கண மன'. இந்த அடிமைத்தனமான கீத்திலிருந்து 52 விநாடிகள் பாடும் அளவுக்கு எடுக்கப்பட்டதூன் இன்று இந்திய தேசிய கீதமாக உள்ள 'ஜன கண மன'. இது இந்தியனுக்கு பெருமையா? தலை குனிவா? இப்படி விமர்சனங்கள் அனல் பறந்தன. இந்த நிலையில்தான் மத்திய அரசு, இந்தியர்களுக்கு எழுச்சியூட்டும் வண்ணமும் இந்தியன் என்ற உணர்வை தூண்டும் வண்ணமும் அல்லாமா முஹம்மது இக்பால் எழுதியுள்ள ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஆக்கலாமா என பரிசீலித்தது. எனவே இந்த விஷயங்களில் நாம் எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை.
அரசியல் ஒரு சாக்கடை.
பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம் என்பதை போனில் விமர்சித்த சிலர் ''அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் -- கள்தான் மூழ்கி குளிக்கும். 'ஜன கண மண' வுக்கு எழுந்து நின்றாலும். முஸ்லிம் எழுதிய 'ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா' வுக்கு எழுந்து நின்றாலும் இரண்டுமே ஷpர்க்குதான். பஞ்சாயத்து போர்டுக்கு போனாலும் பார்லிமெண்டுக்கு போனாலும் இந்த ஷpர்க்குகளை செய்யாமல் இருக்க முடியாது. என்றதோடு வசை மாரியும் பொழிந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று அறிவுரை சொன்ன சகோதரர் கூற்றுப்படி இங்கு பெயர் சொல்ல மாட்டோம்.
சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை.
நாம் பெயர் சொல்லாவிட்டாலும் ''அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் -- கள்தான் குளிக்கும்'' என்ற விமர்சனத்தைப் படித்ததும். இந்த விமர்சனத்துக்கு சொந்தக்கார அமைப்பினர் யார் என்பதை எல்லாருமே எளிதாக அறிவீர்கள். குர்ஆன் ஹதீஸ் வழி நடப்போம் என சொல்லிக் கொண்டு அரசியல் ஒரு சாக்கடை என்கிறார்கள். அவர்களின் இந்தக் கூற்றுக்கு இதுவரை ஏதாவது ஒரு ஆயத்து-ஹதீஸ் ஆதாரத்தைக் காட்டி இருக்கிறார்களா? என்றால் இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்பவர்கள்தான் சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை என்பதை அவர்களது சமீபத்தி தேர்தல் நிலைப்பாடு படம் பிடித்துக் காட்டியது.
ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள்.
இவ்வளவு காலம் 'வரதட்சணை வாங்குபவனின் உணவு ஹராம்' என்றார்கள். இப்பொழுது 'திருமணத்திற்கு சென்றால் அதை நாம் ஆதரித்தது போல் ஆகும். தீமைக்கு பரிந்துரை செய்த குற்றவாளிகளாக ஆவோம் உணவு ஹராம் இல்லை'' என்று கூறியுள்ளார்கள். திருமணம் செய்வது சுன்னத் நபி வழி. அந்த நபி வழியை செய்பவர் வரதட்சணை என்ற ஒரு தவறை செய்தால் அந்த திருமணத்தையே புறக்கணிக்கச் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்கள் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள். திருமணத்திலாவது ஓரிரு தவறுகள் நடக்கும்.
அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.
டாஸ் மார்க், மலிவு விலை கள்ளுக்கடை, தனியார் பனை மரத்தில் கள்ளு தயாரிக்க அனுமதி, நிரோத்தை மாட்டிக் கொண்டு விபச்சாரம் செய்யுங்கள் என்ற பிரச்சாரம். லஞ்சம் ஊழல் உட்பட எழுதி முடிக்க முடியாத அளவுக்கு அனைத்து ஹராம்களையும் செய்ததுதான் ஜெயலலிதா அரசு. அந்த ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி தெருத் தெருவாய் -- மாதிரி அலைந்தார்களே அப்பொழுது அரசியல் சாக்கடையாகத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அரசியலை ஹராமாக சித்தரித்தார்கள். சட்ட மன்ற தேர்தலில் அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.
ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் வந்தாக வேண்டும்.
எனவே இவர்கள் ஆலிம்கள் தோற்றத்தில் உலவி வரும் ஷய்த்தான்கள். மார்க்கம் பற்றி சிந்திக்காத பொழுது போக்கிகளை கெடுக்க நடிக நடிகையர் போன்ற பொழுது போக்கிகள் ரூபத்தில் வருவான். மார்க்கம் பற்றி சிந்திக்கக் கூடியவர்களிடம் பொழுது போக்கிகள் ரூபத்தில் வந்தால் கெடுக்க முடியாது. அவர்களை மார்க்கத்தின் பெயரால்தான் கெடுக்க முடியும். மார்க்கத்தின் பெயரால் கெடுக்க வேண்டும் என்றால் ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் உலவி வந்தாக வேண்டும்.
அவர்கள் உருவத்தில் இருந்தவன் ஷய்த்தான்தான்.
களப்பணி ஆற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர்.... மற்றவர்கள் வரம்பு மீறிப் போயிருக்கலாம். ஆனால் நாம் அப்படி அல்லவே! நாம்தான் ஏகத்துவத்தில் உறுதியானவர்களாக இருக்கின்றோமே! நாம் களம் இறங்கினால் என்ன தவறு? என்று கேட்கலாம். நாம் என்ன தான் உறுதியானவர்களாக இருந்தாலும், நம்மீது நமக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும், 'யார் வேலியை சுற்றி மேய்கின்றாரோ அவர் வேலிக்குள்ளேயே சென்று விடக் கூடும் (புகாரி 2051) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் நிலைக்கு ஆளாக மாட்டோம் என்பது என்ன நிச்சயம்? என்று ஹதீஸ் ஆதாரத்தை எழுதி தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்றார்களே அப்பொழுதும் அவர்கள் உருவத்தில் உலவி வந்தவன் ஷய்த்தான்தான்.

அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

என்னடா தவ்ஹீது பேசும் ஆலிம்கள் உருவத்தில் ஷய்த்தான் உலவி வருவதாக எழுதுகிறானே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எந்த குர்ஆன் ஹதீஸ்கள் ஆதாரம் காட்டி எந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டம் தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்று சொன்னதோ, அதே தவ்ஹீது மவுலவிகள் கூட்டம்தான் அதே குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் காட்டி நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் களப் பணி ஆற்றச் சொன்னது. அந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டமும் தேர்தலில் க(ள்)ளப் பணி ஆற்றியது. அது மட்டுமா இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை கூறி அது பத்ருப் போரில் ரசூலுல்லாஹ்வுக்கு கிடைத்த வெற்றி மாதிரி என்றும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வி உஹது போரில் ரசூலுல்லாஹ்வுக்கு ஏற்பட்ட தோழ்வி மாதிரி என்றும் 12-05-2006 அன்று ஜும்ஆவில் ஒருவன் பேசினான். அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

இந்த மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது ஷய்த்தான்களா இல்லையா?

அவன்தான் அப்படி பேசினான் என்றால் அந்தக் கூடாரத்தில் உள்ள அத்தனை மவுலவி கூட்டமும் இப்பொழுது அதே கருத்தை ஏற்று எழுதியும் உள்ளன. இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை பத்ருக்கு ஒப்பிட்டும். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வியை உஹதுக்கு ஒப்பிட்டும் எழுதியுள்ளார்கள். ரசூலுல்லாஹ்வுக்கு பத்ரில் கிடைத்த வெற்றிக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ்வுக்கு உஹதில் ஏற்பட்ட தோழ்வியும் இந்த லிவாத் கூட்டத்துக்கு தேர்தலில் ஏற்பட்ட தோழ்வியும் சமமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கண்ட பத்ருக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சந்தித்த உஹதுக்கு எதுவும் ஈடாகுமா? இப்பொழுது சொல்லுங்கள் இந்த தமிழ்நாடு தவ்ஹீது மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது யார்? ஷய்த்தான்கள்தானே.

இன்ஷh அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம்.

ஷய்த்தான் பிடித்துள்ள இந்த பைத்தியக்கார மவுலவிகளின் உளறல்களை தூக்கி எறிவோம். இந்திய அரசியலில் ஈடுபடலாம். ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வது ஹராம் ஷpர்க் என்ற இவர்களின் வாதம் முட்டாள்தனமான வாதம் என்பதை புரிவோம். எழுந்து நிற்பது பாடுவது போன்றவை ஷpர்க்கு என்ற நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தால் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு அனுமதி படி செயல்படலாம். எனவே மீண்டும் சொல்கிறோம் பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். இன்ஷh அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம் வஸ்ஸலாம்.
வெளியீடு: கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி

Tuesday, August 01, 2006

ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும்.


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 01-08-2006

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு வந்ததும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தும் வழக்கம் வந்து விட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள். முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு என்ற இந்த தலைப்பு உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான இந்த தலைப்பில் முஸ்லிம்கள் பேசுவதுடன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டும் முஸ்லிம்கள் பேச வைக்கிறார்கள். மீலாது மேடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார்கள் அல்லவா. அது போல் இந்த மேடையிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக நம்பும்படியாக பேசி விட்டுச் செல்கிறார்கள்.

நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும்.

வரலாறு தெரியாத முஸ்லிம்களும் வரலாற்றை மறந்து விட்ட முஸ்லிம்களும் வராலற்றை மறைத்திடும் இந்த பேச்சாளர்கள் பற்றி, எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி விட்டார் என நம்பி விடுகிறார்கள். அதனால் ஆஹா என்ன அருமையான பேச்சு என்று பேசியவர்களை முஸ்லிம்களின் நண்பன் என புகழ ஆரம்பித்து விடுகிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு(தான்) வகித்தார்கள் என்று சொல்வது தவறு. இதை ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்களை கொண்டு ஆய்வு செய்துதான் தெரிய வேண்டும் என்பதில்லை. அப்படி ஆய்வு செய்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள் எப்படி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் விளங்க முடியும். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்று சொல்வது சரி அல்ல. இதை விளக்க பாமரர்களும் நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும். முதலில் உதாரணத்தின் மூலம் விளங்குவோம்.

எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று இருக்கிறார்கள்.

இரு நூறு கிலோ எடையுள்ள ஒரு பொருளை ஒருவர் தூக்குகிறார். அவர் தூக்கும்பொழுது இரண்டு பேர் வந்து அவருக்கு உதவி செய்கிறார்கள். இப்பொழுது பொருளை தூக்கியவரை இரு நூறு கிலோ தூக்கியவர் என்றும் உதவி செய்தவர்களை அவர் தூக்க இவர்கள் உதவி பங்களிப்பு செய்தார்கள் என்றும் சொல்வோம். யாராவது வந்து உதவி செய்தவர்களை இரு நூறு கிலோ தூக்கியவர்கள் என்றும் இரு நூறு கிலோ தூக்கியவரை பங்களிப்பு செய்தவர் என்றும் சொன்னால் எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று இருக்கிறார்கள். இன்னொரு உதாரணத்தின் மூலமும் விளங்குவோம்.

பொருளுக்குரியவர்கள் செய்த உயிர் தியாகத்தால்.

ஒரு சமுதாயத்தாரிடம் பொருள் ஒன்று இருக்கிறது. அந்த பொருளின் உரிமையாளர்களான அந்த சமதாயத்தவர்கள் அசால்ட்டாக இருக்கும்பொழுது கொள்ளைக் கூட்டம் வந்து அந்த பொருளை அபகரித்து விடுகிறது. பொருளை பறி கொடுத்தவர்கள் அதை மீட்பதற்காக உடனே போராட்டத்தில் குதிக்கிறார்கள். செத்தாலும் பரவாயில்லை தங்கள் பொருளை மீட்டே ஆக வேண்டும் என உயிரையே பணயம் வைத்து சண்டை போடுகிறார்கள். அப்பொழுது இன்னும் சில சமுதாயத்தவர்களும் வந்து சேர்ந்து உதவி செய்கிறார்கள். கொள்ளையடித்தவர்களோ பொருளுக்குரியவர்களை கொன்று விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். பொருளை தங்களுக்குரியதாக ஆக்கி விடலாம் என பொருளுக்குரியவர்களை அழித்தொளிப்பதிலேய குறியாக இருக்கிறார்கள். அதனால் பொருளுக்குரியவர்களே குறி வைத்து அதிகமாக கொல்லப்பட்டார்கள். பொருளுக்குரியவர்கள் செய்த உயிர் தியாகத்தால்; கொள்ளையர்களிடமிருந்து பொருள் மீட்கப்படுகிறது.

உங்களுக்கும் பங்கு உண்டு என பாராட்டுகிறோம்.

மீட்கப்பட்ட பின் பொருளை என்ன செய்ய வேண்டும். அந்த பொருள் எந்த சமுதாயத்திற்குரியதோ அந்த சமுதாயத்தவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். என்ன நடந்தது. உரியவர்களிடம் கொடுக்கவில்லை. என்ன செய்தார்கள். பொருளுக்குரியவர்களிடம்; சொல்கிறார்கள். இந்த பொருளை மீட்க நாங்கள் அனைவரும் போராடினோம். நீங்களும் எங்களுடன் வந்து சேர்ந்து உதவி செய்து உங்கள் பங்களிப்பை செலுத்தினீர்கள். உயிர்த் தியாகம் செய்தீர்கள். நீங்களும் உங்கள் பங்களிப்பை செலுத்தி உயிர்த் தியாகம் செய்ததால் பாராட்டுகிறோம். எப்படி பாராட்டுகிறோம்? இந்த பொருளை மீட்டதில் உங்களுக்கும் பங்கு உண்டு என பாராட்டுகிறோம் என்றார்கள்.

இவர்கள் யார்? என்கிறீர்களா? இவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

பாராட்டி விட்டு பொருளை மற்றவர்கள் வைத்துக் கொண்டார்கள். நன்றாக கவனிக்க வேண்டும். இந்த பொருளில் உங்களுக்கும் பங்கு உண்டு என்று கூட சொல்லவில்லை. பொருளுக்குரியவர்கள் இது எங்கள் பொருள் என்று உரிமை கோரவுமில்லை. பொருளுக்குரியவர்களும் என்ன செய்தார்கள். ஆம் அந்த பொருளை மீட்டதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பெருமையாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பொருள் என்பதையே மறந்து விட்டார்கள். இவர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள். இவர்கள் யார்? என்கிறீர்களா? இவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.

முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.

குட்டி குட்டி சமஸ்தானங்களாக இருந்தவற்றை இணைத்து ஹிந்துஸ்த்தான் என்ற பெரிய நாட்டை உருவாக்கியவர்களே முஸ்லிம்கள்தான். இதை முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். அரபி, உருது, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து உண்டு. தமிழ் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து இல்லை. எனவே தமிழ் போன்ற மொழி பேசுபவர்கள் இந்து என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் இந்தியா என யூகித்து விளங்கி உள்ளார்கள். இந்தியா என்று தமிழில் எழுதப்படும் நம் நாட்டுக்கு அல்-ஹிந்த், ஹிந்துஸ்தான் என பெயர் வைத்தவர்களே முஸ்லிம்கள்தான். இந்த உண்மையை முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.

சமுதாய தலைவர்கள் என்போர் அப்படி ஆக்கி விட்டார்கள்.

800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்கள் நாம் என்று பேசுவார்கள். ஆகவே இந்தியாவை ஆளும் உரிமை முஸ்லிம்களுக்குத்தான் உண்டு என்று பேச மாட்டார்கள். ஆகவே இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்றுதான் பேசுவார்கள். இந்தியாவே முஸ்லிம்களுக்கு உரியதுதான் என்று பேசத் தெரியாதவர்களாக ஆகி விட்டார்கள். சமுதாய தலைவர்கள் என்போர் அப்படி ஆக்கி விட்டார்கள். இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்பது தவறு. இந்தியாவே முஸ்லிம்களுக்கு உரியது என்பதே சரி.

இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து வரும் கூட்டத்தின் மூதாதையர்கள்.

இந்தியா என்ற நாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபொழுதுதான் வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அபகரித்தார்கள். இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள்தான், ஆட்சியை ஆங்கிலேயனிடம் பறி கொடுத்த முஸ்லிம்கள்தான் இழந்த நாட்டை மீட்க, இழந்த ஆட்சியை பிடிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக களம் கண்டார்கள். மற்றவர்கள் குறிப்பாக இன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து வரும் கூட்டத்தின் மூதாதையர்கள் ஆங்கிலேயனிடம் கிடைத்த பதவிகளை பெற்று சொகுசு வாழ்வு வாழ்ந்தார்கள்.

இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறோம்.

இந்தியாவை மீட்க இழந்த ஆட்சியை பெற போராடி வந்த முஸ்லிம்களுடன் மற்றவர்களும் சேர்ந்தார்கள். நாட்டை இழந்த முஸ்லிம்கள் நாட்டை மீட்க போராடினார்கள். ஆட்சியை இழந்த முஸ்லிம்கள் ஆட்சியை திரும்ப பெற போராடினார்கள். இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள். சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்கள். இந்தியாவே முஸ்லிம்களுக்குரியது. இதை எல்லாரும் மறந்து விட்டோம்.

ஜமாஅத் என்ற வார்த்தைக்கு பகராமாக வைக்கப்பட்டதுதான்.

இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற போராட்டத்துக்கு காலப் போக்கில் அமைப்பு துவங்கினார்கள். சுதந்திர போராட்டுத்துக்காக 1885இல் துவங்கப்பட்ட அமைப்பு காங்கிரஸ். காங்கிரஸ் என்ற பெயர் வைக்க காரணம் என்ன? காங்கிரஸ் என்றால் என்ன? இதையும் முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். முஸ்லிம்கள் ஒன்று கூடினால் அதற்கு சொல்லப்படும் வார்த்தை ஜமாஅத். இந்த ஜமாஅத் என்ற பொருள் தரும் வார்த்தைதான் காங்கிரஸ் என்பது. காங்கிரஸ் என்ற பெயரே ஜமாஅத் என்ற வார்த்தைக்கு பகராமாக வைக்கப்பட்டதுதான்.

முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விட்டது.

இந்த ஜமாஅத்தே (காங்கிரஸ் கட்சியே) முஸ்லிம்களுக்கு சொந்தமானதுதான். காலப் போக்கில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை (ஜமாஅத்தை) விட்டு முஸ்லிம்களின் தலைவர்களாக அன்று கருதப்பட்டவர்கள் வெளியேறினார்கள். அதாவது ஜமாஅத்தை (காங்கிரஸ் பேரியக்கத்தை) விட்டு பிரிந்தார்கள். இந்த பிரிவினையால் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்த காங்கிரஸ் பேரியக்கத்தை (ஜமாஅத்தை) முஸ்லிம்கள் இழந்தார்கள். அதனால் அந்த பேரியக்கம் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சொந்தமானது போல் ஆகி விட்டது.

முஸ்லிம் லீக் என்ற அமைப்பை- ஜமாஅத்தை துவங்கினார்கள்.

இது போன்ற உண்மைகளைச் சொல்லும்போது கசக்கும். யார் சொன்னாலும், யாருக்கு சொன்னாலும் உண்மையைச் சொன்னால் அது கசக்கும். அதனால்தான் ''உண்மை அது கசப்பாயினும் சொல்லி விடு'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். பிரிந்து விடாதீர்கள் என்று திரு குர்ஆனில்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பிரிந்து விடாதீர்கள் என்று யாரைப் பார்த்து சொல்லப்பட்டிருக்கிறது. அழகிய உபதேசமாகவும் கட்டளைகளாகவும் முஸ்லிம்களை நோக்கித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த முஸ்லிம் தலைவர்கள்தான் பிரிந்தார்கள். பிரிந்த முஸ்லிம் தலைவர்கள் சார்பில் சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம் லீக் என்ற அமைப்பை- ஜமாஅத்தை துவங்கினார்கள்.

முஸ்லிம் லீக்கை ஒளித்தாக வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

இந்த முஸ்லிம் லீக் என்பதில் உள்ள லீக் என்பதும் ஜமாஅத் என்ற பொருள் தரக் கூடியதுதான். முஸ்லிம் ஜமாஅத் என்பதையே மற்றவர்களும் புரியும் வண்ணம் முஸ்லிம் லீக் என பெயரிடப்பட்டது. நாம் அடிக்கடி சொல்வோம் இந்தியா என்ற நாடு இருக்கும் வரை இ.யூ. முஸ்லிம் லீக் என்ற அமைப்பு இருந்தாக வேண்டும் என்று. காரணம் இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட முஸ்லிம்களின் கட்சி காங்கிரஸ். அது முஸ்லிம்களுக்கு சொந்தமில்லை என்பது போல் ஆகி விட்டது. எனவே சுதந்திரத்துக்காக பாடுபட்ட கட்சி என்று முஸ்லிம்கள் சார்பில் சொல்லிக் கொள்ள முஸ்லிம் லீக் இருந்தாக வேண்டும் என்று. இதனால்தான் சங்பரிவார்கள் இந்திய சுதந்திரத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வதற்கு தடையாக உள்ள முஸ்லிம் லீக்கை ஒளித்தாக வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் முஸ்லிம் என்ற பெயருடன் தேர்தலில் போட்டியிட.

அது மட்டுமல்ல சுதந்திரத்திற்குப் பிறகு தோன்றிய ஜாதி, மத பெயரில் உள்ள கட்சிகளை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளாக அங்கீகரிக்க இந்திய சட்டத்தில் தடை உள்ளது. அதனால்தான் ராமதாஸ், கிருஷ;ணசாமி, திருமாவளவன் போன்றவர்கள் துவங்கிய ஜாதி சங்கங்களின் பெயர்களை விட்டு விட்டு வேறு பெயரில் கட்சி கண்டார்கள். சுதந்திரத்திற்கு முன்பு தோன்றிய கட்சி என்பதால் முஸ்லிம் லீக் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் முஸ்லிம் என்ற பெயருடன் தேர்தலில் போட்டியிட முஸ்லிம் லீக் என்ற கட்சியால் மட்டுமே முடியும்.

முஸ்லிம் லீக்குக்கு தலைவர்களாக வருபவர்கள் செயல்பட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனாலும்தான் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள் முஸ்லிம் லீக்கை ஒளிப்பதில் குறியாக இருக்கிறார்கள். நீங்கள் என்ன முஸ்லிம் லீக்கை ஒளிப்பது. முஸ்லிம் லீக்கை நாங்களே ஒளித்துக்கட்டி விடுவோம். குற்றுயிரும் குறை உயிராகவும் கூட விட மாட்டோம். அதற்கு ரூஹு (உயிர்) போகும் வரை இருந்து அதை முழுமையாக மவ்த்தாக்கி விட்டும் ஒதுங்க மாட்டோம். கபுருக்குளியில் வைத்து மண்ணைப் போட்டு மூடி சமாதி கட்டி விட்டுத்தான் ஒதுங்குவோம். இப்படித்தான் முஸ்லிம் லீக்குக்கு தலைவர்களாக வருபவர்கள் செயல்பட்டு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி நளினமாக எழுதுவது என்று எனக்குத் தெரியவில்லை.

த.மு.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த முஸ்லிம் லீக்கின் கண்ணியத்திற்குரிய தலைவர்களின் பல்வேறு தவறான போக்குகளை பலர் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். 2001 சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். 14-04-2001 அன்று அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் பக்கம் 78 இல் 'தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் ஒரு வாசகம் இடம் பெற்றது. அது ''தலித் கிறிஸ்தவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இணையாக ஆக்கிட மத்திய அரசை வலியுறுத்தும். தலித் கிறிஸ்தவர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர் குழுவின் ஆய்வுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்பதாகும். இந்த அறிக்கை வந்ததும் த.மு.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தலித் முஸ்லிம்கள் யோசனையை இவர்தான் சொல்லி இருப்பார் போலும்.

1999 வாழ்வுரிமை மாநாடு முதல் அ.தி.மு.க.வுக்கு த.மு.மு.க. வழங்கி வந்த ஆதரவை 2001 தேர்தலில் ரத்து செய்தது. அதற்கு காரணம். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற தலித் முஸ்லிம்கள் என்ற வாசகமும்தான். ஆனால் அப்பொழுது அ.தி.மு.க.விடம் ஒரே ஒரு சீட்டு பெற்ற முனீருல் மில்லத் காதர் மைதீன் அவர்களுக்கு அந்த ஒரு சீட்டுதான் பெரிதாக தெரிந்தது போலும். அதனால் முனீருல் மில்லத் காதர் மைதீன் அதற்கு சால்ஜாப்பு கூறி சீட்டை மட்டும் வாங்கிக் கொண்டார். ,d;ndhU காரணம் அவரே இந்த கொள்கையில்தான் இருந்துள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவுக்கே இந்த தலித் முஸ்லிம்கள் யோசனையை இவர்தான் சொல்லி இருப்பார் போலும்.

அவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை.

அன்று முனீருல் மில்லத் காதர் மைதீன் சொன்ன சால்ஜாப் என்ன? ''கிறிஸ்தவ மதத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோருவதால் அதே வகையில் முஸ்லிம்களுக்கும் உரிமைகள் வழங்க எண்ணி அறிக்கையை எழுதியவர், ஆர்வக் கோளாறு காரணமாக இந்த வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது. தேர்தல் அறிக்கையில் வருவதெல்லாம் அரசாங்க சட்டமா என்ன? ஆட்சிக்கு வந்த பின் இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கையில் எங்கள் நிலையை தெரிவிப்போம்'' என்றார்.

இஸ்லாமிய விரோத கொள்கையை ஜெயலலிதா மூலம் சொல்ல வைத்துள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னால் எங்கள் நிலையை தெரிவிப்போம் என்றார் முனீருல் மில்லத். 5 வருடங்களுக்கு பின்னால் தங்கள் நிலையை தெரிவித்துள்ளார் முனீருல் மில்லத். 5 வருடங்களுக்கு முன்னால் இஸ்லாமிய விரோத கொள்கையை ஜெயலலிதா மூலம் சொல்ல வைத்துள்ளார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுதான் முஸ்லிம் லீக் கட்சியின் தீர்மானமாக இப்பொழுது வந்த அறிக்கையாக இருக்கிறது. ''அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை எழுதியவருக்கு சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது' என்று அன்று சொன்ன முனீருல் மில்லத் காதர் மைதீன் அவர்களுக்கும் சரியாக வழி காட்ட யாரும் இல்லை எனத் தெரிகிறது என்றுதான் நாமும் கூற வேண்டி உள்ளது. இதை விட நளினமான எழுத எனக்குத் தெரியவில்லை.

இஸ்லாமிய (யிஸத்திற்கு) கொள்கைக்கு எதிராகத் தோன்றியவைதான்.

இந்த முஸ்லிம் லீக் தலைவர்களின் பல்வேறு தவறான போக்குகளால், குறிப்பாக இஸ்லாமிய விரோத போக்கால் முஸ்லிம்களிடம் பல வகையான இஸ்லாமிய விரோத கொள்கைகள் ஊடுறுவி விட்டன. முஸ்லிம்கள் தங்களுக்கு தாங்களே கொள்கைகளை வகுத்துக் கொள்ள முடியாது. குர்ஆன் ஹதீஸ்கள் மூலம் இஸ்லாம் கூறியுள்ள கொள்கைகளைத்தான் முஸ்லிம்கள் தங்கள் கொள்கைகளாக ஏற்று கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அதற்கு பெயர்தான் முஸ்லிம். சோசலிஸம், கேப்டலிஸம், கம்யூனிஸம் என இன்று உலகில் உள்ள அனைத்து இஸங்களும் (கொள்கைகளும்) இஸ்லாமிய (யிஸத்திற்கு) கொள்கைக்கு எதிராகத் தோன்றியவைதான்.

தலைவர்கள்தான் தவறாக பயன்படுத்தி விட்டார்கள்.

சமுதாய அமைப்புகளில் குறிப்பாக முஸ்லிம் லீக் தலைவர்களாக பிரச்சார பீரங்கிகளாக அறிமுகம் ஆனவர்கள் செய்த செய்து கொண்டிருக்கிற தவறான செயல்களால் இஸ்லாம் வகுத்தளித்த வழியை (இஸ்லாமியயிஸத்தை) விட்டு வேறு வழியில் முஸ்லிம்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இஸ்லாம் வகுத்தளித்த கொள்கையை விட்டு வேறு கொள்கைக்கு போகிறோம் என்று சொல்லவில்லை. இஸ்லாம் வகுத்தளித்த கொள்கைக்கு விரோதமாக போக வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு அணுவளவும் கிடையாது. இஸ்லாம் காட்டிய வழியை தலைவர்கள் தவறாக பயன்படுத்தியதால் அந்த வழிவே தவறு என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். எனவே அவர்களது திட்டத்தில் இஸ்லாமிய விரோத கொள்கை புகுந்து விட்டது. இஸ்லாம் காட்டிய வழி சரியானது. தலைவர்கள்தான் தவறாக பயன்படுத்தி விட்டார்கள். தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ கொள்கையை செயல்படுத்தும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டார்கள்.

இந்த இஸ்லாமிய விரோத தலைவர்களைத்தான் சமுதாயத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். ''ஜிஹாதுகளில் மிகச் சிறந்தது. அக்கிரமக்கார அரசனின் முன்னால் உண்மையை எடுத்துச் சொல்வது'' என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். இதை நமது சகோதரர்கள் சிந்திக்க தவறி விட்டார்கள். அதன் விளைவு இஸ்லாத்திற்கு எதிரான கம்யூனிஸ கொள்கையை செயல்படுத்தும் நிர்ப்பந்தத்திற்குள்ளாகி விட்டார்கள்.

இந்த பாவமெல்லாம் நிச்சயமாக --- தலைவர்களையே சாரும்.

இஸ்லாம் முஸ்லிம்(ஜமாஅத்தார்)களுக்கு இட்டுள்ள கட்டளை தலைமைக்கு கட்டுப்பட வேண்டும். தலைமைக்கு இட்டுள்ள கட்டளை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். கலந்தாலோசித்து முடிவு எடுத்து விட்டால் அல்லாஹ்வின் மீது தவக்கல் (எனும் அசைக்க முடியாத நம்பிக்கை) வைத்து எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மஷ{ரா சம்பந்தமான 3:159 வசனத்தைக் காட்டி கலந்தாலோசித்தல் என்பதை வெறும் நாடகமாக சில தலைவர்கள் ஆக்கி விட்டார்கள். அதனால் தலைமைக்கு கட்டுப்படுதல், தலைமைக்கு முடிவு எடுக்கும் உரிமை என்பதெல்லாம் வேண்டாம். கம்யூனிஸ்டுகள் மாதிரி பொலிட் பீரோ முறையை பின் பற்றுவோம் என்ற முடிவுக்கு சில சகோதரர்கள் சென்று விட்டார்கள். இந்த பாவமெல்லாம் நிச்சயமாக - - - தலைவர்களையே சாரும்.

இந்தியாவை பாகிஸ்தான், பங்ளாதேஸ் என பிரித்தாள வேண்டும் என்று போராடவில்லை.

இந்த மாதிரி தலைவர்களை, இஸ்லாமிய விரோத தலைவர்களை அவர்களது சமுதாய துரோகச் செயல்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாமல் இருக்கக் கூடாது. அப்படி இருப்பதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் செய்யும் துரோகம்தான். இந்த மாதிரி தலைவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாததால்தான் முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்தியா என்ற பெரிய நாட்டையே இழந்து இருக்கிறோம். சுதந்திரப் போராட்டத்தின் போது போராடியவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் அனைத்து மக்களின் நலனுக்காகவும்தான் போராடினார்கள். இந்தியாவை பாகிஸ்தான், பங்ளாதேஸ் என பிரித்தாள வேண்டும் என்று போராடவில்லை. தேசப் பிரிவினைக்கு யார் காரணம்? என்பதை http://tmmk.blogspot.com/2006/07/blog-post_11.html என்ற இந்த சைட்டில் எழுதியுள்ளார்கள். இதை படித்து மூல காரணம் யார்? என அறியலாம்.

பாதிப்பு அடைந்தவர்கள் யார்? இலாபம் அடைந்தவர்கள் யார்?

அகில இந்திய காங்கிரஸ் மகா சபை - அகில இந்திய முஸ்லிம் லீக் - இங்கிலாந்து ஆங்கில அரசு ஆகிய முத்தரப்பு முழு மனதுடன் கூடிய முழுமையான உடன்பாட்டினூடே பாகிஸ்தான் உதயமாயிற்று. பண்டித ஜவஹர்லால் நேரு, காயிதே ஆஜம் முஹம்மது அலி ஜின்னாஹ், லார்டு மவுண்ட் பேட்டன் கையொப்பமிட்டு, களிப்போடு கைலாகு கொடுத்து இந்தியாவையும், பாகிஸ்தானையும் தனித்தனி இரு சுதந்திர நாடுகளாகப் பிரித்துக் கொண்டனர். இப்படி வரலாற்றில் எழுதப்பட்டிருக்கலாம். புனித ரமழான் பிறை 27 ஆம் நாள் புதிய நாடு பாகிஸ்தான் உருவானது. இப்படி பாகிஸ்தானியர்களாக ஆகி விட்டவர்கள் (முன்னாள் இந்தியர்கள்) பெருமைப்படலாம். இந்த பிரிவினைக்கு யார் காரணமாக இருந்தாலும் இதனால் பாதிப்பு அடைந்தவர்கள் யார்? இலாபம் அடைந்தவர்கள் யார்? சிந்திக்க வேண்டாமா?

தவறுகளை சுட்டிக் காட்டினால் இன உணர்வுதான் பிரதிபலிக்கிறது.

இந்திய சுதந்திரத்தின் போது கையெழுத்திடும் கட்சியாக இருந்த முஸ்லிம் லீக்கின் இன்றைய நிலை என்ன? வாங்கிய 3 தொகுதியில் ஒன்றை இழந்தார்கள். எஞ்சிய இரு தொகுதிகளின் வேட்பாளர்களைக் கூட முஸ்லிம் லீக் அலுவலகத்தில் வைத்து முஸ்லிம் லீக் வேட்பாளராக அறிவிக்கவில்லை. அறிவிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிலைக்கு யார் காரணம்? இதை பரிதாப நிலை என்பதா? இழி நிலை என்பதா? சிந்தியுங்கள். பிரிக்கப்படாத இந்தியாவில் பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பதை கற்பனை செய்து கூட பார்த்து இருக்க முடியுமா? சிந்தியுங்கள். பாகிஸ்தான் (பங்ளாதேஸ் என) பிரிக்கப்பட்டதால் ஆள வேண்டிய நாம் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் கஷ;மீர் பிரச்சனை வேறு. இன மாச்சர்யம் பார்ப்பவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முட்டாள்தனமானவர்கள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டினால் இன உணர்வுதான் பிரதிபலிக்கிறது.

இழந்த உரிமை என்பது இந்தியாவின் ஆட்சி.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மனமுண்டு என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும் என்று உரைத்தவர்கள் நாம். பிறரது உரிமைகளை மதித்தவர்கள் நாம். உரிமைகளை வழங்கி வாழ்ந்தவர்கள் நாம். இன்று உரிமைகளை இழந்து நிற்கிறோம். இழந்த உரிமைகளை மீட்கவும் முடியாமல், இருக்கும் உரிமைகளை காக்கவும் முடியாமல் அலைகிறோம். இழந்த உரிமை என்பது இந்தியாவின் ஆட்சி. இதைக் கூட உணராமல் அலைகிறோம். இதற்கு யார் காரணம்?

கண் மூடி பின் பற்றியதால் ஏற்பட்ட கதி இது.

ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஆலிம்கள் சொன்னார்கள். அந்த ஆலிம்கள் பின்னால் கண் மூடிப் போனதால் நமது கல்வி மண் மூடிப் போனது. நமது சமுதாயத்தவர்கள் அனைத்து துறைகளிலும் பின் தங்கிப் போனார்கள். இந்தியாவில்தான் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதாக கூறுகிறோம். அரபு நாடுகளில் உயர் பதவிகளில் யார் இருக்கிறார்கள். குப்பை அள்ளும் வண்டியில் தொங்கிச் செல்பவர்களாக, சட்டிப் பானைகளை கழுபவர்களாக, சாக்கடையை அள்ளுபவர்களாக யார் இருக்கிறார்கள். இந்த கதி எதனால் ஏற்பட்டது. ஆங்கிலம் ஹராம் என்று சொன்ன ஆலிம்ஸாக்களை கண் மூடி பின் பற்றியதால் ஏற்பட்ட கதி இது.

அண்ணன் அன்று சொன்னவைகளை அப்படியே எழுதி இருப்பேன்.

ஓராண்டுக்கு முன்னால் அண்ணன் பி.ஜே.யும் அவருடன் உள்ள ஆலிம்ஸாக்களும் அரசியல் ஹராம் என்பது போல் பேசினார்கள். அன்று ஆங்கிலம் ஹராம் என்று சொன்னவர்கள் ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வெறுப்பால் சொன்னார்கள். த.மு.மு.க. மீது கொண்ட வெறுப்பால் அண்ணன் பி.ஜே. அரசியல் ஹராம் என்பது போல் பேசினார். ஆங்கிலம் ஹராம் என்று சொன்ன ஆலிம்ஸாக்களை 1986ரிலிருந்து 95 வரை அண்ணன் பி.ஜே. எப்படியெல்லாம் விமர்சித்தார். அவர் செய்த அத்தனை விமர்சனங்களும் அண்ணன் பி.ஜே.க்கு இன்று பொருந்தாதா? நளினமாக எழுத வேண்டும் என்று சொன்னதால்தான் இப்படி எழுதுகிறேன். மேலே உள்ள கோடு போட்ட இடத்தை நீங்களே நிரப்பிக் கொள்ள விட்டு விட்டேன். இல்லை எனில் அண்ணன் பி.ஜே. அன்று சொன்னவைகளை அப்படியே தொகுத்து பதிலாக எழுதி இருப்பேன்.

வீதியில் நிற்பதே நமது தலை விதியாக ஆகி விடும்.

அரசியல் ஹராம் என்று சொன்ன இந்த பி.ஜே. ஆலிம்ஸா? ஒரு வருடத்திற்குள் அவரே மாறி விட்டார். இவர்கள் அபகரித்த ஜாக் பள்ளிகளையெல்லாம் ஜெயலலிதா கட்சியின் தேர்தல் காரியாலமாக ஆக்கிக் காட்டினார். அன்று ஆங்கிலம் ஹராம் என்று சொன்னவர்கள் பின்னால் போனதால் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என பின் தங்கிப் போனோம். இன்று இவர் பின்னால் போனால் என்ன ஆகும்? இருக்கும் கொஞ்ச அரசியல் அதிகாரத்தையும் இழந்து விடுவோம். வீதியில் நிற்பதே நமது தலை விதியாக ஆகி விடும். இந்தியாவை ஆண்டவர்களின் வாரிசுகளாகிய நாம் இன்று ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி வருங்காலத்தில் நமது வாரிசுகளாவது ஆள வழி வகுப்போம்.

முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா.

எனவே இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தவறான சிந்தனையை பரப்பும் பணியில் நாம் ஈடுபடக் கூடாது. தமிழக முஸ்லிம்களால் பேரறிஞர், உத்தமர் என்று நம்பப்பட்ட அண்ணன் பி.ஜே. அவர்களால் சொல்லப்பட்டதுதான். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது. அவர் யாரிடம் ரகசிய பங்கு வாங்கி விட்டு இப்படிச் சொன்னாரோ? அவர் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர் என்பதை விளங்கி விட்டோம். அவரை இந்த விஷயத்தில் புறம் தள்ளி விட வேண்டும். இனி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா என்ற உண்மையையே நாம் சொல்ல வேண்டும். இதையே நமது வாரிசுகளுக்கு உணர வைப்போம். இன்ஷh அல்லாஹ் நமது வாரிசுகள் இந்தியாவை ஆளும். எப்படிப்பட்ட இந்தியாவை ஆளும்?

அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில்.

சூழ்ச்சிக்காரர்களால் பிரிக்கப்பட்ட இந்தியா அல்ல. நம்மவர்களால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், பங்ளாதேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும். அதற்கு நாம் இந்த சுதந்திர தினத்தில் உறுதி எடுப்போம். இன்னொன்றையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறேன். 1947 ஆகஸ்ட் 15! அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களும் கூடி இருந்தார்கள். அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில் இந்திய விடுதலை பிறந்தது என்பதற்கு அறிகுறியாக பனிரெண்டு மணி அடித்து ஓய்ந்தது.

இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதம்.

மணி அடித்து ஓய்ந்ததும் கணீரென ஒலித்தது சுதந்திர கீதம். அந்த சுதந்திர கீதத்தை திருமதி சுஸேதா கிருபளானி அவர்களும், டாக்டர் சுசீலா நய்யார் அவர்களும் குரலெடுத்துப் பாடினார்கள். அவர்களுடன் அங்கிருந்த அத்தனை தலைவர்களும் சேர்ந்து பாடினார்கள். அப்பொழுது ஒலித்த சுதந்திர கீதம் எது தெரியுமா? ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' இதுதான் இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதம். சுதந்திர கீதம்.

விண்ணிலும் மண்ணிலும் ஒலித்த இந்திய தேசிய கீதம்.

1984 இல் இந்தியாவும் சோவியத் ரஷ;யாவும் இணைந்து செலுத்திய விண் கலம் என்பது நினைவு. விண் கலத்தில் பயணம் செய்த முதல் இந்திய வீரர் ராகேஷ; சர்மா விண் வெளியில் உலா வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தொலை பேசி மூலம் ராகேஸ் சர்மாவுடன் பேசினார்கள். இந்த உரையாடலை உலகில் உள்ள அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒளிபரப்பினார்கள். அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பேசும்பொழுது, விண்வெளியிலிருந்து இந்தியாவை பார்க்கும் போது எப்படித் தெரிகிறது என்று கேட்டார்கள். ராகேஸ் சர்மா சொன்ன இரத்தின சுருக்கமான பதில் என்ன தெரியுமா? ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' இதுதான் அந்த பதில். விண்ணிலும் மண்ணிலும் ஒலித்த இந்திய தேசிய கீதம் ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்பதுதான்.

இந்த கீதத்தை, தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்?

இதே கீதத்தைத்தான் இந்திய முப்படை வீரர்கள் அணி வகுக்கும் போதும் எடுப்பான குரலில் இசையுடன் பாடி வந்தார்கள். இந்திய தொலைக்காட்சிகளின் எல்லா நிலையங்களிலிருந்தும் வானொலிகளிலும் இதே கீதத்தைத்தான் ஒவ்வொரு நாளும் ஒலி பரப்பி வந்தார்கள். சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதத்தை, விண்ணிலும் ஒலித்த இந்த கீதத்தை, இந்தியாவிலுள்ள பெரும்பாலோருக்கும் உலகிலுள்ள பெரும்பானவர்களுக்கும் தெரிந்த மொழியில் உள்ள இந்த கீதத்தை, தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்? இந்தியாவின் ஒரு மாநில மொழியாகிய வங்க மொழியில் உள்ள கீதத்தை ஏற்றுக் கொள்ளப்பட்டது ஏன்?

'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம்.

இந்தியா சுதந்திரம் பெற்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் தேசிய கீதமாக உள்ள 'ஜன கண மண' பற்றி சர்ச்சை வந்தது. கேரளாவில் உள்ள 'பாலாமொழி' என்ற ஊருக்கு அருகில் சுதர்ஷன சமஸ்கிருதப் பள்ளி. அதன் நிர்வாகியும் தலைமை ஆசிரியருமான ஸ்ரீமான் கிருஸ்ணவாரியார் இந்த சர்ச்சையை - வாதத்தை தொடங்கி வைத்தார். ''ஜன கண மண' எத்தகைய தேசிய உணர்வையும் ஊட்டவில்லை. இது முதலில் தேசிய கீதமாக அமைக்கப்பட்டதுமில்லை. பிரிட்டிஸ் சக்கரவர்த்தி எட்வர்டை வரவேற்க பாராட்டி புகழ்ந்து பாடிய கீதம்தான் 'ஜன கண மண'. எனவே 1985 ஜுலை 26 ஆம் தேதி முதல் எமது பள்ளி கூடத்தில் 'ஜன கண மண' பாடுவதை நிறுத்தி விடுவோம். நானே சமஸ்கிருத மொழியில் எழுதிய 'ஜய ஜய ஜனனி' என்ற பாடலை பாடச் செய்வோம்'' என்றார்.

அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

அதே கால கட்டத்தில் அதே கேரளாவில் இன்னொரு பிரச்சனை எழுந்தது. கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினரான 'ஜெஹோவா' என்ற பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 'ஜன கண மண' கீதத்தை பாட மறுத்தார்கள். அது தங்கள் மதக் கொள்கைக்கு முரண்பட்ட கருத்தைக் கொண்ட கீதம். எனவே அதை நாங்கள் பாட முடியாது என்றார்கள். இந்த இரு பிரச்சனைகளையொட்டி அரசியல் வாதிகள் வாதப் பிரதி வாதங்கள் செய்தார்கள். ஆன்மீகவாதிகள் மதக் கொள்கைக்கு முரண்பட்டது என்றார்கள். கேரள மாநில அரசு, உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், அடர்னி ஜெனரல் ஆப் இந்தியா என இந்தப் பிரச்சனை சுற்றி வந்து கொண்டிருந்தது. அந்த வாதப் பிரதிவாதங்கள் பற்றியெல்லாம் நாம் இப்போது எழுதப் போவதில்லை. அது நமது நோக்கமும் இல்லை. அந்த நேரத்தில் ஒரு வருடமாக இருந்து வந்த இந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒரு பரிசீலனை நடந்தது. அதுதான் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

'ஜய ஜய ஜனனி' 'ஜன கண மண' பிரச்சனை அப்படியே அமுங்கி விட்டது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'ஜன கண மண' என்ற தேசிய கீதத்திற்குப் பதிலாக ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஆக்கலாமா என பரிசீலித்தது. இப்படி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்ற செய்தி 1986 செப்டம்பரில் வெளியானதுதான் தாமதம் 'ஜய ஜய ஜனனி' 'ஜன கண மண' பிரச்சனை அப்படியே அமுங்கி விட்டது. இப்பொழுதும் ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற பாடலை தேசிய கீதமாக ஏன் ஆக்கவில்லை என்பதற்கு காரணம் சொல்லப்படவில்லை.

ஒரு பாடலுக்கே இந்த நிலை என்றால் நமது உரிமைகளுக்கு என்ன நிலை?

காரணம் சொல்லப்படாவிட்டாலும் இரண்டு காரணங்கள்தான் தடையாக இருக்கிறது என்பதுதான் நமது நிலை. ஒன்று முஸ்லிம்களின் மொழி என பெரும்பாலான இந்தியர்களால் நம்பப்படும் உருது மொழியில் அது உள்ளது. இரண்டாவது, அதை எழுதியவர் அமரகவி அல்லாமா முஹம்மது இக்பால் என்ற ஒரு முஸ்லிம். இதைத் தவிர வேறு காரணங்கள் இருக்கவே முடியாது. முஸ்லிம் கவிஞர் எழுதியது என்ற ஒரே காரணத்துக்காக தேசிய உணர்வு கொப்பளிக்கும் இந்த கீதம் தேசிய கீதமாக ஆக்கப்படவில்லை. ஒரு கவிதைக்கே இந்த நிலை என்றால் நமது உரிமைகளுக்கு என்ன நிலை?

''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா''

ஆகவே அரசியல் ஹராம் எனக் கூறும் அற்பப் பதர்களை புறந் தள்ளுவோம். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்ற தவறான பிரச்சாரத்தை தவிர்ப்போம். முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா என்ற உண்மைகளை உணர வைத்து மக்கள் உள்ளத்தை வெல்லுவோம். பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்ற தேசிய உணர்வுடன் செல்லுவோம். இழந்த ஆட்சியை மீட்போம். ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்போம். வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி, 55. சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெரு, மேலப்பாளையம், 627005.

Tuesday, July 18, 2006

இதைச் செய்தவன் முஸ்லிமா?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 18-07-2006
ரிபாஈ அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை யார் ஈடு செய்வார்கள்?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்லாஹ்வையோ ரசூலையோ ஈமான் (நம்பிக்கை) கொள்ளாத யாரோ ஒருவன் இஸ்லாத்தை விமர்சிக்கிறான். அப்படிப்பட்டவன் அவனது கூற்றுக்கு ஆதாரமாக நம்முடைய எழுத்தையும் எடுத்துக் கொண்டான். இதையொட்டி கண்ணியத்திற்குரிய சகோதரர்களில் சிலர் வருத்தப்பட்டு கடிதம் எழுதி இருந்தனர். அல்லாஹ்வை நம்புகிறோம். அவனது தூதரை நம்புகிறோம். என்று சொன்னால் போதுமா? அல்லாஹ்வும் அவனது தூதருமா இந்த மாதிரி அநியாயம் செய்யச் சொன்னார்கள்.

இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அநியாயமாக பொய் சொல்பவனுக்கும் அநியாயமாக பொய் சாட்சி சொல்லுபவனுக்கும் பெயர்தான் முஸ்லிமா? சமாதானம் செய்து வைக்கும் நல்ல நோக்கிலோ, நிர்ப்பந்தத்திலோ பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. அந்த பொய் அநியாயமானதாக பிறரை பாதிக்கும்படியானதாக இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா?

அல்லாஹ் ரசூல் பற்றி எழுதாமல் இருக்க முடியாது.

நேசகுமார் என்பவன் அல்லாஹ்வையும் ரசூலையும் தீவிரவாதிகள் போல் கிண்டல் செய்து மண்டை ஓடுகளுடன் கார்டூன் போட்டிருந்தான். அது பற்றி கடந்த மாதம் எல்லாருக்கும் மெயில் அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்கும்படி எழுதி இருந்தோம். ரசிகவ் ஞானியார் என்ற ஒருவரைத் தவிர வேறு யாரும் இதை கண்டு கொள்ளவே இல்லை. அவன் கார்டூன் போடுகிறான் என்பதற்காக அல்லாஹ் ரசூல் பற்றி எழுதாமல் இருக்க முடியாது. அது போல இந்த மாதிரி தீவைத்து தெரியும் தீவட்டி தடியன்களை, குட்டி ஷய்த்தாகளை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டாமல் இருக்க முடியாது.

நல்ல புத்தி வர துஆச் செய்வோம்.

நேசகுமார் என்பவனுக்கு http://kirukku.blogspot.com/2005_05_01_kirukku_archive.html என்ற நிறைய கேள்விகளும் விமர்சனங்களும் உள்ளன. அதற்கு பதில் சொல்லாமல் இஸ்லாத்தின் மீது அவன் புழுதி வாரி வீசுகிறான். ஆதமுடைய மக்களில் அவனும் ஒருவன் என்ற முறையில் அவனுக்கு நல்ல புத்தி வர துஆச் செய்வோம்.

முதல்வராக பணியாற்றிய போது அவர் வாழ்வில் சோதனை வந்தது.

சமீபத்தில் த.மு.மு.க. மாநில செயலாளர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்கள் வீட்டில் தீ வைக்கப்பட்ட செய்தியை நமது என்ற http://mdfazlulilahi.blogspot.com/ பிளாக்கில் வெளியிட்டிருந்தோம். பத்திரிக்கையில் வந்துள்ள அவர் குடியிருக்கும் வீட்டின் போட்டோவையும் த.மு.மு.க. மாநில செயலாளர் என்ற பொறுப்பையும் வைத்துக் கொண்டுதான் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களின் பொருளாதாரத்தை பற்றி பொது மக்கள் பெரிதாக கணக்கிட்டுள்ளார்கள். ரிபாஈ அவர்களின் உண்மையான பொருளாதார நிலை என்ன? என்பது யாருக்கும் தெரியாது. காரைக்கால் அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய போது அவர் வாழ்வில் சோதனை வந்தது.

மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எவனோ ஒரு அயோக்கியனின் தூண்டுதலில் யாரோ ஒருவர் பார்சல் குண்டுகள் அனுப்பினார். அதில் அநியாயமாக கைது செய்யப்பட்டவர் காரைக்கால் அரபிக் கல்லூரியில் முதல்வராக இருந்த மவுலவி ஜே.எஸ். ரிபாஈ. 06-09-1995 புதனன்று கைது செய்யப்பட்டவர் 90 நாட்களுக்குப் பிறகு நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நாகை கோர்ட் ஜாமீன் கொடுத்த மறு நிமிடமே நாகப்பட்டிணம் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்று வரை அந்த வழக்கு முடியவில்லை.

90 நாட்களுக்குப் பிறகு விடுதலை கனவோடு இருந்தவருக்கு மீண்டும் சிறைவாசம் அழைத்துக் கொண்டது. இதை ஒவ்வொருவரும் இந்த நிலைக்கு நாம் ஆகி இருந்தால் நமது மன நிலை எப்படி இருக்கும்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த கஷ;டமும் நஷ;டமும் தெரியும். உள்ளம் கனத்து கண்கள் குளமாவது புரியும். இறையருளால் அடுத்த 90 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார். ஆக 180 நாட்கள் சிறையிலிருந்தார். இன்று வரை அந்த வழக்கு முடியவில்லை.
மகான் பி.ஜே. த.மு.மு.க. மீது புழுதி வாரி வீசி விட்டு வெளியாறினார்.

இந்தச் செயலை எந்த தெரு நாய் தூண்டி விட்டதோ, அந்த தெரு நாய் மாடியில் உல்லாச வாழ்வு வாழ்கிறது. சம்பந்மில்லாத அப்பாவி ரிபாஈ 11 வருடங்களாக நெல்லை – நாகை, நெல்லை- சென்னை என கோர்ட்டுகளுக்கு அலைந்து கொண்டிருக்கிறார். இதனால் வேலை வாய்ப்பை இழந்தார். வேலை வாய்ப்பை இழந்த அவருக்கு அவரது சகோதரர்கள்தான் உதவியாக இருந்து வருகிறார்கள். அவரது பொருளாதாரத்துக்காக ஒரு கடை வைத்துக் கொடுத்தார்கள். அது நன்றாக நடந்து கொண்டிருந்தது. அப்போது மகான் பி.ஜே. த.மு.மு.க. மீது புழுதி வாரி வீசி விட்டு வெளியாறினார்.

நடத்த முடியாமல் மூடி விட்டார்கள்.

அவரது பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்கும் பணியில் த.மு.மு.க. மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் முழுமையாக ஈடு பட்டார்கள். அப்போது மாநில துணை பொதுச் செயலாளராக இருந்த ரிபாஈ அவர்களும் தன்னை பிரச்சாரப் பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதனால் அவரது கடையை அவரால் சரியாக கவனிக்க முடிந்ததில்லை. இழப்பு ஏற்பட்டு தொடர்ந்து நடத்த முடியாமல் மூடி விட்டார்கள்.

ஏற்பட்டுள்ள இழப்பை ரிபாஈதான் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.

பத்திரிக்கையில் வந்துள்ள ரிபாஈ குடியிருக்கும் வீட்டின் போட்டோவை பார்த்து விட்டு ரிபாஈ அவர்களின் பொருளாதாரத்தை பலர் பலமானதாக எடை போட்டுள்ளனர். அது ரிபாஈ அவர்களின் சொந்த வீடு கிடையாது. ரிபாஈ அவர்களுக்கு சொந்தமாக வீடும் கிடையாது. குடும்பத்துடன் வெளிநாட்டிலிருக்கும் அவரது தம்பியின் வீட்டில்தான் ரிபாஈ குடி இருக்கிறார். சமூக விரோதிகள் தீ வைத்ததால் எரிந்து போன மோட்டார் பைக்கும் சைக்கிளும் ரிபாஈ அவர்களின் தம்பிக்கு சொந்தமானதுதான். இந்த சம்பவத்தால் ரிபாஈ அவர்களின் தம்பிக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ரிபாஈதான் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது எவ்வளவு பெரிய பாதிப்பு. ரிபாஈ அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பை யார் ஈடு செய்வார்கள். இந்த நிகழ்வின் நோக்கம் என்ன. ஒருவனின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தினால் அவன் பொது வாழ்விலிருந்து ஒதுங்கி விடுவான். இது ஷய்த்தான்களின் தலைவன் அடிக்கடி சொல்லும் தத்துவம். இந்த நோக்கத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள்.

எந்த நோக்கத்தில் நடந்தாலும் இதைச் செய்தவன் முஸ்லிமா? முஸ்லிம் பெயர் தாங்கியா? என்பதை பிறகு பார்ப்போம். இவன்களையெல்லாம் மனித இனத்தில் சேர்க்க முடியுமா? மாற்றுக் கருத்து இருந்தால் நேருக்கு நேர் பேசாமல் இந்த மாதிரி அயோக்கியத்தனம் செய்யும் தெரு நாய்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டக் கூடாதா? மவுலவி ரிபாயிக்கு ஏற்பட்டுள்ள நிலைக்கு நாம் ஆகி இருந்தால் நமது மன நிலை எப்படி இருக்கும்? இதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பாருங்கள். எனவே இந்த மாதிரி ஈனத்தனமான வேலைகளை செய்து திரியும் பொறுக்கித் தெரு நாய்களை நான் தனித்து நின்றாலும் அடையாளம் காட்டாமல் விட மாட்டேன். வஸ்ஸலாம்.
கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி